உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
மாலே: மாலத்தீவுகளில் ரூ. 2,772 கோடி செலவில் இந்தியாவின் ஜிஎம்ஆர் நிறுவனம் அமைக்க இருந்த விமான நிலையத் திட்டத்தை அந்த நாடு திடீரென ரத்து செய்துவிட்டது. இது இந்தியாவுக்கு எதிரான முடிவாகக் கருதப்படுகிறது. மாலத்தீவுகள் நாட்டின் தலைநகரான மாலேவில் உள்ள அப்துல் நசீர் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய சர்வதேச அளவில் டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஜிஎம்ஆர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மாலத்தீவுகளில் ஆட்சியில் இருந்த அதிபர் நசீத் காலத்தில் இந்தப் பணி ஜிஎம்ஆருக்கு ஒதுக்கப்பட்டது. டெல்லி, ஹைதராபாத்தில் மாபெரும் விமான நிலையங்களை இந்த நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், மாலத்தீவுகளில் அதிபர் முகம்மத் வகீத் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்…
-
- 1 reply
- 934 views
-
-
ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லையாம் : பரபரப்பு தகவல் சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லை. அவர் அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்பில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என எட்வர்ட் ஸ்னோடன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட எட்வர்ட் ஸ்னோடன். 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இருந்து வருகிறார். இவர், சமீபத்தில் இணையத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஒசாமா பின்லேடன் சாகவில்லை என்ற பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது கட்டுரையில் அமெரிக்கா குறித்து பல குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார். குறிப்பாக ஒசாம…
-
- 2 replies
- 934 views
-
-
திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்துக்கு, பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் அனுமதி அளித்து விட்டதாக, அருணாச்சல் முதல்வர் தோர்ஜீ காண்டு தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம், அருணாச்சல பிரதேசத்திலுள்ள தவாங் பகுதிக்கு புத்த மதத் தலைவர் தலாய்லாமா செல்கிறார். அங்கு கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். அருணாச்சல பிரதேசம் தனது பகுதி என்று கூறிவரும் சீனா, தலாய்லாமா அங்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளது. சர்ச்சைக்குரிய பகுதி என்கிறது. இந்நிலையில், அருணாச்சல் முதல்வர் காண்டு பிரதமரை சந்தித்தார். சீன அருணாச்சல் பிரதேச எல்லைப் பிரச்னையில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று, பிரதமரைக் கேட்டுக்கொண்ட அவர், தல…
-
- 1 reply
- 933 views
-
-
NIBIRU 21 டிசெம்பர் 12இல் எமது சூரிய குடும்ப வட்டத்துக்குள் நுளையும் சூரியனை விட பெரிய கிரகம்...... நாசா சொல்லியிருக்கு, பயப்படவேண்டாம் எண்டு....
-
- 0 replies
- 933 views
-
-
மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு சனிக்கிழமை, ஜூலை 3, 2010, 10:11[iST] மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது. லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து. இந் நிலையில்…
-
- 5 replies
- 933 views
-
-
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ... நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்... எங்கெங்கு காணினும் பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா? 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல. பல லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல…
-
- 6 replies
- 933 views
-
-
வீரகேசரி இணையம் 10/27/2008 11:44:20 AM - ""என்னைக் கைது செய்யுமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்'' என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அறிக்கை வெளியிட்டேன். பின்னர் அரசியல் ஆதாயத்திற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோரைக் கைது செய்தனர். இதில் பாரபட்சம் காட்டாமல், சட்டவிரோதமாகச் செயல்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மீண்டும் அறிக்கை விட்ட பிறகு திரைப்பட இ…
-
- 1 reply
- 933 views
-
-
இந்திரா காந்தி, தான் கொல்லப்படுவார் என ராஜீவுக்கும் சோனியாவுக்கும் கூறியுள்ளார் http://www.youtube.com/watch?v=JtAKwz-TQjY&NR=1&feature=fvwp
-
- 0 replies
- 933 views
-
-
ஆயிரமாயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை, மகிழ்ச்சியை தன்னுள் கரைத்த ஆழிப்பேரலையின் கொடூரத்தை, பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் பார்வையில் கோடு காட்டும் குறும்படம். http://www.keetru.com/video/neelam/arivumathi.wmv நன்றி கீற்று இணையம்
-
- 0 replies
- 933 views
-
-
மதுப்பழக்கம் அறவே இல்லை! டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான சில தகவல்கள் S.P. Thas அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பிற்கு புகைப்பிடித்தல், போதை வஸ்துகளை பயன்படுக்காது என்றும் இதுவரை காலமும் அவரை போதைப் பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஜனவரியில் டொனால்ட் ட்ரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது உயரம் 6 அடி 3 அடியாகவும் உடல் எடை 239 பவுன்ட்டாகவும் இருந்தது. இந்த உயரத்திற்கு ஏற்ற உடல் எடை என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்திருந்தார். பொதுவாக காலை உணவை உண்ணும் பழக்கத்தை கொண்ட…
-
- 6 replies
- 933 views
-
-
பறக்கும் தட்டில் 'பாயா'...!! பிரித்தானியாவிலுள்ள லண்டன் மாநகரில் "யோ சுசி (Yo Sushi)" என்ற ஜப்பானிய உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்கு தொலை தூரத்திலிருந்து 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் பறக்கும் தட்டில் (இத்தட்டிற்குப் பெயர் "ஐ ட்ரே" ) சுவையான பர்கர் மற்றும் பாயா உணவு வகைகளை பரிமாறுகின்றனர். இத்தட்டு மணிக்கு 25 கி.மீ வேகத்தில் சுற்றிப்பறந்து 50 மீட்டர் எல்லைவரையுள்ளவர்களை கவர்கிறது. http://youtu.be/y9RKXO1rr7g உணவு பரிமாறும் வேலையாட்கள், ஐபாட் எனப்படும் மொபைல் கருவி மூலம் பறக்கும் தட்டின் அசைவுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துகின்றனர். சமையல் அறையியுள்ள சமையற்காரர்கள், பறக்கும் தட்டில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவியின் மூலம் உ…
-
- 5 replies
- 933 views
-
-
இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! நியூயார்க்: ஆஸ்திரேலியாவையொட்டியுள்ள இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. http://www.vikatan.com/news/world/55943-earthquake-southeast-indian-ridge.art
-
- 0 replies
- 933 views
-
-
சீன அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகர் ஜெக்கி ஷான். இதன் மூலம் சீன அரசியலில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளார் ஜெக்கி ஷான். சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் புதிய ஜனாதிபதியாக இவர் பதவி ஏற்கிறார். இந்த ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக, மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவை அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்து வருகிறார் புதிய ஜனாதிபதியாகப் போகும் ஜின்பிங். சீன நாடாளுமன்றத்தின் ஒரு சபையான இதில் 2,237 இடங்கள் உள்ளன. இக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பிரபல நடிகர் ஜெக்கி ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பதவியை சந்தோஷத்துடன் அ…
-
- 3 replies
- 933 views
-
-
திங்கட்கிழமை, 2, மே 2011 (10:56 IST) முதல்வர்களின் சொத்து விபரங்கள் - பட்டியல் 1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி 2.மு.கருணாநிதி (86) - தமிழ்நாடு - ரூ. 44 கோடி 3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி 4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி 5. கிரண்குமார் ரெட்டி (50) - ஆந்திரா - ரூ. 8.11 கோடி 6. நவீன் பட்நாயக் (64) - ஒரிசா - ரூ. 7.89 கோடி 7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி 8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி 9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி 10. தருண் ஹோகை (75) - அசாம் - ரூ. 4.94 கோடி 11. பவான் ச…
-
- 0 replies
- 933 views
-
-
பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார். ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ். கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது: இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்…
-
- 1 reply
- 933 views
-
-
ஏப்ரல் 28, 2007 சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது. சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர…
-
- 0 replies
- 933 views
-
-
தங்கள் மீதான குற்றச்சாட்டினை வால்மார்ட் மறுத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினை அனுமதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வாயிலாக வால்மார்ட் நிறுவனம் காய்நகர்த்தி காரியம் சாதித்ததாக பகீர் புகார் எழுந்தது. இது தொடர்பாக வால்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. எந்த அமெரிக்க எம்.பி.க்களையும் நாங்கள் வற்புறுத்தவில்லை. அமெரிக்க சட்டத்திட்டங்களை மதித்து தான் நடக்கிறோம் அதே வேளையில் இந்திய சட்டத்திட்டங்களையும் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%…
-
- 12 replies
- 933 views
-
-
காங்கிரஸூடனான உறவை முறித்துக் கொள்ள தி.மு.க. தயங்குவது ஏன்? 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தி.மு.க.வின் உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுவது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற கூட்டத்தில், ஜூலை மாதம் பொதுக்குழு கூடும், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸூடனான கூட்டணியில் பாதிப்பு இல்லை என்றும் செய்தியாளர் சந்திப்பின்போது கருணாநிதி கூறினார். ஆனால், காங்கி…
-
- 4 replies
- 933 views
- 1 follower
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படவிருந்த நேட்டோ படையினரின் 150 வாகனங்களை தலிபான் தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி தீவைத்து எரித்தனர். 3 பேர் கொல்லப்பட்டனர். அல் பைசல் என்ற இடத்தில் உள்ள ஒரு டிப்போவில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்காக இவை அனுப்பப்படவிருந்தன. இந்த நிலையில் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 100க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ராக்கெட்களையும், கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தி அங்கிருந்த 150 வாகனங்களை தாக்கி எரித்தனர். டேங்கர்கள், லாரிக…
-
- 0 replies
- 933 views
-
-
Published By: RAJEEBAN 08 JUN, 2023 | 10:46 AM இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை பொதுவில் புகழும்விதத்தில் கனடாவில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடும் கண்டனம்வெளியிட்டுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திராகாந்தியின் படுகொலையை புகழும் விதத்தில் பொதுவெளியில் நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள அலிசப்ரி; கருத்துசுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றுதல் என்ற போர்வையில் எந்த நாடும் பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகளிற்கு புகலிடம் வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். பயங்கர…
-
- 8 replies
- 933 views
- 1 follower
-
-
எந்த நாட்டிலும் ஊழல் இல்லாமல் இல்லை' - தன்னார்வ நிறுவனத்தின் அதிரவைக்கும் ஆய்வு ..! watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களைப் பிடித்துள்ளன. வறட்சி, போர், முதலான விஷயங்களால் சிக்கி தவித்து வரும் இந்த நாடுகளில் லஞ்சம், ஊழல் அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 78-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு…
-
- 0 replies
- 933 views
-
-
-வெளிநாட்டு செய்திச் சேவை- நேட்டோவின் தாக்குதலில் சேர்பிய படைகள் தோற்கடிக்கப்பட்டு 8 வருடங்களுக்குப் பின்னர் கொசோவோ முழுமையாக சுதந்திர நாடாக மிளிர்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொசோவோ இதன் மூலம் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றில் உறுப்புரிமை பெறுவதற்குமான உரிமையை பெற்றுள்ளது. மேலும், முன்னாள் யுகொஸ்லாவியா, சேர்பியா போன்றவற்றிற்கு உரிய பொருளாதார சொத்துகள் மற்றும் கடன்கள் மீதான தனது உரிமையையும் கொசோவோ பெறுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகளின் இந்த திட்டம் சேர்பியாவை சீற்றமடையச் செய்யலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது. வியன்னாவில் இது குறித்து யோசனைகள் ஆராயப்பட்…
-
- 0 replies
- 933 views
-
-
புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம் YouTube ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் - படம்: ஏஎப்பி சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்…
-
- 1 reply
- 932 views
-
-
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சீ.ஆர்,சி.யின் கொழும்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவுவதற்கென 1987ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தமது அலுவலகத்தை திறந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் வவுனியா பிரதேசத்தில் ஐ…
-
- 1 reply
- 932 views
-
-
மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஜூலை 13ஆம் தேதி தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தாக்குவதைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இதைக் கண்டிக்கும் வகையில் தே.மு.தி.க சார்பில் எனது தலைமையில் ஜூலை 13ஆம் தேதி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டமும், பேரணியும் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
- 1 reply
- 932 views
-