Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கின்றனர். சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன ராணுவ துருப்புகள் பேனரை ஏந்தியபடி ரோந்து சுற்றி வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன ராணுவத்தினர் தங்காத நிலையில் அவர்க…

  2. க்லெஸ்டர் குண்டுகள் லிபியா ஏவியதாம் – அலறும் மேற்கத்தேய ஊடகங்கள் லிபியா புரட்சிக்காரர்கள் மீது க்லெஸ்டர் குண்டுகளை வீசியதாகவும் மனித உரிமை கண்கானிப்பகத்தைச் சோர்ந்த புகைப்படக்காரர் மூன்று குண்டுகள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் விழுந்து வெடித்தாக கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தடைசெய்யப்பட குண்டையே லிபியா பாவித்தாக அலறும் ஊடகங்கள் தமிழர்கள் மீது அதே குண்டுகள் பாவிக்கப்பட்டதாக ஆதாரத்துடன் அனுப்பிய போதும் அதை கண்டுகொள்ளவில்லை. இதே வேளை க்லெஸ்டர் குண்டுகளை தாம் பாவிக்கவில்லையென லிபியா அறிவுத்துள்ளவேளை கடாபி பதவி விலகும் வரை மக்களுக்கு பாதுகாப்பில்லையென நேட்டே அமைப்பு நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இது…

    • 0 replies
    • 862 views
  3. வாரணாசி: பகவான் புத்தர், முதன் முதலில், 'தர்மம்' என்பது குறித்து, தன் சீடர்களுக்கு போதனை செய்த, சாரநாத் புத்த மடத்தில் உள்ள, போதி மரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்தது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாரநாத்தில், 'மூல்கந்த குடி விஹார்' என்னும் புத்தமட வளாகத்தில் போதி மரம் (அரச மரம்) அமைந்துள்ளது. ஞானம் பிறந்தது: கடந்த 2,600 ஆண்டு களுக்கு முன், புத்த கயாவில் அமைந்துள்ள, போதி மரத்தின் அடியில், புத்தருக்கு ஞானம் பிறந்தது. பின், இந்த மரத்தின் ஒரு கிளை, இலங்கையில் உள்ள புத்த மடத்தில், நடப்பட்டு வளர்க்கப்பட்டது. இலங்கையில் இருந்து, இந்த மரத்தின் ஒரு கிளையை, 'மகாபோதி சொசைட்டி ஆப் இந்தியா'வின் நிறுவனரும், புத்த துறவியுமான, அனாகாரிக் …

  4. தாஜ்மஹால் இந்தியாவின் மிகப் பிரபலமான சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்த சேற்றை சுவர்களில் மெழுகினால் பளிங்கு கற்கள் அதன் இயற்கையான பொலிவை மீண்டும் பெரும் என்று இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜ்ஜுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம் தாஜ்மஹால். சேறு மெழுகும் முறையைப் பயன்படுத்தி தாஜ்மஹால் சுத்தம் செய்யப்படுவது இது நான்காவது முறை. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரம், அதிகமான மாசை வெளியேற்றும் பல தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஊராகும். bbc tamil

  5. ஆரம்ப பொது வழங்கல் (Initial public offering, அல்லது IPO) எனப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொதுப் பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதைக் குறிக்கின்றது இது நிறுவனங்கள் தமது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டு தேவையான நிதியினைத் திரட்டிக்கொள்வதற்கான ஒரு வழியாகும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமன்றி பாரிய நிறுவனங்களும் இதனை நிதிதிரட்ட உபாயமாகக் கையாள்கின்றன. அவ்வகையில் தற்போது பரபரப்பாக அனைவரையும் பேசவைத்துள்ள ஒரு விடயம் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமாகும். சமூகவலையமைப்பு மற்றும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கின் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் ( IPO- Initial public offerings) கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. நஸ்டக் (Nasdaq stoc…

  6. [size=4]ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.[/size] [size=4]இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்ஷ் சால்மண்டும் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 15 ) கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.[/size] [size=4]கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றிபெற்ற எஸ்என்பி என்ற ஸ்காட்லாந்தின் தேசியக் கட்சி சுதந்திரப் பிரகடனம் கோருவதற்கான ஆணையையும் மக்களிடம் பெற்றது.[/size] [size=4]அரசியலமைப்ப…

  7. 6 ‘இல்லை’கள்... இதனாலேயே பாரீஸ் ஒப்பந்தம் பூமியைக் காக்கப்போவதில்லை! பயங்கரவாத தாக்குதலில் இருந்து இன்னமும் விடுபடாத அதே பாரீஸில்தான் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. பயங்கரவாதத்தைக் காட்டிலும் அதிமுக்கியமான இந்த உலகம் தழுவிய பிரச்னையை, 195 நாடுகள் 2 வாரங்கள் விவாதித்துத் தீர்த்து, ஓர் ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியிருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள் என்னென்ன? சுற்றுச்சூழல் மாசுபடுவதற்குக் காரணமான கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை (கிரீன்ஹவுஸ் எமிஷன்) கட்டுப்படுத்தவேண்டும். புவி வெப்பமயமாதல் தடுக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில், உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸும், அதற்கு மேலும் அதி…

  8. மலேசியா இந்து ஆலயத்தில் முஸ்லிம் காடையர்கள் வெறியாட்டம்! மலேசியா தலைநகர் கோலாலம்பூர் பூச்சோங்கில் 140 வருட பழமையான மாரியம்மன் கோவிலுக்குள் இன்று அதிகாலை 5 மணிக்கு முஸ்லிம் காடையர் குழு ஒன்று உட்புகுந்துள்ளது. Malaysia Hindu Temple Violence கோவிலின் உள்ளே நுழைந்த குழுவினர் அங்கிருந்த விக்கிரகங்களை அடித்து உடைத்தனர். அம்மன் விக்கிரகம் மீது சில காடையர்கள் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தனர். இதன் பின்னர் அங்கு வந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஓட ஓட அடித்து விரட்டினர். இதனால் அங்கு கலவரம் உண்டாகியது. இந்த கலவரத்தில் சிக்கி பல தமிழ் இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மதவெறியை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் தொடர்பில் 17 பேர…

  9. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் கலந்து கொண்டார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது உக்ரைன் நாட்டு பெண்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த பெண்கள் திடீரென்று மேலாடைகளை கலைந்து வீசி விட்டு, ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க கோரி கோஷங்களை முழங்கி போராட்டம் நடத்தினர். ஓரின சேர்க்கைக்கு ஆதரவான வாசகங்களையும் உடலில் எழுதியிருந்தனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்களை கைது செய்து அழைத்து சென்றனர். மேலாடையின்றி போராட்டம் நடத்தும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும்…

    • 0 replies
    • 862 views
  10. ஒசாமா கொலை: முழு தகவல் தேவை – ஐநா May 5, 2011 அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார். ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். அல் குவைதாவின் நிறுவனரான பின் லாடன் மிக கொடுரமான பயங்கரவாதச் செயல்களைப் புரிந்ததாக தானே ஒத்துக் கொண்டிருந்தாலும் – பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதே நேரம், ஆயுதமற்ற ஒருவரை கொன்றது தனக்கு சங்கடமான உ…

  11. இந்திய அரசியலின் ஆச்சரியம் இவர்...... டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்திருந்தாலும், பெரும்பான்மை பெறவில்லை. மொத்தமுள்ள, 70 இடங்களில், 31 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. இந்நிலையில், டில்லியில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது: டில்லி தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், ஆட்சி அமைக்க அழைக்கும்படி, நான் உரிமை கோர முடியாது. என்ன நிகழப் போகிறது என்பது தெரியவில்லை. "முதல்வரானால், வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன்' என, மக்களுக்கு உறுதி அளித்தேன். அந்த உறுதிமொழியை காப்பாற்ற முடியாத, உதவியற்ற நிலையில் உள்ளேன். எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும், குதிரைப் பேரத்தில…

  12. கோவிந்தாவின் சாதனை Monday, 10 March, 2008 12:28 PM . மும்பை, மார்ச் 10: நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கடந்த 4 ஆண்டுகளில் பாலிவுட் நடிகர் கோவிந்தா 2 நிமிடங்கள் மட்டுமே மக்களவையில் பேசியுள்ளார். திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலில் குதித்து, எம்.பி.க்க ளாவது வழக்கமாக இருந்து வருகிறது. . ஹேமமாலினி, தர்மேந்தரா, ஜெயப்பிரதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். எனினும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படும் திரைப்பட நட்சத்திரங்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. பல எம்.பி.க்கள் நாடாளுமன்றம் பக்கமே தலை காட்டுவதில்லை. ஹேமமாலினி, தர்மேந்திரா மற்றும் ஜெயப்பிரதா ஆகியோர் இதுவரை மிக சில நாட்கள் மட்டுமே…

    • 1 reply
    • 861 views
  13. Published By: DIGITAL DESK 3 22 DEC, 2023 | 12:09 PM அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் தான் செய்யாத குற்றத்திற்கு 48 வருடகால சிறைதண்டனை அனுபவித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. …

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வெடிபொருட்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன. ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா …

  15. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) 7.7 சதமாக வீழ்ச்சி. கடந்த 18 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது. இந்தக் காலாண்டுக்கான தொழில் துறை வளர்ச்சி 3.3 சதமாகக் குறைவு. கடந்த 21 மாதங்களில் மிகக் குறைந்த அளவு இது. கடந்த 17-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தின்படி, உணவுப் பணவீக்கம் 9.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது இன்றைய தகவல். பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடப்போவது தவிர்க்க முடியாததாகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமான சரிவு இது. - இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு நிதியமைச்சர், "நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகள் தோன்றுகின்றன," என்று சொன்னால் எப்படி இருக்கும்? அண்மையில்…

  16. சென்னை, திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பருத்தி வீரன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது .................... சிறந்த நடிகர் - .................,சிறந்த திரைக்கதாசிரியர் -...................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7217.html

    • 0 replies
    • 861 views
  17. பிரிட்டிஷ் ராணியாக மகுடம் சூட்டப்பட்டு 60 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள பிக் பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என்று பெயர் சூட்டுமாறு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோபுரத்தின் உண்மையான பெயர் கிங்ஸ் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்று வரும் ஜூன் மாதத்துடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பிக்பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என பெயர் மாற்றம் செய்யக் கோரி, பார்லிமென்டில் டோபியாஸ் எல்வுட் தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil

    • 5 replies
    • 861 views
  18. [size=4][/size] [size=4]ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது என்று தலிபான் தீவிரவாத கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். நேட்டோ படையினர் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில் தலிபான் உயர்நிலை கமாண்டர் ஒருவர், இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், ஆப்கன் செய்திகளை சேகரித்து வரும் ஆசிரியர் மைக்கேல் செம்பல் பேட்டி எடுத்துள்ளார். அதில் தலிபான் கமாண்டர் கூறியிருப்பதாவது:[/size] [size=4]ஆப்கனில் நேட்டோ படைகளுக்கும் தலிபான்களுக்கும் நடந்து வரும் போரில், தலிபான்கள் வெற்றி பெறுவது கடினம். தலிப…

  19. விளையாட்டுத் திடலில் மரணமடைந்த நிலையில் வன்கூவர் இளைஞன் வன்கூவரின் கம்லூப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடாசலை ஒன்றின் கூடைப்பந்தாட்டத் திடலில் 20 வயதுடைய இளைஞன் ஒருவனது சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாயன்று மாலை 4.45 மணியளவில் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற பொலிசார் இந்த உடலைக் கண்டெடுத்தனர். இவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மரணமடைந்திருப்பதாகப் பொலிசார் கூறுகிறார்கள். கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் கூடைப்பந்தாட்டத் திடலில் விழுந்து கிடந்த இவரது உடல் அருகிலிருக்கும் மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த நபருடன் தானும் இருந்ததாகக் கூறிப்பிடும் கொலைசெய்யப்பட்டவரது …

    • 0 replies
    • 861 views
  20. இஸ்ரேல், உலகின் உண்மையான 'சிலிக்கான்வேலி'! ஹிட்லரால் விரட்டி விரட்டி அழிக்கப்பட்ட யூத இனம், மத்திய தரைக்கடல் பகுதியில் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட நாடுதான் இஸ்ரேல். இஸ்ரேல் மீது எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாகக் காட்ட முடியாது. 'உடம்பு முழுக்க மூளை' என்கிற வார்த்தை அப்படியே யூதர்களுக்கு பொருந்தும். கார்கில் போரின் போது, 'டைகர் ஹில்' பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து மீட்க இஸ்ரேல் உதவி புரிந்தது. பிரதமர் மோடி, அந்த நாட்டுக்குச் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் பற்றிய சுவரஸ்யத் தகவல்களைப் பார்ப்போம்... கடந்த 1948ம் ஆண்டு, மே மாதம் 1…

  21. குவைத்தில் தீ விபத்து – இந்தியர்கள் உட்பட 35 பேர் உயிரிழப்பு! குவைத் நாட்டில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்க தீ விபத்தில் சிக்கி, குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு குவைத்தில் மங்காப்(Mangaf) நகரிலுள்ள தொழிலாளர்கள் குடியிருப்பொன்றில், அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 6.00 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் உயரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், தீ விபத்துக்குள்ளான குறித்த கட்டடத் தொகுதியில் அதிகளவில் மலையால மக்களே வசிப்பதாகவும் தெரியவருகின்றது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்துவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்…

  22. இருபது ரூபாய் கேட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவர்! உத்திரபிரதேசத்தில் 20 ரூபாய் கேட்ட மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார்.இஸ்லாமிய முறைப்படி மூன்று முறை தலாக் சொல்லி விட்டால், கணவன் மனைவி உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், Shazia என்ற பெண்மணி தனது கணவனிடம் 20 ரூபாய் கேட்ட குற்றத்திற்காக தலாக் சொல்லி விவாகரத்து வழங்கியுள்ளார். Shazia - க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த Shazia- தனது கணவருடன் பலமுறை சண்டையிட்டுள்ளார்.இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது…

  23. Published By: RAJEEBAN 10 APR, 2023 | 05:07 PM தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தான் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன இராணுவம் போர் செய்வதற்கு தயார் என தெரிவித்துள்ளது. படையினர் எந்நேரிடமும் போரிட தயாராக உள்ளனர் மேலும் எந்தவகையான தாய்வானின் சுதந்திர முயற்சியையும் வெளிநாட்டு தலையீடுகளையும் முறியடிப்பதற்காக எவ்வேளையிலும் அவர்களால் போரிட முடியும் என சீன இராணுவம் தெரிவித்துள்ளது. கூட்டு வாள் என்ற பெயரில் சீன இராணுவம் இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தது. …

  24. முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள் முகம்கொடுத்துள்ளனர். இளம் பெண்களுக்கு வரன் தேடுவது அதில் ஒரு முக்கிய பிரச்சினையாக இடம்பிடித்துள்ளது. இலங்கையிலிருந்து பல இளைஞர்கள் அச்சம் காரணமாக வெளியேறியிருப்பதால் இளம் பெண்களுக்கு வரன் தேடுவதில் சிக்கல் நிலை தோன்றியிருப்பதாக சென்னையிலிருந்து வெளியாகும் ‘ஈழ சுதந்திரம்’ எனும் மாதாந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து பல இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 30 வயதைத் தாண்டிய ஈழப்பெண்கள் பலர் இன்னமும் திருமணம் ஆகாதநிலையில் இருப்பதாக அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தமிழ் இளைஞர்களுக்கு பெரும் கேள்வி இருப்பதால் பெரும்தொகைப் …

    • 0 replies
    • 860 views
  25. நீங்கள் நினைப்பது போல் நான் முட்டாள் இல்லை இல்லை எனவும், எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும் எனவும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளர் என திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிதம்பரம் பதில் :@@ டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதம்பரம் கூறியதாவது : எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்; எனது வரம்புகளுக்கு உட்பட்டே நான் வாழ்ந்து வருகிறேன்; அதன்படியே நான் என்னை வழி நடத்துகிறேன்; உங்களில் சிலர் என்னை முட்டாள் என நினைப்பது எனக்கு தெரியும்; அவர்களுக்கு நான் சொல்லி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.