கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நீ என்னை நேசித்த போது நான் அறிந்து கொள்ளாதது ஒன்று இன்று நீ என் கூட இல்லாத போது புரிகின்றது ...நீ என்னக்குள் உயிராய் இருந்தது !!!! பார்த்த முகம் தனில் உன் கண் என்னை விட்டு பிரிந்தாலும் பழகிய என் இதய நெஞ்சை விட்டு நீ பிரிய வில்லை !!!! உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன் ..உன் சின்ன சின்ன கோபம் என்னை எளிமை ஆக்கின என் வாழ்வில் சிறு அர்த்தமுடன் .. இன்று நான் அதே நிழல்களுடன் !!!! உலகத்தின் கண்களில் உன் உருவங்கள் மறைந்தாலும் எனில் ஒன்றான உன் உருவம் மறையாது..!!!! …
-
- 1 reply
- 514 views
-
-
விடைபெறும் நேரம் ஏன் உங்கள் விழிகளில் ஈரம் விடை கொடுத்தேன் நானும் விடை பெறும் நீரும் உயிர் விட்ட பின்பும் மறப்பேனா நானும் என் இதயத்தில் நீயும் துடிப்புத்தான் பாரும் என் கவிதைகள் எல்லாம் உன் பெயர்தான் சொல்லும் பட்ட மரத்து இந்தக்குயிலும் உன் வரவை இங்கே நாடும் நீயும் திரும்பி வரும் வரை எசப்பாட்டு இல்லாமல் இங்கு ஏங்கும்
-
- 4 replies
- 1.4k views
-
-
பிரிவு வாழ்வில் எத்தனை பிரிவுகள் தாய் நிலத்தைப் பிரிந்தேன் தாய் தந்தையைப் பிரிந்தேன் தம்பி தங்கையையும் பிரிந்தேன் செல்ல நாய்க்குட்டியைப் பிரிந்தேன் கிளித்தட்டு ஆடும் சிறு திடலையும் பிரிந்தேன் சிட்டாய் பறக்கும் என் துவிச்சக்கர வண்டியைப் பிரிந்தேன் பசுமையான பள்ளித் தோளியரைப் பிரிந்தேன் நறுமணம் வீசும் முற்றத்து மல்லிகையைப் பிரிந்தேன் இனிய குயில்ப் பாட்டைப் பிரிந்தேன் மொத்ததில் எனது இனிய கனவுகளைப் பிரிந்தேன் இத்தனை பிரிவுகளும் எத்தற்கா செய்தேன்? பிரிவுகளின் கொடுமையில்த் தவியாய்த் தவிக்கிறேன். :cry: துளசி
-
- 8 replies
- 1.7k views
-
-
[size=5]மான் விழி காட்டி [/size] [size=5]மை விழி பேசி [/size] [size=5]மாறாத என்னை [/size] [size=5]மாற்றத்துக்குள் வைத்தவளே ![/size] [size=5]வசந்தம் இன்று [/size] [size=5]ரணக்களாய் வலிக்கிறது ,[/size] [size=5]துண்டிலிலே சிக்கிய மீனாக [/size] [size=5]எந்த நம்பிக்கையும் [/size] [size=5]இல்லாமல் இருக்கிறது [/size] [size=5]எதிர்காலம் ,[/size] [size=5]சிறகில் இருந்து கழண்ட[/size] [size=5]இறகு போல் [/size] [size=5]இப்போது விதியின் [/size] [size=5]கைகளில் நான் ,[/size] [size=5]ஒரு தனி பறவையின் [/size] [size=5]அலறல்போல் [/size] [size=5]ஊமையாய் விம்முகிறது [/size] [size=5]மனசு,[/size] [size=5]சில தருணங்கள் [/size] [size=5]இதயமும்…
-
- 14 replies
- 1.1k views
-
-
பிரிவு... நீயில்லாத நிமிடங்களில் ஒவ்வொரு நொடிகளும் எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன காற்றில்லாத வெற்றிடமொன்றில் அடைத்து விடப்பட்டதுபோல நீயில்லாத கணங்களில் என் ஒவ்வொரு சுவாசங்களும் பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன அருகேதானே இருக்கிறேன் என்று தொலைபேசியில் நீ சிணுங்கினாலும் சுடர் அணையும் சிறுகணத்தில் கனமாய் இறங்கும் இருளைப்போல சிலுவைகளாய்க் கனக்கின்றன நீயற்ற சிறு நொடிகளும் பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும் நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல ஒவ்வொரு தடவையும் பூரித்துப்போகிறது எனதுள்ளம் எல்லாப்பிரிவுகளின் முடிவிலும் இன்னமும் இன்னமும் பேரன்…
-
- 2 replies
- 629 views
-
-
அம்மா அம்மா என்காத உயிர் இல்லையே அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே! எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள் எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்! எம்மை காக்க அரும்பாடுபட்டாள் எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்! திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள் நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்! எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள் எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்! தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு! நாம் உண்ணும் அழகு கண்டு தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்! தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை! அவள்தான் நான் உலகில் வந்து கண்ட முதல் தெய்வம்.
-
- 101 replies
- 11.1k views
-
-
பிறக்கிறது நம் தேசம்..... கவிதை - இளங்கவி இரத்தத்தில் தோய்ந்த தமிழீழத்தின் முழு நிலவும்....... பிணக்குவியலால் மறைந்த தமிழீழத்தின் சூரியனும்....... அங்கே ஒளியையும் மறைத்து நம் தேசத்தின் குளிர்மையும் நீக்கி கூக்குரல்கள் மட்டுமே என்னாளும் ஒலித்திடும் தேசத்தை பாரீர் அங்கே ஒருதரம் வாரீர்....... குயில்களும் பாடாமல் கூட்டிலே ஒளிந்து கொள்ள....... மயில்களும் ஆடாமல் மறைவிலே மறைந்துகொள்ள.... மரணித்த உடல்கள் மட்டும் மலிவாகக் கிடைக்கிறது...... தடுப்பார்கள் யாருமின்றி தினமும் கொலைகள் நடக்கிறது.... ஒருபக்க முலையிலே குழந்தையின் பசி தீர்த்து மறுபக்க முலையை எதிரியின் கொடுமைக்கு பறிகொடுத்து இறக்கின்ற நிமிடமும் மழலையின் பசிதீர…
-
- 8 replies
- 1.6k views
-
-
பிறக்குமா புத்தாண்டு ...........? பிறக்குமா புத்தாண்டு எதிரிக்கு பார் சோறு எங்களுக்கு கந்தக காற்று இறைவா என் இந்த வேற்றுமை உலகெங்கும் போராட்டம் தமிழ் மக்கள் மன்றாட்டம் ஓயாத போரை நிறுத்து கொல்கிறது கொத்துக்குண்டு சிந்தும் ரத்தம் ஆறாய் ஓடுது கண்ணீர் விட்ட கண்களும் வெறுமையாய் சுரபிகள் வற்றி விட உண்ண உணவும் குடிக்க நீரும் சுவாசிக்கும் காற்றும் கந்தக வாசம் ஏன் இந்த அவலம் ஈழத்தமிழனுக்கு புலம் பெயர் உறவுகளும் ஓயாத போராட்டம் பட்டினிச் சாவுக்கும் பலர் முன்னேற்றம் உறவுகளின் துயரால் உலகமே ஏக்கம் ஆறாத வலி ,மாறாத சோகம் தீராதா இந்த பழி ,நெஞ்சிலே ஓயாத வலி ........
-
- 1 reply
- 737 views
-
-
எத்தனை எத்தனையோ பிறந்தநாள் பாடல்கள் வந்திருக்கு... சரி நம்ம பாட்டையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழவாவிலும் போட்டு எங்கள் செல்ல மழலைகளை ஆடவிடுங்கள். http://vaseeharan.blogspot.com/ பல்லவி பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய் நல்ல நல்ல பாட்டைக் கேட்டு தன்னாலே ஆட்டம் போடுங்க நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு உலகை நீங்கள் வெல்லுங்க சரணம்-1 தரணியெங்கும் சென்று நீயும் தமிழைப் பரப்பிட வேண்டும் நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும் தமிழில் கதைத்திட வேண்டும் உன்தன் மூ…
-
- 7 replies
- 1.7k views
-
-
“Happy Birthday” என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த தமிழ் பிறந்தநாள் பாடலை இனி பயன்படுத்துவோம். நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.! வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.! அன்பு வேண்டும்.! அறிவு வேண்டும்.! பண்பு வேண்டும்.! பரிவு வேண்டும்.! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.! உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும்.! சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் பிறந்த நாள் வாழ்த்துகள்.! பிறந்த நாள் வாழ்த்துகள்.! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!
-
- 1 reply
- 1.5k views
-
-
பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிக்க முடியாத கவிதையாக இன்னும் மன அடுக்குகளில் இறைத்துக் கிடக்கிறது மானுடத்தேடல். பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிவுகள் அற்ற தேடல் தீராக்கடனாளி ஆக்குவதில் தீர்க்கமாய் இருக்கிறது. வகைப்படுத்த முடியா வலிகளை எடுத்தெழுதுவதில் எவ்விதப் பயனுமில்லை நித்திய நோயாளியாக விரும்பின் கூறுக கொத்தணிக் குண்டுகள்போல் தமிழினத்தின் வாழ்வு சிதறிச்சிதறி சின்னாபின்னமான கதைகள் கோடியுண்டு முற்காலம், பிற்காலம் இடைப்பட்ட இக்காலம் தெளிவற்ற கலங்கலுக்கு உரித்துடையதாக காட்சியாகவும், சாட்சியாகவும்.... மாயமானாகப் புலப்படு…
-
- 14 replies
- 2.6k views
- 1 follower
-
-
பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா காரிருள் அகன்றது பேரொளி பிறந்தது- அவ் ஓரொளி மகிமையில் உவகையே நிறைந்தது வானமும் வையமும் வாழ்த்தியே மகிழ்ந்தது விண்ணக வேந்தனை மண்ணதில் வாழ்த்திடும் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா தீபங்கள் கரமேந்தி தெய்வீக மனமேந்தி ஆனந்த உணர்வேந்தி அகமெங்கும் மகிழ்வேந்தி மனங்களில் அன்பேந்தி மனிதத்தை அகத்தேந்தி மழலையாய் மலர்ந்தநம் மகிமையின் தேவனின் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா எதிர்காலம் சிறந்தோங்க எம் மண்ணும் தளைத்தோங்க வருங்காலம் வளமோங்க எம்வாழ்க்கையும் நலமோங்க வழியதன் வெளிச்சமாய் வாழ்வுக்கே அர்த்தமாய் ஒளியதன் மைந்தனின் உண்மையின் வேந்தனின் பிறந்தநாள் …
-
- 5 replies
- 4k views
-
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆண்டு இங்கு எட்டாச்சு...!! எப்போ நீ பிறப்பே என்று தான் இங்கு ஒரே பேச்சு...!! இதயத்து அறைகளிலே இளம்பிஞ்சே உன்முகம் தான்... என் கந்தகக் கருப்பையில் ஃபீனிக்ஸாய் எழுவாயா??? விரதமும் வேண்டுதலும் - உன் வரவைச் சொல்லலையே...!! வாடகைத்தாய் வாங்கக்கூட காசுபணம் எனக்கிலையே...!! சோதனைக்குழாய் முறைக்கும் - முதல் சோதனையிங்கு பணத்திலாமே?? சொச்ச ரொக்கமில்லையினா சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!! உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என் உயிரே தவிக்குதிங்கே...!! நஞ்சுரைக்கும் வல்லூறால் - என் நெஞ்சு மருகி விம்முதிங்கே...!! ஆண்டுபல போனாலும் - உன் வரவு கனவில் தான் நிஜமாச்சு...!! 'ம்மா'-னு நீ…
-
- 9 replies
- 3.5k views
-
-
நீர்தேடச் சென்று தொலைந்து போனவற்றைத் தேடி மணற்பாதைகளில் சங்கமிக்கின்றன கால்தடங்கள். ஊதமுடியா சங்குகள் வெடித்துப் போய் இருக்கின்றன திங்கமுடியா பிணங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன உச்சி வெயில் உக்கிரத்தில் பாதமும் வெளுக்கிறது பிழிந்த வியர்வைகள் மகிழ்கின்றன இன்றாவது இங்கே இருக்கிறோமே என்று.. தொண்டை அடைத்த ரணத்தோடு ஓவியங்கள் படர்ந்த பாதங்கள் வீடு திரும்ப, பாதச்சுவடுகளை அழிக்கமுடியா விரக்தியில் ஊர் கதைப் பேசி திரிகுதுகள் பிளவுபட்ட கரைகள்.
-
- 12 replies
- 2k views
-
-
-
- 18 replies
- 2.6k views
-
-
உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…
-
- 14 replies
- 2.4k views
-
-
உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…
-
- 0 replies
- 627 views
-
-
புகலிடம் *********** அவள் ஒன்றும் இந்த மர மனங்களிடம் கனிகளுக்காக - காத்திருக்கவில்லை..... அது - தரும் நிழலுக்காகத்தான்...... காத்து நின்றாள் அவள்- கனத்த இதயத்தில்... நினைத்த எண்ணங்கள் சருகாகிப் போனதால்... அந்த சருகையே உரமாக்கி (மர)மனங்கள் ஓங்கி வழர்கின்றன அதனால்தான் -அவள் வெயிலினில் கூட... வெறுப்பின்றி நடக்கின்றாள் இனி- அவள் ஒதுங்கப் போவது எந்த(மர) நிழலிலோ....? இல்லை இந்த வெயில் தான் இவளின்...புகலிடமோ....???
-
- 7 replies
- 1.5k views
-
-
என்ட வாழ்க்கையில நான் கன தடவை திரும்பத் திரும்பக் கேட்ட ஊர்ப் பாட்டு இதுதான் (இயக்கப் பாடல் தவிர்த்து).... மயங்கீட்டென் இசையில.
-
- 3 replies
- 742 views
- 1 follower
-
-
புதிதாக மாறிக்கொண்டிருக்க...... ஆண்டுகள் ஒவ்வொன்றும் புதிதாய்ப் பிறந்து கொண்டிருக்க..... வசந்தகாலம் இலையுதிர்காலம் என காலங்கள் மாறிக் கொண்டிருக்க.... பிரம்மன் தன்னிடம் இருப்பதை படைப்பதும் படைத்ததை திருப்பி பறிப்பதுமாக தனது வேலையை மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்க.... மனிதர்களின் குண இயல்புகள் கூட தாழ்ந்தும் மேலோங்கியும் மாறிக் கொண்டிருக்க...... ஏன் ...ஏன்.. ஈழம் மட்டும் மாறாமல் இன்னும் யுத்த பூமியாக....... நம் ஈழத் தமிழர்களின் கண்ணீர்களை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறது.... ஏன் இன்னும் மாறாமல் கவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
புதிய இசையின் பதற்றம் பீறிட்டெழும் என் பதற்றத்தின் பார்வை அமைதி அமைதி என பச்சைப் புல் தேடுகிறது அவலங்களின் நாவுகள் பயணித்த சுவை வழியே மௌனம் யாசிக்கிறது நடுக்கம் சிவப்புக் கம்பளம் விரித்த கூடமொன்றிலிருந்து நிர்வாகவியல் குறித்த வரைவுகள் தொடங்குகின்றன குளிரூட்டப்பட்ட சதுரங்கள் உரையாடலை வாசிக்கின்றன உணவுகளின் வரிசையில் எண்ணிக்கைகள் தொடர்கின்றன பசி மட்டும் சாசுவதம் கழிப்பறை சுவர் சிரித்த இசை கனவுப் பிரதேசமாய் விரிகிறது நடுநிசியளவு அல்லது பகலா ஏதோ ஒன்றிலிருந்து எழும் ஓலம் ஞாபகங்கள் மீது நதி நீரற்ற தனிமையை வீசுகிறது நடவடிக்கைகளின் ஒழுங்கு படுத்தலை ஒளி அறைகிறது நெஞ்சுப் பலகை மீது விழிகளின் அச்சம் வினாக்குறிகளை உமிழ்கிறது பழைய கேள்விதான் …
-
- 2 replies
- 1.1k views
-
-
நாம் ஆயிரம் எழுதலாம். ஆனாலும் ஒரு கவிஞர் எழுதுவது போல் வருமா? கவிஞர் பழனி பாரதி புதிய இந்தியா என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை மோடியின் டிரவுசரைக் கழட்டுகிறது.. விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு சவத்துணி நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு நெற்றிக்காசு வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரை கொன்று கொன்று மனிதக்கறி உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் கோவணத்தை பிடுங்கி இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் பு…
-
- 3 replies
- 2.9k views
-
-
புதிய கிளிநொச்சி அழகு தேசமே எழில் கொஞ்சும் பேரழகே-உன் இறக்கை ஒடிந்து இயற்கை வற்றி இடிந்து போனதேனோ உறக்கம் அறியா-எங்கள் ஊர்களின் மெளனம் தான் என்ன..? பட்டுப் போய் கிடக்கும்-என் பழைய ஊரே கிளிநொச்சி மண்ணே-நீ கிலி கொண்டு இருப்பதேனோ...? உன்னில் கொட்டுண்டு கிடக்கும் அத்தனை அழகும் எங்கே...? சாலையோரம் உயர்ந்து நின்ற கட்டடங்களே........... டிப்போ பேருந்து தரிப்பிடமே... யாருக்கு ஏது செய்தீர் தெருவின் ஓரம் சிரித்து நின்ற சந்திரன் பூங்காவே உன்மீதும் புதியதோர் சிலையா..? சிங்கள வெறியன் நினைவுத் தூபியா நீ அதிர்ந்தாவது வீழ்த்திடமாட்டாயா..? இதமிதமாய் குளிரவைத்த சேரன் பாண்டியன் சுவையூற்றுக்களே உங்கள் அத்திவாரங்கள் எங்கே...? நீதி …
-
- 5 replies
- 1.7k views
-
-
புதிய பதவிகள் எனக்கான வாழ்க்கைப் பயணத்தில் - ஓர் துணையாய் உனைத் தேர்ந்தெடுத்தாயிற்று! என் குடும்பமும் உன் உறவுகளும் புடைசூழ இணைந்தாயிற்று புதுப் பந்தத்தில்! ஆனால்... எனக்கான போராட்டங்களை இனி நான் தனியனாய் ..... பெண்ணாய் ..... - குடும்பத் தலைவியாய்..... மனைவியாய்...... மருமகளாய்.... உற்ற தாயாய்.... நானே நானாய் சந்தித்துக்கொள்ள வேண்டும்! சகித்துக்கொள்ள வேண்டும்!! எத்தனை கதா பாத்திரங்களை என்னுள் திணித்தாயிற்று?! இத்தனை காலமும் எனை வளர்த்து தம் செல்ல மகளாய் கொஞ்சிக் குலாவிய அம்மாவும் அப்பாவும் அந்நியமாய்.... இத்தனை பாரங்களையும் எனை தனியே சுமக்க வைத்து தம் பொறுப்பு முடிந்ததென்…
-
- 9 replies
- 1.2k views
-
-
காலை எழுந்தவுடன் email வாலைக் குமரியுடன் facebook சாலை முழுவதும் Mobile Talk மாலை முடியும் வரை Chit Chat மாலை முடிந்ததும் Work Hour Start பொய்யுரை எழுத Status Reports மெய்யுரை சொல்ல Company Reports பொய்யை மெய்யாக்க Status Call மெய்யை உறுதியாக்க Conference Call பொய்யும் மெய்யும் கலந்த Live Call டாகுமென்ட் எழுத Copy & Paste ப்ரோக்ராம் எழுத Cut & Paste மறந்ததைப் படிக்க E-Learning படிக்காமல் உறங்க Audio-Learning படித்ததை நினைவூட்ட Google Search கூடிப் பேச Conference Hall கூடாமல் பேச Coffee Break காதல் செய்ய Live Chat குறட்டை விட Training Session அரட்டை அடிக்க Lunch Break ஓசியில் திங்க Team Lunch தின்றதைச் செரிக்…
-
- 0 replies
- 620 views
-