உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்த தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இந்திய மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையால், 28 நாடுகளுக்கு இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் குழு அதிகாரிகள் இந்தியா வந்து, மாம்பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும் இடம், பெட்டக முறை, விதம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கிக் கொள்ளப்படும் என்று இந்திய ஆய்வுக் கவுன்சில் இயக்குநர் எஸ்.கே. சக்சேனா கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121967&category=IndianNews&am…
-
- 0 replies
- 205 views
-
-
Published By: RAJEEBAN 24 APR, 2023 | 11:29 AM சிங்கப்பூரில் கஞ்சா வைத்திருந்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றத்தை எதிர்கொண்டுள்ள தங்கராஜூ சுப்பையா என்ற 46 வயது நபரின் குடும்பத்தினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். இந்த வழக்கை மீள்விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கஞ்சாகடத்தல் முயற்சியில் ஈடுபட்டமைக்காக சுப்பையாவிற்கு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. எனது சகோதரர் குறித்த வழக்கு நியாய…
-
- 60 replies
- 4.2k views
- 1 follower
-
-
மலைகளின் ராணியான நீலகிரியில் உள்ள மலை ரயில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக தினமும் பயணிக்கிறது. இங்குள்ள மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்துள்ளது இந்த ரயில் பற்றிய தெய்தி தொகுப்பு மற்றும் காஷ்மீரில் காணாமல் போன தனது மகனை தேடி ஒரு தாய் நடத்தும் போராட்டம் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 339 views
-
-
சமீபத்தில் இந்தியாவில் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆனது தேசிய அளவிலான ஒரு அவசர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என ஐ.நா சபை அறிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இப்பிரச்சினைக்குக் காரணமான இந்திய மக்களின் மனப்பாங்கைக் கண்டித்துள்ளதுடன் இதற்கெதிரான பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாக இன்று ஹரியானாவில் மோடி உரையாற்றிய போது, ‘எமது அண்டை வீடுகளில் அதிகளவில் பெண் குழந்தைகள் தமது தாயின் கருப்பையிலேயே கொல்லப் பட்டு வருகின்றனர் என்பது உண்மை என்ற போதும் எம்மால் அதன் வலியை உணர முடிவதில்லை என்பதால் நாம் அலட்சியமாகவே இருந்து விடுகின்றோம். உண்மையில், எம்மில் எவருக்கும் எமது புதல்வியரை எந்த விதத்திலும் கொல்லும் உரிம…
-
- 0 replies
- 309 views
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 08:58 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் இந்தியக் கடற்பகுதியில் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் நடமாடத் தொடங்கியுள்ளதாக இந்திய இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. கேரள கடற்பகுதியில் திருவனந்தபுரத்துக்கு அப்பால் சென்று கொண்டிருந்த கப்பல்களை கடத்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் தொடர்பாக இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும் கவலையடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை காலை 8.11 மணியளவில் திருவனந்தபுரத்துக்கு மேற்கே 28 கி.மீ தொலைவில் கப்பல் ஒன்றை கடத்தும் முதலாவது …
-
- 0 replies
- 424 views
-
-
'எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்?' என்ற இந்த ஓவியம் உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியமாகும். பிரெஞ்சு நாட்டு ஓவியர் கோகென் வரைந்த ஓவியம் ஒன்று 300 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்கப்பட்ட கலைப்படைப்புகளிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படைப்பு இதுவாகும். 'எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்?' என்ற இந்த ஓவியத்தை 1892ல் கோகென் வரைந்தார். தாகித்தி தீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற இந்த ஓவியம் சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சேகரிப்பாளரிடம் இருந்துவந்தது. தற்போது கத்தாரில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இந்த ஓவியம் விற்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, பால் செஸன்…
-
- 0 replies
- 373 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை EPA பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையான கிறித்துவ பெண்ணின் கணவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார். ஆசியா பிபி என்ற அந்த பெண்ணின் கணவர் ஆஷிக் மாசி, பாகிஸ்தானில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். புதன்கிழமையன்று ஆசியா பிபி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆதரங்கள் வலுவானதாக இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அவரின் விடுதலை எதிராக பல வன்…
-
- 0 replies
- 394 views
-
-
கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள மிசிசாக பகுதியில் வசித்து வந்த Real Estate முகவரின் கொலை தொடர்பாக தமிழ் இளைஞர்கள் இருவர் உட்பட மூவர் கைது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சனவரி 19 இல் இருந்து காணாமல் போன ரியல் எஸ்டேட் முகவரான இவரது உடல் எச்சங்கள் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கீழ் பகுதியில் இருந்து நேற்று கண்டு பிடிக்கபட்டும் உள்ளது மேலதிக செய்தி Police confirm body found in Markham home is real estate agent Tony Han
-
- 2 replies
- 581 views
-
-
வீரகேசரி இணையம் 7/20/2011 5:16:20 PM தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா மொஹமட் ஒமர் உயிருடன் உள்ளதாகவும் அவர் இறந்துவிட்டதாக வெளியாகிய செய்தி பொய்யானதெனவும் அவ்வமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவ்வமைப்பு தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையக் கட்டமைப்புக்கள் 'ஹெக்கிங்' செய்யப்பட்டுள்ளதுடன் அதனூடாகவே இவ்வதந்தி பரப்பப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரே இதற்கு முழுப்பொறுப்பெனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. முல்லா ஒமர் உயிரிழந்து விட்டதாக அவ்வமைப்பின் பேச்சாளர்களான சபியுல்லா முஜாஹிட் மற்றும் குஹாரி மொஹமட் யூசுப் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து குறுஞ்செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இச்செய்தி பொய்யான…
-
- 2 replies
- 859 views
-
-
கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும் / On Monday, April 8, the 2024 total solar eclipse will sweep through the sky over North America.] கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும். எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுவது. ஆனால் …
-
- 1 reply
- 635 views
-
-
நிறைய தருணங்களில் நீதிமன்றங்கள்தான் இந்தியாவின் ஜனநாயக, மற்றும் தற்சார்பு ரீதியான தார்மீக அடிப்படைகளைக் காப்பாற்றும் வேலையை கச்சிதமாகச் செய்து வருகின்றன. கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பன்னாட்டு மருந்து நிறுவனம் தொடர்பான வழக்கொன்றில் வழங்கிய தீர்ப்பு, உலகநாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘நோவர்டிஸ்’ என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவில் மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் கிளீவெக் (Gleevec) என்ற பெயரில் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை (இந்தியாவுக்குள்) செய்யும் உரிமையை காப்புரிமைச் சட்டத்தின்கீழ் வழங்குமாறு…
-
- 0 replies
- 1k views
-
-
உலக பத்திரிகை சுதந்திர தினம்: அச்சுறுத்தல்களால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறிய 310 பிபிசி செய்தியாளர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு,ஷாஜியா ஹயா செய்தியாளராக ஆப்கானிஸ்தான் முழுவதும் பயணித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீபனி ஹெகார்டி பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாடுகளுக்கு வெளியே இருந்து செயல்படும் பிபிசி உலக சேவை பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி 310 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புள்ளிவிவரங்கள் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த எண்ணிக்கை ரஷ்யா, ஆப்கானிஸ்தான் …
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
அமெரிக்க எதிர்ப்பையும் மீறி யுனெஸ்கோ தலைமையகத்தில் பாலஸ்தீனக் கொடி ஏற்றப்பட்டது பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas யுனெஸ்கோவின் தலைமையகக் கட்டிடத்தில் நேற்று முதன் முறையாக பாலஸ்தீனக் கொடியை ஏற்றியுள்ளார். இது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோரி நிற்கும் பாலஸ்தீனத்தின் முதல் வெற்றியாக மட்டுமன்றி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கிடைத்த பெரும் தோல்வியாகவும் கருதப்படுகின்றது. இதன் போது கருத்துத் தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி Mahmoud Abbas இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், சர்வதேச சமூகம் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான முதற்கட்டம் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, இஸ்ரேலுடனான சமாதான முயற்சிகளுக்கு ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் சற்றும் தங்கள் முயற்சியை தொடர்கின்றனர். இன்று காலை, 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சிறுப டகொன்று பிரான்ஸிலிருந்து புறப்பட்டுள்ளது. குழந்தை உட்பட மூன்று சிறுவர்கள் அந்தப் படகு ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அதன் இயந்திரம் பழுதடைந்துள்ளது. ஆகவே, மீண்டும் திரும்பி பிரான்சுக்கே சென்றுவிடலாம் என …
-
- 0 replies
- 338 views
- 1 follower
-
-
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒழித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொல்லப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும…
-
-
- 7 replies
- 779 views
- 1 follower
-
-
தீவிரவாதத்துக்கு துணை போகும் அமெரிக்காவுக்காக நான் பதவி விலக வேண்டுமா? - சிரியா அதிபர் காட்டம் சிரியா அதிபர் ஆசாத். | படம்: ஏபி. சிரிய நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போகாமல் இருக்கவும் என்று சிரிய அதிபர் பஷார்-அல்-ஆசாத் சூசகமான கருத்தை தெரிவித்தார். இது குறித்து ரஷ்ய நாட்டு பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் அவர் கூறும்போது, "ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகளை கண்டுகொள்ளவில்லை என்பது தற்போதைய பிரச்சினை அல்ல. உண்மையில் உங்களுக்கு என் மக்கள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போகாமல் இருங்கள். அகதிகளின் நிலைப்பாடும் இதுதான். தீவிரவாதம் மட்டுமே பிரச்சினை என்பதை புரிந்துகொள்ளுங்கள்." என்றார். அமெரிக்காவுக்காக பதவி விலக மாட்டேன் சிரியாவ…
-
- 0 replies
- 390 views
-
-
இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களைக் கொண்ட ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகப் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போர்ப்பதற்றம் தீவிரமடைந்துள்ளது.ஈரானில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை ஈரான் மறுத்துள்ளது. மின் உற்பத்திக்காக அணு உலைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதை நம்ப மறுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைவிதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரபு நாடுகளில் இருந்து புறப்படும் எண்ணை கப்பல்கள் ஸ்ரெய்ட் ஆப் ஹோர்மீஸ் துறைமுகம் வழியாக செல்ல ஈரான் மறை…
-
- 16 replies
- 2.1k views
-
-
15 SEP, 2024 | 12:49 PM நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 70 விவசாயிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த மரப்படகு கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகள் கும்பி நகரத்தில் உள்ள தங்கள் விவசாய நிலங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். உளளுர் அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் மூன்று மணிநேர தேடுதலின் பின்னர் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவம் இந்த பகுதியில் இடம்பெற்றமை இது இரண்டாவது தடவை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம்900 விவசாயிகள் தங்கள் நிலங்களிற்கு கடல்மார்க்கமாக செல்கின்றனர்…
-
- 0 replies
- 603 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடன் இணைய முடியாது – பிரித்தானியாவுடன் பேசுகின்றோம் : ஜேர்மனி! அமெரிக்காவினால் விடுக்கப்பட்டிருந்த மிக முக்கிய கோரிக்கை ஜேர்மனிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. பேர்சிய வளைகுடா பகுதியில், கப்பல்களை ஈரான் கைப்பற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக போர்க்கப்பல்களை அனுப்பி வைக்குமாறு ஜேர்மனியிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை ஜேர்மனியின் துணை சன்ஸலரான Olaf Scholz நிராகரித்துள்ளார். அத்துடன், அமெரிக்கா தலைமையிலான கடல் பாதுகாப்புப் படையில் தமது நாடு பங்கேற்காது எனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எமது பிரெஞ்சு மற்றும் பிரித…
-
- 0 replies
- 697 views
-
-
ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுக்கிறது [27 - February - 2008] * ஐ.நா.வின் அணு கண்காணிப்பு பிரிவு ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுப்பதாக ஐ.நா.வின் அணு விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை 2003 இலேயே நிறுத்தி விட்டதாக கடந்த டிசெம்பரில் வெளியான அமெரிக்க புலனாய்வு அமைப்பொன்றின் அறிக்கை தெரிவித்திருந்த நிலையிலேயே ஐ.நா.வின் அணுக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச அணுச்சக்தி முகவர் அமைப்பிற்கு (ஐ.ஏ.ஈ.ஏ) வழங்கப்பட்ட அறிக்கையிலேயே ஈரான் தனது அணு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையை நிராகரித்துள்ள ஐ.ஏ.ஈ.ஏ.க்கான ஈரானியத் தூதுவர…
-
- 0 replies
- 629 views
-
-
50 ஆண்டுகளில் முதல் முறையாக மலேசியாவில் ஆளும் கூட்டணிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை திகதி : Sunday, 09 Mar 2008, [saranya] மலேசியா நாட்டில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கூட்டணியான தேசிய அணியில் (பாரிசன் நேசனல் கூட்டணி), மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்று இருந்தது. இந்த கூட்டணி தான் நாடு விடுதலை பெற்றது முதல் கடந்த 50 ஆண்டுகளாக அந்த நாட்டை பெரும்பலத்துடன் ஆட்சி செய்து வந்தது. இந்த தேர்தலில் முதல் முறையாக அந்த கூட்டணிக்கு மிகச்சிறிய அளவிலான மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி ஆளும் கூட்டணிக்கு தேவை. மொத்தம் உள்ள 220 தொகுதிகளில் 139 இடங்களில…
-
- 0 replies
- 751 views
-
-
ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய படைவீரர்கள் உயிருடன் கைது - உக்ரைன்ஜனாதிபதி Published By: Rajeeban 12 Jan, 2025 | 10:28 AM ரஸ்யாவுடனான போர்முனையில் காயமடைந்த இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கேர்ஸ்க்கின் ஒப்லாஸ்டில் இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிதெரிவித்துள்ளார். இருவருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்,அவர்களை உக்ரைன் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் தடுத்துவைத்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காயமடைந்த வடகொரிய இராணுவீரர்களை க…
-
- 2 replies
- 316 views
-
-
பக்தாதியின் பின் சதாம் ஹுசைனின் இராணுவ அதிகாரி ஐ.எஸ். தலைவன் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனின் இராணுவத்தில் சேவையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராசிரியர் என அழைக்கப்படும் இவரின் பெயர் அப்துல்லா கர்தாஸ் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் பயங்கரவாதி அபுபக்கர் பக்தாதி சிறைப்படுத்தப்பட்டிருந்த போது அவருடன் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர் எனவும் கூறப்படுகின்றது. இவர் பக்தாதியில் நெருங்கிய கொள்கை வகுப்பாளராக செயற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. ஐ.எஸ். அமைப்பின் செய்தி ஊடகமான அமாக் வ…
-
- 1 reply
- 676 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - துபாய் சொகுசு விடுதிக் கோபுரத்தில் பெருந்தீ ஏற்படக் காரணம் என்ன? தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டாலும் கனன்றுகொண்டிருக்க அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். - பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் புதுவருட கொண்டாட்டங்கள்! ஐ எஸ் ஆயுததாரிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, மியூனிக் நகர ரயில்நிலையங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்! - அத்துடன், தலையின் உள்ளே ஏற்படுகின்ற காயங்களைக் கண்டுபிடித்து, அடிபட்டவரின் உயிரைக் காப்பாற்ற உதவும், கைக்கு அடக்கமான மூளை ஸ்கேன்னர் கருவி!
-
- 0 replies
- 333 views
-
-
அகதிகளான அழகு குழந்தைகள்... வாழும் இடத்தை பாருங்கள்! பிரான்ஸ் நாட்டின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சேறு, சகதிகளுக்கு இடையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகள் பிரித்தானியா செல்வதற்காக ஐரோப்பாவை நோக்கி படையெடுக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு பிரான்ஸில் உள்ள டுன்கிர்க் (Dunkirk) நகரில் பலத்த மழை மற்றும் காற…
-
- 0 replies
- 810 views
-