கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அதிகாரத் திமிர் ஒன்று அடங்கிப்போனதின்று-பா.உதயன் அதிகாரத் திமிர் ஒன்று இடிந்து விழுந்தது இலங்கைத் தீவில் இன்று இனவாதத்தின் இன்னும் ஒரு முகம் எரிந்து வீழ்ந்தது வீரம் பேசிய கோத்தா வீட்டுக்கு போய் விட்டார் தோல்வியை சுமந்தபடி பேரினவாதத்தின் போர் முகம் ஒன்று போன இடம் தெரியவில்லை சர்வாதிகார ஆட்சி ஒன்று சரிந்து விழுந்திருக்கிறது பசியோடு கிடந்தவனுக்கும் உரிமைக்காய் போராடியவனுக்கும் தொலைந்து போன மக்களுக்கும் நீதி கிடைத்தது போல் இருந்தது இன்றைய நாள் கூட நின்றவனுக்கும் கூடிக் குடிச்சவனுக்கும் முண்டு கொடுத்தவனுக்கும் போலிச் சோஷலிசக்காரனுக்கும் அபிவிருத்தி என்று அந்த மக்களை ஏமாத்தியவனுக்கும் திருடர்…
-
- 0 replies
- 380 views
-
-
தேநீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய …
-
- 0 replies
- 2.6k views
-
-
இன்னொரு அநாதை தமிழ்மொழி, பஹ்ரைன் பசியை போக்கிக்கொள்ளவே பழைய சோறு கேட்டு பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன். ஒரு சிலர் சுடச்சுட சோருபோடுவதாக வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர், உண்ட மயக்கத்தில் உறங்கினேன் என்று அன்று நினைத்தேன் ஆனால் இன்று தான் தெரிந்தது என் கர்ப்பை சூறையாட ஒரு பிடி சோற்றையும் ஒரு துளி மயக்கமருந்தையும் தியாகம் செய்த தியாகிகள் என்று. எது எப்படியோ என்னைப்போல் இன்னொரு அநாதை வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன. http://www.koodal.com/poem/tamil/kavithai.asp?id=1666&c=1&title=another-orphan&author=tamilmozhi-baharain
-
- 0 replies
- 1.6k views
-
-
தேவதையாய் நீ வந்த போதே நான் தெரிந்திருக்க வேண்டும் எனக்கு தெரியாமலே போய்விடுவாயென்று...♥
-
- 0 replies
- 614 views
-
-
உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள் இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு து…
-
- 0 replies
- 6.5k views
-
-
மீண்டும் அங்கே! - சத்தி சக்திதாசன் உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைகிறது என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைப்பது சோக கீதம் என் மண்! என் மக்கள்! என் மொழி! நான் மீண்டும் அங்கே போக வேண்டும் பாதைதான் தெரியவில்லை பயணம்தான் புரியவில்லை சென்று வந்த நண்பனவன் சொன்ன ஒரு செய்தியொன்று கல்லிலே எழுத்துப்போல இளமையில் கல்வி தந்த இனிமையான கல்விச்சாலை இடிபாடுகளுடன் இடர்படுகிறதாம்! நானுதித்து தவழ்ந்த அந்த நினைவகலா இல்லமது தாய்மடியின்றும் தாவி அன்று தவழ்ந்திருந்த முற்றமது மழைபோல வானிலிருந்து மதியற்ற வீணர் தம்மால் வீசப்பட்ட குண்டுகளினால் வளமிழந்து வாடுகின்றதாம்! வாசமிக்க முல்லைய…
-
- 0 replies
- 893 views
-
-
உடலிருந்தும் உறவிழந்து அழுகுதே தமிழினம் துயர் துடைக்க யார் வருவார் நீங்கள் இல்லையே தமிழன்னை காத்த மலை ஒன்று சரிந்ததே அன்று உலகத்தில் எம்மை உரைத்த பிறந்தாக வேண்டும் நீங்கள் இன்று !!! (முகநூல்) உலகமெங்கும் ஏற்றுக்கொண்ட ஈழ ராஜ தந்திரி உலகமெங்கும் தமிழரின் உரிமை சொன்ன மந்திரி தழு தழுத்த குரலோடு தர்மம் சொன்ன வாய்மொழி தலைவன் மீது அன்பு கொண்டு அனலில் நின்ற பெரும்புலி எம் தேசம் தந்த பெறுமதி எம் தேசத்தின் குரல் !!!
-
- 0 replies
- 551 views
-
-
கார்த்திகை-2020 – நிலாந்தன்… November 25, 2020 உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள் உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள் உன்னுடைய நண்பன் யாரிடம்சரணடைந்தானோ அவனிடமே வேலை செய்கிறான் விதைக்கப்பட்டயாரும் முளைக்கக் கூடாது என்று ஒவ்வொரு நாளும் கடவுளைப் பிரார்த்திக்கிறவன் உனது மக்களின் பிரதிநிதியாகி விட்டான் நிறைவேறாத கனவு நீ நீண்ட கடல் எல்லைகளின் சொந்தக்காரன் நீ எல்லாப்போகங்களிலும்விற்கப்படும்நினைவும் நீ எல்லா நீதிமன்றங்களிலும் அவமதிக்கப்படுகிறாய் ஈமத்தாழிஒன்றுதான் உனக்கிப்பொழுதுபாதுகாப்பான இடம் இல்லாத நடுகல்லின் மீது சிந்தும் சூடான துளிக்கண்ணீரில் இளைப்பாறு பீட்சாவுக்காகயாருமிங்கேபோர…
-
- 0 replies
- 488 views
-
-
அகழிகள் சுற்றிப் படர்ந்த கோட்டையின் மதில்களுக்கப்பால் சிம்மாசனத்தில் நீ! மானுட நேயமேதும் சுவாசத்தில் கலக்காமலிருக்க நரமாமிசம் தின்னும் முதலைகளை மிதக்கவிட்டிருகிறாய் எச்சரிக்கை முயற்சியாக... நானாய் இறங்கி மீனாய் மாறி நானாகவே கரையேறுகிறேன் நாக்கில் சொட்டும் நீரோடு பின் தொடருமவற்றின் பசி தீருமுன் வாயிலைத் திறந்துவிடு வாழ்க்கை என்பதன் அர்த்ததைக் கற்பித்துவிட்டு இரையாகிப் போகிறேன் என்றேனுமொரு நாள் தெளிவுற்ற நீ உப்பரிகையில் என்னை நினைத்து கண்ணீர் சிந்தலாம் வந்தேறிய நோக்கத்தை வரலாற்றில் வரவு வைத்துவிட்டு கூட்டுக்குள் உடல் சுருக்கிக் கொள்ளும் என் கவிதை! http://kayalsm.blogspot.fr/2012/11/blog-post_30.html
-
- 0 replies
- 366 views
-
-
தளபதிகள் தவறு செய்வதில்லை! அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும் உரிமைப் படுத்தப் படுகின்றன. அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும் சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும் அவர்களையே சாருகிறது. தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர். எனவே, அவர்கட்கு எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது. என்ற போதும், அதே தவறுகள், நாள் தவறாமல் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும் அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன. அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் தளபதிகள். தளபதிக…
-
- 0 replies
- 1.8k views
-
-
Tamil civilian lives are in your hands the Diaspora pleaded in desperation; To Canada, US, Britain, EU, Norway and the UN; had you heeded with compassion; Twenty to forty thousand need not have perished in one sweep without identification; From a cruel regime’s and its ally’s fire power, chemical weaponry and ammunition. You have to act fast before it’s too late we wailed and protested; Lay down on highways, burnt our bodies, fasted, begged and prayed; In a tiny sliver of land our people are holding out, we cried, To their last vestige of freedom and dignity, still brave but petrified. You would have prevented a HOLOCAUST from happening; If you did…
-
- 0 replies
- 977 views
-
-
நல்ல உச்சி வெய்யில்.. நடந்து வந்த கிழவிக்கோ பெரும் களைப்பு.... அங்கிருந்த திண்ணையில் ஓய்வாக அமர்கிறார்... பசி.... தாகம்.... அங்கும் இங்கும் பார்க்கிறார்.... கண் அயர்ந்து விட்டார். அப்போது அவ்வழியே வந்த மனிதர் அவரை இனம் கண்டு கொண்டார். பசி, தாகம்.... பார்த்தவுடன் புரிந்தது. பாட்டி.... எனது வீட்டுக்கு வாருங்கள்.... உண்டு களைப்பாறி செல்லலாம் என்கிறார். பாட்டியும் புறப்படுகிறார். அவனது மனைவியோ.... ஒரு அரக்கி.... அவனுக்கே சமைத்து உணவு கொடுக்க மாடடாள். இன்று இந்த கிழவி வேறா? நம்பிக்கையில் அழைத்துச் சென்றான். திண்ணையில் இருக்க வைத்து உள்ளே செல்கிறான். மனைவியை மகிழ வைத்து.... அதன் பின்னர் சமைக்க வைக்க வேண்டுமே... பெரும் பிரயத்த…
-
- 0 replies
- 6.5k views
-
-
வேலிப் பொந்தினில் பிறந்த நேசத்தில் கருக்கொண்டவள் வைக்கறைப் பொழுதினில் வைத்தியசாலையில் நன்கே பிறந்தவள். அழகு பெயரும் சூட்டி அடுக்குச் சட்டை போட்டு கொண்டாடிய பிறந்த நாட்கள் பல களிப்புறக் கண்டவள்..! தங்கத் தட்டினில் பல்லுக் கொழுக்கட்டை அவிச்சுக் கொட்ட இன்புற்றவள்.. மங்கையாய் பருவமடைந்த வேளையதில் பல்லக்கில் பவனி வந்தவள்..! அந்நிய நாடுகளில் அதிசய வாழ்க்கை தந்திட கண்கவர் கள்வர்கள் படையெடுத்த போதினில் அழகு கன்னியாக வீதி வலம் வந்தவள்..! தேசத் தாயவள் அவதி கண்டவள்.. நொடிப் பொழுதினில் உந்தித் தள்ளிய தேவையின் வேகத்தில் வேங்கையாகி பாய்ந்து நின்றவள். தாய் நிலம் தின்ற சிங்களப் பாசறை நொருக்கி வீழ்ந்தவள்.. மாவீரர் வரிசையில் நிமிர்ந்து நின்…
-
- 0 replies
- 591 views
-
-
காணாமல் போனதாகவே முடிவு கட்டிவிட்டார்கள் காணவில்லையென்று விளம்பரமும் கொடுத்து விட்டார்கள் (காணாமல் போக அவனென்ன ஆடா மாடா பாலுசார்) சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம் சும்மா இருந்தான் நிலவரம் மோசமென நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான் சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான் அதற்காக ஓய்ந்து விட்டானென்று அர்த்தமில்லை சரிந்து விட்டானென்று கருதி விட முடியாது அருகிப் போனாலும் காணமற்போவதில்லை புலிகள். விக்ரமாதித்யன் நம்பி (via fb) ‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச்
-
- 0 replies
- 558 views
-
-
விடுதலை போராளிகள் எதிரியின் சிம்ம சொப்பனங்கள் நம் தமிழீழ எல்லைகளில் எமை தாக்கவரும் எதிரியினை வீரம் எனும் வேல் கொண்டு வீழ்த்திடும் வேங்கைகள். சிந்தனையில் நம் விடுதலையும் சிரத்தினிலே எதிரியினை வீழ்த்தும் பொறிமுறையும் தம் கடமையென நினைத்து கண்ணியமாய் நடப்பவர்கள். துப்பாக்கி ரவைகள் இவர்களின் சொல் கேட்கும் குழந்தைகள் கிரனேட் குண்டுகள் இவர்கள் கைகோர்த்த நண்பர்கள் ஆர் பி ஜி குண்டுகளோ இவர்களின் அடியாட்கள் எதிரியை அழியென்றால் அழித்துவிடும் இவர் அனுப்பும் வெடியாட்கள் ! தமிழ் போராளிகள் ! இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் போரிட மட்டும்தான் - ஆம் எதிரி புற முதுகு காட்டி ஓடும் வரை அவர்களுடன் போரிட மட்டும் தான். துப்பாக்கி …
-
- 0 replies
- 781 views
-
-
ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை
-
- 0 replies
- 807 views
-
-
'' நான் யாவும் அறிந்தவன்'' நீச்சல் அறியாமல் நீந்த முணைகிறீர் பாவம் தம்பி கரையேற மாட்டீர்.... அலையின் வேகத்திற்கு அசைந்தாட வேண்டும் இல்லையேல் அமிழ்ந்திடுவாய்.... கற்று தர வந்தேன் கடிந்து கொண்டீர் பார்த்தீரோ இப்போ....?? ஆழ கடல் மீது அநாதையாய் காலூன்ற முடியாது கரையேற முடியாது திக்கு திசை தெரியா திசையொன்றில் நீர்.... அண்ட சமுத்திரத்தில் ஆடி வந்தவன் ''பாக்கு நீரினையில் பாய் போட்டு படுத்தவன்.....'' என்னையா எதிர்த்தீர்....?? ஏளனம் செய்தீர்... பார்த்தீரா இப்போ கரையேற முடியாமல் கங்கையில் தவிகின்றீர்... என்னை பகைத்தால் இதுவே நிலமை ''யான் யாவும் அறிந்தவன்..."" ( நானல்ல) -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 929 views
-
-
ஈழம் என்றொரு நாடு -தந்த தலைவனை இன்று நீ பாடு துள்ளியே வந்து தென்றலே ஆடு அள்ளியே வந்து புமாலை போடு.... புயலே வந்தொரு முரசதை கொட்டு புரட்சி நாயகன் புகழது பாடு அண்ணணிண் அகவை ஜம்பத்திரண்டு ஜயனே வாழணும் நீயே பல்லாண்டு..... செய்யணும் தமிழுக்கு நீயே தொண்டு நீயே எங்களின் நம்பிக்கை மன்று உரிமை போரதில் நீயே வென்று தரணும் ஈழத்தை நீயே ஈன்று.... அடிமை ஒழிந்தது தமிழன் நிமிந்தது உந்தன் ஜெனனத்திலே என்றும் நீ.. வாழிய..வாழியவே... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 795 views
-
-
[size=3] [size=4]கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.[/size] [size=4]ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.[/size] [size=4]காவியக்கவிஞனே![/size] [size=4]உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்[/size] [size=4]நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்[/size] [size=4]தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்[/size] [size=4]தங்கள் குணம…
-
- 0 replies
- 676 views
-
-
ஞாபகம் வந்த நாள்முதலாய் உன்னை எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது ஏனென்றும் எதகேன்றும் தெரியவில்லை எங்கள் நெஞ்சில் இந்தவலி எங்களின் வலி ஈழத்திற்கும் தெரியாது இவர்களின் காதலுக்கு எல்லையில்லை உன்கரம் புடிக்க இழந்தவை பல தரையில் தரைப்புலியாயை கடலில் கடற்புலியாயை வானில் வான்புலியாயை வருணிக்க வார்த்தையில்லை கரும்புலியாயை மண்ட மாவீரரும் மரணித்த மக்களும் போதும் போதும் ஈழமே எத்தனை எத்தனை வலிகள் எமக்குள் நாம் நேசித்த ஈழமே எம்மை நேசிக்க மறந்தாயோ
-
- 0 replies
- 809 views
-
-
தமிழீழத்தை காதல் செய்து ஈகத்தால் உயர்ந்துவிட்ட ஈகியரை வணங்குதற்காய் வருகின்ற நாட்களிலே அவர் விட்டுச் சென்ற கடமைக்காய் நாமெல்லாம் கரம்கோர்த்து ஒன்றானால் தமிழீழ மண் விடியும் தரணியெங்கும் கொடி பறக்கும் தமிழினத்தின் தலை நிமிரும் தமிழரது தாகமென்ற தாயகத்தைக் காத்து நின்ற தாயகத்து நாயகரை வணக்குமிந்தக் காலத்திலே ஓரணியாய் ஒன்றிணைந்தே வாருங்கள் அணி அணியாய் ஓடிடுவான் எதிரியவன் ஒன்றிணைந்தே சேருங்கள்!
-
- 0 replies
- 559 views
-
-
மண்ணுக்கு வித்தாகிப் போன மாவீரர்களே! விண்ணிலும் கடலிலும் காற்றிலும் நெருப்பிலும் கரைந்து போன புலி வீரர்களே! இன்று மாவீரர் நினைவு நாள்! ஒரு கணம் கண்திறந்து எம்மைப் பாருங்கள்! பெற்ற தாய்தனை சேய் மறந்தாலும் சேய் தனைத் தாய் மறந்தாலும் உற்ற உடலை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்ணை இமை காக்க மறந்தாலும் பிறந்த மண்ணின் விடுதலைக்காய் தங்கள் தங்க நிற மேனியை விடுதலை வேள்வியில் ஆகுதி யாக்கிய எங்கள் மாவீரர்களை கைதொழ மறப்போமா? தங்கள் இளமைக் கனவுகளை தொலைத்து மண்ணின் விடுதலையை நெஞ்சிலே சுமந்து தங்கள் குருதியால் தமிழ்மண்ணைச் சிவப்பாக்கி மண்ணின் வ…
-
- 0 replies
- 452 views
-
-
அடிக்கடி நீ இமைசிமிட்டுவதால் என் விழிகள் வலிக்கிறது விம்பம் தெரியாத கண்ணாடியில் உன் உருவம் ஓடி மறைகிறது ஒரு நொடி உன்னைப் பாராவிட்டால் மறுநொடியே என்னுள் ஆயிரம் கனவுகள் படர்கிறது...
-
- 0 replies
- 583 views
-
-
ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் அன்னையை ....நினைக…
-
- 0 replies
- 4.3k views
-