Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆர்பிஐ-யின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புக்களைத் தொடர்ந்து , வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ), கடந்த 8 வர்த்தக தொடர்களில் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கொள்முதல் செய்துள்ளதாக டச் வங்கி தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக நிதி நெருக்கடியின் காரணமாக, நாட்டில் எஃப்ஐஐ அவுட்ஃபுளோஸ் தீவிரமாக இருந்து வந்த நிலையில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காணப்பட்ட வெளியேற்றங்களில் 25 சதவிகிதத்தை எஃப்ஐஐகள் ஈடுசெய்துள்ளனர் என முக்கிய உலக நிதி சேவைகள் மூலமாக தெரியவந்துள்ளது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் இடையே இந்தியாவில் காணப்பட்ட 4 பில்லியன் டாலர் எஃப்ஐஐ அவுட்ஃபுளோ, ஒரு சரணடையும் அச்சநிலைக்கு வழிவகுத்தது என டச் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. "ஆர்…

  2. மாலத்தீவில் ஒரு மாத காலத்துக்குள் இரண்டாவது தடவையாக ஜனநாயக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாலத்தீவுவாசிகள் ஒரு சிறிய சுற்றுலாத்தீவுக்குள் இருக்கும் தேர்தல் ஆணையத்துக்குள் நுழைந்த பொலிஸார், நடக்கவிருந்த அதிபர் தேர்தலை தடுத்துள்ளார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடந்த தேர்தலை கடந்த மாதம், வேட்பாளர் பட்டியலில் மோசடி இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் செல்லுபடியற்றதாக அறிவித்தது. இத்தனைக்கும், அந்தத் தேர்தலை வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் அங்கீகரித்திருந்தனர். முன்னாள் அதிபர் நஷீட் அதிபர் தேர்தலுக்கான இரண்டு வாக்காளர்கள் ''வாக்காளர் பதிவை'' அங்கீகரிக்கத் தவறிவிட்டதாகக் கூறி பொலிஸார் இப்போது இந்தத் தேர்தலை நிறுத்தி…

    • 3 replies
    • 476 views
  3. பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்களில் தீவிரவாதிகள் 2,160 பேரும், பொதுமக்கள் 67 பேரும் கொல்லப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இஸ்லாமாபாதில் மேலவையில் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் புதன்கிழமை கூறியது:பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் மூலம் 12,404 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஆளில்லா உளவு விமானத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சி.ஐ.ஏ. நடத்திய அத்தாக்குதல்களில் இதுவரை 2,160 தீவிரவாதிகளும், 67 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இதுவரை 6,149 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 13,223 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 501 பேரின் தூக…

  4. பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு அசிட் வீச்சு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும் அவரது மகன் இருவரும் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்த வேளை அவ் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் தடுக்கப்பட்டுள்ளனர். அவர் இஸ்லாமிய கலாச்சார உடையான ஹபாயா அணிந்திருந்தமையால் அதை கலட்டிவிட்டு உள்நுழையுமாறு உரிமையாளர் எச்சரிக்க அவர் உணவகத்தை விட்டு வெளியேறும் வேளையிலேயே அசிட் வீசப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இங்கிலாந்தில் கிரிக்கட் போட்டித்தொடரில் விளையாடிக்கொண்டிருந்த இக்பால் இடையில…

    • 2 replies
    • 431 views
  5. விஸ்கான்சின் சம்பவம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு, 40 க்கும் மேற்பட்டோர் காயம் அமெரிக்காவின், விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம் 40 க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்தாக நகர காவல்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். விஸ்கொன்சினில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கிறிஸ்மஸ் அணிவகுப்பில், அணிவகுத்துச் சென்ற குழுவினர் மீது வாகன சாரதியொருவர் தனது காரை வேகமாக செலுத்தி மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். விஸ்கான்சின் வௌகேஷாவில் உள்ளூர் நேரப்படி மாலை 4:40 மணிக்குப் பிறகு நடந்த வருடாந்திர அணிவகுப்பின் போதே இந்த சம்பவம் நடந்த…

  6. பாரிஸில் படையினர் மீது காரால் மோதி பயங்கரவாதத் தாக்குதல் ; 6 படையினர் காயம் பிரான்ஸின் பாரிஸில் படையினர் மீது காரால் மோதி பயங்கவரவாதத் தாக்குதல் மேற்கொண்டதில் 6 படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, படையினரை மோதி தாக்குதல் மேற்கொண்ட பி.எம். டபிள்யூ. வகை காரையும் தீவிரவாதத் தாக்குதலை முன்னெடுத்த கார் சாரதியையும் பாரிஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாரிஸ் தி வேர்டன் லெவல்லொயிஸ் எனும் இடத்திலுள்ள படையினர் முகாமிற்குள் இருந்து அணிவகுப்பிற்காக படையினர் வெளிவந்த போதே பி.எம். டபிள்யூ. காரில் வந்த தீவிரவாதி படையினரை மோதி விட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார். குறித்த சம்பவ…

  7. அடையாளம் தெரியாத மற்றுமொரு ஏவுகணையினை பரிசோதனை செய்தது வட கொரியா! வட கொரியா, இன்று(வியாழக்கிழமை) கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு வட கொரியா ஆறாவது முறையாக ஏவுகணையை சோதனையினை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பினை புறக்கணித்த வட கொரியா, தொடர்ந்து தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றி வருகின்றது. கடந்த 5ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 14ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையையும் நடத்தியதாக வட கொரியா அறிவித்தது. கிழக்கு கட…

  8. பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. படத்தின் காப்புரிமைAFP 'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் மு…

  9. உக்ரைனில் 13 குழந்தைகள் உட்பட 136 பேர் உயிரிழந்துள்ளனர் – ஐக்கிய நாடுகள் சபை உக்ரைனில் கடந்த வியாழக்கிழமை முதல் இடம்பெற்றுவரும் போரில் இருந்து குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் என்றும் ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் 352 பொதுமக்கள் இறந்ததாகவும், 1,684 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1269969

  10. தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி தெலுங்கானா தனி மாநில போராட்டக்குழு தொடர் போராட்டம் நடத்திவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா அமைப்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தகுழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும், தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக்குழுவும் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பல்கலைக்கழக மேற்கு வாசலில் யாத்தய்யா என்ற மாணவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கவேண்டும் என்று முழங்கியபடி தீக்குள…

    • 0 replies
    • 432 views
  11. நைஜிரிய எழுத்தாளரான டேஜு கோலோவை ( Teju Cole ) உங்களுக்கு தெரியுமா ? இது வரை தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். கோலே எப்படி என்ன செய்துவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம். புதுயுக எழுத்தாளரான கோலே டிவிட்டர் வழியே கதை சொல்வதில் புதுமையை உண்டாக்கி புதிய இலக்கிய வடிவத்தை உண்டாக்கியிருக்கிறார். அதாவது கோலே குறும்பதிவுகள் மூலமாகவே கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். டிவிட்டரை நன்கறிந்தவர்கள் ,குறும்பதிவுகளாகவே கதை சொல்வது ஏற்கனவே முயற்சிக்கப்பட்டுள்ள விஷயம் தான் என்று வாதிடலாம். உண்மை தான் , 140 எழுத்துக்கள் கொண்ட குறும்பதிவுகளாகவே கதை எழுதுவதை ஒரு சில எழுத்தாளர்கள் ஏற்கனவே ஒரு புதிய இலக்கிய வடிவமாக கையாண்டுள்ளனர். ஆனால் கோலே என்ன செய்திருக்கிறார் என்றால், கதையை குறும்பதிவுகளா…

  12. கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டபோது பெரும் சத்தம் எழுப்பி அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு செய்ததாக லண்டனைச் சேர்ந்த 49 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்து ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு என்ன தண்டனை தருவது என்பது குறித்து கோர்ட் விரைவில் முடிவு செய்யவுள்ளதாம். சத்தம் போட்டு செக்ஸ் வைத்து சிக்குவது இப்பெண்ணுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை மாட்டி சிறைக்குச் சென்று வந்தவர். அவரது பெயர் கரோலின் கார்ட்ரைட். கடந்த ஆண்டு சத்தம் போட்டபடி செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் இவருக்கு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்ட்டது. தனது வீட்டில் மட்டுமல்ல, இங்கிலாந்து, வேல்ஸ் ப…

  13. சிபிஐ கூடுதல் இயக்குனராக தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா நியமனம்! [saturday, 2014-02-08 19:01:34] மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரிஅர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு சீருடைபணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் அர்ச்சனா ராமசுந்தரம். இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, இந்த பொறுப்பை ஏற்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கும், தமிழக காவல்துறைக்கும் கொண்டு வந்துள்ளார். 1980ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி,உட்பட தமிழக …

    • 4 replies
    • 1.3k views
  14. ஈரானுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் முறுகல்: முஸ்லீம் உலகின் ஆதரவுகளையும் இந்தியா இழக்கின்றது இந்தியா – ஈரான் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் விஜயம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்திய பிரதமரின் ஈரான் விஜயமும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக இந்திய வாக்களிக்க முற்பட்டுள்ளதே இந்த விரிசல்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதும், ஈரான் பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து முஸ்லீம் நாடுகளின் துணையுடன் ஆப்கான் பிரச்சனை குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டதும் விரிசல்களுக்கு காரணம். இந்த உடன்படிக்கைக்கு …

    • 0 replies
    • 552 views
  15. அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP PHOTO / KCNA VIA KNS Image captionகிம் ஜாங் - உன் வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-ஐ கொல்ல வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது. …

  16. இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நதிநீர்ப் பங்கீடு என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பட்டியலிட்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது: "2011-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள். அதே போல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர…

  17. ஐரோப்பிய ஒன்றியத்தில்... உக்ரைன் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு, "பல தசாப்தங்கள்" ஆகும்: பிரான்ஸ் ஜனாதிபதி! ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர், உக்ரைன் ஒரு இணை ஐரோப்பிய சமூகத்தில் இணையலாம் என்று பரிந்துரைத்தார். இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்கள் மற்ற வழிகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் சேர அனுமதிக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார். ரஷ்யா ஆதாயங்களை அடைய முயற்சிக்கும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கடுமையான சண்ட…

  18. மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து சர்ச்சைகள் நிறைந்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் வெளியிட்டுள்ள செயற்கைகோள் படங்களில் 122 சிதைந்த பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு மாயமானது. இதுவரையிலும் அதில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து உறுதியான தகவல் ஏதுவுமில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்திருந்தார். மேலும் விமானத்தில் பயணம் செய்த எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்…

  19. பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசின் முதல் பெண் மேயராக ஸ்பெயின் வம்சாவளியை சேர்ந்த ஆனி ஹிடால்கோ (54) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் தென்மேற்கு பகுதியில் உள்ள காடிஸ் என்ற இடத்தில் 1959ம் ஆண்டு பிறந்தவர் ஆனி. குழந்தை பருவத்திலேயே பிரான்சில் குடியேறியவர். லையான் பகுதியில் வளர்ந்த அவர் படிப்பை முடித்த பிறகு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. தனது 30வது வயதில் லியோனெல் ஜோஸ்பின் தலைமையில் சோஷியலிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 13 ஆண்டுகளாக அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டுள்ள ஆனி, முதல் முறையாக பாரிசில் நடந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது மேயராக உள்ள பெர்ட்ரான் டெலான்னோவுக்கு அடுத்தபடியாக ஆனி அந்த பொறுப்பை ஏற்க உள்ளார். கடும் எதிர்ப்புக்கு இடையே மேயர் தே…

  20. 'இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்': ஜோர்டன் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லா…

  21. சிதம்பரம் கொள்ளிடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு தாய் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்களம் ஊரைச் சேர்ந்தபாபு (30)-இன்பநிலா (23) தம்பதிகளுக்கு ஆண் குழந்தை(தமிழ்ச்செல்வன்) பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் பாபு இறந்துவிட்டார். அதன்பிறகு சித்தாள் வேலை செய்தி பிழைப்பு நடத்திவந்தார் இன்பநிலா. அப்போது சிதம்பரம் கீழ்கொண்டாம்பாடியைச்சேர்ந்த சந்துரு என்கிற பானுசந்தர் கொத்தனாருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து வெங்களம் ஊரைவிட்டு சென்னையில் சில காலம் சந்துருவுடன் தங்கியிருந்தார் இன்பநிலா. பின்னர் பன்ருட்டியில் தனியே வீடு எடுத்து தங்கியிருந்தார். சிதம்பரத்திலிருந்து அடிக்கடி சந்துரு …

  22. பிரான்ஸ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இனவெறி கொண்டவர்கள் என்பது கடந்தாண்டு நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள் ளது. பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைக் கழக அமைப்பின் தேசிய ஆலோசனைக் குழுவினர் (சி.எஸ்.ஏ.,) கடந்தாண்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டனர். ஆயிரத்து 11 பேரை நேருக்கு நேர் சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தினர். இதில், 33 சதவீத பிரான்ஸ் மக்கள் இனவெறியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்தாண்டை விட இனவெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுகிறது என இந்த அமைப்பினர் தெரிவித்தனர். சி.எஸ்.ஏ., அமைப்பினர் கருத்துக்கணிப்பின் போது பிரான்ஸ் நாட்டு மக்களிடம் பின்வருமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. "உங்களால் சொல்ல முடியுமா? உங்களுக்கு............'…

  23. கச்சதீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர்கள் படையெடுப்பு: ஒக்டோபர் 11 இல் போராட்டத்துக்கு ஏற்பாடு! இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகிவிட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், …

  24. இலங்கை கடற்படையின் எதிர்ப்புக்கு பணிந்து, தமிழக மீனவர்களை மாற்று மாவட்டத்தில் பிழைப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை கடற்பகுதியை சார்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு கடற்படையினர், தொடர்ந்து தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகளுக்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை.சமீப காலமாக இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிழைப்புக்கு வழியின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையை போக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (செப்., 11), கச்சத்தீவு நோக்கி போராட்டம் செய்ய விசைப்படகு மீனவர்கள் அறிவித்திருந்தனர்…

  25. அந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் பறந்துகொண்டிருந்தபோது அதிர்ந்ததால் மத்திய ஆஸ்திரேலியாவுக்கு வலுக்கட்டாயமாக திருப்பிவிடப்பட்டது. எம்எச்122 என்ற அந்த விமானம் வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 224 பேர் பயணித்த அந்த விமானமானது ஆஸ்திரேலியாவின் அலிஸ் ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் அதிர்வுற்றதுடன், அதிக அளவிலான இரைச்சலையும் ஏற்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.