உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
கொள்ளையுடன் தொடர்புடைய ஆசிய நாட்டவர் ! புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் பொலிஸார் தகவல் தருமாறு அறிவிப்பு! லண்டன் Mitcham பகுதியில் கடந்த வருடம் நடந்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபரது புகைப்படத்தை புலனாய்வு பிரிவு பொலிஸார் வெளியிட்டுள்ளனர். Mitcham,Montrose Gardens பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 30ம் திகதி புதன்கிழமை நடந்த கொள்ளை மற்றும் Belmont Avenue பகுதியில் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 24 வயதான அரவிந்தன் ரவீந்திரன் என்ற நபரின் புகைப்படமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆசியாவை சேர்ந்த ரவீந்திரன் என்ற இந்த நபரின் உயரம் 5அடி 3அங்குலம் எனவும் மாநிறமா…
-
- 1 reply
- 431 views
-
-
மோசமான நடத்தை காரணமாக நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்! நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார். இந்தநிலையிலேயே பண்புகள் தொடர்பான விவகாரத்தினை மீறிய குறித்த பிரித்தானிய குடும்பத்தினை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிநுழைவுத் துறை உதவித் தல…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாண நீதிமன்றத்தில் கைதி ஒருவர் நீதிபதியை பாய்ந்து தாக்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நீதிபதி வழக்கின் தீர்ப்பை வாசித்துக்கொண்டிருந்த போது, டியோப்ரா ரெட்டன் (Deobra Redden) எனும் 30 வயதான கைதி பாய்ந்து தாக்கிய காட்சி, நீதிமன்ற கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஒருவரை கடுமையாக தாக்கிய குற்றசாட்டில் டியோப்ரா ரெட்டன் மீது வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். நீதிபதி மீது தாக்குதல் எனினும், அவருக்கு நன்னடத்தை சோதனை முறையான விடுதலையை (Probation) வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். …
-
- 6 replies
- 754 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி – நான்கு பேர் கைது…. January 23, 2019 அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதாக தெரிவித்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் தீட்டி குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்கள் மற்றும் 16 வயதுச் சிறுவன் ஒருவர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், வீட்டிலே தயாரிக்கும் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 1980 களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவரால் உருவாக்கப்பட்ட இஸ்லாம்பெர்க்கை தாக்குவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்ததாக குற்றம் சுமத்…
-
- 0 replies
- 653 views
-
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம் காசாவில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகள் நடத்திவரும் திட்டமிட்ட இனக்கொலையில் மிக அண்மையில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த , யுத்தத்தில் எவ்விதத்திலும் பங்கேற்றிருக்கத பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போரில் அகப்பட்டு கடுமையான அவலங்களைச் சந்தித்துவரும் பாலஸ்த்தீன மக்கள் தமதுயிரைக் காத்துக்கொள்ள முடிந்தவகையில் இப்பகுதியிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். அவ்வாறான ஒரு முயற்சியில் தனது பேரக்குழந்தையின் கைகளைப் பிடித்தவாறு சுமார் 15 முதல் 20 வரையான பெண்கள் சிறுவர்கள் கொண்ட மக்கள் கூட்டமொன்றை இஸ்ரேலின் முன்னரங்கு நோக்கி கைக…
-
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன. எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலை…
-
- 0 replies
- 351 views
-
-
கூகுள் நிறுவனத்துக்கு 1.49 பில்லியன் யூரோ அபராதம் March 21, 2019 அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரினால் 1.49 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக நேற்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளார் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் இணைய வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது எனவும் கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் கூகுள…
-
- 0 replies
- 497 views
-
-
இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ தேவலை: விஜயகாந்த் தாக்கு. சென்னை: கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை தாக்கல் செய்துள்ள பதில் மனுவைப் பார்க்கையில் இந்திய அரசுக்கு இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை பதில் மனு தாக்கல் செய்…
-
- 0 replies
- 506 views
-
-
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இன்று காரசார விவாதம் ஒன்று துவங்கியிருக்கிறது கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள புதிய கடன் மீட்பு திட்டம் தொடர்பில் ஜெர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மீட்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கு ஜெர்மனியின் ஆதரவு மிகவும் முக்கியம். ஜெர்மனி இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமா என்பது தொடர்பிலான வாக்கெடுப்பு இன்னும் சில மணி நேரத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜெர்மனியின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்கல், கிரேக்கத்திற்கான புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான அனுமதியை ஜெர்மன் நாடாளுமன்றம் வழங்கும் என்று எதிர்பார்…
-
- 0 replies
- 310 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 2024 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் தொடர்பான ஆணையத்தில் உரையாற்றினார். இதன் போது, அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு மிகப்பெரிய காரணம் சிந்தெடிக் மருந்துகள் (synthetic drugs - தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படும் மனோவியல் மருந்துகள்) அல்லது செயற்கை ஓபியாய்டுகள் என்று அவர் கூறியிருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் செயற்கை மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டதால் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவும் சக்த…
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”-ஜோ பைடன். காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் படையினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”காசாவில் ஹமாஸ் படையினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். ஹமாஸால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். ஒக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக…
-
-
- 4 replies
- 617 views
-
-
தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து அமெரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு எதிரான பிரேரரணையை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழ தமிழ் மக்களுடன் இராஜதந்திர தொடர்புகளை பலப்படுத்த வேண்டும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களின் சுய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற 3 காரணிகளை முன்வைத்து பிரேரரணை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் அமெரிக்க தூதுவர் வடக்கிற்கு சென்று முன்னாள் போராளிகளை சந்தித்திருந்தார். இலங்கையின் பாதுகாப்பு தரப்பு தூதுவருக்குரிய நடவடிக்கைகக்க…
-
- 2 replies
- 591 views
- 1 follower
-
-
தென் கொரியாவிலிருக்கும் ராணுவ முகாம் மீது வட கொரியா கடந்த வியாழக் கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, தென்கொரியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியது. தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் 1950-53ல் நடந்த யுத்தத்தில் அமைதி உடன்படிக்கை ஏதும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் மட்டுமே செய்துகொள்ளப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நடப்பது வாடிக்கையாக இருந்துவருகிறது. இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் யொங் உண் போருக்கு தயாராகும் படி ராணுவத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து, வடகொரியாவின் படைகள் போருக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்களுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில் வடகொரியாவின் இந்த நடவடிகை பதற்றத்தை மேலும் அதிகரித்துள…
-
- 0 replies
- 788 views
-
-
நூலகங்களாக மாற்றம் செய்யப்படும், பொதுத்தொலைபேசிக் கூண்டுகள்! பிரித்தானியாவில் பாவனையிலிருந்த பொதுத்தொலைபேசிக் கூண்டுகள் தற்போது நூலகங்கள் மற்றும் உணவகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. செல்லிடத் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், வீதியோரங்களிலுள்ள பொதுத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே பிரித்தானியாவில் பாவனையிலிருந்த பொதுத்தொலைபேசிக் கூண்டுகள் தற்போது நூலகங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரித்தானியாவின் சிவப்பு நிற பொதுத் தொலைபேசிக் கூண்டுகள் பிரசித்திபெற்றவை. ஆரம்பத்தில் சுமார் 31,000 பொதுத்தொலைபேசிக் கூண்டுகள் பிரித்தானியாவில் இருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், தற்போது சுமார…
-
- 0 replies
- 708 views
-
-
"வேலைக்குச் சென்றுவரும் நேரமும் வேலை நேரமே" bbc இந்தத் தீர்ப்பு ஐரோப்பிய யூனியனில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. நிரந்தரமான அலுவலகம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்களைப் பொறுத்தவரை, வேலைக்குச் சென்று, வீடு திரும்புவதற்கான நேரத்தையும் வேலை நேரத்தின் பகுதியாகக் கருத வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நிரந்தரமான அலுவலகம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்களைப் பொறுத்தவரை, வேலைக்குச் சென்று, வீடு திரும்புவதற்கான நேரத்தையும் வேலை நேரத்தின் பகுதியாகக் கருத வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக, இந்த நேரம் வேலை நேரமாக கருதப்படவில்லை. ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் காரணமாக…
-
- 0 replies
- 595 views
-
-
கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - இரு விமானிகள் பலி ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் பிரியாத்தியா பிராந்தியத்திலுள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்தில் இருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு நேற்று அதிகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 43 பயணிகளும், 2 விமானிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென என்ஜின் செயலிழந்தது. அதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை நில்நியான்கார்ஸ்க் வி…
-
- 0 replies
- 372 views
-
-
ஜெர்மனியின் சர்வதேசியத்துக்கு வாழ்த்துகள் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தை பிரிட்டனில் கழித்தேன். சிரியா நாட்டு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதுதான் அப்போது முக்கியச் செய்தி. துருக்கி கடற்கரையில் அகதிகளின் சடலங்கள் ஒதுங்குவது அதிகரித்தன. தங்கள் நாட்டு எல்லை வரை வந்த அகதிகளை ஹங்கேரிய போலீஸார் குண்டாந்தடி கொண்டு அடித்து விரட்டினர். இவையெல்லாம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. இச்சூழலில் அகதிகளுக்கு உதவ பிரிட்டன் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் விவாதங்களும் எங்கும் எழுந்தன. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், "நம்மால் இனி அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அறிவித்தது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்தது. அதற்கான காரணங்களும் அதில் தரப்பட்டிர…
-
- 0 replies
- 231 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters ஜப்பான் நாட்டில் கியோடோ மாகாணத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் ஏறக்குறைய 26 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டின் அவசரப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளூர் பத்திரிக்கை ஒன்றின்போது கூற்றுப்படி கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த, ஒருவர் அடையாளம் தெரியாத திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார். மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குள்ளானவர் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 411 views
-
-
பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, பூச்சாவின் விட்செஸ் சுமார் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு ஆகும். கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் பதவி, கிழக்கு ஐரோப்பா நிருபர், பூச்சா 48 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேனில் உள்ள பூச்சா (Bucha) நகரத்தில் இருள் சாயும் வேளையில் தான் இந்தக் குழு பணியைத் துவங்குகிறார்கள். ஏனெனில் இரவில் தான் ரஷ்யா இந்த நகரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தத் துவங்கும். இந்தக் குழு கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு. அவர்கள் தங்களை 'பூச்சாவின் சூனியக்காரிகள்' (The Witches of Bucha) என்று…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
'அகதியின் அடையாளத்தில்' வந்த பாரிஸ் குண்டுதாரி <iframe width="400" height="500" frameborder="0" src="http://www.bbc.com/tamil/global/2015/11/151117_leros_bomber/embed"></iframe> பாரிஸில் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தவர்களில் ஒருவர் அஹ்மெட் அல் மொஹமட் என்று பிரான்ஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இவர் சிரியாவிலிருந்து வந்தவர் என்று கிரேக்கத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். லெரோஸ் தீவு வழியாக மஸிடோனியாவை கடந்து, சேர்பியாவுக்கு போயிருக்கிறார். பின்னர் அங்கிருந்து குரோயேஷியா வழியாக ஹங்கேரிக்கு சென்றிருக்கிறார். பின்னர், ஆஸ்திரியாவுக்கு போனதாக நம்பப்பட்ட அவர், கடைசியில் பிரான்ஸின் பாரிஸ் நகரி…
-
- 1 reply
- 934 views
-
-
சூறாவளிக்காற்றால் தரையிறங்காமல் தப்பித்த ராட்சத விமானம்: வைரல் வீடியோ மான்செஸ்டர்: சூறாவளிக்காற்றால், ராட்சத விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில், வானிலை மாற்றத்தால் மணிக்கு 112 கி.மீ வேகத்தில் நேற்று பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதன் காரணமாக அங்கிருந்த பல வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றது. இந்நிலையில், மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த Monarch A320 என்ற ராட்சத விமானம், பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் நிலை தடுமாறியது. இதை தொடர்ந்து உடனே அந்த விமானத்தின் விமானி, விமானத்தை த…
-
- 0 replies
- 821 views
-
-
இந்துசமுத்திர பகுதியில் சீனாவின் அணுவாயுத யுத்தக்கப்பல்கள் நடமாடியதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தியா டுடே தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன் சீனாவின் கடற்படை கலங்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தனது அமெரிக்க தயாரிப்பு பி81 நீர்மூழ்கி யுத்த வேவு விமானங்களையும் ஏனைய சாதனங்களையும் பயன்படுத்தி சீனாவின் கடற்படை கப்பலைக கண்காணித்துள்ளதுடன் படங்களை எடுத்துள்ளது. சீனாவின் ஜியான் -32 என்ற கடற்படை கப்பல் இந்து சமுத்திரத்தின் தென்பகுதி ஊடாக பயணித்த பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனை இந்திய கடற்படையின் பி81 நீர்மூழ்கி எதிர்ப்பு யுத்த மற்றும் நீண்ட தூர கண்காணிப்பு விமானங்கள் படம்பிடித்துள்ளன. இந்த…
-
- 2 replies
- 938 views
-
-
பணயக் கைதிகளை விடுவிக்க ட்ரம்ப் காலக்கெடு! 2025 ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப், காசா போராளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 5 அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முட்டுக்கட்டையான முயற்சிகள் குறித்து திங்களன்று (02) வெளியான ட்ரம்பின் அறிக்கை மிகவும் வலுவாக இருந்தது. மேலும் அவர் தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்கும் முன் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு அழுத்தம் கொடுக்கிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில் வந்துள்ளது. இஸ்ரேல் மீதான 2023 ஆம் ஆண்டு கொடிய தாக்குதலின் போது, ஹமாஸ் தலைம…
-
- 0 replies
- 568 views
-
-
தமிழகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ருவாண்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை, டெல்லி போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து ருவாண்டாவை சேர்ந்த மேரி கிரேஸ் என்ற பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட அந்த பெண் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் 3 ஆயிரம் டாலர் பிணைத் தொகை வேண்டும் என்று கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த ருவாண்டா பெண் அமெரிக்காவில் வசிக்கும் தன்னுடைய வருங்கால கணவரிடம் உதவியை நாடியுள்ளார். பெண்ணின் வருங்கால கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ருவாண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து அது டெல்லி போலீசாருக்கும் அது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 563 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது. அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பல லட்சம் அகதிகள் மீண்டும் சிரியாவுக்கு திரும்பி வருவதுடன், அதைக் கொண்டாடியும் வருகின்றனர். மேலும், சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் திகதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 478 views
- 1 follower
-