கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இரத்தம் எழுதிய கவிதை வ.ஐ.ச.ஜெயபாலன் (1985ல் குமுதினிப் படுகொலைச் சேதி கேட்டு எழுதிய கவிதை) மே பதினைந்தில் இந்துட்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஈழ வேள்வி!.. சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம் சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா? வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம் வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா? சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில் ஆயுதம் ஏந்தி ப்போராடினோம் சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை சூழ்ந்த பகைவரை சாடினோம்? வீரர்கள் சாவது இல்லையே -விழி நீரினை சிந்தாதே அன்னையே போரில் மடிவதை எண்ணியே -தமிழ் போராளி மகிழ்வது உண்மையே அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி மேலொரு துயரில்லை உனக்கம்மா அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன் அரணாய் இருக்கிறான் பாரம்மா புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு போதும் புசிப்பது இல்லையே உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம் உரிமைகள் கைவிடார் உண்மையே!
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய அந்த மாபெரும் கவிஞனை சும்மா புதுவையென்றாலே தமிழ்த் தேசியவாதிகள் யாவருமறிவர். 2009 இலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட அக்கவிஞனை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையை இங்கு பதிவிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆ…
-
- 3 replies
- 1.3k views
-
-
கடுப்பில் இருக்கும் டி ராஜேந்தரிடமும் வாலியிடமும் டக்குவப்பற்றி கவிதை பாடச்சொன்னா எப்புடி இருக்கும்...ஒரு கற்பனை முதலில் டி ராஜேந்தர்... உன்முகத்தில் வளந்திருக்கு தாடி உங்கூட உள்ளதெல்லாம் கேடி மகிந்தயிடம் போயிடுவா ஓடி வாலாட்டி வாங்கிடுவா கோடி ஊரைச்சுத்தி உலையில் போடும் தாடி நீ மகிந்தைக்கு வாச்ச உலை மூடி சிங்களவன் கோடியினை தேடி பதுங்கிடும் நீ ஒரு பேடி பாடையில போகணும் உம் பாடி அதைப்பாக்கணும் நான் சந்தோசத்தில் ஆடி ஏய்..டண்டணக்கா..ஏய்..டணக்கணக்கா.... இப்ப வாலி.. சனியனே...சனியனே... சனிக்கே...சனியனே... எங்களைப்பிடிச்ச... ஏழரைச்சனியனே... மங்காச்சனியனே... மானங்கெட்ட சனியனே... எந்தக்கோயில் போய் எள்ளெண்ணெய் எரிச்சாலும் எங்களைத…
-
- 0 replies
- 1.3k views
-
-
:arrow: இங்கே கிலிக் >>> பாசம் என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவர் அடுத்த முகம்...? ----பா-ச-ம்........ பாசத்தை காட்டி என்னை கொல்லாதே செல்ஷ் வார்த்தை ஒன்றை சொல்லி..... பூமியின் பந்தையே சுற்றி விட்டாய் ஏன்டா பாசம் வளர்த்தேனோ உன் மேல்........ புரியுமுன்......... ... சுடும் இதையத்தில் முள் தைத்தாய் இன்று உன் நினைவை புதைத்து விட்டேன் ........சாம்பலாய் சொல்லிவிட்டு பிரிந்து போகிறேன்...... :cry: :cry: விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.3k views
-
-
எனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம்..... கவிதை - இளங்கவி...... பிறந்ததும் இருளில் சிறிதாய் வளர்ந்ததும் இருளில் கொஞ்சம் வாழ்ந்ததும் இருளில் அது அடிமை வாழ்வெனும் சிறையில்..... சின்னஞ்சிறு வயதினிலே அண்ணாந்து பார்த்திடுவேன் அழகான விமானமல்ல எமை அழிக்கவரும் விமானத்தை..... அனைவரும் பதுங்கு குளி நான் மட்டும் அதன்வெளியில் அது நான்மட்டும் அனுபவித்த சிறிதாய் நடமாடும் சுகந்திரம்.... தென்னை ஓலைமட்டை வெட்டி தெருக்களிலே பந்துகொண்டு துடுப்பாட்டம் ஆடிடுவேன் சந்தோசத்தில் மனமகிழ்வேன் ஆமியின் கெலி வருவான் கிட்டவந்து சுட்டுடுவான் ஏனென்று தெரியாது; உயிர்காக்க வீதியிலே படுத்திடுவேன் விளையாட்டு ஒத்திவைப்பு என் ரன்களெல்லாம் வீனடிப்பு; அது என…
-
- 6 replies
- 1.3k views
-
-
அன்பின் சிறிய நிமிடங்கள் - கவிதை மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில் கடற்கரையில் தோளோடு தோளாகச் சாய்ந்துகொள்வதில் அப்படி என்ன கிடைத்துவிடும்? இருசக்கர வாகனப் பயணத்தில் தோளைப் பிடித்துக்கொள்வதில் என்ன நிறைந்துவிடும்? அவ்வளவு அவசரமாக பத்து விநாடிகள் கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில் எதை நாம் கடந்துவிடுவோம்? எல்லா கதவுகளும் திறந்துகிடக்கும் முற்றத்தில் மின்னலென அணைத்து விலகும் பொழுதில் அப்படியென்ன சாகசம் இருக்கிறது? லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு முத்தமிட்டுக்கொள்வதில் என்னதான் நிகழ்ந்துவிடும்? அன்பின் சிறிய நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கின்றன அவை நிகழ்கிறபோது அப்படியொன்றும் அவை அவ்வளவு சி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாடிய பூ மீது ..விழுந்த இலையின் மீது . தேடிய காதல் மீது ..பாடிய பாடல் மீது .. கூடிய உறவுகள் மீது ..நாடிய சொந்தங்கள் மீது .. மறையும் சூரியன் மீது ..கரையும் சந்திரன் மீது .. துளிர் விடும் விதை மீது ..தூவும் மலர் மீது .. அதிகாலை கனவு மீது ...கம்பனின் கவி மீது .. முகம் மறைக்கும் கன்னி மீது ..முடியாத கடல் மீது .. வராத பணம் மீது ..வாங்கிய முத்தம் மீது .. பாட்டியின் கதை மீது ...பாட்டனின் கைதடி மீது .. மழலை அழுகை மீது ..மடிந்தவர் புன்னகை மீது .. அதீத ஆசைகள் மீது ...ஆர்ருயிர் நண்பி மீது .. என்னுள் தொலைத்தவள் மீது ..எழுதா கவி மீது .. கண்ணாடி பொட்டின் மீது ..மருதாணி கைகள் மீது .. தேய்த்து போன செருப்பின் மீது ..சுவர் படங்கள் மீது .. காய்த்த கருவாட்டின் மீது ..கடைசி வார்…
-
- 10 replies
- 1.3k views
-
-
பெண் மலர் தான் மலிவல்ல...?! பெண் மலர் தான் மலிவல்ல... சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது , சில்லிட்டு உறையாமல் சிக்காமல் மீண்டு எழுந்தால்; பெண் மலர் தான் மலிவல்ல...! ஆப்பிள் தேவதைகள் தான் ... அழுகிப் போகாமல் காக்கும் வரை; சாக்லேட் தேவதைகள் தான் ... சாக்கடையில் நழுவாமல் தன்னைத் தானே காக்கும் வரை; பெண் மலர் தான் மலிவல்ல! ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்... ஏவல்களில் தேய்ந்து போன பெண்ணியத்தின் முதுகெலும்பில் விரிசல்களை எண்ணக்கூட வராதொழிக்கும் ஆதாமை சட்டை செய்யாது விட்டு விடுதலையாகி சிட்டுப் போல் சிறகு விரித்து பறந்து திரிந்து ஊரில் பல…
-
- 3 replies
- 1.3k views
-
-
நட்பை வளர்க்க வார்த்தைகள் தேவையில்லை. புன்னகை மட்டும் போதுமென்று புரிய வைத்த என் அன்பு நண்ப ! என் இதயப் பாலைவனத்தில் நீரூற்றிப் பூமரம் நட்டவனே வெறும் பனி மூட்டமாய் இருந்த என் இதயத்தில் மேக மூட்டம் தோன்றிப் பெருமழை பொழியக் காரணமானவனே கூட்டைப் பிரித்து றெக்கை விரிக்கும் பட்டுப் பூச்சியாய் கூட்டம் கூடிப் பறந்து திரியும் பட்டாம் பூச்சியாய் எத்தனை பரவசங்கள் நமக்குள் நடந்தேறின. என் ஆருயிர் நண்ப ! சிப்பிக்குள் பதுங்கிக் கொண்ட பனித்துளியாய் என் அன்புக்குள் உறங்கிக் கொள்ளும் முத்தானாய் நீ அந்தரத்தில் பறப்பது போல் ஆனந்த தாண்டவத்தைக் கற்றுத் தந்த என் வாலிப நண்பனே ! பனித்துளி தெளித்த ரோஜாவாய் முள்முடி தரித்த எண்ண…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் (6.7.16) வெளியாகியுள்ள "சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!" என்ற எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சே குவேரா இறுதியில் விடுதலையாகிறார்…! பொலிவியக் காடுகளில் மறைந்துவாழ்ந்த சே குவேரா இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார். மதுபானக் கடையிலிருந்து வெளியே வரும்போது வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர் “ஏய்… ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?” எனும் தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை வழக்கமான புன்னகையுடன் கடந்துசெல்கிறார். பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில…
-
- 3 replies
- 1.3k views
-
-
மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ வண்ணமும் வாசமும் தான் நாளுக்குநாள் மாறிக்கொண்டன. நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் மலர்தலை தடுக்கவா முடியும். உன் விழிகள் ஏணியாகவும் இருந்தது _எனை தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது. சிரித்தேன். கடந்தும் திரும்பி பார்த்தாய். விரும்பித்தானே பார்த்தாய்? முடக்கில் போட்ட பனங்குத்தி மக்கி மடங்கும்வரை அரியாசனம். அப்புறமென்ன தரையே ஆசனம். கடந்து போனது நீ மட்டுமா, காலமும் தான். பகிர்ந்த சில வார்த்தைகளில் பொதிந்திருக்குமோ என்றெண்ணி, பகுத்தறிந்து அதுவா இதுவா என்றங்கலாய்த்தல்லவா_என் அனேக அந்திகள் கலைந்தது. மாரடிக்கும் பெண்(டு)கள் கூட ஓய்ந்ததுண்டு_உனை தேடிதிரிந்த நான்? எரிகல் விழுகையிலும் கல் எறிகையிலும் உன்னைத்தான் நினைக்கிறேன்…
-
- 12 replies
- 1.2k views
-
-
இது ஈழமுரசில் வெளிவந்த கவிதை. பூக்கள் சரிந்த பூனகரி நன்றி - ஈழமுரசு
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரசவ வலி இருட்டு உலகத்திலிருந்து விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம் கருவறையின் சுகமான வேதனை - தாய்க்கு பிரசவம் உயிரின் வரவிற்காய் உயிரைப் பணயம் வைத்து உயிர்கள் நடத்தும் போராட்டம் குழந்தை இருட்டுச் சிறையிலிருந்து வெளிச்சச் சிறைக்கு இடம்மாறும் கைதி சிறுவயது வண்ணாத்துப் பூச்சியைப்போல வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்கான கற்றலின் ஆரம்பம் வாலிபம் ஆலோசனைகளை அலட்டல்களாக்கி அசட்டுத்துணிச்சலில் தனித்து எதையும் எதிர்கொள்ளத் துணியும் பருவம் காதல் ஓமோன்களின் காட்சிமாற்றம் எதிர்ப்பாலினரில் ஏற்படும் ஒ…
-
- 14 replies
- 1.2k views
-
-
(நண்பன் ஒருவன் 2005இல் தனது முதற்காதல் பற்றிச் சொன்னதில் அவனது வலியினை கவிதையாக்கினேன்) என் சுவாச அறைகளின் சுழற்சியாய் இருந்தவளே ! காதல் வார்த்தையையே கௌரவப்படுத்திய கற்பூரமே. கடைசியாய் நீ தந்த கடிதம் என்றோ நீ சொன்னது போல கைகூடாத காதலின் சாட்சியாக.... உனது கண்ணீர் முழுவதையும் கட்டியனுப்பிய கடலது. கட்டுநாயக்கா நான் தாண்ட நஞ்சு தின்ற என் காதலியே ! எங்கேயடி இருக்கிறாய் ? கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்.... கண்ணீரைத் துடைத்தபடி நான்.... முதற் காதல் - நீ தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள் இன்னும் விரல்களில்.... வாசமடிக்கிறது. கூடப்பிறந்தவர்க்கும் , உன்னைக் காதலிக்க உயிர் தந்தவர்க்கும் அர்ப்பணமாய் என் காதல். அம்மாவி…
-
- 16 replies
- 1.2k views
-
-
புதிதாக மாறிக்கொண்டிருக்க...... ஆண்டுகள் ஒவ்வொன்றும் புதிதாய்ப் பிறந்து கொண்டிருக்க..... வசந்தகாலம் இலையுதிர்காலம் என காலங்கள் மாறிக் கொண்டிருக்க.... பிரம்மன் தன்னிடம் இருப்பதை படைப்பதும் படைத்ததை திருப்பி பறிப்பதுமாக தனது வேலையை மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்க.... மனிதர்களின் குண இயல்புகள் கூட தாழ்ந்தும் மேலோங்கியும் மாறிக் கொண்டிருக்க...... ஏன் ...ஏன்.. ஈழம் மட்டும் மாறாமல் இன்னும் யுத்த பூமியாக....... நம் ஈழத் தமிழர்களின் கண்ணீர்களை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறது.... ஏன் இன்னும் மாறாமல் கவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
எம் தேசியத்தை இறுதிவரை இழக்கப்போவதில்லை சுனாமிப் பேரலையில் அம்மாவை இழந்தேன் சுற்றிவளைப்பில் அப்பாவையும் இழந்தேன் கண்ணி வெடியில் அண்ணா காலை இழந்தான் கடத்தலிலே அக்கா கற்பை இழந்தாள் செல்வீச்சில் சொந்தங்களை இழந்தேன் குண்டு வீச்சில் குடியிருப்புக்களை இழந்தேன் இப்போது எஞ்சியிருப்பது என்னுயிர்தான் எதை இழந்தபோதிலும் எம்தேசியத்தை நாம் இறுதிவரை இழக்கப்போவில்லை . கனடாவில் இருந்து வெளிவரும் உலகத்தமிழர் பத்திரிகையில் பரமேஸ்வரி துரைசிங்கம் அவர்களினால் எழுதி சிறப்புப்பாராட்டு பெற்ற கவிதை இது.
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ... --------------------------------------------------------------------------------- வாலைச் சுருட்டிக் கொண்டு அவரவர் வீட்டுக்குள்ளே பதுங்கி இருங்கள் இன்று சுதந்திர தினம்! சுருட்டு வாங்கப் போகும் தாத்தாவும் கவனம்! உன்னையும் சுருட்டிக் கொண்டு சென்றிடுவர்! சட்டப்புத்தகம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
நீந்த துடிக்கும் மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 1.2k views
-
-
யுத்த தேச நியாங்கள். குண்டுகள் வெடித்து வெடித்தே நிலம் சிதறிக்கிடந்தது... குருதி ஆறு வழிந்து ஓடி குளம் குட்டைகளில் நிறைந்து உறைந்த தடம் தெரிந்தது.... சாவுகள் சாதாரணமாயிற்று.. பிணங்களை புதைக்க துளிகூட இடமில்லை என்றாயிற்று.... அவலக்குரல்கள் - மிக அருகே - காற்றில் தேய்ந்து தேய்ந்து மறைந்த வ்ண்ணமிருந்தது.. நாய்கள் இறுதியிலிடும் ஈன ஊளைக்குரல் கூட ஓய்ந்து போயிருந்தது..... தூரத்தில் சிலர் கும்மாளமிட்டு கூச்சலிடுவது தெரிந்தது... ஒரு பக்கத்தில் சமாதானம் சமாதானம்.. என்ற போதனை குரல்.. ஒலித்துக்கொண்டேயிருந்தது.... அடி வாங்கி வாங்கி அழிந்து - நசிந்து கிடந்ததவர் மட்டும் அமைதி பற்ற…
-
- 5 replies
- 1.2k views
-
-
நிழல் சொல்லும் நிஜங்கள்!! கண்ணுக்குள் இமையாக காதல் உணர்வையே இசையாக நெஞ்சுக்குள் முள்ளாய்......... காற்றே நீ மூசு, பின்.......கண்களாய் மோதிப் பார்க்க வந்தாயா--!! வெளிச்சத்தைக் கொண்டு ....... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 2 replies
- 1.2k views
-
-
யார் இவர்கள் மூன்று வயதில் - எனக்கு நல்ல சொக்கை - என்று பெற்றோர் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள்..... நான் பெரியவளானதும் - என் மாமன் மகன் மாம்பழக் கன்னம் - என்று வர்ணித்துக் கவிபாடினான்..... பதினேழு வயதில் காதல் வசனம் பேசி சகமாணவன் ஒருவன் என்னை முத்தமிட்டான்..... பத்தொன்பது வயதில் - அந்நிய கூலி நாய்கள் - என் உடம்பை பதம் பார்த்து... பின்பு ராணுவ உடையில் - காவல் பேய்கள் தங்கள் தேவைகளை தேகைக்கதிகமாகவெ பூர்த்தி செய்தன.... கெடுக்கப்பட்டவள்....முத்திரைய
-
- 4 replies
- 1.2k views
-
-
வரியில்லா மொழி ஒலியில்லா பேசும் அவள் கண்கள் ********* ****** படபடக்கும் பட்டாம் பூச்சியின் இறக்கைகள் பார் அங்கே அவள் இமைகளில் ********************** ஏன் இத்தனை மொழிகள் இந்த உலகத்தில் அவள் கண்களால் பேசும் இந்த மெளன மொழியே போதும் *********************************** என் பெயரின் இனிமை எனக்குப் புரிந்தது நீ... என் பெயர் சொல்லி அழைத்த போது.. ***************** வான் மதியே தேய்ந்ததுவோ உன் மதிமுகம் கண்டதாலா? ************* கவிதைகள் என்றார்கள் உன் பெயரை நான் கிறுக்கியபோது **************** வரி -என்பது எழுத்துருவைக்குறிக்கும்
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
அவ்வளவு ஆசையா உனக்கு என் மீது கோவத்தில் நீ சட்டி பானையோடு சண்டைபிடித்தும் இவ்வளவு ருசியா சமைத்திருக்கிறாய் * அமாவாசை விரதத்தில் நீ "கா கா கா" என கரைந்து கொண்டு வெளியே வருகிறாய் உன்னைக் கண்டதும் காகங்கள் குழம்பிவிட்டது பெளர்ணமி விரதமோ என்று * இந்த மழை உடனே நின்றுவிடும் பார் எப்படித் தெரியும் நீதான் குடை விரித்துவிட்டாயே * என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலி கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ... * என் கண்களுக்கு இமைக்க மட்டும்தான் தெரியும் உன் கண்களில் ஒன்றைக்கொடு உன்னை மாதிரியே உன்னை நான் இமைக்காது பார்க்க வேண்டும் -யாழ்_அகத்…
-
- 4 replies
- 1.2k views
-