Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இவர் இந்திய நிதியமைச்சரானால்...! மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார். இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது. நிதித்துறையில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடுவதோடு, அன்னிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்ட…

    • 1 reply
    • 660 views
  2. மின்சார மனிதன் !!! அதிசயம் ஆனால் உண்மை !!! History சானல் ஒளிபரப்பிய உலகின் அதிசய மனிதர்கள் பற்றிய ஒரு வீடியோ. இப்படியும் அதிசய மனிதர்கள் உலகத்துல இருக்காங்களான்னு ஆச்சர்யம் யாருக்கும் வரும். இந்தியா , கொல்லம் என்னும் பகுதியை சார்ந்த "மோகன்" என்பவர் பற்றிய வீடியோ அது.. பார்க்க பார்க்க மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு.. இவர "கரண்ட் மோகன்" என்று செல்லமாக கூப்பிடுறாங்க.. இவரோட உடம்புல எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும் இவருக்கு ஒண்ணுமே ஆகிறது இல்ல.. இவரை பற்றி கேள்வி பட்டு, இதன் உண்மை நிலையை பற்றி அறிய "History சேனல் " ல இருந்து ஒரு குழு வந்து , இதை நிரூபித்து , உலகத்துக்கு இந்த அதிசய மனிதரை அறிமுக படுத்தியது.. இதுல …

    • 1 reply
    • 987 views
  3. அம்மா உன்பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே என்று விடுதலை பாடிய உன்னிக்கிருஷ்ணனுக்கு டோக்கிளஸ் பொன்னாடை போர்க்குது.

  4. டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்திற்குத் தேவையான எம்.பிக்களை பெற்றுள்ளதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. அதே சமயம், எதிரணியை விட 1 எம்.பியே காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதலாக உள்ளதால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே குழப்பம் தொடர்கிறது. இந் நிலையில் பாஜகவில் உள்ள 6 அதிருப்தி எம்பிக்கள், ஒரு பிஜூ ஜனதா தள எம்பி, 1 சிவ சேனை எம்பி மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 பேர் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்களின் கையில் தான் அரசின் எதி்ர்காலம் உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள். அவர் இங்கே தாவுகிறார், இவர் அங்கே போகிறார் என்ற செய்திகள். யாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதில் நிலையில்லாத நிலை என டெல்லி வட்டா…

    • 0 replies
    • 572 views
  5. இளவரசர் வில்லியம் மனைவிக்கு சிவப்பு நிற தலையுடன் குழந்தை பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எந்த வடிவில், என்ன நிறத்தில் குழந்தை பிறக்கும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில், கேத் மிடில்டனுக்கு பிறக்கும் குழந்தை அதாவது அரச பதவி ஏற்க இருக்கும் 3-வது தலைமுறை வாரிசு சிவப்பு நிற தலை முடியுடன் பிறக்கும் என மரபியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை வில்லியம் போன்று கரடுமுரடான தலைமுடி மற்றும் குணாதிசயங்கள் போன்றோ, தாயார் கேத் மிடில்டன் போன்று நீண்ட முன் தலையுடன் இதய வடிவிலான முகம் போன்றோ இருக்காது. வில்லியமின் தம்பி ஹாரியை போன்று சிவப்பு நிற தல…

  6. இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், கொலையாளிகள் யாரென்று கூறுவாரா வைகோ? – ஞானதேசிகன் கேள்வி. [Monday, 2014-02-24 19:32:40] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கும் சில தலைவர்களை கேட்கிறேன், இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான குற்றவாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக சொல்லுங்கள். பா…

  7. ‘விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகள்’ எனக் குற்றம்சாட்டப்பட்ட இருவர், “இவர்கள் தீவிரவாதிகள் அல்ல, இரட்டை முட்டாள்கள்” (Pair of idiots not terrorists) என சக பயணிகள் சாட்சியமளித்ததால், விடுவிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் நீதிமன்றம், “இவர்கள்மீது எந்த குற்றத்தையும் சுமத்த முடியாது” என்று கூறிவிட்டதில், இருவரும் வாயெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டு, வீடு போய் சேர்ந்தார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளால் போடப்பட்ட இந்த ‘தீவிரவாதி வழக்கு’ இப்படி சிரிப்பாக முடிந்துவிட்டாலும், இதன் ஆரம்பம் மிக சீரியசாகவே இருந்தது! (ஏகப்பட்ட செலவு வேறு!!) கடந்த மே, 24-ம் தேதி, பாகிஸ்தானில் இருந்து சென்ற பயணிகள் விமானம் ஒன்று பிரிட்டிஷ் வான்பகுதியில் திசைதிருப்பப்பட்டு, லண்டனுக்கு வெளியேயுள்ள ஒதுக்க…

  8. அமெரிக்காவின் LSSU எனப்படும் பல்கலைக் கழகத்தால் கடந்த 39 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஆங்கில அகராதியில் தடை செய்ய வேண்டும் என்று கருதப் படும் சொற்களின் பட்டியல் வெளியிடப் படும். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிக மோசமாகப் பாவிக்கப் பட்டு இவ்வருடம் தடை செய்யப் பட வேண்டும் என்று கருதப்படும் சொற்களின் பட்டியலில் சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் புதிதாகச் சேர்க்கப் பட்ட செல்ஃபியே (Selfie) என்ற வார்த்தை அடங்கியுள்ளது. Selfie தவிர்த்து மற்றைய வார்த்தைகளாக 'Twerking' மற்றும் 'hashtag' ஆகியவை உள்ளடக்கப் பட்டுள்ளன. இந்த வார்த்தைகளை நீக்குவதற்குக் குறித்த பல்கலைக் கழகம் கூறும் காரணம் ஒன்று இவை தவறாகப் பாவிக்கப் படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பாவிக்கப் படுதல் அல்லது பிரயோசனம…

  9. இவ்வாண்டின் பிரபஞ்ச அழகியாக அங்கோலாவின் கறுப்பின பெண் தெரிவு _ 9/13/2011 1:51:07 PM வீரகேசரி இணையம் நடப்பு ஆண்டின் பிரபஞ்ச அழகி மகுடத்தை அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் வென்றார். பிரேசில் நாட்டில் சா பாவ்லோ நகரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகியைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இறுதிச் சுற்றில் சீனா, பிலிப்பைன்ஸ், உக்ரைம், அங்கோலா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 10 நாட்டு அழகிகள் தேர்வாகினர். இவர்களில் அங்கோலா நாட்டைச் சேர்ந்த லைலா லோபஸ் உட்பட 5 அழகிகள் பட்டத்துக்குரிய சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் லைலா லோபஸ் வெற்றி பெற்று உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி நவரத்தே, அவருக்கு மகுடம் …

  10. இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் திகதியில் ஒரு விநாடி கூட்டப்படுகிறது inShare இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமி…

  11. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், புத்தாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் தொடர்பில் பிளவுபட்ட தம் நாட்டை ஒன்றிணைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். சுமார் 2 வாரங்களுக்கு முன் தேர்தல் வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற ஜோன்சன், தம் புத்தாண்டு உரையில் அவ்வாறு கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள தருணத்தில் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவது தம் முதல் பணி எனத் ஜோன்சன், சொன்னார். பிரெக்சிட் உடன்பாட்டிற்கு முதற்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளார் அவர். இனி நாடாளுமன்றம் அதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும். அதன்பின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ப…

    • 0 replies
    • 664 views
  12. ஒரு காலத்தில் கனடா இராணுவத்தின் புகழ்பூத்த அதிகாரியாக இருந்த கேர்ணல் ரசல் வில்லியம்ஸின் இரட்டை வாழ்க்கையின் இரகசியங்கள் இன்று முதல் நீதிமன்றத்தில் அம்பலமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் மீதான இரட்டைக் கொலை வழக்கு விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன. கனடாவின் மிகப்பெரிய இராணுவ விமானத்தளமான CFB Tenton இன் கட்டளையிடும் தளபதியாக இருந்தவர்தான் கேர்ணல் வில்லியம்ஸ். 27 வயதான ஜெஸிகா லோய்ட் மற்றும் 38 வயதான கோப்ரல்.மேரி பிரான்ஸ் கொமயோ ஆகிய இரண்டு பெண்களையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொலை செய்தார் என்பதுதான் இவர் மீதான குற்றச்சாட்டுக்களாகும். கடந்த பெப்ரவரியில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக இவர் கைது செய்யப்பட்டபோது கனடா இராணுவமே அதிர்ச்சியடைந்தது. இவர் ஒர…

  13. இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதலின் பின் அமெரிக்கா அறிவிப்பு இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனை அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தொடர்புக்கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் துரு…

  14. இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு; குறைந்தது நான்கு பேர் பலி துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதியை காவல்துறையினர் முழுமையாக மூடியுள்ளனர். இஸ்திக்லால் தெரு என்ற தெருவில் நடந்த இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தற்போது அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்களும் காவல்துறையினரும் விரையும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுவருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். குர்திய தீவிரவாத இயக்கமான டிஏகே அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. …

  15. இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பாக 13 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறித்த தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் டெக்சியில் வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததனையடுத்து…

  16. இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதி…

    • 14 replies
    • 2k views
  17. இஸ்தான்புல்லில் குண்டு வெடிப்பு Istanbul Besiktas stadium hit by explosion caption The attack appears to have targeted riot police At least one explosion has been heard outside Istanbul's Besiktas sports stadium, Turkish media and witnesses say. There are reports of several people wounded, in what appears to have been an attack on riot police. Ambulances and police were seen rushing to the scene, and TV footage showed a fire burning outside the stadium. Turkey has seen a recent spate of militant attacks in major cities that have left dozens of people dead. The blast on Saturday happened two hours after a football …

  18. இஸ்ரேலால் போர்நிறுத்தம் கொண்டுவரப்படுகிறது Israel declares unilateral Gaza cease-fire Israel declares unilateral cease-fire in Gaza AP AP – Israeli Prime Minister Ehud Olmert, left, shakes hands with Israeli Defense Minister Ehud Barak, right, … JERUSALEM – Israel declared a unilateral cease-fire Saturday in its 22-day offensive that turned Gaza neighborhoods into battlegrounds and dealt a stinging blow to the Islamic militants of Hamas. But Israeli troops will stay in the Palestinian territory for now and Hamas threatened to keep fighting until they leave. In announcing the cease-fire, Prime Minister Ehud Olmert said Israel had achieved its goal…

  19. மத்திய கிழக்கில் அணுஆயுதப் பரம்பல் மற்றும் உலகில் அணு ஆயுதப்பரம்பலைத் இராணுவ ரீதியில் எல்லாம் தலையிட்டு அமெரிக்கா தடுப்பதாக உலகுக்குப் போக்குக் காட்டிக் கொண்டு.. இஸ்ரேலின் அணு ஆயுத இருப்பு வளர்வதை அனுமதித்திருப்பதை.. அமெரிக்க முன்னாள் அதிபரும் சிறீலங்காவை ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அங்கத்துவத்தில் இருந்து விலக்க குரல் கொடுத்தவருமான ஜிம்மி காட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்..! இஸ்ரேல் உலகுக்கு அறிவிக்காமலே 150 அணுகுண்டுகள் வரை வைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள காட்டர்.. இஸ்ரேல் பலஸ்தீனர்களை நடத்தி வரும் விதமே.. இந்தப் பூமியில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றம் என்றும் சாடியுள்ளார். உலகின் மிக மோசமான மனித உரிமைக் குற்றங்களில் ஒன்றாக சுமார் 1.6 மில்லியன் பலஸ…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி முண்டோ 23 ஜூன் 2025, 01:22 GMT இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை. கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது. அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாள…

  21. இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை! இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது …

  22. இஸ்ரேலின் இரக்கமற்ற கொடூரத் தாக்குதல்கள்: பாலஸ்தீனப் படுகொலையும், இடப்பெயர்வும் – தமிழில் ஜெயந்திரன் 23 Views மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அறையில் ஹசன் அல்-அற்றார் (Hasn al-Attar) எதுவுமே பேசாமல் மௌனமாக தனது மகள் லம்யாவினதும் (Lamya) அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று பிள்ளைகளினதும் இறந்த உடல்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். தீயணைப்புப் படை வீரருக்குரிய அங்கியை அணிந்திருந்த அவர், குளிரூட்டப்பட்ட அந்த அறையின் கதவுகள் மூடப்படுவதற்கு முன்னர் தனது மகளைக் கொஞ்சுவதற்காகக் குனிந்தார். “அவளுக்காக இறைவனை வேண்டுங்கள்” என்று அவரது தோளைத் தட்டியவாறு அவரது உடன் பணியாளர் ஒருவர் ஹசனுக்குக் கூ…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கலீத் மிஷால், யஹ்யா அய்யாஷ், முகத்தை மறைத்தபடி இருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர் கட்டுரை தகவல் எழுதியவர், தௌபா கலிஃபி பதவி, பிபிசி நியூஸ் அராபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையாக ஹெஸ்பொலா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டன. இஸ்ரேலின் மேம்பட்ட கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ஹெஸ்பொலா அமைப்பினர் பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்ததன் காரணமாக டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இது இஸ்ரேல் நடத்திய "திட்டமிட்ட தாக்க…

  24. இன்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் (Hamas) மேற்கொண்ட அந்த வெற்றிகரமான தாக்குதலின் போது உண்மையிலேயே என்ன நடந்தது? ஹமாஸ் என்ற ஒரு சிறிய குழு- எப்படி உலகத்தின் ஒரு நவீன இரணுவக் கட்டமைப்பை சிதைத்து இஸ்ரேலுக்குள் நுழைந்தது? உலகின் மிகச் சக்திவாய்ந்த பாதுகாப்பு அரண் என்று கூறப்பட்ட காசாவின் சுவர்களைத் தகர்த்து- எப்படி இஸ்ரேல் மீது அது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டது? இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகளை காசா தாக்குதலின்போது எப்படி ஏமாற்றியது ஹமாஸ்? ஹமாஸ் விடயத்தில் எங்கே தவறிழைத்தது இஸ்ரேல்? காலங்கள் கடந்தும் நிலைத்துநிற்கக்கூடிய ஒரு வரலாற்றுச் சம்பவம் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் த…

  25. 14 JUL, 2025 | 10:50 AM இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதிக்கு காயமேற்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியானிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் அதிஉயர் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த மிகவும் இரகசியமான பகுதியொன்றின் ( நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டிருந்தது) நுழைவாயில்கள் மற்றும் அந்த இடத்திற்கு செல்லும் பகுதிகளை இலக்குவைத்து ஜூன் 16ம் திகதி இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என ஈரான் அரசாங்கத்தின் பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதியும் ஏனையவர்களும் அவசர சூழ்நிலைகளின் போது வெளியேறுவதற்கான பகுதி ஊடாக தப்பிச்செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.