கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்பெனப்படுவது யாதெனில்.... 3 ஆகஸ்டு 2014 இல் 11:53 AM தவறுகளைத் தைரியமாய்த் தவறென்று சுட்டிக் காட்டி அறிவைச் சுற்றிக் காட்டித் தட்டிக் கொடுக்கும், பெரிதாக ஒன்றுமே செய்யாமலே அரிதான விருது கொடுப்பது போலப் புகழும் , மூச்சு விட்டு முன்னுக்கு வர முன்னுதாரணம் காட்டிப் போட்டு பேச்சு மூச்சின்றி அடக்கமாக பின்னுக்கு நிற்கும், தெரிந்த நாலு தகவலை என் போலத் தெரியாத நாலு பேருக்கு தெளிவாகத் தெளித்துக் கொண்டிருக்கும்.. முன்னர் முதுகு சொரிஞ்சு விட்ட நன்றியாக பின்னர் முதுகுக்குப் பின்னால் சொறிந்துவிடும், தேவைக்கு மட்டுமே சாம்பிராணி போட்டு ஒரு சாதாரண பிராணியை அசாதாரண அப்பிராணியாக்கும், …
-
- 1 reply
- 1.1k views
-
-
கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள் ------------------------------------------------------------------ அவர்கள் நித்திரை கொண்டு கொண்டிருந்த சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும் ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர் இறக்கும் போது அக் குழந்தைகள் எதை கனவு கொண்டு இருந்திருக்கும்.. வெடிகுண்டு சத்தம் கேட்காத ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு தாயின் மடியில் தலை வைத்தும் அப்பாவின் மடியில் கால் நீட்டியும் படுப்பதாய் கனவு கொண்டிருக்கும் ஒரு சின்ன பொம்மையுடன் கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும் தங்கள் வளர்ப்பு நாயின் குட்டிகள் மழையில் நனைந்துடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்ந்திருக்கும் தெருவில் தொலை தூரத்தில் வரும் ஐஸ் கிறீம் காரனின் பாம் பாம் …
-
- 12 replies
- 1.3k views
-
-
எதிர்கொள்ளமுடியாத நடுக்கமொன்றை சிலிர்ப்பால் கடத்தியது வாசலில் கூடுமுடைந்து அடைந்துகிடந்த தாய்ப்புறா. வீடும், நாளைய தன் குஞ்சுகளும் நினைவுகளில் நீண்டிருக்கும்... மரம் தேடி நிலைகொள்ளுமொரு கிளை பார்த்து சிறுசுள்ளி வளைத்து, துணைகூடி வீடமைத்து இயல்பான வாழ்வென்று இணைபுணர்ந்த நேற்றையை நினைத்திருக்கும். துயர் வரமுன் துணை வருமோ என்று தவித்திருக்கும் இறகுகோதி இயல்பாய் இருப்பதாய் நடிக்கலாம் என்றும் எண்ணமிட்டிருக்கும். எல்லாம் கடந்தும் அதன் நினைவுகளில், நான் வளரத்தொடங்கியிருப்பேன் ஒரு இரைதேடும் பூனையாக பாம்பாக குறைந்த பட்சம் ஒரு நாயாகக்கூட... காலத்தை மீறியொரு பெருங்கனவு அதன் விழிகளில் நிறைந்து வழியத்தொடங்கியது நான் மூழ்கத்தொடங்கினேன். நினைவு…
-
- 2 replies
- 687 views
-
-
இருண்டகாலத்தின் பதுங்குழி சொங்களற்றவர்களின் அசையா முகங்களில் சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள் இரவுக்கும் பகலுக்கும் இடையில் மாபெரும் யுத்தப்படை ஒன்று என் கிராமத்தை கடந்து போயிருக்கையில் காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை சாட்சிகளற்றவர்களின் நிலத்தில் கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை மீண்டுமொரு இருண்ட காலத்தில் பதுங்குகின்றனர் குழந்தைகள் வானத்தில் விமானங்கள் இல்லை எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை வானத்தையும் திசைகளையும் கண்டு அஞ்சுகின்றன குழந்தைகள் இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் எதுவும் இல்லை விமானங்களும் இல்லை போர்க்களங்களைத் துறந்துவிட்டோம் பாசறைகள் யாவற்றையும் மூடிவ…
-
- 1 reply
- 586 views
-
-
சில சமயங்களில்… நான் ஆசைப்படுவதுண்டு… என் அப்பாவைக் கொன்று எங்கள் வீட்டைத் தரைமட்டமாக்கி குறுகலானதொரு நிலத்துக்குள் என்னை விரட்டிய அந்த மனிதனை ஒரு துவந்த யுத்தத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமென்று சில நேரங்களில் நான் ஆசைப்படுவதுண்டு. அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிடுவான் எனில் நான் ஒருவழியாக நிரந்தர அமைதியில் ஆழ்ந்துவிடுவேன்… இல்லையெனில், அவனைப் பழிவாங்கத் தயாராகிவிடுவேன். • ஆனால், துவந்த யுத்தத்தில் என்னுடைய எதிரியை எதிர்கொள்ளும்போது அவனுக்காக வீட்டில் அவனுடைய அம்மா காத்துக்கொண்டிருப்பாள் என்பதோ, குறித்த நேரத்தில் வராமல் கால்மணி நேரம் தாமதித்தாலும், தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கும் தந்தை ஒருவர் இருப்பார் என்பதோ எனக்குப் புலப்பட்…
-
- 1 reply
- 589 views
-
-
புயல் சுழன்றடித்த பெருந்தீவின் மாயான அமைதியில் சலனமில்லா ஊர்களின் நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில் வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் முன்பொரு காலத்தில் எந்நேரமும் விளையாட்டு சாமான்கள் விழுந்துடையும் சத்தங்களும் விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும் கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும் நினைவின் தொகுப்பாய் எஞ்சிய ஒற்றை நிழற்படம் முன் சிறுபிள்ளை பிரார்த்தனை முனுமுனுப்புகளுமிருந்தன இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன துயரிரவின் பேரமைதியில் ஊமைநிலத்தில் ஊடுருவிய புத்தரின் நிலைகுத்திய காந்த விழிகளுக்கப்பால் 'புயலின் சூன்யத்தை, கோர பசியை, தீரா உயிர்வேட்கையை, மாளா குரூரத்தை, அழிவின் ஆரோகணத்தை, ஏதொவொரு பிணத்தை புண…
-
- 15 replies
- 1.2k views
-
-
திருவிழாக்கு வந்த ஒரு தேவதைதான் அவளா...? தாவணிக்குள் புகுந்துகொண்ட செந் தாமரை மலரா...? கால்முளைத்து நடந்துவரும் மின்னும் தங்கத் தேரா...? என் இளமை வெல்லத் திட்டமிடும் மன்மதனின் போரா...? படையெடுக்கும் அவளழகால்... என்னை வெல்லுவாள் ! உடையுடுத்த முழுநிலவே... மண் வந்த சேதி சொல்லுவாள் !! சிறுகுழந்தைப் புன்னகையால்... என் மனதை அள்ளுவாள் ! தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !! அவள் வதனம் பார்த்து நாணி... பூக்களும் தலையைக் கவிழ்க்கும் ! தென்றல் கூட கயிறு திரித்து... அவளைக் கட்டி இழுக்கும் !! முன்றல் நிறைந்த கண்களெல்லாம்... அவள் பக்கம் குத்தி நிலைக்கும் ! மன்றம் வந்து ஆடும் அழகாய்... அவள் கூந்தல் காற்றில் மிதக்கும் !! நீலவா…
-
- 5 replies
- 1.1k views
-
-
எல்லா இடங்களிலிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் நகரங்கள், பள்ளிகள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் எல்லா இடங்களிலும் போர்களை நடத்துகின்றனர் குழந்தைகளை கொல்கின்றனர் சிறுவர்களை கொல்கின்றனர் பிறக்க இருக்கும் சிசுக்களைக் கொல்கின்றனர் குழந்தைகளின் தாய்மார்களை கொல்கின்றனர் கதறும் அப்பாக்களை கொல்கின்றனர் ஓடி ஒழியும் அப்பாவிகளைக் கொல்கின்றனர் அவர்கள் கூடிக் கூடிக் கதைக்கின்றனர் போர்களை நிறுத்துவதற்கு கூடுகின்றனர் பின் மீண்டும் போர்களை எப்படி திறமையாக நடத்துவது என்று கதைக்கின்றனர் போரால் சிதையும் மனிதர்கள் பற்றி கதைக்கின்றனர் பின் சிதையாது மிச்சமிருப்பவர்களை கொல்வது எப்படி என்று கதைக்கின்றனர் ஒருவர் இறப்பத…
-
- 13 replies
- 1.1k views
-
-
நா பிளந்து உமிழ்நீர் வறண்டு செல்லரித்து மூச்சடங்கிபோன எங்கள் குரல்வளைகளில் ஆழ்துளைக் குழாய் பதிந்து எதை தேடுகிறீர்? விடுதலை ஒன்றையே நேசித்து கந்தக காற்றை சுவாசித்து நெடியேறி வெடிக்கத் துடிக்கும் நுரையிரலை கவனமாக கையாளுங்கள்... போரியல் நெறியும் வாழ்வியல் பண்பும் வகுத்த தலைவன் வழிவந்த இதயத்தை மாற்றியும் அறுவைசிகிச்சை செய்து விடாதீர் ஞானம் பிறந்துவிடும் புத்தருக்கு... இன்னும் கிடைக்கவில்லையா தேடும் பொருள்? காத்திருத்தலையும் உடனடி கீழ்படிதலையும் கற்பிக்கும் பசியை துறந்து காடுகளில் அலைந்து திரிந்து சிறுகுடலாய் போன பெருங்குடல் உங்கள் கறிக்கு உதவாது.... இன்னும் சில பாகங்கள் காத்திருக்கின்றன நகங்களில் கிழிபட... ஈழ…
-
- 5 replies
- 904 views
-
-
ஒற்றை சொற்களாய் உதிர்த்து வானத்தை நிரப்பிய பின், உன் துயரம் தோய்ந்த நாக்கு என் தனிமையை தின்னத்தொடங்குகிறது. இரவின் நீட்சியும் வியர்வை நாற்றமும் பிசுபிசுப்பின் அந்தரிப்பும் மோகனத் தவம் கலைக்காமல் சாய்ந்தெழும் பெருமூச்சும் அவசத்துடன் பகிரப்படுகையில் யாருக்கும் கேளாமல் நீ சிந்திய ஓலமொன்று நட்சத்திரங்களை விழுத்தியது. நிராகரிக்கமுடியாத முத்தத்தை அவமானத்துடனும், கண்ணீருடனும் அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று நினைவுகளில் விரிகையில், சொற்கள் வறண்டு ஆவியாகிப் போகிறது, கதவுகள் மூடிய கண்ணீர்வளையத்தின் மறைவில் என்னைத் துகிலுரியத் தொடங்குகிறேன் உனக்குப் பரிசளிக்க. வானத்தை நிரப்பிய உன் சொற்கள் என் தனிமையை தின்று நட்சத்திரங்களாய் பூக்கின்றன
-
- 5 replies
- 987 views
-
-
ஆமணக்கும் நெருஞ்சியும் பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக அரசமரங்கள் எழில் கொள்கின்றது, மின்குமிழ்களின் பின்னும் தொலைபேசிக் கோபுர அடிகளிலும் தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும் யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று.. வீதிகளும் விளம்பரத்தட்டிகளும் விடுதிகளும் வங்கிகளும் வடுக்களின் மேல் வர்ணம் பூசிப்போக, அடிப்பிளவுகளில் உயிரடங்கி வெதும்பிக் கிடக்கிறது தலைமுறைக்கனவு கிராமத்து முனைகளில், சுடுகுழல்களில் ஒளிந்திருக்கும் குறிகள் விரகம் தீர்க்கும் வன்மத்துடன் அலைகின்றன. நகரத்து ஒழுங்கைகளில் தேரவாத காவிகள் தம்மபததின் பக்கத்தில் இனவாதத்தை எழுதி ஓதுகின்றனர். அதிகாரங்களும் அடையாளங்களும். நிர்வாணிகள் மீது குறிகளைப் புதைத்துவிட…
-
- 2 replies
- 595 views
-
-
எருக்களை வாசமும் .. எருமையின் சத்தமும் .. பாதை கடந்து போகையில் .. கூடவரும் நாயுருவியும் ... கால்களை கண்டவுடன் .. வெட்கப்படும் தொட்டா சிணுங்கியும் .. மெதுவாக குற்றி கூடவரும் .. நெருஞ்சி முள்ளும் .. ஆற்றுப்படுக்கையில் கோலம் போடும் .. மணலின் ஜாலத்தை குழப்பி .. நடக்கும் கால்களின் அடியில் .. சிதைந்து கிடக்கும் நத்தை ஓடும் .. எட்டி பிடித்து ஏறுவதுக்கு .. கைகள் பற்றி பிடிக்கும் வீரை மரவேர் .. சரசரக்கும் சருகு இலைகள் .. அதுக்குள் வசிக்கும் சாரைப்பாம்பு .. என் காலடி சத்தத்தில் எழுந்து ஓடும் .. பெருச்சாளியும் ..சிறு பூச்சியும் ... நிசப்த்தம் கலைத்து விழிக்கும் .. சிறுவான் குரங்கு கூட்டமும் .. காட்டி கொடுக்காது அமைதி .. காக்கும் ஆள்காட்டி பறவையும் .. கூடவே வரும் என் நிழல் .. என் …
-
- 10 replies
- 1.9k views
-
-
குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன் பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடியவில்லை எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை சூழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை ஈற்றில் வழங்கியிருக்கிறோம் ஆண்குறிகளை அடையாளம் காட்டுமொரு காலத்தை. 0 …
-
- 1 reply
- 948 views
-
-
பதக்கடச் சாக்கு... பட்டுச் சேல பள பளக்க.. பொட்டிக்குள்ள கம கமக்க - புள்ள புரிசனுக்கு - நீயும் சோறு கறியா கொண்டு போறாய்...? வெயில்ல ஒம்புரிசன் புழுங்கிப் புழுங்கி நிப்பாருண்டு குலுங்கிக் குலுங்கி நீயும் ஓடோடிப் போறாய் போல... சும்மாடு பிரியிற அளவுக்கு - நீயென்ன கோழிக் கறியா கொண்டு போவாய்...? ஆசக்கி அறுத்தாப்புக் கெழங்கும் பொட்டியான் பொரியலுந்தானே..! பொச்சாப்பொல - நீயும் பொரிச்சிக் கொண்டு போவாய்... மாட்டின் சேட்டையிம் மருதமுனச் சாறனையிம் மடிச்சி மச்சான் பொரயில போட்டுப்பொட்டு வீடியும் வாயுமா மம்பட்டியும் கையுமா வெம்பி வெம்பி நிப்பாருண்டு தேம்பித் தேம்பிப் போறாய் போல... புது மாப்புள புறு புறுப்பாருண்டு புசு புசுன சமச்செடுத்து ச…
-
- 6 replies
- 2k views
-
-
பாரதியே! உனக்கு பெண் சுதந்திரத்தில் நம்ம்பிக்கை இல்லை போலும்! 'புதுமைப் பெண் ' படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் ! வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் ! அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்! சேவல் கூவும் வேளையில் எழுந்து எறும்பாய் தினமுழைத்து மாடாய் குடும்பபாரத்தை இழுத்து கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை பாரதியே! உன் கவிச் சாவியால் தானே சிறையினைத் திறந்தாய்! சுதந்திரப் பறவையாய் பறக்க வழி செய்தாய்! கோலங்கள் போட அவள் தான் சுடுநீர் சாப்பா…
-
- 0 replies
- 656 views
-
-
சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும் (பகடி) - இலவசக் கொத்தனார் - உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிற…
-
- 0 replies
- 664 views
-
-
ஆடிவேல் ரதம்வந்த கொழும்புநகர் தமிழரில்லம் கூடிநின்று கொள்ளிவைத்தார் காவலரும் சேர்ந்துநின்றார் தேடித்தேடி வாக்காளர் இடாப்பினிலே தமிழர்பெயர் கோடிட்டுக் கொளுத்திவிட்டார் தமிழழிப்பின் ஒத்திகையாய். சரக்குக் கப்பலுடன் சிதம்பரமும் சேர்ந்துவர - தமிழுணர்வுச் சரக்கேற்றிக் காங்கேசன் துறை சேர்ந்தார். தலைநகர் தந்த தரக்குறைவுப் படிப்பினையில் உலையொன்று கொதித்தது விடுதலைத்தீ கொழுந்தது ஆடிப்புயலில் அடிபட்டுப் போனதனால் - சுயநல நாடித்துடிப்பின் அடி பட்டுப் போனதுவே. நாடிவந்தார் தமிழிளைஞர்: கூடிவிட்டார் விடுதலைக்காய் தேடிவென்ற ஆயுதங்கள் அகலக்கால் பதித்ததுவே. மிதித்தாலும் வாழ்தலுக்காய்த் துடித்தெழும்பும் மண்புழுவும் வெட்டவெட்டத் தழைத்தோங்கும் பூவரசும் கிளுவைகளும்…
-
- 3 replies
- 827 views
-
-
ஈனப் பிறவிகளின் இழிசெயலைத் தாங்காமல் ஈழம் துறந்தெங்கோ இருக்கை அமைத்தவரே வேசப் பிறவிகளின் வெங்கொடுமை தாங்காமல் வேரை விட்டேங்கோ விழுதாய்ப் படர்ந்தவரே எங்கே சென்றாலும் எவ்விடத்தில் தரித்தாலும் எமக்காக நீரிருப்பீர் எப்போதும் நினைத்திருப்பீர் என்று நினைத்தோமே எண்ணிக் களித்தோமே எல்லாமே பொய்யாச்சே எம்நினைப்பும் மண்ணாச்சே உக்ரேய்ன் எல்லையிலே உருக்குலைந்து போனவர்க்காய் உருக்கத்தை பிழிகின்றீர் உரிமையுடன் கொதிக்கின்றீர் காசா மண்ணினிலே கண்மூடிப் போனவர்க்காய் கவலை கொள்கின்றீர் கண்ணீரை விடுகின்றீர் புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும் புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும் முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும் முகமனுக்காய்க் என்றாலும் எங்களுக…
-
- 3 replies
- 736 views
-
-
எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே -ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள் - தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும் - பல துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத…
-
- 0 replies
- 448 views
-
-
"ஊரிக் கிராமத்துக் குழந்தையே! - என்ற கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தில் எழுதிய கவிதை இது" -மகாரதி:- பசிதின்னும் பெண்ணின் தேகத்தை கோட்டையில் இருக்கும் வேட்டை நாய்கள் தின்றுத்தீர்க்கின்றன உறங்கடி மகளே தாமரைப் பூவே எருமைகள் மிதித்த சாமந்திப்பூவே எங்கோ சென்று ஓரிடம் நின்று ஓவென்று அழ வேண்டும் எந்த இடம் நமக்கு உண்டு சொல்லடி என் கருகிப்போன தங்கமே "யுத்தகளத்தில் யுத்தகாலத்தில் எல்லாம் சகஜம் சித்தனைப் போல சும்மா இரு அதோ வெண்புறா'' என்பதுதான் இன்றைய ஆத்திச்சூடி கோயில்களில் எல்லாம் யாகம் நெருப்பு பற்ற வில்லை இதோ எங்கள் வயிற்றில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் வேட்டை நாய்களின் நாவுகள் தீண்டிப் பார்க்கும் தேகத்திலே நித்தம் நித்தம் சாவு வந்து முத்தம…
-
- 0 replies
- 646 views
-
-
சொர்க்கம் மனதிலே...... எத்தனை தடவை பிறப்பேன் எத்தனை தடவை இறப்பேன் எத்தனை முறை நான் புதைவேன் அத்தனையிலும் நான் உயிர்ப்பேன் கருவினில் தோன்றி கல்லறை வரையும் உறவுகள் தான் எம் வேலி கனவுகள் போல கலைந்திடும் வாழ்வில் கவலைகள் யாவும் போலி புலர்ந்திடும் பொழுதில் மலர்ந்திடும் பூவும் பொழுதினிலே தலை சாயும் அலர்ந்திடும் பொழுதில் விடிந்திடும் வேளை அழகிய மலர்கள் பூக்கும் இலையுதிர் காலம் உதிர்ந்திடும் இலைகள் இறப்பினும் மரங்கள் இருகு;கும் இயற்கையின் கையில் இயல்புகள் மாற இலைதுளிர் காலம் பிறக்கும் வசந்தங்கள் வந்தால் பாரினில் எங்கும் பசுமையின் புரட்சிகள் தோன்றும் சுகந்தமாய் சேவை தொடர்ந்திடும் வேளை சொர்க்கத்தின் வாசல் திறக்கும் பிறர் நலம் காக்கும் மனமது ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
முன்னிரவு பெய்த மழையில் ஈரம் ஊறிய என் படுக்கை அறை சுவர்களில் இருந்து நான் இராக் காலங்களில் கண்ட கனவுகள் உருக் கொண்டும் உயிர் கொண்டும் வெளித் தெரிகின்றன என் கனவுகளில் நெளியும் புழு ஒன்று சுவரின் ஒரு ஓரத்தில் இருந்து இன்னொரு ஓரத்துக்கு நகர்ந்து செல்கின்றது ஒரு அந்தி சாயும் வேளையில் நான் நல்லூர் தேரடியில் அவள் உதட்டில் இட்ட முத்தம் கனவுகளின் ஊடாக பயணித்து சுவர்களில் பதிந்து வர்ணங்களால் நிரம்புகின்றது என் படுக்கை அறை சுவர்களுக்கு வெட்கம் இல்லை என் கனவுகளை பிரதி எடுத்து பின் ஈர இரவு ஒன்றில் கசிய விட்டு ரசித்துக் கொள்கின்றன கனவுகளில் வெறி பிடித்த மிருகம் சுவர்களில் அமைதியாக தெரிகின்றது கொலைகாரர்களின் துப்பாக்கிக்கு பயந்து ஓடிய என் பூனை …
-
- 6 replies
- 2.1k views
-
-
காந்தக் கலர் அழகி கர்வமின்றி கருவண்டுக் காளை இவனை கவர்ந்திழுத்து கவ்விக் கொண்டாய்.. உன்னை அணுகி உளறி அணைத்தேன் உன்னதம் காண.. உன்னமுதம் சுரக்க உண்டேன்.! உடலெங்கும் பொடிகள் காவி உதிர்த்து உண்டாக்கினேன் உன்னை. காய்ந்து விழும் கன்னிக் காவியமே.. கருக்கொண்ட காதலுக்கு அடையாளமாய் - நாளை காய்த்துக் கனி தரும் நீ புதிதாய் பூமியில் உதிப்பாய்..! விவாகமும் இல்லை விவாகரத்தும் இல்லை விவகாரம் முடிக்கிறோம் வில்லங்கமே இல்லாமல்..! விதியது இயற்கை வழி விதவையாய் நீயும் இல்லை விதுசனாய் நானும் இல்லை விரைந்தே போகிறோம் கால வெளியைக் கடந்து..! அடுத்த வசந்தத்துக்குள் இன்னொரு சந்ததிக்காய் ஆயுளும் முடிக்கிறோம். பூமியை புதிய உயிர்களால் அழகும் செய்கி…
-
- 7 replies
- 14.2k views
-
-
விளையாட்டா விளையாட சின்னவர்கள் ... பொம்மை கேட்டனர் .. கொடுக்கப்பட்டதோ பொம்மை துப்பாக்கி .. ஆண்டுகளா பல சிறார் விளையாடி போன .. அதே குருதி தேய்த்த பழைய துவக்கு .. இதை வைத்திருந்தவன் இறந்து போய் .. ஒருவருடமும் இல்லை அப்ப நாலு வயது .. அப்பொழுது இவன் பிறந்து இருந்தான் .. இவன் அருகில் நான் இருக்கும்போதே .. அவன் வெளியில் விளையாடியபடி நின்றான் .. டும் என சத்தம் வந்தால் ஓடி வரும் அவன் .. அன்று மட்டும் வரவில்லை ஏனோ .. சீறி வந்த ஏவுகணைக்கு தெரியுமா .. அவன் ஆசைப்பட்டது பொம்மை.. துவக்குக்கு என்று .. ஏவுகணை ஏவுறவன் பார்வையில்.. அவன் தீவிரவாதி... ஆனால் அவனுக்கு பொம்மை மேல் .. தீராத காதல் வியாதி ... பிஞ்சா கருகி விழும்போது மனம் .. துண்டா வெடித்து போவதை யார் அறிவர் .. …
-
- 0 replies
- 865 views
-
-
காஸா நகர் குழந்தைகள் குழந்தைகள் அஞ்சிப் பதுங்கியிருக்கும் நகரில் பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய் எப்படிக் காத்திருப்பது? ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும் துரத்திக் கொண்டிருக்கிறான் ஒரு பாலஸ்தீனக் குழந்தையை அவர்கள் ஏன் குழந்தைகள்மீது குண்டுகளை வீசுகிறார்கள்? தமது துப்பாக்கிகளை ஏன் குழந்தைகளுக்கு எதிராய் திருப்புகிறார்கள்? ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் ஒரு குழந்தையின் பிணம் குழந்தைகளற்ற குழந்தைகள் பதுங்கியிருக்கும் ஓர் நகரை எப்படி அழைப்பது? ஓர் ஈழக் குழந்தையை கருவில் கரைத்துக் கொல்லும்போது பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம் என்னவாய் இருக்கும்? http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 5 replies
- 830 views
-