கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
புத்தாண்டே வா புதுவாழ்வு தா ஒரு வருடம் ஓடி உதிர்ந்தது. குருதிப்புனல்களில் இருந்து துளிர்விடும் புதிய தளிர்கள் புன்னகையோடு எட்டிப் பார்க்கட்டும் முகம் தெரியாத எம் உறவுகளுக்காய் வைகறைப் பொழுதுகள் தவமிருக்கட்டும் உலகத் தேசிய வரைபடத்திலே புதிய நாடாக தமிழீழம் இணையட்டும் எங்கள் வாழ்வே போராட்டமாகவும் போரட்டமே வாழ்வாகவும் மிளிரட்டும் நம்பிக்கை ஏந்திய நமது கைகள் வெற்றிப் பூக்களைப் பறிக்கட்டும் சூரியத் தலைவனின் முதிர்ச்சி விடுதலைப் பாதையில் ஒளிவீசட்டும் தமிழக எழுச்சியும் சிங்கள வீழ்ச்சியும் புலம்பெயர் தமிழர்க்கு பலமாகட்டும் கலைஞரின் கருணை வெள்ளம் எங்கள் தேசத்தை நனைக்கட்டும் கற்பனை வானிலே பறக்கும் கனவுகள் எங்கள் நனவாகட்டும் …
-
- 2 replies
- 758 views
-
-
முன்னைக் கதைகளில் ஐம்புலன்கள் அடக்கி காட்டில் கிடந்தனராம் முனிவர் நாட்டு நடப்புக்களின் கதைபேச்சு அற்று ஐம்புலன்கள் ஒடுக்கி அவை நலிந்தடங்க முக்கிக் கிடக்கிறார் முன்பள்ளியில் புலமைப்பரிசிலி;ல் போட்டிப் பரீட்சையில் பல்கலைப் புலமையில் நிலத்தடியில் நீரிற்கு நடப்பது அறியா அறிவு விருது பெற்று வாழ்த்துப் பெற்று படபடக்கிறது பெருமைக்காற்றில் சி. ஜெயசங்கர் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115649/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 613 views
-
-
புனித நிலம் அவனது தொழுகைக்கான உரிமை மறுக்கப்படுகிறது அவனது வாழ்வுக்கான உரிமை பறிக்கப்படுகிறது அவனது நிலங்கள் இன்னொருவனால் ஆக்கிரமிக்கப்படுகிறது அவனும் அவனது குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள் கொல்லப்படும் குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளோ அல்லது ஐரோப்பிய குழந்தைகளோ இல்லை அவர்கள் எல்லாம் பாலஸ்தீன குழந்தைகள் அதனால் யாரும் கண்டுகொள்வதுமில்லை எந்தப் பிராத்தனைகளும் செய்வதும் இல்லை அன்று ஒரு நாள் மியன்மார் ரோகிங்காவிலும் ஈழத்திலும் கொல்லப்பட்ட குழந்தைகள் போலவே ஒலிவ் மரக் கிளையில் இருந்து ஒவ்வொரு இலைகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது சிலுவையில் அறையப்படும் ஜெருசலேத்தின் குருதி …
-
- 1 reply
- 590 views
-
-
விலையற்ற உயிர் மீது மலிவாய் போகிறது காதல் -சில கழிவுகளின் கருத்துக்களில் கனிவான காதல் மொழி கேட்டு கல்லும் கரைந்திடும் என்பர் கருத்துதென்றும் -தன் பிறப்பின் புகழென்றும் தளம்பும் கருத்துக்கள் தடை தாண்டி பெற்றவரின் விடை தாண்டி பொறுமையின் எல்லை தாணடி வறுமையில் வலி தாண்டி மனம் கொண்ட சலனம் நீக்கி மனதார வாழ வழி செய்யும் காதல் காமத்திற்காய் என்றும் காமமின்றி காதலில்லை என்றும் கருதுகின்ற வாலிபர் கருத்தில் காதல் ஒரு புூசனிக்காய்! வாயிருக்கு என்பதற்கா வந்ததெல்லாம் பேசுவதால் வந்ததென்னவோ!? –வலி கொள்ளும் வழிதன்னில் வார்த்தைகளை விதைப்பதென்னவோ!? வழியுண்டு சொல்ல மொழியுண்டு ஆனாலும்… பதிலொண்டு நாம் சொன்னால் பாரின் எனக்கும் உனக்கும் வேறுப…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்து நான் இந்தியா புனிதம் எனகென்றாய் கிறிஸ்தவன் நான் ஜெருசலம் புனிதம் எனகென்றாய் முஸ்லிம் நான் மக்கா புனிதம் எனகென்றாய் வடக்கு கிழக்கின் பூர்விக குடிமகன் என்பதற்காக என்ன ஆதாரம் காட்டினார் நீ புத்தன் ஆசிர்வதித்த சிறிலங்கா அவனது பூர்வீகம் உரிமை கூறுகிறான் சிங்கள பேரினவாதி- இப்படி சிறிலங்கா அவனுக்கு புனிதமாம்
-
- 6 replies
- 1.5k views
-
-
புன்னகை செல்வனே... மதி முகம் கொண்ட தமிழ் செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. தானைத் தலைவனின் தம்பியே தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. போர்க்களத்துலும் நீ வீரன் புன்னகையிலும் நீ மன்னன் நீ சிரித்தால் பூமி சிரிக்கும் நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே தாயகத்தை விட்டு எங்கு சென்றாய் கார்த்திகை கரி நாள் வந்ததுவோ காலனே உனக்கு கண் இல்லையோ எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்? தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள் என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்..
-
- 12 replies
- 1.5k views
-
-
புன்னகை மழையே நீ எங்கே பொன் நகைகள் கொண்டாடும் புன்னகைக்கு புலிப்படையில் ஓர் அடையாளம்! தமிழ் ஈழத்தின் தரை மெழுகும் நிலவாய்... புலம் பெயர்ந்தோர் விழிகளிலும் தவழ்ந்து வந்த பூந்தென்றலாய்... எங்கள் இதயமெங்கும் பூத்துக் குலுங்கிய பூந்தோட்டமே! நீ சென்ற இடமெல்லாம் புன்னகை மழை பொழிந்து உன் தமிழால் உலகத் தமிழை உயர்த்தினாய்! எத்தனை செல்வங்கள் தமிழில் இருந்தாலும் தலைவனுக்கெனவே தனித்துவமாய் வாய்த்த தமிழ்ச்செல்வா எங்கே போனாய்? இதயத்தில் வலிகள் பெருகி கண்ணீர் வழிகிறது. இமயத்தின் இழப்பை எண்ணி இதயம் கனக்கின்றது.! அண்ணா உந்தன் புன்னகை எமக்கு வேண்டும் தமிழீழம் பூக்கும் நேரத்தில் புன்னகை சிந்…
-
- 4 replies
- 2k views
-
-
[size=5]புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய் [/size] பதின்மக்கனவுகள் பிணங்களும் அழுகையும் பிணியகலாப் பொழுதின் விடியலைத் தேடிய வீரரின் தடங்களில் 13வயது அவளுக்குக் காட்டிய வாசல் களமுனை கைத்துப்பாக்கி கனரக ஆயுதக் கையாள்கை..... வெற்றியே அவளது வெறிக்கனவு விடுதலையே அவளது விழிக்கனவு விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம் முடித்திடும் தைரியம் அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்.... அசாத்தியத் துணிவும் ஆழுமையும் பகையின் வீட்டுக் குகைக்குள் பணி.... சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும் அவளுக்கு வலித்ததில்லை வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக் கனவுகள் விரிந்தது.... கனவுகள் பலித்திடக் கைத்துப்ப…
-
- 2 replies
- 776 views
-
-
புரட்சி அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம் உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப் பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம் விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம் Inthuja Mahendrarajah நன்றி இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
-
- 7 replies
- 2k views
-
-
புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் குரலில் சில வரிகள்! பகுதி - 01 http://www.ijigg.com/songs/V2A4GBAFPB0 பகுதி - 02 http://www.ijigg.com/songs/V2A4GBBEP0 பகுதி - 03 http://www.ijigg.com/songs/V2A4GBC0PB0
-
- 9 replies
- 2.2k views
-
-
எங்களுக்காக தங்கள் இசை வாழ்வையே அர்ப்பணம் செய்யும் தேனிசை ஜயா அவர்கள் facebook ல் வலம் வருவது சும்மா தட்டிய போது கிடைத்தது. அனைவரும் அங்கம் ஆகி மற்றைய பாடகர்கள் போல் பெரும் அங்கத்தவர்களை பெற ஊக்குவிப்போம். http://www.facebook.com/pages/Thenisai-Sellappa/73859321965#!/pages/Thenisai-Sellappa/73859321965
-
- 0 replies
- 1.5k views
-
-
காதலியே... காதலியே... கண்களுக்கு இன்று வரை தென்படாத காதலியே.. என்று வருவாய் என் வாழ்கையில் வசந்தம் வீச.. அதிகம் பேசியவன் அல்ல நான் பெண்களிட்ம். அது குறித்து கவலையும் இல்லை என்னிடம்.. அனால் என்னை நம்பி வந்த என்னுடைய உயிர் என்று காக்கும் திற்மை உள்ளது என்னிடம்... குடும்பம என்ற கூடாரத்துக்குள் வர.. உனக்க்காக என்ன செய்யவேண்டும் உனக்க்காக என்ன செய்ய கூடாது.. அன்பே நீ வெங்காயத்தையும் நறுக்கவேண்டாம்.. வெள்ளை பூண்டையும் உரிக்கவேண்டாம் அனைத்தையும் நான் பார்த்து கொள்வன். கடவுளை நம்புபவனில்லை நான்.. இயற்கையை நம்புபவன்.. எகிறிய பந்து மீண்டும் வரும் என்ற புவியீர்ப்பு விசை உண்மையெனில்... இந்த உலகத்தில் நியமிக்கபட்ட பிறப்ப…
-
- 12 replies
- 2.1k views
-
-
புரட்சியொன்று புயலாக ... கவிதை ... ... புரட்சிப் புயலொன்று தமிழகத்தில் மையங்கொண்டு இலங்கை தமிழினத்துக்கு ஆதரவாய் நம் மண் நோக்கி நகர்கிறது... உங்கள் எழுச்சி வெள்ளத்தில் நம் மனமெல்லாம் நனைகிறது.... தமிழகத்தில் மக்கள் விளிப்புக்கொள்ளும் மனிதச் சங்கிலியாய்.... திரையுலகம் திரண்டுவிட்ட உண்ணா விரதங்களாய்..... தொழிளாளர் செய்துவிட்ட தங்கள் கடையடைப்புக்களாய்.... இறுதியில் மாணவர் கொதித்தெளுந்த மாபெரும் டில்லிப் பேரணியாய்..... இன்னும் பலபலவாய் எப்போதும் தோன்றாத ஆழிப்பேரலை போல் தமிழகமே வியந்துகொள்ள வீறுகொண்டு எழுகிறது..... தமிழனெனும் உணர்வின்று தமிழ் மனங்களிலே ஓங்கினின்று போரை நிறுத்தென்று …
-
- 2 replies
- 861 views
-
-
கோபுரம் கட்டி முடிக்கையில்....... அத்திவாரம் - ஆட்டம் கண்டதோ? மெல்ல முழைத்த உன் பாத விரல்கள்... பூமியில் அழுந்துமுன் - பொசுங்கி போயிற்றோ? ஏதுடா சமாதானம்? என்னையும் -உன்னையும் எரித்தபின் ஏதும் வந்தால் அது - சமாதானமா? அதன் பெயர் சமாதி! நான்கு வருடங்களாச்சு ....... கண்டதென்ன?...... செம்பருத்திக்கும் ....... தெருவினோர .......கழிவு நீருக்கும்...... வேறுபாடு............... பிரித்து பார்க்க முடியாமல் பேதலித்து கிடக்கிறாய்......! உன் பிறப்பின் அடையாளம் மெல்ல மெல்ல ....... அதன் ஆயுள் முடிக்கிறதே ..... அறிந்தாயா- நீ? கண்மணிக்குள் இரத்தம் பாயாதுதான்......... இல்லையென்று இல்லை....... உன் இதயத்தில் கூட அதன் இயக்கம் …
-
- 9 replies
- 1.7k views
-
-
அறுத்தெறியப்பட்ட இதயத்தின் இரத்தக் குழாய்கள் கொப்பளித்த சிவப்பணுக்களில் - என் உயிர் உச்சரித்த உன் காதற் சிதறல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும்! புரிதல்களும் புரியாமையும்.... புரிந்துகொள்ளப்படுவதற்கு, சில காலங்கள் செல்லும்! - அதுவரை, இந்த ரணவலித் தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!!!
-
- 5 replies
- 908 views
-
-
என்னை கருவறையில் சுமந்த போது தினம் தினம் என்னை தடவி உன் வாழ்க்கை எப்போதும் இருட்டறையில் தான் என சொல்லி வந்ததின் அர்த்தம் புரிந்தது............ கருவறையின் வெளியில் இருந்து ; வந்த என்னை அரை உயிராக புதைகுழிக்குள் புதைத்த போது.........
-
- 3 replies
- 1.5k views
-
-
புரிந்து கொள்ளவில்லையே மழையே ஏன் உன்னைக் கண்டால் சில பெண்கள் தலை தெறிக்க பீதியுடன் ஓடுகின்றனர்....?????? ஏன் தானோ வெளியே வர மறுத்து விட்டு வீட்டிற்குள்ளேயே ஒதுங்குகின்றனர்???? ஏன் தானோ உன்னைத் தாண்டிப் போவதற்கு தம் முகங்களிற்கு நீ தொடா வண்ணம் உனைத் தடுக்கும் அணியை அணிந்து செல்கின்றனர்...?????? நீ என்ன எதிரியா அவர்களுக்கு??????? அல்லது உன்னிடம் எதாவது கடன் வாங்கி விட்டார்களா...???? புரிந்துவிட்டது..புரிந்துவிட
-
- 4 replies
- 1.3k views
-
-
தேவனவன் சிலுவையிலே தொங்குகின்றார் திருமகனின் இருபுறமும் திருடர்கள் ! இதயத்தைத் திருடியவர் இயேசு என்பார் இரும்புப் பெட்டியைத் திருடியவர் மற்றோர் ! மன்னனிட்ட கட்டளையில் மாற்றமில்லை .. மனுமகனோ சிலுவையிலே மரணத்தீர்ப்பு திருட்டு என்பதுதான் குற்றச்சாட்டா ? இல்லை திருமகனையே விற்று விட்ட பற்றுச் சீட்டா ? மதுரா. தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 7 replies
- 1.5k views
-
-
தோணியிலே ஏறும் போது சொன்னார்கள் துறைமுகத்தில் இறங்குவதாய்.. பாதிவழி போகையிலே .. பாவிகளோ தோணிக்குத் துளையிட்டார்கள் தண்ணியேறித் தாழும் நிலை .. தோணிக்கின்று ! பாவிகளே .. பாவிகளே .. தாழுவது தோணிமட்டுமல்ல நீங்களும் தான் ! புரிந்து கொள்ளுங்கள் !
-
- 4 replies
- 1.2k views
-
-
வீடுபற்றி எரிந்து அவர்கள் வீதியிலே நின்றார்கள் கூடி வந்த உறவினர்கள் கூவி என்ன சொன்னார்கள் மாற்றி வாருங்கள் மற்ற உடையை .. என்று ! மாற்றவில்லை அவர்கள் .. மனமில்லை என்பதால் அல்ல மாற்றுடையே அவர்களுக் கில்லை .. மனிதர்களே .. புரிந்து கொள்ளுங்கள் !
-
- 4 replies
- 1.3k views
-
-
சுத்துகின்ற பூமியில் நாம் நிரந்தரம் இல்லை இதை சிந்திக்க மனிதனுக்கு நேரமும் இல்லை சத்தம் போட்டு யாரும் இங்கு சண்டை போடத்தேவை இல்லை நாளை இந்த பூமியில் நாம் யாரும் இல்லை உயர்வு தாழ்வு இங்கு தேவை இல்லை நாளை நீ போகும் போது உன் கூடவருவது இல்லை சாதி மத பேதம் இங்கு பெரும் தொல்லை அதனால் தமிழனின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை கறுப்பு வெள்ளை என்று இங்கு யாரும் இல்லை இது மாயையின் தோற்றம்தான் நீ புரிந்து கொள்வது இல்லை இங்கு வாழ்வதுதான் வாழ்க்கை இல்லை இதை புரியாத மனிதன் பூரணமனிதனும் இல்லை
-
- 11 replies
- 1.8k views
-
-
யார் சொன்னது வழிந்தோடும் என் இளமைக்கால நினைவுகளை மேய்ந்தபடிபோகும் வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப் புரிய முடியாதென்று...? யார் சொன்னது நான் தொலைத்துவிட்ட சிறுவன் நடந்துதிரிந்த வீதிகளில் எஞ்சியிருக்கும் புறாக்களினதும் புலுனிகளினதும் கவலைப் பாட்டினை விளங்கமுடியாதென்று....? யார் சொன்னது வெட்டைக் காணிகளின் சம்புப் புற்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குந்தியிருக்கும் தும்பிகளின் இறக்கைகளில் இருந்துதொடங்கும் என் பால்யகாலக் கவிதைகளைப் படிக்க முடியாதென்று...? அவைகளின் மொழிகள் உனக்கெப்படித் தெரியுமென்ற வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்... அவைகளின் மொழிகளில்தான் மீட்டிக்கொள்கிறேன் கிழித்து வீசப்பட்டதால் பொருளை இழந்துப…
-
- 13 replies
- 2.5k views
-
-
பார்வைகள் பார்க்கின்றேன் தொலைதூர இருள் வானில் . சிலசமயம் , சுவர்களையும் சுவாரசியமாய் ஊடுருவிக் காண்கின்றேன். என் கையின் ரேகைகள் ஏனோ இன்னும் புரியவில்லை ........... ஆண்கள் பெண்களை காவல் புரிவதால் , பெண்மை தாழ்ந்தது இல்லை . வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை , என்றும் காப்பாற்றுகிறது. தங்கம் தாழ்ந்ததென கருதுகிறதா உலகம் ???????? புரியவில்லை இன்னும் ஏனோ புரியவில்லை.......... ****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .
-
- 55 replies
- 5.8k views
-
-
நேசிக்கிறேனா? புரியவில்லையே.... உன்னுடன் போட்ட சண்டையும் உன்னைத் திட்டிய பேச்சுக்களும் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்பட்ட கோபங்களும் இப்போது காதலாய் மாறிவிட்டதா???? நம்ப முடியவில்லையே........ அடிக்கடி கண்கள் உன்னைத் தேடுகிறது! நீ என்னையே பார்ப்பதாய் இதயம் நினைத்துக் கொள்கிறது! நீ எதிரினில் வரும் போதெல்லாம் இறக்கை முழைத்த உணர்வு! ஏனடா? ஏனடா இப்படி மாறிப் போனேன்??? புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்! என்ன முயன்றும் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை!!! இந்த உணர்விற்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை!.... இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்! அதன் பின் உன்னை நான் பார்ப்பேனா என்று கூடத் தெரியாது! இப்போது எதற்காக இந்…
-
- 0 replies
- 594 views
-
-
புரியாத ஏக்கம்… என் கண்கள் அவனையே கூர்மையாக நோக்கின… வாட்ட சாட்டமான உடல் ஆடை அணியும் அழகாகத் தெரிந்தன. ஆனால்… அவனின் செயற்பாடு… அவன் போடும் சத்தம்… என்னைத் திடுக்கிட வைத்தது… இந்த வயதில்… இப்படியான தோற்றத்தில்… இப்படி ஒரு நிலையா! கடவுளே!!! ஊரில்… மருத்துவ வசதியிலாத இடத்தில்… பொருளாதர பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே… ஒரு சிலர்தான் இப்படியான நிலையில்… தனிமையிலே கதைப்பார்கள்… தனிமையிலே சிரிப்பார்கள்… தன்பாட்டிலேயே துள்ளிக் குதிப்பார்கள்.… ஆனால்… இங்கே …. எல்லா வசதிகளும் உள்ள மருத்துவ வசதி மிக்க நாட்டில்… அவர்களைப்போல்தான் இவர்களுமா?; ஒரு நேரத்தில் எத்தனை பேர்! சனத்தொகை வீதத்தில்… எ…
-
- 6 replies
- 1k views
-