உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27043 topics in this forum
-
டாக்கா வங்காள தேசத்தில் போர்க்குற்ற வழக்கில் முன்னாள் மந்திரி சையத் முகமது கைசருக்கு மரண தண்டனை விதித்து, சர்வதேச குற்ற தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. முன்னாள் மந்திரி வங்காளதேசத்தில் ஜெனரல் எச்.எம்.எர்ஷாத் தலைமையில் ராணுவ ஆட்சி நடைபெற்ற போது மந்திரி பதவி வகித்தவர் சையத் முகமது கைசர் (வயது 73). இவர், அங்கு 1971–ம் ஆண்டு சுதந்திரப் போர் நடைபெற்றபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, தனது சொந்த ஊரான ஹாபிகஞ்சிலும், அண்டை நகரமான பிராமன்பாரியாவிலும், சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவானவர்களை தனது கைசர் பாஹினி போராளிகள் படை மூலம் கொன்று குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதே போன்று பல அரசியல் கட்சித்தலைவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகள் எழுந்தன. குற்றச்சாட்ட…
-
- 0 replies
- 460 views
-
-
சண்டிகர்: தனது ஆசிரமத்தைச் சேர்ந்த 400 சீடர்களுக்கு, ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்ய தூண்டிய பஞ்சாப் சாமியார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் 'தேரா சாச்சா ஸவ்தா' என்ற சமூக நல மற்றும் ஆன்மீக அமைப்பையும், ஆசிரமத்தையும் நடத்தி வருபவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம். இவர் மீது வழக்கறிஞர் நவ்கிரண் சிங் பஞ்சாப் மற்றும் ஹரியான உயர் நீதி மன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து உள்ளார். இவர், சாமியாரின் முன்னாள் சீடர் ஹன்ஸ் ராஜ் சவுகான் என்பவர் தரப்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞர் ஆவார். அவர் அளித்துள்ள அந்த மனுவில்," குர்மீத் தன்னுடைய 400 சீடர்களூக்கு ஆண்மை நீக்கம் செய்து உள்ளார். இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளே…
-
- 2 replies
- 453 views
-
-
2022 கத்தார் உலகக் கோப்பை அவலம்: தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் 2022 கத்தார் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலர் 50 டிகிரி வெயிலில் பலியாகி வருகின்றனர். 2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான உள்கட்டுமான பணிகள் கத்தாரில் நடைபெற்று வருகிறது. கத்தாருக்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்த அனுமதி கொடுத்ததே பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் உயிரிழந்து வரும் செய்திகள் கடும் வேதனைகளை ஏற்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டில் மட்டும் 2 நாட்களுக்கு ஒரு நேபாள தொழிலாளி அங்கு பலியாகி வரு…
-
- 0 replies
- 471 views
-
-
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல், கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=36544
-
- 0 replies
- 461 views
-
-
குடும்ப அரசியலுக்கு விளக்கம் கூறும் மகிந்த நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் அரசியல் குடும்பம் ஒன்றில் இருந்து வந்தவன். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தேர்தல் விஞ்ஞாபன வரலாறு ஒரு சில மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டதேயாகும். ஒரு சில மாதங்களில் இந்த ஆவணம் கிடப்பில் போடப்பட்டு விடும் நடைமுறையே காணப்படுகின்றது. எனினும் இந்த வரலாற்றை நாம…
-
- 1 reply
- 446 views
-
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கோரி டெல்லியில் நடந்த போராட்டம்| கோப்புப் படம். மோடி அரசின் இந்த முடிவு, இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி என விமர்சிக்கப்படுகிறது. பாலஸ்தீனத்திற்கு இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. மோடி அரசின் இந்த முடிவு, இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி என விமர்சிக்கப்படுகிறது. இது தொடர்பாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அரசு வட்டாரத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற இரண்டு முக்கிய தகவல்களுமே, ஐ.நா. மன்றத்தில் இதுநாள்வரை பாலஸ்தீன கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளித்து வந்த நிலையில், இம்முறை பாலஸ்தீன கோரிக்கைக்கு ஆத…
-
- 6 replies
- 2.3k views
-
-
சட்டசபை தேர்தல்: காஷ்மீரில் பி.டி.பி 23; பா.ஜ.க. 22; என்.சி. 13; காங். 8 தொகுதிகளில் வெற்றி! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 28 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 சட்டசபை தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 831 பேர் வேட்பாளர்களாக களத்தில் நின்றனர். ஜம்மு காஷ்மீரில் நான்கு முனைப் போட்டி நிலவியது. மக்கள் ஜனநாயகக் கூட்டணி, தேசியமாநாடு, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. இம் மாநில தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது மொ…
-
- 0 replies
- 574 views
-
-
அமெரிக்காவுக்கு வட கொரியா யுத்த எச்சரிக்கை அமெரிக்காவுக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி எங்கும் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. சோனி பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் கணனி வலய மைப்பில் அத்துமீறி நுழைந்து செய்யப்பட்ட சைபர் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருப்பதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை வட கொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கு எதிராக வட கொரியா வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், வெள்ளை மாளிகை, பென்டகன் உட்பட அமெரிக்காவின் பிரதான நிலங்களை தாக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See …
-
- 0 replies
- 535 views
-
-
அட்லாண்டிக் மற்றும பசிஃபிக் பெருங்கடல்களை இணைக்கும் புதிய கடல் போக்குவரத்துக் கால்வாய்க்கான கட்டுமானப் பணிகளை நிகராகுவா துவக்கியுள்ளது. இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீன நிறுவனத்தின் தலைவரான வங் ஜிங், இது வரலாற்றில் பதியப் போகும் புதிய தருணம் என்று வர்ணித்துள்ளார். கால்வாய் பணிகளின் துவக்கவிழா அட்லாண்டிக் மற்றும் பசிஃபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயை விட இந்தக் கால்வாய் பெரிதாக இருக்கும், ஆழமானதாக இருக்கும். இது 278 கிலோமீட்டர் தூரம் செல்லும். இந்தக் கால்வாய் நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றிவிடும் என்று நகிராகுவாவின் துணை அதிபர் ஒமார் ஹெலெஸ்லெவின்ஸ் நம்பிக்கை வெளியிட்டார். இந்தக் கால்வாய்த் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, கடல்வழி வர்த்தகம் உலக …
-
- 1 reply
- 539 views
-
-
காந்தியை கொன்ற கோட்சேதான் இந்தியாவின் முதல் தீவிரவாதி: - அமைச்சர் பேச்சால் சர்ச்சை! [Tuesday 2014-12-23 14:00] கோட்சேதான் இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று உத்தரபிரதேச அமைச்சர் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிஉள்ளது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் கடந்த சில நாட்களாக காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவை கொண்டாடத் தொடங்கியுள்ளன. கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த சூழலில் கோட்சேவை முன்னிலைப்படுத்தி இந்து அமைப்புகள் பேசி வரும் கருத்துகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அசம்கான் கோட்சே குறித்து ப…
-
- 0 replies
- 426 views
-
-
அமெரிக்க ராணுவமே MH 370 மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது : - முன்னாள் ஏர்லைன்ஸ் அதிகாரி தகவல்! [Tuesday 2014-12-23 13:00] மாயமான மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம் என்று முன்னாள் ஏர்லைன்ஸ் அதிகாரி மார்க் துகாய்ன் தெரிவித்துள்ளார். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவில் மொன்றியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் சாலையை கடந்து கொண்டிருந்தன. எனவே, அவற்றுக்கு வழி விடுவதற்காக காரை நடுரோட்டில் திடீரென நிறுத்தினார். அப்போது பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்ட்ரிராய் (50), அவரது மகள் ஜெஸ்சி (16) ஆகிய 2 பேர் காரில் மோதி பலியாகினர். அதை தொடர்ந்து எம்மா மீது மொன்றியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 3 மாதங்கள் அதாவது 90 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் 10 ஆண்டுகள் கார் ஓட்ட தடை விதித்தும், 240 மணி நேரம் சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டது http://www.canadamirror.com/canada/35609.html#sthas…
-
- 6 replies
- 629 views
-
-
பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாத இயக்கம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 'எங்களது இதயம் வலியால் வெடித்துவிட்டது' என்று அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16–ந் தேதி புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசையும் உலுக்கி உள்ளது. இதையடுத்து அங்கு தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன. இந்நிலையில் உலகின் மற்றொரு பயங்கரவாத அமைப்பாக உள்ள அல்-கொய்தா பெஷாவர் பள்ள…
-
- 1 reply
- 755 views
-
-
மதமாற்றம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7–ந் தேதி, 57 முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மதமாற்ற சம்பவம் பாராளுமன்றத்தில் தொடர்ந்து புயலை கிளப்பி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி மேல்–சபையில், விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை 5 நாட்களாக தொடர்ந்து முடங்கியது. இன்றும் மதமாற்றம் பிரச்சனை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன…
-
- 0 replies
- 432 views
-
-
கொல்கத்தா: இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளதாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மொரிசீயசுக்கு வெள்ளிக்கிழமையன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. இது தொடர்பான விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் இந்தர்ஜித் சிங், 2 ஆழ்கடல் ரோந்து கப்பல்களுக்கான ஒப்பந்தங்களை இலங்கை கொடுத்துள்ளது. இந்த கப்பல்கள் கோவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கப்பல்கள் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று கூறினார். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தி வரும் நிலையில் …
-
- 0 replies
- 505 views
-
-
பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்றவர் கைது பாரிஸ்: பிரான்ஸில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை ஏற்றிய டிரைவர் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று அரபியில் முழக்கமிட்டுள்ளார். பிரான்ஸின் டிஜான் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தனது காரை சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது ஏற்றினார். அவர் அரை மணிநேரத்தில் நகரின் 5 இடங்களில் இவ்வாறு செய்தார். இந்த சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்ற நபர் அந்த நபர் காரை மக்கள் மீது ஏற்றிவிட்டு இறைவன் சிறந்தவர் என பொருள் கொண்ட அரபி வாக்கியமான…
-
- 5 replies
- 496 views
-
-
உலக சந்தையில் அண்மைய காலமாக பெட்ரோலிய எண்ணெய்களின் விலை சரிந்து வருவதற்கு காரணம் ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கக்கூடிய எண்ணெய் உற்பத்தி நாடுகள்தான் என ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் எண்ணெய் வள அமைச்சர் தெரிவித்துள்ளார். வலது பக்கம் இருப்பவர் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் எண்ணெய் வள அமைச்சர் முகமது அல் மஸ்ரூயி பொறுப்பற்றவகையில் மிக அதிகமான அளவுகளில் இவர்கள் எண்ணெயை எடுத்து சந்தையில் விடுகிறார்கள் என அவர் பழிசுமத்தினார். எண்ணெய் விலைகள் கடுமையான சரிவைக் கண்டுவருவது உலகப் பொருளாதாரத்தை சேதப்படுத்தி வருகிறது என அமைச்சர் முகமது அல் மஸ்ரூயி பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகள் அபுதாபியில் நடத்திய கூட்டத்தில் தெரிவித்தார். கூடுதலான உ…
-
- 1 reply
- 516 views
-
-
500 தீவிரவாதிகள் அடுத்தடுத்து தூக்கிலிடப்படுவர்: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு. இஸ்லாமாபாத்: தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் 500 பேர் இனிவரும் 2 அல்லது 3 வாரங்களில் தூக்கிலிடப்படுவர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தீவிரவாதிகளின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்ட்டன. இதனால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் மொத்தம் 500 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட உள்ளனர். இப்படி தூக்கிலிடுவதால் தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தப் போரில் நிச்சயம் நாங்கள் வெல்வோம். இவ்வாறு நிசார் கூறினார். நன்றி தற்ஸ் தமிழ்.
-
- 4 replies
- 640 views
-
-
குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய விழாவில், இந்து மதத்திற்கு மாறிய 225 கிறிஸ்தவர்கள்! காந்திநகர்: குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் அரணை கிராமத்தில் சனிக்கிழமை கர் வாப்சி என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறினர். அவர்களுக்கு பகவத் கீதை பரிசளிக்கப்பட்டது. அந்த 225 பேரும் இந்துவாக மாறும் முன்பு அவர்களை பரிசுத்தமாக்க மஹா யாஞ்ன்யா என்ற யாகம் நடத்தப்பட்டதாக விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் நாது பட்டேல் தெரிவித்தார். இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி அசோக் சர்மா…
-
- 5 replies
- 967 views
-
-
டெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ‘‘டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார். ஏற்கனவே சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா …
-
- 21 replies
- 1k views
-
-
சமூக இணையதள புரட்சி ஓடும் ரயிலில் குடித்து விட்டு பெண்ணை கேலி செய்த நபர்கள் டிவிட்டர் உதவியால் கைது செய்யப்பட்டனர். பாட்னாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று சங்கமித்ரா ரயிலில் பெங்களூரு நோக்கி பயணித்துள்ளார். அவர் பயணித்த அதே பி3 ஏசி கோச்சில் மேலும் மூன்று வாலிபர்களும் பயணித்துள்ளனர். ரயில், பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் மதுபான பாட்டிலை எடுத்து மாற்றிமாற்றி மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். மது போதையில் தங்கள் பெட்டியில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணையும் அவர்கள் கிண்டல் செய்துள்ளனர். படமெடுத்த இளம் பெண் இதனால் அப்பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தார். சமயோஜிதமாக ஒரு வேலையை செய்தார் அப்பெண். அதாவது தனது செல்போனில் வாலிபர்கள் மது குடிப்பதையும், மது பா…
-
- 3 replies
- 728 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான யுவதி யொருவர் தென் அமெரிக்காவில் அரைநிர்வாணமாக வாழும் பழங்குடி இனத்தவர்கள் தொடர்பான ஆவணப்படமொன்றை தயாரிப்பதற்கு சென்றபோது அப்பழங்குடி இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சாரா பேகம் எனும் இந்த திரைப்பட இயக்குனர் ஈக்குவடோர் நாட்டில் ஹுவாரோனி பழங்குடியினர் தொடர்பாக அறிந்து அவர்கள் தொடர்பான ஆவணப்படமொன்றை தயாரிப்பதற்கு திட்டமிட்டார். 21 வயதான சாரா பேகம், மேற்படி படப்பிடிப்புக்காக இதற்காக தனது குழுவினருடன் ஈக்குவடோரின் காட்டுப்பகுதிக்கு சென்று ஹுவாரோனி பழங்குடியினரை சந்தித்தார். அப்பழங்குடியினருடன் பழகிய சாரா பேகம் அவர்கள் மீது…
-
- 1 reply
- 745 views
-
-
பாஜக தலைவர் சுப்ரமணியசுவாமியின் பெயரில் இயங்கும் போலி பேஸ்புக் பக்கத்தை நீக்குவதற்கு பதிலாக சுப்ரமணியன் சுவாமியின் பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுவிட்டது. தனது பெயரில் இருக்கும் போலியான பக்கத்தை நீக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை வைத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, பேஸ்புக் நிறுவனமும், அவரது பெயரில் இருக்கும் போலியான பக்கங்களை நீக்கும் பணியில் ஈடுபட்டது. அதில் தவறுதலாக சுப்ரமணியன் சுவாமியின் உண்மையான பக்கம் நீக்கப்பட்டுவிட்டது. போலியாக செயல்படும் பக்கம் இன்னமும் இயக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரமணிய சுவாமியின் பேஸ்புக் பக்கத்தை சுமார் 10 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். http://seithy.com/breifNews.php?newsID=123023&category=…
-
- 3 replies
- 539 views
-
-
ஜேர்மனி நாட்டில், ‘’பெஜிடா’’ என்ற பெயரில் வளர்ந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக ஜேர்மனியின் ஜூதர்களுக்கான மத்திய கவுன்ஸிலின் தலைவர் பேசியுள்ளார். ஜேர்மனிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தையே இழிவுபடுத்த பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜேர்மனிய பத்திரிகை ஒன்றுக்கான செவ்வியில், ஜோசப் ஜூஸ்டர் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கான பெஜிடாவின் திட்டங்கள் குறித்து ஜேர்மனியில் உள்ள றோமன் கத்தோலிக்க திருச்சபையும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்த இயக்கம் தோன்றிய இடமான ட்ரெஸ்டனில் திங்களன்று நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் பல்லாயிரக் கணக்கானோர…
-
- 0 replies
- 427 views
-
-
இக்காலப்பகுதியில் R.I.D.E (Reduce Impaired Driving Everywhere)சோதனைகள் அதிகரித்திருப்பதால் ”குடி”மக்கள் அவதானமாகவும் இருக்கவும். அளவாக குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுங்கள் இல்லையேல் பொதுப்போக்குவரத்து மற்றும் குடிக்காதவருடன் பயணம் செய்யுங்கள். வீதிக்கு வீதி புதுமையாக வகையில் காவல்த்தறையினர் இந்த சோதனை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். முதலாவதாக காவல்த்துறையினர் உங்களிடம் பேச வரும் போது பயப்படாதீர்கள், அவர்களது கேள்விகளக்கு உடனடியாக பதிலளியுங்கள். வாகனத்தின் ஜன்னலைத் திறந்து வாகனம் ஓட்டுபவர்கள், சுவிங்ஹம் சப்பிடுவோர், காவல்த்தறையினரை கவனிக்காது வேறு எங்காவது பார்த்தவாறு கதை சொல்லுவோர் சந்தேகத்துக்கு இடமானவர்களாக கணிக்கப்படுவார்கள். - R.I.D.E சோதனையைக்கண்டால் U அடிப்ப…
-
- 8 replies
- 1.5k views
-