உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
கொரோனா வைரஸ் இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம்: பிரித்தானியா நம்பிக்கை உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இயற்கையாகவே விலங்குகளிடமிருந்து பரவத் தொடங்கியிருக்கலாம் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து எவ்விதமான ஆதாரமும் தங்களுக்கு வழங்கப்படவிலை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இவ்வாறு ஆதாரங்கள் வழங்கப்படாத நிலையில் தமது பார்வையில் குறித்த கருத்து வெறும் ஊகமாகவே கருதப்…
-
- 0 replies
- 383 views
-
-
சீனாவிலிருந்து 20 ஆண்டுகளில் 5 கொள்ளைநோய்கள் , இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது: அமெரிக்கா கடும் தாக்கு ராபர்ட் ஓ’பிரையன், ட்ரம்ப் கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் மக்களிடம் பரவி உலகை அச்சுறுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் இது நிறுத்தப்பட்டாக வேண்டும், என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பரவலுக்கும் சீனாதான் காரணம், இதனால் உலகம் முழுதும் 250000 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தையும் கடந்து விட்டது என்றார் ஓபிரையன் உலகம் நெடுகிலும் மக்கள் எழுச்சி பெற்று சீனாவிடம், ‘சீனாவிலிருந்து கிளம்பும் கொள்ளை நோய்களை இனியும் பொறுக்க மாட்டோம்’ என்று கூறும…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா! கராகஸ் மற்றும் வொஷிங்டன் இடையே 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (06) தெரிவித்தார். இது சீனாவிலிருந்து விநியோகங்களைத் திசைதிருப்பும் அதே வேளையில் வெனிசுலாவுக்கு எண்ணெய் உற்பத்தியில் ஆழமான குறைப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையாகும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குத் சந்தையை திறந்துவிடவும் இல்லையெனில் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் ட்ரம்பின் கோரிக்கைக்கு வெனிசுலா அரசாங்கம் பதிலளிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான வ…
-
- 0 replies
- 154 views
-
-
டெல் அவிவ்: தேர்தல் வந்துவிட்டால் 'அதிகார' போதையை தக்க வைத்துக் கொள்ள அல்லது எட்டிப் பிடிக்க எந்த எல்லைக்கும் அரசியல்வாதிகள் செல்வார்கள் என்பதற்கு மிகச் சிறந்த 'உதாரண'மாக உருவெடுத்திருக்கிறது இஸ்ரேல்.. அந்த நாட்டில் தேர்தல் நடைபெறப் போகிறது என்றாலே பாலஸ்தீனர்களைப் பலியெடுத்து அந்த அப்பாவிகளின் ரத்தத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வழக்கமாகிவிட்டது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் இப்படி கொலைவெறியோடு தாக்குதல் நடத்தி வருவதற்கு சொல்லப்படுகிற காரணம் என்ன? "நவம்பர் 13-ந் தேதிக்கு முன்பு வரை சுமார் 850 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் இதர இயக்கத்தினர் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனால் பதில் தாக்குதல் நடத்துகிறோம்"…
-
- 4 replies
- 895 views
-
-
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை தோல்வி "ஊசி போடப்பட்ட குரங்குகள் அனைத்துக்கும் கொரோனா" லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களை கொரோனாவிலிருந்து காக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்தேகம் எழக் காரணம், ஆய்வகத்தில் சோதனைக்காக தடுப்பூசி போடப்பட்ட ஆறு ரீசஸ் குரங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுதான். இந்த தடுப்பூசி தற்போது முதல் மனித மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த சோதனையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஹசெல்டின் என்பவர் கூறும்போது தடுப்பூசி போடப்பட்ட ஆறு குரங்குகளையும் சோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத மூன்று குரங்குகளின் மூக்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! written by admin January 16, 2026 கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சீனாவுடனான கனடாவின் கூட்டாண்மை “புதிய உலக ஒழுங்கிற்கு (New World Order) நம்மைச் சிறப்பாகத் தயார்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் சீனாவிற்குச் செல்லும் முதல் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆவார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகப் பாதைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், அடுத்த 10 ஆண்டுகளில் …
-
-
- 6 replies
- 474 views
-
-
ஈரான் போராட்ட வன்முறை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரிப்பு 27 Jan, 2026 | 12:47 PM ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானிய ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்துள்ளதாக சர்வதேச நிதி சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடும் நாணய வீழ்ச்சி, ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் ப…
-
-
- 5 replies
- 380 views
-
-
அஜ்மல் கசாப் மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு பழிக்கு பழியாக ஹைதராபாத், அமிர்தசரசில் விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பை தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 160 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கும் இந்திய தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அஜ்மல் கசாபை தவிர மற்ற தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனிடையே குற்றம் நிரூபிக்கப்பட்ட தலிபான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு கடந்த 21ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு பழிவாங்குவோம் என்று தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அகமது மார்வத் என்ற தீவிரவாதி, பத்திரிகைக்கு போனில் அளித்த…
-
- 1 reply
- 482 views
-
-
நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி! Published By: Digital Desk 1 19 Feb, 2026 | 12:26 PM நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 92 views
-
-
தண்ணீர் தர தாமதம்: கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வருத்தம்! புதுடெல்லி: தண்ணீர் தர தாமதப்படுத்திய கர்நாடக அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில்,ஒரு நாள் தாமதமாக தண்ணீர் திறந்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடகம் காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தல்படி இல்லாமல், ஒரு நாள் தாமதமாக நேற்று இரவில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து விட வேண்டிய நீரைத் திறக்காமல் ஒரு நாள் தாமதப்படுத்தியதால், ஒரு டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு உடனே வராமல் போனது. எனவே…
-
- 1 reply
- 431 views
-
-
கொரோனா பரவல் சமயத்தில் பாலியல் உறவின் போது முககவசம் அணிவது பாதுகாப்பானது - வழிகாட்டுதல்கள் நியூயார்க் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்ள உதவும் வகையில், நியூயார்க் நகர சுகாதாரத் துறை அதன் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. நோயின் மாறிவரும் புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில் அவை அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. பாலியல் மூலம் கொரோனா பரவுவது குறித்து இன்றும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. கொரோனாவில் இருந்து ஆண்கள் மீண்ட பிறகும், மலம் மற்றும் ஆண்கள் விந்தணுக்களில் கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதாவது வைரஸ் பாலியல் ரீதியாக பர…
-
- 12 replies
- 1.1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * தோல்வியில் முடிந்த துருக்கி ஆட்சிக்கு எதிரான இராணுவப்புரட்சியின் எதிர்வினைகள் தொடர்கின்றன; எட்டாயிரம் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம், நூற்றுக்கணக்கானாவர்கள் கைது. * பிரான்ஸின் நீஸ் நகரில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடெங்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி; அஞ்சலி செலுத்த வந்த பிரதமருக்கு எதிராக வெளிப்பட்டது அரசு மீதான அதிருப்தி * பிரிட்டிஷ் பள்ளிகளில் பரவலாகும் சீனக்கணித கற்பித்தல் நடைமுறை; எதிர்பாக்கும் பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 283 views
-
-
சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இ…
-
- 2 replies
- 677 views
-
-
இந்திய-சீன நெருக்கடி: தெற்காசியா குறித்த வினாக்கள் தெற்காசியா, பதற்றத்தின் விளிம்பில் உள்ளது போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நெருக்கடி தேவையற்றது என்பதை, அனைவரும் அறிவர். ஆனால், இதை வெளிப்படையாகச் சொல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இந்த நெருக்கடியால் பயனடைவோர் பலர். எனவே, இந்த நெருக்கடியைத் தக்கவைப்பதும் தகவமைப்பதும் பலரின் தேவையாக உள்ளது. அதன் காட்சிகளே, இப்போது அரங்கேறுகின்றன. இந்தக் கட்டுரையை எழுதுகின்ற போது, நான்கு முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றின் அடிப்படையில், இந்த நெருக்கடியை நோக்குவது தகும். முதலாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சியொன்றை ரஷ்யா, இந்த வாரம் முன்னெடுத்து, அதி…
-
- 0 replies
- 732 views
-
-
இனப்பிரச்சனைக்கு இராணுவ தீர்வு காண்பது கடினம்: அமெரிக்க தூதுவர் மீண்டும் வலியுறுத்தல் [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 09:34.24 AM GMT +05:30 ] இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இராணவத் தீர்வைக் காண்பது மிகவும் கடினமானதாகும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.இலங்கை இதழியல் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியதையடுத்து அரசியல் தீர்வின் அவசியம் குறித்து அமெரிக்கா அறிக்கையொன்றை விடுத்தது இந்நிலையில் தீர்வு எவ்வாறு அமையவேண்டுமென்றோ அன்றேல் எவ்வளவு காலத்திற்குள் முன்வைக்கப்பட வேண்டுமெனவோ அமெரிக்க வலியுறுத்துமா என அமெரிக்க தூதுவரிடம் வினவியபோது அமெரிக்க தூ…
-
- 1 reply
- 712 views
-
-
தமிழர்களைக் கொலை செய்த ரயில் பாதை! - அதிரவைக்கும் ஆவணப்படம் வரலாற்றை நாம் முழுமையாக அறிந்துவைத்து இருப்பதில்லை. நாம் அறிந்துகொள்ள நினைத்தாலும் அவை நம்மிடம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பல நேரங்களில் நாம் வரலாறு மீதும், அதுகுறித்த ஆவணங்கள் மீதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் விளைவு அதைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடிவதே இல்லை. அப்படி நாம் அக்கறை செலுத்தாத ஒரு கொடூர வரலாற்றை கண்முன் நிறுத்தி அதிரவைக்கிறது, ‘சயாம் பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம். 10 ஆண்டுகளாகச் சேகரிப்பு! ‘ரெட் டீ’ என்ற நாவல், தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழகத் தோட்டத்தொழிலாளர்களின் அவல வாழ்வை நுட்பமாகப் பேசியிருந்தது. மிகவும் அதிரவைத்த அந்தக் கொடுமைகளை எல்லாம்வ…
-
- 0 replies
- 805 views
-
-
டொரண்டோவில் காணாமல் போன 12 வயது பள்ளி மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர். அவனை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். Jesse Sacobie என்ற 12 வயது பள்ளி மாணவனை நேற்று மாலை 6.30 மணியில் இருந்து காணவில்லை. பள்ளிக்கு சென்ற மாணவனை கடைசியாக DupontStreet and Spadina Road அருகே பார்த்ததாக அவனுடைய நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அவன் அன்று வீடு திரும்பாததால் பதட்டமடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். JesseSacobie காணாமல் போன அன்று கறுப்புநிற ஜீன்ஸ் மற்றும் கறுப்பு நிறத்தில் சர்ட் அணிந்திருந்ததாகவும், 105 பவுண்டு எடையுடன் ஐந்து அடி ஒரு அங்குல உயரம் உள்ளவனாகவும் இருப்பான் என்றும், நீண்ட தலைமுடியுடன் பிரவுன் கலர் கண்ணும்…
-
- 0 replies
- 403 views
-
-
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய முஷரப், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தீவிரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் தரப்பு நியாயத்தை விளக்கிப் பேசி வருகிறார். அவர் அமெரிக்காவில் 2 வார பிரசாரத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பி உள்ளார். அடுத்தபடியாக, அடுத்த மாதம் இந்தியாவுக்கு சென்று, இந்தியர்களுக்கு அவர்களது மண்ணிலேயே பதிலடி கொடுக்கப் போவதாக அவர் கூறினார். http://www.paristamil.com/tamilnews/?p=27268
-
- 0 replies
- 697 views
-
-
குவாத்தமாலாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி - 150 இற்கும் மேற்பட்டோர் மாயம் குவாத்தமாலாவை தாக்கிய ‘ஈட்டா’ சூறாவளி காரணமாக அங்கு பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு நகரமொன்றும் முற்றாக மண்சரிவில் புதையுண்டதால் 150 பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காணாமல்போயிருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவின் வட மத்திய பகுதியில் உள்ள அல்டா வெர்பாஸ் பிராந்தியத்தை ஈட்டா என்கிற சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று முன்தினம் தாக்கியது. மணித்தியாலத்திற்கு 225 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி காற்றில் பிராந்தியத்திலுள்ள பல்வேறு உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதோடு, புயலைத் தொடர்ந்து பெய்த …
-
- 0 replies
- 410 views
-
-
தீர்மானத்தில் திருத்தம் செய்ய சவுத் புளொக் எதிர்ப்பு – நடுநிலை வகிக்க அசோக் காந்தா ஆலோசனை [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:46 GMT ] [ கார்வண்ணன் ] தீர்மானத்தில் திருத்தம் செய்ய சவுத் புளொக் எதிர்ப்பு – நடுநிலை வகிக்க அசோக் காந்தா ஆலோசனை [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:46 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்களை செய்ய இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, சவுத்புளொக்கில் உள்ள கொள்கைவகுப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, சிறிலங்கா விவகாரத்தை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில்…
-
- 2 replies
- 758 views
-
-
வெடிகுண்டு மிரட்டல்: 530 பேருடன் ஜெர்மனி சென்ற விமானம் நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கம் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூயார்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூயார்க் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து லுப்தான்ஸா நிறுவனத்துக்கு சொந்தமான தடம்எண்: 441 என்ற விமானம் ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகருக்கு சுமார் 530 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் சுமார் ஆயிரம் மைல் தூரத்தை அந்த விமானம் …
-
- 1 reply
- 317 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் செனட்டருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றவாளியை வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளது FBI. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் பாஸ்டன் குண்டுவெடிப்பிற்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ரகசியமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பெயர் , Paul Kevin Curtis என்பதாகும். 45 வயதை சேர்ந்த இவர் ரைசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதங்களை ஒபாமா, அமெரிக்க செனட்டர் Roger Wicker மற்றும் ஒரு அரசு அதிகாரி ஆகிய மூன்று பேர்களுக்கு அனுப்பியதை விசாரணையில் ஒத்துக்கொண்டார். அவரிடம் மேலும் தீவிரமாக விசாரணை செய்து அமெரிக்க FBI அவருக்கு துணையாக வேறு யாராவது இருந்தார்களா, விஷம் எங்கு வாங்கப்பட்டது போன்ற தகவல்களை பெறும் கோணத்தில் வி…
-
- 1 reply
- 468 views
-
-
ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப் படுவதாக அதிபர் மகமூத் அகமதி னேஜத் தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளுடன் அதற்கு இணையாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி இக்கருத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி தற்போது 7 கோடியே 50 லட்சம் ஆக உள்ள ஈரானின் மக்கள் தொகையை 15 கோடியாக உயர்த்த வேண்டும். அதற்காக ஈரானில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யும் படி உத்தரவிட்டார். ஈரானில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. அதற்…
-
- 7 replies
- 600 views
-
-
ஒரு முதியவரின் புகையிலைப் பை சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திலிருந்து 800 பேரை காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் கடந்த சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10,500 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அதே சமயம், சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியூஜியாயிங் கிராமத்தைச் சேர்ந்த 800 பேர், முதியவர் ஒருவரின் புகையிலைப் பையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லீ சியாங்கே என்ற அந்த 68 வயது முதியவர் புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் தன்னுடைய புகையிலைப் பையை எப்போதும் தன்னுடைய கையில் கட்டியிருப்பது வழக்கம்.சம்ப…
-
- 3 replies
- 510 views
-
-
சீரமைக்குப்பின் லெனின் நினைவிடம் திறக்கப்பட்டது உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அடித்தளத்தில் கான்கிரீட் கலவை செலுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட்டுள்ளது.ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய லெனின் 1924 இல் இறந்தார். அதன் பிறகு அவரின் உடல் பாடம் செய்யப்பட்டது. கடந்த 1930ம் ஆண்டில் இருந்து அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் லெனினின் உடலை அங்கிருந்த அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதை புதைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அங்கே அடிக…
-
- 0 replies
- 362 views
-