Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மோதல் பிராந்தியத்தில் வாழும் குழந்தைகள் படத்தின் காப்புரிமைREUTERS உலககெங்கும் ஒவ்வொரு ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை மோதல் பிராந்தியத்தில் வாழ்ந்து வருவதாக 'சேவ் த சில்ட்ரன்' அமைப்பு வெளியிட்ட ஒரு புதிய அறி…

  2. 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு - நேரலை By T. Saranya 19 Sep, 2022 | 04:22 PM 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், 2 ஆம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரோயல் கடற்படையின் பீரங்கி வண்டியில் வைத்து மகாராணியின் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது. 142 மாலுமிகள் அதை இழுத்துச் சென்றனர். மறைந்த இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபு இறுதிச் சடங்குக்காக இந்த வண்டி கடைசியாக 1979 இல் பயன்படுத்தப்பட்டது. அதற்கு…

  3. துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் பயணம்! துபாயில் இருந்து 12 நிமிடங்களில் பயணம் செய்வதற்கு ஹைபர்லூப் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதி வேகமாக பயணம் செய்யும் புல்லட் புகையிரத வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் துபாயில் விமானங்களை விட அதி வேகமாக செல்லும் ஹைபர் லூப் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. காந்த சக்தியை கொண்டு மணிக்கு 560 கி.மீ வேகத்திலிருந்து, 1000 கி.மீ வேகம் வரை பயணிக்க கூடிய வசதியை இவ…

  4. விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது. சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை. அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது. அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே. அதே போல தான். …

  5. நாகரிகமற்ற- காட்டுமிராண்டித்தனமான - மனிதாபிமானம் - சிறிதுமற்ற - கொடுமை நிறைந்தது இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா வான்படை நடத்திய கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டனத் தீர்மானத்தை வாசித்தார். தீர்மான விவரம்: 14.8.2006 அன்று இலங்கையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந்தது…

  6. சந்தேகத்துக்கிடமான கம்யூட்டரால் திருப்பிவிடப்ட்ட அமெரிக்க விமானம் அமெரிக்க விமானத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கையடக்க கம்ப்யூட்டரை வெடிகுண்டாக இருக்கும் எனக் கருதியதால் அந்த விமானம் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த `யுனைட்டட் ஏர்லைன்ஸ்' விமானத்தில் இச்சம்பவம் நடந்தது. http://www.thinakkural.com/news/2006/9/13/...s_page10650.htm

  7. தெலுங்கானா மாநிலம் அமைத்தால் சோனியா காலை கழுவத்தயார்:சந்திரசேகரராவ் தெலுங்கானா மாநிலம் அமைத்தால் சோனியாவின் காலைக்கூடக் கழுவத் தயார் என்று டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு. தெலுங்கானா மாநிலம் அமைத்தால் கட்சியைக் கலைத்து விட்டு, காங்கிரசில் சேர்ந்து சோனியாவின் காலைக் கழுவக்கூடத் தயாராக உள்ளேன் என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். ஆந்திராவில் தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இது தொடர்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த டி.ஆர்.எஸ். கட்சித் தலவர் சந்திரசேகர ராவ், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவி…

  8. இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளதாக ஜப்பான் அறிவிப்பு! ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை சோதனை முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் ‘சர்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற பெயரில் நடைபெற்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு க…

  9. கச்சத் தீவு அருகே எண்ணெய் கிணறுகள்: தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கச்சத் தீவு அருகே, இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால், இயற்கை வளம் அழிவதோடு, தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடா பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாக பாதுகாக்கப்படும் பகுதி. இங்கு, பல்வேறு அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. எனவே, மன்னார் வளைகுடாவிலுள்ள 20-க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நிறுவனம…

  10. உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை மழை..!! உக்ரைன் தலைநகர் கீவில் ரஷிய படைகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. தினத்தந்தி கீவ், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி போரை தொடங்கிய ரஷியா பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், மின்நிலையங்கள் என தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அந்த வகையில் தற்போது ரஷிய படைகள் உக்ரைனின் பொதுஉள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகர் மீது மீண்டும் கவனம் போர் தொடங்கிய சமயத்தில் தலைநகர் கீவை கை…

    • 4 replies
    • 1k views
  11. 2ஜி வழக்கில் கனிமொழிக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் பிறப்பிக்கப்படவிருந்த பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஆஜராகாத திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜரானார். அப்போது, கனிமொழி ஆஜராகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் கூறினார். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கனிமொழிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பதைக் கைவிட்டார். http://seithy.com/breifNews.php?newsID=120489&category=IndianNews&language=tamil

  12. சென்னை: பாஜகஜெயலலிதாவிஜய்காந்த் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என 'துக்ளக்' சோ கூறினார். துக்ளக் இதழின் 37வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பாஜக தலைவர் அத்வானி, அவரது மகள் பிரதீபா, பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினி காந்த், நடிகர் நாகேஷ், அதிமுக சார்பில் மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை அளித்தனர். அதை முழுமையாக செய்ய முடியாமல் பார்ட் பார்ட்டாக செய்கிறார்கள். 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்ன கருணாநிதி, இப்போது உள்ளங் கை அளவேனும் தருவேன் என்கிறார். இலவச திட்டங்களால் பிக…

  13. சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன…

    • 2 replies
    • 1.1k views
  14. உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதி - சிறீலங்கா அரசு ஞாயிறு 04-02-2007 01:58 மணி தமிழீழம் [மயூரன்] பொருண்மிய ஒத்துழைப்பு உதவிகளை இடையூறின்றி தொடர்ந்து வழங்குவதற்கு, ஜேர்மனிய அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. பேர்லினில் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் றோஹித பொகொல்லாகமவிற்கும், ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி (Frank Walter Steinmeier) பிராங்க் வோல்டர் ஸ்ரெய்ன்மியர் அவர்களுக்கும் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதன்போது சிறீலங்கா அரசாங்க சமாதான செயலக பணிப்பாளரும், வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளருமான பாலித்த கோஹொன்னவ…

  15. ரொறன்ரோ நெடுஞ்சாலையில் எரியும் பேருந்திலிருந்து பயணிகள் உயிர் தப்பினர் கனடாவில் எப்போதுமே சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் 401ஆவது நெடுஞ்சாலையில் மொன்றியலுக்கும் ரொறன்ரோவிற்கும் இடையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் தீடிரெனத் தீப்பற்றிக்கொண்டதில் அதில் பயணித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உயிர்தப்பியிருக்கிறார்கள். ஒன்ராரியோவின் புறூக்வில்லி என்ற குறு நகரத்திற்கு அருகியல் மாலை ஒரு மணியளவில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் 61 பேர் பேருந்தில் இருந்திருக்கிறார்கள். தீவிபத்து தொடர்பாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் அம்புலன்ஸ் வண்டியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இந்த விபத்தினைத் தொடர்ந்து ரொறன்ரோ…

  16. நாளிதழ்களில் இன்று: ‘அதிமுகவில் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’ - அமைச்சர் விளக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அதிமுகவில் இணைகிறாரா ரஜினிகாந்த்?' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், அதிமுகவி…

  17. இந்தோனேஷியாதரையிறங்கியபோது விமானம் வெடித்து சிதறியது49 பேர் பலி மார்ச் 07, 2007 ஜகார்தா: இந்தோனேஷியாவில் விமானம் தரையிறங்கியபோது ரன் வேயில் இருந்து விலகி ஓடி சுவரில் மோதி நொறுங்கி, வெடித்துச் சிதறியது. விமானத்தில் 140 பேர் இருந்தனர். இதில் 49 பேர் பலியாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகம் எனத் தெரிகிறது. யோக்யகார்தா நகர விமான நிலையத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது. இந்தோனஷிய அரசின் கருடா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அந்த போயிங் விமானத்தில் 133 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் இருந்தனர். தரையிறங்கிய அந்த விமானம் ரன் வேயில் இருந்து விலகி ஓடியது. ரன் வேயின் முடிவில் இருந்த சுவரில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் 48 பேர் சம்பவ…

  18. பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைவது அவசியம்: மன்மோகன் சிங் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என, பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசிய…

  19. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியில் போட்டியிட ரொன் டிசான்டிஸ் விண்ணப்பம் Published By: Sethu 25 May, 2023 | 10:14 AM புளோரிடா மாநில ஆளுநர் ரொன் டிசான்டிஸ், எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டிடுவதற்கு விண்ணப்பித்துள்ளார். இக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான பிரச்சாரங்களை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 44 வயதான ரொன் டிசான்டிஸ், புளோரிடா மாநில தேர்தல்கள் ஆணைக்குழுவில் தனது வேட்பு மனுவை புதன்கிழமைதாக்கல் செய்தார். யேல் பல்கலைக்கழகத்தி…

    • 7 replies
    • 509 views
  20. தமிழக மீனவர்களையாவது தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா? அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. பெப்ரவரி 14 இல் (2007) நாகபட்டினம் கடற்கரைக்கு அப்பால் ஒன்பது இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு மீது ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. இதில் படகு பெரும் சேதமடைந்தது மட்டும் அல்லாமல் இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றுவிட்டனர். பெப்ரவரி 16 இல் அய்யம்பட்டினம் ஊரைச் சேர்ந்த மீனவர்களின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டு அவர்களது வலைகளும் சேதப்படுத்தப்பட்டது. வழக்கம் போல் அவர்கள் பிடித்திருந்த மீன்களை ஸ்ரீலங்கா கடற்…

  21. ரஷிய ஆயுதக் கிடங்கில் பயங்கரத் தீ: 28 ஆயிரம் பேர் வெளியேற்றம் ரஷிய ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக அப்பகுதியைச் சுற்றி வசிக்கும் 28 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ரஷியாவில் உள்ள வோல்கா குடியரசில் உள்ள சுரங்கப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆயுதக் கிடங்கில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் டன் வெடிகுண்டுகள் உள்ளன. இதனால் ஏற்பட்ட பயங்கர தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதியைச் சுற்றி வாழும் 28 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் ரஷியாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்படும் இரண்டாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பஷ்க…

    • 0 replies
    • 560 views
  22. 575 கி.மீ., வேகத்தில் ஓடும் மின்னல் ரயில் : புதிய சாதனை படைத்தது பிரான்ஸ் அரசு பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நேற்று, மணிக்கு 574.8 கி.மீ., வேகத்தில் அதிவேக மின்னல் ரயில் இயக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. அதிவேக ரயில்கள் தயாரிப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தண்டவாளத்தில் செல்லும் ரயில்களில் அதிவேக ரயில் என்ற சாதனை பிரான்சில் தான் முன்னர் நிகழ்த்தப்பட்டது. 1990ல் மணிக்கு 515 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு இச்சாதனை படைக்கப்பட்டது. ஜப்பானில் 2003ல் காந்த சக்தியால் இயங்கும் ரயில் மணிக்கு 581 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. உலகளவில் இது தான் அதிவேக ரயில். ஆனால், இந்த ரயில் தண்டவாளத்தில் செல்லாமல் அதற்கு மேலே வழுக்கிக் கொ…

  23. தூய்மையான நகரம்: சென்னைக்கு 2வது இடம் ஏப்ரல் 08, 2007 பெங்களூர் நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. 2வது இடம் சென்னைக்கு கிடைத்துள்ளது. லைப்பாய் சோப்பு நிறுவனம் நாட்டிலேயே சுகாதாரமான, ஆரோக்கியமான நகரம் எது என்ற கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இதில் நாட்டிலேயே மிகவும் சுகாதாரமான, ஆரோக்கியமான நகர் என்ற பெருமை சண்டிகருக்குக் கிடைத்துள்ளது. இந்த நகருக்கு 144 புள்ளிகள் கிடைத்துள்ளது. 2வது இடம் சென்னைக்குக் கிடைத்துள்ளது. அடுத்த இடத்தை கொல்கத்தா பிடித்துள்ளது. பெங்களூர் 4வது இடத்தில் உள்ளது. சுகாதாரம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக லைப் பாய் …

    • 8 replies
    • 2.1k views
  24. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவின் பாதுகாப்புக்காக பிரிட்டனின் காவல் துறை ரூ.100 கோடி செலவிட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசு ரகசிய கோப்புகளை தனது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் அசாஞ்சே வெளியிட்டார். இது தொடர்பாக அமெரிக்கா இவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது. இந்நிலையில், அவர் லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 2012ம் ஆணஅடு தஞ்சம் புகுந்தார். இதனிடையே, ஸ்வீடனில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், பாலியல் வழக்கை சந்திக்க ஸ்வீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவது நிச்சயம் என்ற நிலையில் அவர் தூதரகத்திலேயே தொடர்ந்து வசித்து வருகிறார். இதன் கார…

  25. இன்று காலை 238 பயணிகளுடன் துருக்கி விமானம் (Airbus A330) நேபாள் காத்மாண்டு விமான நிலைய ஓடுபாதையில் தரை இறக்கும் போது பனி காரணமாக ஓடுபாதையை விட்டு விலகி இறக்கியதால் சறுக்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று காலை 7:45 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்தவித ஆபாத்தும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/38794.html#sthash.7nKeD4wm.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.