உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26888 topics in this forum
-
ஈராக்கின் ஐஎஸ் ஐஎஸ் படையினர், ஈராக்கின் வடக்கு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு 1800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தையும் தீயிட்டு அழித்துள்ளனர். ஈராக்கில் உள்ள மொசூல் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்கள் குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் மொசூல் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர், நகரத்தில் உள்ள முஸ்லிம் அல்லாத அனைவரும் 24 மணிநேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாற வேண்டும் மற்றும் கூடுதல் வரி ஒன்றையும் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 2k views
-
-
முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் வகையில் சிறிலங்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியை திரும்ப அழைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஸ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக சட்டமன்றம் 6 கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். எனவே, நடப்பு சட்டமன்றத் தொடரில் உடனடியாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மனிதாபிமான செயல்களை கண்டிக்கும் வகையில் புதுடில்லி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களை மூடிவிடவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண, இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். முதல் நடவடிக்கையாக தமிழ் மக்களுக்…
-
- 1 reply
- 974 views
-
-
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 48 பயணிகள் பலியாகியுள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 40 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பலியாகியுள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவித்துள்ளது. செபாஹன் விமான போக்குவரத்து நிறுவனத்தின் இந்த விமானம் கிழக்கு ஈரானில் உள்ள டாபஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இந்திய நேரம் 10.20 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. டெஹ்ரானுக்குத் தெற்கே மெஹ்ராபாத் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கியது. கடைசியாக ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய விமான விபத்து 2011ஆம் ஆண்டு நிகழ்ந்தது. வடமேற்கு ஈரானில் பனிப்புயல் காரணமாக தரையிறங்…
-
- 0 replies
- 424 views
-
-
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இதே பல்கலைக்கழகத்திற்கு உட்பட் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தான் கடந்த 1957ம் ஆண்டு படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் படித்த கல்லூரிக்கு சிங் விஜயம் செய்து, பழைய நினைவுகளில் மூழ்கினார். புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், எடின்பர்க் கோமகனும், பல்கலைக்கழக வேந்தருமான பிலிப், மன்மோகன் சிங்குக்கு டாக்டர் பட்டத்தை வழங்க…
-
- 8 replies
- 1.3k views
-
-
கனடாவில் துப்பாக்கிப் பிரயோகம் : ஐவர் பலி By SETHU 19 DEC, 2022 | 01:34 PM கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் டொரண்டோவிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலுளள வோன் (Vaughan) எனும் நகரில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை இத்துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்ம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார் என உள்ளூர் பொலிஸ் உயரதிகாரி ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். சந்தேக நபர், பொலிஸாருடனான மோதலில் உயிரிழந்துள்ளார் எனவும் ஜிம் மெக்ஸ்வீன் தெரிவித்துள்ளார். குடியிருப்புக் கட்டடமொன்றில் இத்துப்பா…
-
- 0 replies
- 767 views
- 1 follower
-
-
ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் வழங்கக் கோரியும், தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறை அமர்வு முன்னர் நாளை விசாரணை நடைபெறுகிறது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரத்தினகலா முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் அசோகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவில், பெங்களூர் …
-
- 1 reply
- 527 views
-
-
வாழ்வு முழுவதும் தன் பிள்ளைகளுக்கு வழி காட்ட வேண்டிய ஒரு தாய் மூன்று பிஞ்சுகளை தவிக்கவிட்டுத் திடீரென தன் உயிரை மாய்த்துகொள்ள, ஆதரவாய் இருந்த பாட்டியும் அடுத்த ஒரு மாதத்தில் மரணத்தைத் தழுவ, ‘இனி தகப்பனை விட்டால் இந்தப் பிள்ளைகளுக்கு வேறு வழியில்லை...’ என்ற நிலையில் அவனும் தூக்கில் தொங்கினால்..? &இப்படியரு மரண சாபத்துக்கு ஆளாகியிருக்கும் அந்தக் குடும்பத்தை நினைத்தால், நெஞ்சுக்குழிக்குள் ஒரு பிடி நெருப்பை அள்ளிக்கொட்டியது போலத்தான் இருக்கிறது! தூத்துக்குடி&தாளமுத்து நகர் அருகேயிருக்கும் எம்.ஜி.ஆர். நகரில் நுழைந்து, பெரியவர் ஜெபமாலை வீட்டுக்கு வழி கேட்டால்... வார்த்தைகளில் சோகம் நிரப்பிதான் வழிகாட்டுகின்றனர். நாம் போனபோது, பேரப்பிள்ளைகளுக்கு சோறு ப…
-
- 0 replies
- 886 views
-
-
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஒன்று விட்ட சகோதரர் பர்ஸான் அல் திக்ரிதி, முன்னாள் நீதிபதி அவாத் அல் பாந்தர் ஆகியோர் நேற்று அதிகாலை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிட்டபோது பர்ஸானின் தலை துண்டித்து தனியாக விழுந்தது. துஜைல் நகரில் 143 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் சதாம் உசேன், பர்ஸான், பாந்தர் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் சதாம் டிசம்பர் 30ம் தேதி தூக்கில் போடப்பட்டார். இந்த நிலையில், சதாமுடன் சேர்த்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பர்ஸான், பாந்தர் ஆகியோருக்கு எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து இராக் அரச…
-
- 0 replies
- 941 views
-
-
உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி! ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் பள்ளங்களை கடக்க அனுமதிக்கும் கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ உதவி…
-
- 8 replies
- 894 views
- 1 follower
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனி புயல் வீசி வருகிறது.இந்த கடுமையான பனிப் புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பனிப்புயலால் வடக்குப் பகுதி மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.பப்பலோ நகரில் பனிக்கட்டிகள் 5 அடி அளவில் அனைத்து இடங்கலீலும் உள்ளது. நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமா பனிப்புயல் ஒரு "வரலாற்று நிகழ்வு" என்று கூறி உள்ளார்.உறைபனி நிலை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் 50 மாகாணங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. சாலைகளில் சிக்கியுள்ள கார்களில் இருப்பவர்களை மீட்பதற்கு ஏதுவாக மீட்பு படைகள் ஆங்காங்கே தயார் நில…
-
- 0 replies
- 372 views
-
-
லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது ஜேர்மனி Published By: SETHU 28 MAR, 2023 | 09:47 AM லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி அனுப்பியுள்ளது என ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது. ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட லெப்பர்ட்2 (Leopard 2 tanks) ரக நவீன இராணுவத் தாங்கிகளை தனக்கு வழங்குமாறு உக்ரேன் கோரி வந்தது. ஆனால், இதற்கு ஆரம்பத்தில் ஜேர்மனி மறுத்தது. பின்னர் வேறு நாடுகள் இந்த தாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஜேர்மனி அனுமதியளித்தது. இறுதியில் தானும் உக்ரேனுக்கு இத்தாங்கிகளை வழங்க ஜேர்மனி கடந்த ஜனவரியில் சம்மதித்தது. இந்நிலையில், உக்ரேனுக்கான லெப்பர்2 தாங்கிகளின் முதல் தொ…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
புதுடெல்லி, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவரின் படத்தையும் வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி குழு தெரிவித்துள்ளது. வருங்காலங்களில் அச்சடிக்கப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளின் மாதிரியை உருவாக்க, மத்திய அரசின் அறிவுரைப்படி குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, ரூபாய் நோட்டில் உள்ள மகாத்மா காந்தி படம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு எந்த ஒரு தலைவரின் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் வைக்கக்கூடாது என ரிச…
-
- 0 replies
- 444 views
-
-
Published By: SETHU 06 APR, 2023 | 04:57 PM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரரின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 1963 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரர்களில் ஒருவர் ரொபர்ட் எவ் கென்னடி. அமெரிக்க சட்ட மா அதிபராகவும் செனட்டராகவும் பதவி வகித்த ரொபர்ட் எவ் கென்னடியும் 1968 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக்க கட்சியின் வேட்பாளராகுவதற்கான போட்டியிடுவதற்கான உட்கட்சித் தேர்தலில் பங்குபற்றிய வேளையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ரொபர்ட் எவ் கென்னடியின் மகனான ரொபர்ட் எவ் கென்னடி ஜூனியர் அடுத்த …
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! விமான பயணியின் ஷýவில் 13 லட்சம் கரன்சி! சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தனது ஷýவில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க, ஐரோப்பிய கரன்சிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு வாலிபர் ஏராளமான வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்கத் துறை அதிகா>களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திப்பு சுல்தான் என்ற வாலிபரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த ஷýவைப் …
-
- 2 replies
- 932 views
-
-
அல்கைடா சி.ஐ.ஏயால் உருவாக்கப்பட்டதாம் அதே வேளை லிபிய போராளிகள் (?) அமெரிக்காவின் வேர்ஜினியாவில் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாம்.
-
- 2 replies
- 805 views
-
-
சீனாவின் சதுரங்கம் அமெரிக்காவை தலைமுழுகு; நம்மை சீனா கரை சேர்க்கும் என்று ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய ஐடியா கொடுத்திருக்கிறது பாகிஸ்தான். அதிர்ச்சியில் தள்ளாடுகிறது அமெரிக்கா. இப்படி நடக்கும் என்பது முன்பே நமக்கு தெரியும். அமெரிக்காவின் காதில் போட்டு வைக்க முயன்ற நேரங்களில், சூ என்று ஊதி தள்ளிவிட்டது அமெரிக்கா. எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை சந்தேகப்படுவது நமக்கு வாடிக்கையாம். ஜூனில் ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் பெற தொடங்குகிறது அமெரிக்கா. அது 2014 வரை தொடரும். அதன் பிறகு ஆப்கனை தனது ஆதிக்கத்தில் வைத்திருக்க பாகிஸ்தானுக்கு ஆசை. அங்கே இந்தியாவுக்கு செல்வாக்கு வலுப்பெற கூடாது என்பது காரணம். மகாபாரத காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது ஆப்கானிஸ்தான் என்பார்கள்…
-
- 5 replies
- 950 views
-
-
யேமெனில் வான் தாக்குதலில் சிக்கிய டஜன் கணக்கான சிறார்கள் பலி, ஆட்சியாளர்கள் பரிந்துரைக்கும் பாதிரியாரை நியமிக்கும் சீன அரசின் யோசனையை ஏற்கும் நிலையில் வாட்டிகன் தலைமை, ஒரு காலை இழந்த நிலையில் இங்க்லீஷ் கால்வாயை கடக்க பயிற்சி எடுக்கும் பெண்மணி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 342 views
-
-
பாக்முத்திலிருந்து வெளியேறுவோம்! - வாக்னா் குழு கிழக்கு உக்ரைனில் தீவிர சண்டை நடைபெற்று வரும் பாக்முத் நகரில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திடீா் மிரட்டல் விடுத்துள்ளாா். பாக்முத்தில் தொடா்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை ரஷியா அனுப்பாததாலும், அந்த நகரில் நடைபெறும் சண்டையில் தங்களது வீரா்கள் அதிக எண்ணிக்கையில் பலியாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் கூறினாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாக்முத் நகரில் நாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் 10-ஆம் தேதி வெளியேற முடிவு செய்துள்ளோம்.…
-
- 32 replies
- 2.4k views
- 2 followers
-
-
பாவாணன் விடுதலை புரட்சிக் கவிஞர் பேரவையின் சார்பில் வத்திராயிருப்பில் 28-10-2001ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை பாவாணன், வத்திராயிருப்பு சுந்தரேசன், தமிழர் தேசிய இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சோமு ஆகியோர் பேசினர். இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த இன்னல் குறித்தும் சிங்களவர்களை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளை ஆதரித்தும் மேற்கண்ட கூட்டத்தில் பேசியதாக வத்திராயிருப்பு காவல் நிலையம் தொடுத்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பேச்சாளர்களுக்காக வழக்குரைஞர்கள் புளுகாண்டி, மனோகரன் ஆகியோர் வாதாடினர். திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் மூவரையும் விடுதலை செய்து தீர்ப்புரைத்தது. - தென்செய்தி
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகாரிகளின் கவனயீனத்தால் 3 பேர் நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு மரணம்!பலவீன இருதயம் உடையவர்கள் இதை பார்க்க வேண்டாம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தோர் நகரில் அமைந்துள்ள பட்டல் பாணி நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு 3 பேர் உயிரிழந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நீர்வீழ்ச்சியானது அப்பிரதேசத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 3 பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தனர். இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அ…
-
- 0 replies
- 725 views
-
-
அவுஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட புழுதிப் புயல் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது. சுமார் 500 கிலோ மீற்றர் பரப்பளவுக்கு வீசிய இந்தப் புயலில் சிட்னி முதல் பல நகரங்கள் பாதிக்கப்பட்டதுடன், வானமும் செம்மஞ்சள் நிறமாக மாறிக் காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், அந்த நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் புழுதிப்புயல் வீசியதால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விமானப் போக்குவரத்தும் பாதிப்படைந்தன. குறித்த புயலில் சிக்குண்டோர் சுவாசிப்பதில் சிரமத்தினை எதிர்கொண்டதுடன் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் வி…
-
- 1 reply
- 659 views
-
-
Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 04:49 PM ஜேர்மனியின் கடற்பரப்பில் இரண்டுசரக்குகப்பல்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன. ஜேர்மனியின் வடக்குகிழக்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த வெரிட்டி என்ற கப்பல்பஹாமாவை சேர்ந்த பொலைசி என்ற கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெரிட்டி கப்பல் மூழ்கியுள்ளது அதன் ஏழு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என ஜேர்மன் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆறுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/167667
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடங்களை தகர்க்க போவதாக பயமுறுத்தியதை தொடர்ந்து பொலிசார் அந்நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் பாராளுமன்ற நூலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராளுமன்றத்திற்கெதிரான “புரட்சியின்” ஒரு பகுதியாக பாராளுமன்றத்தை தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார். 49-வயதுடைய குறிப்பிட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏமாற்றும் தன்மை கொண்ட பயங்கரவாத நடவடிக்கை மற்றும் பயமுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரனை தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/canada/40944.html#sthash.afV29SpT.dpuf
-
- 0 replies
- 205 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 917 views
-
-
கனடா- வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தின் யன்னல் ஊடாக விழுந்து மூன்று வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான. இச்சம்பவம் ரொறொன்ரோவின் மேற்கு எல்லையில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2-மணியளவில் நடந்துள்ளது. வெஸ்ரென் வீதி மற்றும் லோறன்ஸ் அவெனியுவில் ஹிக்கறி வீதியில் அமைந்துள்ள வானுயர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் இத்துயர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடித் துடிப்பெதுவும் இன்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் அங்கு மரணமடைந்துள்ளான். கிட்டத்தட்ட 17-வது மாடியிலிருந்து விழுந்திருக்க வேண்டும் என அவசரமருத்துவ சேவைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட கட்டிடத்தில் பல்கனி இல்லை. கட்டிடத்தின் யன்னல்கள் அசைக்க கூடிய ஒரு சிறுபகுதி ஸ்கிரீனை கொண்டதெனவும் அது தவிர்ந்த மற்றய பாகம் திறக…
-
- 0 replies
- 375 views
-