கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கடலம்மா கடலம்மா கருணை கொண்ட தாயம்மா அலை மடி மீது தாலாட்டி அமுதூட்டிச் சீராட்டி வளர்த்திட்ட சேயும் நானம்மா…! முடிவில்லாப் பயணங்கள் உன் மடிமீது நாம் செய்தோம் அளவில்லாப் பொறுமை தந்து அருள்பவளும் நீயம்மா…! ஆதிக்க வெறியர்கள் அடுக்கடுக்காய் குண்டுதள்ள உன் வயிற்றில் அவை தாங்கிக் காத்தவளும் நீயம்மா..! அமைதியின் கோலமாய் சீரான அலை கொண்டு கரையோடு மோதுபவளே அழிவில்லா அழகு தந்து அகம் மகிழ அழைப்பவளே அழிவுக்கு வகை செய்ய ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா…! இன்று…. கணமும் எங்கள் தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த ஏக்கத்தின் முதலாய் நீயம்மா…! உறவுகளின் உயிர் குடித்த பூதத்தின் விளை நிலமாய் ஆகினையே ஏனம்மா…?! மடி தாங்கிய மகவுகளின் மகத்தான் உயிர் குடித்து சாதிக்க நினைத்ததுவும…
-
- 5 replies
- 533 views
-
-
உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாடிய இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் வீடு; நாங்கள் பிறந்து கத்திய போது அதன் அழுகையை துடைத்து சிரிப்பாக்கிய சுற்றம் சீவ சீவ பச்சைபிடித்த பசுமை உயிர் வார்த்த பூமியென - அனைத்தையும் பயந்து பயந்து தொலைத்த அனாதைகள்; தெரு தாண்டி தெரு தாண்டி நாடுகளை கடந்துநின்று தன் நாடுவேண்டி நிற்கையில் …
-
- 0 replies
- 533 views
-
-
Windows வழியே பார்வை Walls இன் மேலால் பேச்சு உன் கண்கள் எனும் Icons Double click இல் திறக்கும் என் மன file. Snail-mail எனும் கடிதம் Encryption பலவும் கொண்டு Firewalls சிலதைத் தாண்டி அடையும் என்னவள் Inbox இதயம் எனும் Hard-Drive இல் Hidden-File போல் அழியாமல் அப்பப்போ pop-up செய்யும் Dynamic web-Page முதற்காதல்
-
- 1 reply
- 533 views
-
-
இரவல் மொழியில் பெருமை பேசி இழந்த உண்மை இன்பம் கோடி கோடி இரைந்து கத்தும் காகத்தை போன்று இல்லாமையில் பெருமை தேடும் பலர் இங்கே தட்டி தமிழ் மகான்கள் சொன்னப் போது தாழ்மையுடன் உணர்ந்தோம் நம் பெரும் பிழையை தாயாய் காக்கும் நம் தமிழ் மொழியை தரணி எங்கும் வாழ்த்த வழி செய்வோம் வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்கொண்டு வெள்ளையர் வாழ்வு சீர் என நினைத்தும் ஏன் ? வெளிர் நிறத்தில் உள்ள அழகும் நிலையில்லையே …
-
- 1 reply
- 531 views
-
-
அழகாகச் செதுக்கிய சிற்பங்களை உடைத்தெறிந்து ஆனந்தங்கொள்ளும் அணங்குகளிற்கு... தெறித்துக் கிடக்கும் சிற்பப் பிணங்களின் ஊமை அழுகுரல்கள் கேட்பதில்லை! சிற்பத்தை சீரெடுத்த உளிகளின் வலிகளும்... கலைஞனின் கதறல்களும்... எப்பொழுதும் புரிவதில்லை! உடைந்துபோன சிற்பச் சிதறல்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து, ஒட்டவைத்து மீண்டும் உயிர்கொடுக்கும் ஆசையுடன், காணாமற்போன ஒருதுண்டை... இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றான் குருட்டுச் சிற்பி! கூர்மையான விழிகளுடன் காத்துக்கிடக்கின்றன உளிகள்... புதிதாய் ஒரு சிற்பம் வடிக்க...!
-
- 3 replies
- 531 views
-
-
வெள்ளைக் கூடுகள்.... கவிதை - இளங்கவி... இறுதியாக எங்கள் மனிதப் படுகொலைகள் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்கும் காகமும் குஞ்ச்சுகளும் பேசுவதாக ஓர் கற்பனை.... நம் புதுவீடு வெள்ளையாய் பளிச்சென்று இருக்கம்மா...! வெள்ளைமரக் குச்சிகள் இங்கே புதிதாகக் கண்டாயா....? இல்லையடா செல்லம்... இது இங்கே மரணிடத்த மனிதர்களின் எலும்பச் சிதறல்கள்.... மழையுடன் புயலும் தாங்கும் மாமிசச் சிதறல்கள்.... நாம் வானத்தில் பறந்ததால் ஓர் வழியாகத் தப்பித்தோம்... இவரோ பூமியில் வாழ்ந்ததால் புதைகுழியில் சிதறிக் கொண்டார்.... அவர் எலும்புச் சிதறல்களில் உமக்கு அழகாய் வீடமைத்தேன்... அவர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் விளையாட வழியமைத்தேன்... சரி..சரி சிங்க…
-
- 0 replies
- 531 views
-
-
[size=4]“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா”[/size] [size=4]“நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?”[/size] [size=4]“மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…”[/size] [size=4]“ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்..[/size] [size=4]எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை..[/size] [size=4]மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் மனசும் உடம்பும்..[/size] [size=4]மரமெல்லாம் பூக்கும் பூக்களும் துளிர்க்கும் இலையும் வருடந்தோறும் உதிர்ந்துப்போகையில் தனித்து விடப்பட்ட வெற்றுமரத்தின் கிளைகளாக வல…
-
- 2 replies
- 530 views
-
-
சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும் ஐந்து முட்கள் கண்களில் குத்திக்கொண்டிருந்தன அது கனவு தான் அவை சில நாட்களாக திரும்பத்திரும்ப என் பார்வையில் பட்ட காயங்களின் எண்ணிக்கைகளாயிருக்கலாம். அவன் தம்பியைப் போலிருந்ததாகவும் மகனைப் போலிருந்ததாயும் அயலானைப் போலுமென எண்ணிக்கலங்குகின்றனர் முகப்புத்தக நண்பர்கள். எனக்கும் அவனைப் போல மகன் . பன்னிருவயதுக் குழந்தை சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும் பாசிசத்தின் நிழலும் புகைப்படத்தில். சரணடையும் குழந்தைகளின் சாவிற்கான குறியீடாக யுத்த நியாயத்துக்கான கேள்வி அவன் பிணம். தொலைக்காட்சிச் செய்திகளில் முந்த நாள் ஆந்திராவில் நேற்று பாகிஸ்தானில் இன்று சிரியாவிலென்று நாளாந்தம் இரத்தங்கள், காயங்கள், மரணங்கள். கண்களைத் திருப்பி…
-
- 0 replies
- 529 views
-
-
நண்பியின் டயரியில் இருந்து ...... நான் காதலித்த போது ..அம்மா படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.(அப்போதும் காதல் தொடர்ந்தது ) படித்து முடித்து பணிக்கு சேர்ந்த போது சிக்கனமாய் செலவு செய் என்றார்.சில காலம் செல்ல திருமணத்துக்கு தயாராகு பையனை பார்க்கிறோம் என்றனர். அப்போதும் காதல் தொடர்ந்தது . முடியாது நான் காதலித்தவனையே செய்து கொள்வேன் என்றேன். எமது தகுதிக்கு அவன் சரியில்லை என்றனர். பதிவு திருமணம் செய்யப்போகிறேன் என்றேன்.எங்கள்வீட்டுக்கு வராதே என்றனர். அப்போதும் அவன் என்னைக் காதலித்தான். திருமணம் முடிந்தது யாரும் வரவில்லை ...காலம் ஓடியது ...முதல்குழந்தைக்கு தாயானேன். அம்மா ரகசியமாய் வந்து பார்த்தாள். வங்கிக்கு போய் வரும் வழியில் கண்ட அப்பா நல்லா இ…
-
- 2 replies
- 527 views
- 1 follower
-
-
மூடிய சிறையில் கவிதை - இளங்கவி....... குடிசைக்குள் ஓர் கூடல்..... கொஞ்சும் நிலவின் ஒளியின் கீழ் மனதால் கூடி நிற்கும் ஓர் காதல்...... அவன் அடிக்கும் செல் இங்கேயும் வரப்போது இந்த நேரத்தில் இது தேவையா.... உனக்கு இப்போ இப்படியொரு ஆசையா..... அவன் தொடுதலில் கிறங்கி அவள் உதடுகள் புலம்ப....... அவள் புலம்பலில் மயங்கி அவன் உணர்வெல்லாம் மழுங்க...... சில்லென்ற குளிர் தாங்கும் சுகமான தென்றல்...... இருள் வானின் நட்சத்திரம்...... ஒளிந்து பார்க்கும் பிறை நிலவு.... ஆட்காட்டிச் குருவியின் ஆள் காட்டும் ஒலியோசை..... ஊளையிடும் நரியோசை... வியர்வையில் ஒட்டிய மேலாடை.... அதை ஓரங்கட்டும் அவனின் இரு கைகள்..... களி மண் தரையிலே …
-
- 0 replies
- 527 views
-
-
-உமா- ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது. இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன. …
-
- 0 replies
- 526 views
-
-
நான் பங்குபற்றிய , சிங்களவருடன் மோதி தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கணத்தில , சிறந்த வீரன் ஒருவனால் ஏற்பட்ட எதிர்பாராத முடிவால் வியந்த ஒரு யுத்தம் பற்றிய கதைதான் இது... இது நடந்தது கிபி2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம்... எங்கட கொம்ப்யூட்டர் லாப் இல... கோபப்படாதீங்க... ஒரு உண்மைச்சம்பவத்த அடிப்படயா வச்சு சாத்தியமான ஒரு முடிவத்தான் சொல்லவாறன்... அதுக்காக இத வாசிச்சு ஓவரா எதிர்பார்ப்ப கிறியேட் பண்ணிடாதீங்க... எங்கும் மரண ஓலம்.... வெட்ட ப்பட்டு வீழந்த தலைகள் குதிரைகளின் குளம்புகளில் அகப்பட்டு நொருங்கும் ஓசையும் கேடயங்களில் வாள்கள்மோதித்தெறிக்கும் ஓசையும் கலந்து நாலாபக்கமும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.. . விழ விழ அலை அலையென வந்து கொண்டிருந்த குதிரைப்படைகள் எதிரி மா…
-
- 0 replies
- 526 views
-
-
இருட்டில் வாழ்கிறோம் ..........ஆனால் விடியும் திசை தூரமோ தூரம்......... அதுவரை மனம் தளராமல் பயணிப்போம் ............... விடியலின் தோற்றங்கள் கண்களுக்கு புலப்பட தெரிந்துவிட்டது ................. .ஆகவே விடிந்து விடும் என்று நாம் குந்தியிருக்காமல் .......... தொடர்ந்து பயணிப்போம் முழுமையான விடிவை நோக்கி ................ ஏனனில் எம்மை நோக்கி விடிவு வராது ..............நாம்தான் விடிவை நோக்கி செல்லவேண்டும் ............. நாம் வைக்கும் காலடிகளின் ஒவ்வொரு வேகத்திலேயுமே ........எம் விடிவின் வேகம் தீர்மானிக்கப்படுகிறது .... ஒளிர்ந்த முகத்துடன் ,மலர்ந்த முகத்துடன் ........ஆதவன் எம்மை வரவேற்க ........காத்திருக்கிறான் ..
-
- 2 replies
- 526 views
-
-
நெஞ்சில் உறுதிகொண்ட நேரிய பாவை அஞ்சி ஒழியாத அறிவாற்றல் கோவை வஞ்சி என அழைப்பேன் நான்மட்டும் முறைத்து முறுவல் தந்து மறைவாள்! தழும்பாத நடை தணலான குறி கொண்ட நேரான வழி இதுவே அவள்.
-
- 1 reply
- 524 views
-
-
கிழிந்த சட்டையுடன் துணிக்கடைக்கு போனேன்....! ஒரு சட்டையை காட்டியவன் மற்றொன்றை காட்ட மேலும்,கீழும் பார்த்தான்..! பட்டு சட்டை போட்டவன் கைக்குட்டை கேட்டான் மலைபோல் குவித்து காட்டினான் அவனுக்கு...! நான் எடுத்து வந்தேன் அவன் மறுத்து சென்றான்...! -வேடந்தாங்கல் http://www.ilankathir.com/?p=6291
-
- 0 replies
- 524 views
-
-
[size=3] [/size] [size=3]நீங்கள் சே குவாராவின் பிள்ளைகள். முத்தங்களுடம் உங்களை பிரிகிறேன், உங்கள் அன்பு அப்பா சே குவாரா (1965)[/size] [size=2]தன் குழந்தைகளுக்கு எழுதப்பட்ட[/size][size=3] [size=2]தோழர் சே குவாரவின் இறுதி கடிதம்...!"[/size] [size=2]"அன்புள்ள [/size] [size=2]இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ [/size][/size][size=2] ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள், உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன், நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம், குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் ந…
-
- 0 replies
- 524 views
-
-
அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூலேணி பிடித்தேறிய காலங்கள் பொற்காலமல்லவோ உமக்கு ? வலுத்தவர் மகிழ…
-
- 0 replies
- 524 views
-
-
சிரிப்பு வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவ…
-
- 0 replies
- 523 views
-
-
அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என…
-
- 0 replies
- 523 views
-
-
உயிரானவளே ....!!! உன்னை சந்தித்ததிலிருந்து ... தனிமையை இழந்தேன் ... இனிமையாய் வாழ்ந்தேன் ... என் இதயத்தில் காதலே ... சுவாசமாய் இருந்தது .....!!! என்னவளே ...!!! எங்கே சென்றாய் ....? அத்தனையையும் இழந்து விட்டேன் ... உயிரை தவிர இழப்பதற்கு ... என்னிடம் ஒன்றுமில்லை ... சொல்வதெல்லாம் உண்மை ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
-
- 5 replies
- 523 views
-
-
வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி... மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே, காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்.. என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள், வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் , பசித்து ஒட்டிய வயிறுகள்!!! மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது... பணம் பந்தியில் இருக்காது! "காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!
-
- 0 replies
- 522 views
-
-
[size=5]கார்த்திகை நாயகரே கைதொழுகின்றோம்[/size] கோரங்கள் கண்டு கொதித்து விடுதலைக் கொள்கைக்காகவே துடித்து வீட்டினை உறவினை மறந்து விடுதலை மண்காக்க விரைந்து நேரிய எம் தலைவன் பாதையில் நிமிர்ந்து களமாடி விழி தமூடி மண்மாதா மடிமீது துயில்கொள்ளும் கார்த்திகை நாயகரே – உமை கண்ணிலொற்றுகின்றோம் கைதொழுகின்றோம் - தூய தீபம் ஏற்றியே வணங்குகின்றோம்… கார்த்திகை மாதமது எம்மூரில் கனத்த மழை பொழியும் நீர் நிரம்பி நிலமெல்லாம் மெதுமையாய்த் தானிருக்கும்… பூச்சொரியும் மரங்களெல்லாம் புன்னகைத்துக் காத்திருக்கும் காற்று வந்து காதோரம் மாவீரரர் கதைபேசும்… ஆர்ப்பரிக்கும் அலைவந்து நுரை நுரையாய் தானிரைக்கும் நேற்றிருந்த வீரர் நினைவு தனைச்சுமந்து …
-
- 2 replies
- 522 views
-
-
உயிருடன் இறந்து விட்டேன் ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!!sms கவிதை ///////சின்ன சின்ன வலி வார்த்தைகள் பழகிவிட்டேன் வலியை தாங்க sms கவிதை சந்தோசம் நீ நினைக்கும் இடத்தில் இல்லை..நீ இருக்கும் இடத்தில் உண்டும் +sms கவிதை காதல்எல்லோருக்கும் வரும்எனக்கு போய்விட்டது +sms கவிதை பூக்கள் வாசனைக்காக பூக்கவில்லை தன் வாழ்க்கைக்காக பூக்கிறது - காதலும் அப்படித்தான் ....!!!+sms கவிதை நீ காதலிக்காதுவிட்டாலும் எனக்குகாதல் வந்திருக்கும்உன்னை பற்றிய கவிதை ...!!!+sms கவிதை கவிதைக்கு கற்பனை.....வேண்டும் -உன்னை....நினைத்தால் கற்பனை.....வரமுன் கண்ணீர் ....வருகிறது ....!!!+sms கவிதை
-
- 0 replies
- 522 views
-
-
சிவனே.! கண் திறவாய்.!! - கவிஞர் நகுலேசன். குருந்த மலை ஆதி சிவனும் காணமல் போனார்.. தேடிப்போனவர் நமச்சிவாய சிவநாமம் உச்சரிக்கவும் தடையென்றானது… வாழும் வழிபாட்டு மரபுரிமையை நாளும் தின்னும் காட்டாட்சி சாது சாது என்றபடி சகல இடமும் விரிவாகும்.. சிவன் பெயரால் சீவியம் நடத்தும் சீவன்களும் சாமரம் வீச இன்று.. தையிட்டியில் இராணுவ புத்தரின் அதிகார அத்திவார தோண்டுதல் நடக்கும்.. கண் மூடியிருந்தால் சிவபூமியாவும் காணாமல் போகும் சிவனே.! கண் திறவாய்.!! சிவனடியர்களே ! விழித்தெழுவீர் !! https://vanakkamlondon.com/literature/2021/01/100588/
-
- 0 replies
- 521 views
-
-
மின்னல்கள் கூத்தாடுதே உன்விழிகள் பார்த்து மேகங்கள் மழை தூவுதே உன் அழகை பார்த்து விட்டு விட்டு தூறும் மழையே கொஞ்சம் நில்லாயோ நெஞ்சை தொட்டு போகும் பெண்ணின் முகவரி சொல்லாயோ மேகங்கள் கொண்டு வானம் மழை பொழிகிறது மேகத்தில் நின்று மின்னல் ஒளி தெறிக்கிறது மழை போல் நீ வருவாயோ மண் போல் நான் ஏங்குகிறேன் வானத்தின் தூரத்தில் உன்னை நான் தேடுகின்றேன். http://www.youtube.com/watch?v=113R1IanoMo
-
- 4 replies
- 520 views
-