உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
கொரோனா வைரஸ் எதிரொலி: ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் திண்டாட்டம்! கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், கடந்த ஐந்து வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையின்மையால் அவதிப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1930ஆம் ஆண்டுகளில் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் மிக மோசமான பணிநீக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கியதில் இருந்து ஆறு அமெரிக்க தொழிலாளர்களில் ஒருவர் வேலை இழந்துவிட்டதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வணிகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உதவ கிட்டத்தட்ட 500 பில்லியன் டொலர் செலவு தொகுப்பை அனுப்பியுள்ளது. உலகையே அச்சுறுத்தி…
-
- 0 replies
- 209 views
-
-
உலகம் முழுதும், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், கோபத்திலும், விரக்தியிலும் உள்ள இளைஞர்களை, சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில், தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன' என, ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து, ஐ.நா., பொது செயலர், நேற்று கூறியதாவது:ஐந்தில் ஒரு இளைஞனுக்கு, கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்படுகின்றன. நாலில் ஒரு இளைஞர், வன்முறை மற்றும் யுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும், 1.2 கோடி சிறுமியர் தாயாகின்றனர். இது போன்ற பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள், தற்போது கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கும் அவர்கள், அதிக நேர…
-
- 0 replies
- 407 views
-
-
ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது. 19.12.2025 பத்திரிகை வெளியீடு Deutsche Bundesbank DE பல வருட சுருக்கத்திற்குப் பிறகு, பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும் என்று பன்டேஸ்பேங்க் எதிர்பார்க்கிறது. 2026 ஆம் ஆண்டில் ஜெர்மன் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றம் அடையும்: ஆரம்பத்தில் முன்னேற்றம் மந்தமாக இருந்தாலும், பின்னர் அது மெதுவாக அதிகரிக்கும் என்று பன்டேஸ்பேங்க் தலைவர் ஜோச்சிம் நாகல், ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் புதிய முன்னறிவிப்பை முன்வைத்து கூறினார். 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொடங்கி, பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அள…
-
-
- 8 replies
- 491 views
-
-
மியன்மாரில் கத்திகள், கம்புகள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்ட கலவரக் கும்பல் ஒன்றால் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள மசூதி ஒன்று தீ வைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்பு தன்மையற்ற நிலை கவலை அளிப்பதாக உள்ளது காச்சின் மாநிலத்திலுள்ள ஹபாகான்ட் என்ற இடத்தில் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல், கடந்த வாரம் மியான்மரின் மத்தியப் பகுதியில் மசூதி ஒன்றிற்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் மத சகிப்புதன்மையற்ற நிலைமைகளை பற்றி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு வரும் ஐநா மனித உரிமைகள் புலனாய்வாளர் யாங்ஹீ லீ கவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்களில் முழுமையான புலனாய…
-
- 0 replies
- 275 views
-
-
ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோப்பு படம் தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம். கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி…
-
- 2 replies
- 312 views
-
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது 01 Mar, 2026 | 07:39 AM ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா– இஸ்ரேல் இணைந்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த இராணுவ நடவடிக்கை வாரம் முழுவதும் கடும் குண்டுவீச்சுகளுடன் தொடரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை தெஹ்ரான் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்…
-
- 7 replies
- 483 views
- 1 follower
-
-
நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள். சற்றே முன்னிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும் ஒபாமாவை வெள்ளை நிறவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஹவானாத் தீவைப் பின்புலமாகக் கொண்ட அவர் அமெரிக்கரே இல்லை என்றும், அவரது உறவினர்களில் சிலர் முசுலீம்களாக இருப்பதால் அவரும் முசுலீம் என்றும் பிரச்சாரங்கள…
-
- 0 replies
- 943 views
-
-
பழைய உலக வங்கித் தலைவர் கான் சிலஆண்டுகளுக்கு முன்னர் நியூயோர்க் கொட்டல் ஒன்றில் வேலை செய்த பெண்ணை பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மான நஸ்டமாக பணம் கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.இங்கே தொகை எவ்வளவு என்று சொல்லாவிட்டாலும் பல மில்லியன் டாலர்கள் கை மாறியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். Former International Monetary Fund chief Dominique Strauss-Kahn has signed a settlement with a hotel maid who accused him of sexual assault, a New York judge says. Details of the 63-year-old's agreement with Nafissatou Diallo will remain confidential, the judge added. Mr Strauss-Kahn was held in New York in May 2011 after Ms Diallo, 33, said he assaulted her in his hotel suite. …
-
- 1 reply
- 420 views
-
-
தென்கொரியாவில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்துவிட்டதா? மக்கள் அச்சம்! by : Anojkiyan தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்து வந்தாலும், கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தென் கொரியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர். இதன்பின்னணியில் அண்மைய தினங்களில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. இதனிடையே சியோல் மற்றும் தலைநகருக்கு வெளியே நோய்த்தொற்றுகள் தொ…
-
- 0 replies
- 407 views
-
-
கடமைக்குத் திரும்பினார் அங்கெலா மேர்க்கெல் ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தனது விடுமுறையை இடைநிறுத்திவிட்டு, தனது கடமைக்காக மீளத் திரும்பியுள்ளார். ஜேர்மனியில் அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு திரும்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பந்தமான கூட்டமொன்றைத் தலைமை தாங்கிய மேர்க்கெல், அதன் பின்னதாக விடுமுறையில் காணப்பட்டார். அதுவரை, உள்விவகார அமைச்சரான தோமஸ் டி மெய்ஸியாரேயே, நாட்டின் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். பிரான்ஸில் தேவாலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் இரண்டு பாதிரியார்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பொஸ்வா ஒலாண்டோ சென்றிரு…
-
- 0 replies
- 220 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான முருகனும் அவரது மனைவியான நளினியும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துகொண்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. முருகனுக்கு விதிக்கப்பட்டிருந்த 48 நாட்கள் தடை நிறைவடைந்ததை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முருகன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேலூர் சிறையில் பொலிஸ் மேல் அதிகார் ஈஸ்வரன் தலைமையில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது அவரிடமிருந்து ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசிகள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத…
-
- 1 reply
- 713 views
-
-
பொருளாதார வளர்ச்சி குறித்து புதிய அரசு கொள்கைகளை கடைபிடிப்பதற்கான ஆலோசனையை கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பன் இன்று டொரண்டொவின் தொழிலதிபர்களுடன் நடத்தினார். இதில் டொரண்டோவின் முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வட்ட மேசையில் நடந்த இந்த கூட்டத்தில், Peel Regionஐ சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களும், டொரண்டோ நகருக்கு வெளியே உள்ள மூன்று தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். நாட்டில் பொருளாதார கொள்கையை மாற்றும்போது கண்டிப்பாக முக்கிய தொழிலதிபர்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும், கனடிய தொழில்களை பாதிக்கும் எந்த பொருளாதாரக் கொள்கையையும், தனது அரசு கடைபிடிக்காது என்றும் அவர் தொழிலதிபர்களிடம் உறுதி கூறினார். தொழிலதிபர்களுடன் கனடிய பிரத…
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து: பலர் படுகாயம் என தகவல் ] நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பல பயணிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை காலை 8.40 மணிக்கு ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் நிலையம் பெரும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயிலில் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விபத்தின் சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இவ்விபத்தில் பலர் கா…
-
- 1 reply
- 319 views
-
-
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்து சிரியா குறித்து ஆலோசிக்க லண்டனிற்கு சென்று கொண்டிருகிறார். சனிக்கிழமையன்று ஸ்விட்சர்லாந்தில் ரஷியா மற்றும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு உறுதியான ஒப்பந்தத்திற்கும் உடன்படாத சிரியாவின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் கெர்ரி நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கெர்ரியின் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் புதிய யோசனைகள் ஆலோசிக்கப்பட்டன என்றும், சிரியாவில் அமைதி நிலவுவதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளுக்கு அது வழிவகுக்கும் என தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரஃப், ஆலோச…
-
- 0 replies
- 214 views
-
-
அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்: சீக்கியர் மீது துப்பாக்கி சூடு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் கன்வல்ஜித்சிங் (46). சீக்கியரான இவர், லாரி டிரைவராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு இவர் தனது மகனுடன் டேடோனா கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுனர்கள் அவரையும், மகனையும் கடுமையாக தாக்கினார்கள். மேலும் துப்பாக்கியால் சுட்டனர். அதில், கன்வல்ஜித்சிங் தொடை மற்றும் உடலில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் கன்வல்ஜித்சிங்கின் மகன் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போர்ட் ஆரஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்களுக்கு இடையே முன்விரோதம் எது…
-
- 0 replies
- 283 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டியில் நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த செளதி அரேபியா செளதி அரேபியாவில் உள்ள ஜெடாவில் சர்வதேச கால்பந்து போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடந்த திட்டமிடப்பட்ட சதியை முறியடித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோப்புப்படம் செளதி அரேபியாவின் தேசிய அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் கார் குண்டு ஒன்றை வைக்க சதி செய்யப்பட்டதாக செளதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போலிஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிடப்பட்ட இரண்டாவது சதியையும் முறியடித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை சிரியாவில் உள்ள ஐ.எஸ் குழுவின் தலைவர் ஒருவர் வழிநடத்தியதாகவும் செளதி அமைச்சகம…
-
- 0 replies
- 240 views
-
-
பிரியங்கா காந்தி திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா(41). இவருக்கு வயிற்றில் வலி ஏற்படவே, வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரை கங்காராம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பித்தபையில் கல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது பிரியங்கா நலமுடன் இருப்பதாக பிரியங்காவை நேரில் சென்று நலம் விசாரித்த சோனியா காந்தி, மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் த…
-
- 1 reply
- 596 views
-
-
மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தை எட்டிப் பிடிக்கும் இந்தியா. டெல்லி: உலகின் மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தை எட்டியுள்ளது. விரைவில் பிரேசிலிடம் இருந்து முதல் இடத்தை இந்தியா தட்டிப் பறிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தரவை மாட்டு இறைச்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் உண்பார்கள்.. அதை உண்பது இழிவானது என்ற ஆதிக்க சாதி மனோபாவம் இருக்கிறது. அதே நேரத்தில் பசு மாடுகளை தெய்வமாகக் கருதிப் போற்றுகிற வழிபாட்டு மனோநிலையும் இருந்து வருகிறது. ஆனால் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மாட்டு இறைச்சி பிரதான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் கறவையை நிறுத்திவிட்ட எருமைகளும் ஆண் மாடுகளும் காளைகளும் இறைச்சிக்காக வெ…
-
- 0 replies
- 2.4k views
-
-
பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கியது ஈரான்! ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த அணு உலை அமைக்கும் பணிகளை, மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. இதற்கான பணிகள் தொடங்கிய சில வாரங்களிலேயே புதிய அணு உலை அமையும் இடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் ஆலையில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி சாதனங்கள் பல தீயில் கருகி நாசமானது. இதையடுத்து அணு உலை கட்டும் பணிகள் கைவிடப்பட்டது. இந்தநிலையில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்கா…
-
- 0 replies
- 455 views
-
-
புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு BharatiDecember 26, 2020 புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் Tours நகரில் கண்டுபிடிப்பு2020-12-26T06:00:40+05:30Breaking news, உலகம் FacebookTwitterMore மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நத்தார் தினமான நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் Tours( Indre-et-Loire) நகருக்கு வருகைதந்த ஆண் ஒருவருக்கே புதிய வைரஸ் தொற்றி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் பிரெஞ்சுப் பிரஜையான அவருக்கு Tours மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது…
-
- 0 replies
- 691 views
-
-
17 ஏப்ரல், 2013 ஆப்ரிக்காவிலேயே மிகப் பெரிய பணக்காரரானான நைஜீரிய நாட்டின் அலிக்கோ டாங்கோட்டே தமது நாட்டில் ஒரு பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்கப் போவதாகக் கூறியுள்ளார். அந்தத் தொழிற்சாலை 2016 ஆம் ஆண்டு வாக்கில் நாளொன்றுக்கு 4,50,000 பீப்பாய்கள் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தச் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்க எட்டு பில்லியன் டாலர்கள் ஆகும் என்கிறார் அலிக்கோ டாங்கோட்டே. ஆப்ரிக்காவிலேயே கச்சா எண்ணெயை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக நைஜீரியா இருந்தாலும், அதை முழுமையாக சுத்திகரிக்க முடியாமல், பெரும்பாலும் இறக்குமதிகளையே அந்நாடு நம்பியுள்ளது. அவ்வகையில் இறக்குமதி செய்யப்…
-
- 0 replies
- 504 views
-
-
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து! அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார். தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பண…
-
- 0 replies
- 309 views
-
-
டொரண்டோவில் வரும் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் Sporting Life 10K என்ற ஓட்டப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 27,000 ஓட்டப்பந்தய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதால் டொரண்டோவில் உள்ள முக்கிய சாலைகள சில அன்றைய தினம் மூடப்படும் என டொரண்டோ கவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை செய்துள்ளனர். இந்த போட்டி நடைபெறும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 வரை இருப்பதால், கீழ்க்கண்ட சாலைகள் மூடப்படும் என்றும் வாகன ஓட்டிகள் அந்த நேரத்தில் மாற்றுப்பாதையை உபயோகப்படுத்தும்படியும் அறிவுறுத்தபடுகின்றனர். போட்டி நிறைவு பெற்ற இரண்டு மணி நேரத்திற்கு பின்பு, வழக்கம் போல சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்காக திறந்துவிடப்படும். Yonge Street between Lawrence Avenue…
-
- 0 replies
- 384 views
-
-
அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரபு நாடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்த கதீஜா கமெல் என்ற அந்த பெண் துபாயில் உள்ள போலீஸ் அதிகாரியின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்தார். அவரது மனைவிக்கு எடுபிடி வேலைகளை செ…
-
- 3 replies
- 1.4k views
-
-
மியன்மாரின் பல பகுதிகளில் இராணுவ சட்டம் அறிவிப்பு ; இதுவரை 126 பேர் பலி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டங்களின் போது மியான்மர் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 38 பேரைக் கொலை செய்ததாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் உள்ள பல நகரங்களில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் தினமும் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் முயன்று வருவதால் 126 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை தன்னிச்சை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் உறுதிபடுத்தியுள்ளது. நேற்யை தினம் ஆர்ப்பாட்டக்காரர்க…
-
- 1 reply
- 352 views
-