கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
அறம் -வ.ஐ.ச.ஜெயபாலன் கண்ணகி உயர்த்திய ஒற்றைச் சிலம்புக்கே மதுரையோடு மன்னனும் அழிந்தான். முள்ளிவாய்க்கால் ஊழியின்போது குருதி சிந்தச் சிந்த உயர்ந்த ஆயிரம் ஆயிரம் ஒற்றைச் சிலம்பால் கொடுங்கோல் மன்னனின் தோழ தோழியர்கள் முடியிழந்தின்று தெருவினில் அலைகிறார்.. சிலம்பே சிலம்பே ஒற்றைச் சிலம்பே இசைப்பிரியாவும் தோழ தோழியரும் உயர்த்திப் பிடித்தத தர்மச் சக்கரமே கடலில் வீழ்ந்த தமிழக மீனவன் கைகளில் உயரும் ஒற்றைச் சிலம்பே தமிழன் குருதியைச் செங்கம்பளமாய் இன்னும் எத்தனை நாட்கள் விரிப்பரோ தர்மம் நசியக் கொடுங்கோல் விருந்து இன்னும் எத்தனை நாட்க்கள் வருவரோ
-
- 6 replies
- 1.3k views
-
-
பால்ராஜ் அமரனுக்கு அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. மணலாற்று அகதிகளின் புதையல் ஆழப் புதைக்காதீர். -வ.ஐ.ச.ஜ…
-
- 7 replies
- 1.4k views
-
-
1969ல் எழுதிய என் முதல் கவிதையும் 1970ல் எழுதிய எனது இரண்டாவது கவிதையும் வன்னி பற்றியது.அப்போதெல்லாம் இணைப்பாட்ட்சி அடிப்படையிலான பொது உடமையை வென்றெடுக்க புரட்சி வரப்போகிறது என்கிற நம்பிக்கையோடு செயல்ப்பட்டோம். புரட்ச்சி வன்னியில் மையம்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் நமது இராணுவப்புவியியலை கற்க்கவென்று அந்த சின்ன வயசுகளில் காடு காடுகளாக அலைந்தேன். இதோ கவிதைகள் http://noolaham.net/project/01/10/10.txt 1. பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம்…
-
- 1 reply
- 1.5k views
-
-
உயிர் அழுகின்ற போது ஒசைகள் கேட்பதில்லை... ஒசைகளை மவுனித்த நாங்கள் ஊமைகள் அல்ல... மவுனமாய் எமக்குள் பேசிக் கொள்ளும் மொழிகள் உங்களுக்கு புரிய போவதில்லை... சப்த நாடியும் உறையச் செய்யும் எங்களின் உயிரின் ஒசைகள் வெளிப்படும் நாளின் தோன்றலுக்காய் இந்த மவுனமான நாட்கள் மெல்ல எம்மைவிட்டு கடவதாக.....! # 18-05-2013
-
- 10 replies
- 1.9k views
-
-
எழுதப்படாத ஓலைகள்! ------------------------------- எவருமே தழுவிக்கொள்ள மறந்த அந்த இரவுகளில் மரணம் மட்டும் மறக்காமல் எங்களைத் தழுவிக்கொண்டிருந்தது! தூரத்தே இருந்த சாக்குருவிகள் எங்கள் இழப்புகளிலும் பூபாளம் பாடிக்கொண்டிருந்தன! ........... ........... ........... ........... ........... அவை இப்போதும் பாடிக்கொண்டுதான் இருக்கின்றன! :0 முள்ளிவாய்க்காலில் சாவடைந்த அனைத்துப் போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்!
-
- 2 replies
- 618 views
-
-
அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர் அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள் கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி கொடும் கனல் குருதி தோய்ந்து கோரங்கள் சுமந்த நந்திக்கடல் கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம் ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம் எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும் எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள் வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று கருணையற்ற கயவனிடம் கையேந்தும் கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார் மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்த…
-
- 3 replies
- 662 views
-
-
திசைகள் கிழிந்துபோக வெளிகள் வறண்டு கிடக்கின்றது. எழுகதிரும் முகமிழந்து ஒளிய மொழியிழந்து வெற்றுடல் அலைகிறது மண் தின்ற பெரும் அரக்கன் மாலை சூடியின்று அங்கதம் கொள்கிறான். கொத்துக் குண்டுகளாலும் குறிசொல்லிகளாலும் கொன்றொழித்தை, பிணங்களையும், இயல்பிழந்த பெண்களையும் புணர்ந்ததை, மகுடமென்று சூடிக்கொள்கிறான். அறப்பரணியைப் புறம் சொல்லி, தீவிரவாதம் தோற்றது இனவாதம் இனியில்லையென்று கட்டியமடிக்கும் பல்லக்குத் தூக்கிகளே பாருங்கள். இன்னும் எங்கள் தரவைகளும் சதுப்புக் காடுகளும் உடலங்களை சுமக்கின்றன. கரியவால் குருவிகளும் காட்டுக் கோழிகளும் ஓலங்களால் ஒடுங்கி நிற்கின்றன.. நீண்ட மரங்களும் நாயுருவிப் பற்றைகளும் கொடிய கொலைகளுக்குச் சாட்சியாகின்றன.. …
-
- 1 reply
- 449 views
-
-
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஐந்தாகிப் போனதுவோ- எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதோ இரசாயன நெருப்புக்குள் உறவுகள் வெந்து துடித்து கருகி மடிந்த போது இங்கிருந்து நாம் கதறி அழுதோம் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் ஆண்டுகள் ஐந்தானதோ இன்று பாழும் குண்டு மழைக்குள் எங்கள் பச்சிளங்குழந்தைகள் பதைபதைத்து துடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதுவோ சதிவலைகள் பின்னிய நாடுகள் என்று தெரியாமல் அந்த நாடுகள் ஓடிவந்து உதவாதோ என்று இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் ஊமையாய் அடங்கிப்போயின. அதனை எண்ணி எண்ணி நாம் அழுது அரற்ற ஆரம்பித்து ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது பதுங்குகுழிகள் வெட்…
-
- 9 replies
- 1k views
-
-
போர் கண்டு பொலிவிழந்த தேசம் எமது பேரல்லல் கொண்டு இன்றும் இருக்கிறது பெருமைகள் சொல்லி ஆற்றிட முடியா பேரவலம் கண்டேதான் பேசாது நிற்கிறது எத்தனை ஆண்டுகள் எம் காலில் நின்றோம் நாம் அத்தனையும் அழிந்து ஆவியாகிப் போனது கொத்தளங்கள் சுமந்து கொடிகட்டி ஆண்டவர் நாம் கேடுகள் சுமந்து கேட்பாரற்றுக் கிடக்கின்றோம் வீதிகள் எங்கும் விளக்கொடிந்து வழக்கொழிந்து வீடுகள் எங்கணும் விலையற்ற மனிதராய் கூடைகள் நிறைக்கும் குப்பைகளாய் நாங்கள் கூடுகளின்றிக் கூனர்களாய்க் கிடக்கின்றோம் பண்பாடு காத்து பார் புகழ வாழ்ந்தவர் நாம் பட்டினிகொண்டு பரிதவித்து நிற்கின்றோம் மானமிழக்கா மாண்பு மிக்கவர் நாம் மாசுபட மடையரிடம் மண்டியிட்டு நிற்கின்றோம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி காலூன்ற நிலை…
-
- 0 replies
- 569 views
-
-
கந்தகக் காற்றிலே... கந்தகக் காற்றிலே... வெந்து மடிந்தோமே....! சொந்த மண்ணிலே... சொந்த மண்ணிலே...! செத்து விழுந்தோமே...!! முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி, கொள்ளி வைத்தான்... எதிரி! கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு, சாக வைத்தான்... சிதறி!! பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா.... நஞ்சுக் குண்டிலே எரிஞ்சு போனதடா..........! நெஞ்சம் வெடிக்கிற சேதி தினமே.... பஞ்சமின்றித்தான் வந்து சேர்ந்ததடா........!!! காப்பாற்ற முடியலையே... கதறி அழுதோம் நாங்கள்...! கேட்பாரற்று நீங்கள் சிதற... பதறித் துடித்தோம் நாங்கள்...! ஊமையான சர்வதேசம்... செய்ததெல்லாம் சர்வநாசம்..! போலியான மனிதநேயம்... சொன்னதெல்லாம் வெற்று வேஷம்..!! உரிமைகேட்டு.... உயிரைக் கொடுத்து, எழுந்து நின…
-
- 3 replies
- 2.1k views
-
-
மே15 சென்னையில் இருந்தேன். என் உறவினர்கள் பலர் களபலியான குமுதினிப் படகுப் படுகொலை சமபவச்சேதி கேட்டு மனசும் ஆன்மாவும் கந்தலாய்க் கிழிந்துபோனது. இரவு தூங்க முடியவில்லை. அண்ணா நகரில் வாழெத என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். அந்த இரவே "இரத்தம் எழுதிய கவிதை" என அஞ்சலி எழுத ஆரம்பித்தேன். அப்போது விடுதலை அமைப்புகளுக்கிடையில் ஐக்கிய முன்னணியை உருவாக்கும் கனவுகள் மெய்படாத துயரில் வாடியிருந்த காலம். அஞ்சலி எழுதி முடித்தபோது மே 16 விடிய ஆரம்பித்திருந்தது. விடியும். இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றெ…
-
- 2 replies
- 881 views
-
-
ஆட்காட்டிக் குருவிகள் அமைதியாய் இருக்கின்றன : ச. நித்தியானந்தன் நன்றிhttp://inioru.com/?p=40258
-
- 0 replies
- 752 views
-
-
பேசாத வார்த்தை நொடியில் ... கரைந்து போனது என் வலி ... மவுனம் என்னை மவுனியாக்கி .. வேடிக்கை பார்க்குது மனவெளியில் .. எதிர் திசை நீ வரும் போதும் .. உன்னை தொட்டு வரம் காற்று ... உன் மனக்கணக்கின் எண்ணம் சொல்லும் .. ஆனாலும் நான் மவுனமா .. என்னை கடந்து போகையில் .. நீ வீசி செல்லும் விழி கேள்விகள் .. என் இதயத்தை ஒருமுறை உசுப்பும் .. ஆனாலும் நான் மவுனமா .. உன்னை அறியா வயதில் பார்த்து ... தெரியாத காதல் மொழி பேசி .. இன்று காதல் வயதில் காணும் போது .. கலங்குதடி கண்கள் இரண்டும் ... நான் சொல்ல வரும் ஏக்கம் .. உனக்கு வலிதரலாம் ஆதலால் .. நான் மவுனமா .... ஒரு வேலி ...ஒரு ஓணான் என.. பேசி திரிந்த அழகிய காலம் .. மீண்டும் வராது என தெரிவதால் .. இப்பொழுதும் நான் மவுனமா ...…
-
- 0 replies
- 509 views
-
-
ஆயிரம் தான் கவி சொன்னேன்--அன்னையருக்கு சமர்ப்பணம் https://www.facebook.com/photo.php?v=864189466928913
-
- 0 replies
- 971 views
-
-
அன்னையர் தினமதில் ஆயிரம்பேர் வாழ்த்திடுவர் அக்கம் பக்கம் எல்லாம் காணும் பெண்களுக்கு முகம் மலர வாழ்த்தி முகமன் செய்திடுவர் முலை தந்த அன்னை முனகிக் கிடக்கையிலே மனம் வந்து ஒன்றும் மாற்றுவழி செய்திடார் மக்கள் என்று கூறி மாய்மாலம் செய்திடுவர் மலர்ந்த முகத்துடனே மண்ணிற்குத் தந்தவள் மனம் கோண நடந்திடுவர் மதிகெட்டு நின்றிடுவர் மலர் ஒன்று வாழ்வில் மயக்கம் தந்தவுடன் மாற்றான் போல் நின்று மார்தட்டிப் பேசிடுவர் மக்களை பெறுகையிலும் மலர் மேனி நோவெடுக்க மற்றவற்றை எண்ணாது மனதாலும் காத்திடும் தாய் முதுமையின் கொடுமையிலும் மெலிந்த மனம் தளராது மேன்மைகள் செய்தே மேதினி விட்டகல்வாள் மாதெனும் மகத்தானவள் மாண்பில் மலையானவள்
-
- 0 replies
- 550 views
-
-
எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உலகெங்கும் அன்னையர் தினம் அன்பான வாழ்த்துக்களுடனும் அழகான பரிசுப்பொருட்களுடனும் இனியநினைவுகளாய் ஆயத்தமாக எங்கள் தாய்மண்ணில் எப்படி நகர்கிறது? பத்துமாதம் சுமந்து பெற்று பகலிரவாய் கண்விழித்து கண்ணுக்குள் மணியாய் காத்து வளர்த்த மகன், நட்ட நடுநிசியில் வந்த கொடுங்கோலர் கூலிகளால் அடித்து உதைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட-அந்த கொடியநிகழ்விலிருந்து மீளாது துடித்து துவண்டு அழும் என் அன்பு அம்மா!-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உடைந்த உள்ளமும் உடையாத நம்பிக்கையுமாய் படைமுகாம்கள்தோறும் பதைக்கும் மனதுடன்-என் தம்பியை தேடி அலையும்-உனக்கு எப்படி நான் வாழ்த்து அனுப்புவேன்? உயிருடன் என் தம்பி மீள்வானா என இங்கிருந்து நான் தவிக்க, துள…
-
- 3 replies
- 613 views
-
-
பாடிப் பறந்த குயில் மாஞ்சோலையெங்கும் மாங்கனிகள் தோரணம் மரக்கிளைகள் மத்தியிலே மாங்கிளிகள் மோகனம்; தூங்கும் பழங்களிலே அணில்களின் மோகம்; துள்ளிப் பாய்வதிலே மந்திகளின் ஆர்வம் சோலையின் மறைவினிலே கோகிலத்தின் ராகம் சொற்கள் வந்த திசையினிலே அதைக் காணாத சோகம் நேரில் வந்து கூவுவதற்கு இதற்கேனோ தயக்கம் நெடுநாளாய் இதுபற்றி என் மனதிலே ஏக்கம் ஆவலுடன் காத்திருந்தேன் அடுத்த ஓசை கேட்க அலறிப் பறந்ததுவே காக்கையொன்று நுழைய தாழாத சோகம் என்னை வந்து தாக்க தவித்ததே மனம் பழசையெண்ணி ஏங்கி வேலைத் தலமொன்றில் வேலைதேடிப் போக வேலையின்றி இருந்தவரோ நீ யாரென்று கேட்க பயத்துடனே பதில்சொல்லி பதுமையாய் நிற்க பார்த்திருந்த மங்கையரோ புன்முறுவல் பூத்தார். வேலையங்கே கிடைத்தபின்னர் வேடிக்கைகள் பல…
-
- 3 replies
- 793 views
-
-
9 நீ செய்யும் குழப்படி பார்த்து .... அப்படியே பேரனை போல என ... அப்பத்தா சொல்கையில் எனக்குள் ... ஓடும் ஒரு இனம் புரியா உணர்வு .. மகனே . 10 எனது சாப்பாட்டு தட்டில் .. இருக்கும் அப்பளத்தை எடுக்க .. நீ அம்மாவிடம் அனுமதி கேட்பது .. பயமா ...மரியாதையா என தெரியாமல் .. நான் மகனே . 11 நீ கேட்டு அம்மா கொடுக்காவிட்டால் ... நீ நின்று பார்க்கும் முறைப்பு பார்வை ... அதைகானும் அம்மா அப்படியே நீ .... உன் அப்பா போல கோவத்தில் என .. சொல்லும்போது நமக்குள் ஒரு ... திமிர் வந்துதான் போகுது மகனே .. 12 அம்மா அடிச்சுட்டா என முறைப்பாடு ... கேட்டுட்டு நான் அம்மாவை ஒரு தட்டு ... அதை பார்த்து நீ சிரிக்கும் சிரிப்பில் .. தொலைந்து போகிறது எனது துன்பம் ... மகனே . 1…
-
- 8 replies
- 1.6k views
-
-
விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது வெடி கண்ட நிலம் போல் சிதறிய மனம் மீண்டும் விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது கொடுவானின் இடி மின்னல் கொடுங் காற்று எல்லாம் கோரத் தாண்டவம் ஆடி முடித்து காற்று அலைகளின் சீற்றம் குறைந்து கோலங்கள் காட்டி நிற்கிறது வேருடன் மரங்கள் வீழ்ந்தன எனினும் வாடை அடங்கி மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில் மருண்ட மேகங்களின் மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும் மின்னல் கீறி மறைகின்றன ஓசை அடங்கக் காத்திருந்தேன் என் ஆசை அடக்கி மேகத் தீயுள் மோதும் உன் முகம் காண முடிவேதும் இல்லா மழை வானின் எல்லையில் மண்ணொடு மண்ணாய் மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன் முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து முடிவற்ற என் பயணம் முடிந்து மலர் கண்ட வனமாய் மலர்கின்ற மனம் க…
-
- 9 replies
- 1k views
-
-
1 இறுக்கி பற்றி பிடித்து இருந்த .. உன் கைகள் லேசாய் பிடி தளரும் .. போது நான் புரிந்து இருக்க வேணும் .. நீ வளர்த்து வருகிறாய் என்று .. மகனே ... 2 ஓடும் உன் மகனை ... பிடிக்கும் வயதில் நான் .. இல்லை மகனே .. முதுமை .! 3 அப்பா என்று என்னை நீ அழைத்தபோது .. இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா .. என் பிள்ளை என்னை என்று ஏங்கிய.. என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் .. தெரியாது போப்பா அங்கால என்கிறான் ... லையிட்டா வலிக்குது மகனே மனது ..! 4 என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது .. என்று கேட்பவர்களுக்கு தெரியுமா .. அது உனக்காக வளர்த்து தொப்பை என்று .. நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..! 5 உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா .. சண்டையை விட உன் எச்ச…
-
- 14 replies
- 6.2k views
-
-
ஆயிரம் கால்களுடன் மரஅட்டையொன்று, மனதினுள் ஊர்ந்து கொண்டிருக்கிறது சில காலங்களாக....!!! பரந்த வெளிப்பரப்பின் சன நெரிசலின் எதோவொரு மூலையில் முகமறியாத முகமொன்றின் புன்னகைக்காக தவமிருக்கிறது.....!!! தாழ்வாரத்தை நோக்கி பாய்ந்து முடிந்த, மழை வெள்ளத்தின் ஈரலிப்பை நோக்கி கால்கள் நகர்கின்றன.....!!! பாதையில்லாப் பயணமொன்றின் நடுவில், வழிதவறிய பாதையின் பாதச்சுவடுகளை தேடி கண்கள் பணித்து கலங்குகின்றன....!!! பாலைவனப் பாறையொன்றின் அடியில், இதிகாசங்களாய் கிடந்தது போல் இதயம் கணக்கிறது....!!! தேடிக் கிடைத்த பொருளை தொலைத்து விட்ட இயலாமையின் வலியை இன்றியமையாததாக்கி கொள்கிறது காலம்....!! மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை, பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறு…
-
- 13 replies
- 1.7k views
-
-
நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க எண்ணங்கள் இணையாக பிறக்க பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும் இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்' அப்படியான இனிதான பொழுதுகளை முன்னொரு நாளில்.... நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்! காதலையும் அன்பையும் அள்ளிக்கொடுத்த நீயேதான், பின்னொரு நாளில்.... பிரிவையும் வலியையும் வாரியிறைத்துவிட்டுப் போனாய்! நீ தந்துவிட்டுப்போன அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர... நான் பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருந்தது! இன்னும் என் இரவுகள்... என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை! இன்னும் உன் ஞாபகங்கள்... எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை! வலிகள் ஒருவனை வலிமையாக்கும்! எப்படியான துன்பத்தையும்... புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை, உன…
-
- 18 replies
- 1.6k views
-
-
காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....! ஆளரவம் தொலைத்த அடர் வனங்கள் அன்றைக்கு மௌனித்து மயானம் பூண்டு ஆட்களற்றுப் போனது. ஆழகான புற்தரைகளின் பச்சையம் ஆட்களற்றுத் தனித்த பனித்துளியின் ஈரம் குருதித் துளியாகிக் காயத் தொடங்கியது. நீங்களும் வெடியாகி இடியாகி வெளியில் வராத ஒளியாகிப் போனீரென்றுதான் காலமழுதது. எனினும் போரின் கறைகள் காயாமல் கண்ணீரின் ஈரம் தோயாமல் நீங்களெல்லாம் வனமளப்பதான வதந்திகளையெல்லாம் மௌனங்கள் காடேற்றிக் கடந்தது காலநதி. உங்கள் நிழலைக் கூடத் தொட்டறியாத பேயெல்லாம் உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது அங்கென்றும் இங்கென்றும் அறிக்கைகள் கொடுத்தது. சொல்லியழ முடியாத் துயர் கண்ணில் நிறைந்தாலும் வ…
-
- 2 replies
- 725 views
-
-
உங்களின் நினைவுகள்…..! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்.....! நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்.....! நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்....! காற்றில் நுளைந்து கடலில் கரைந்து – என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்.....! போற்றிட உம் பெருமைகள் பேசிடப் பேராயிரம் கவிதைகள் தோற்றன ஈற்…
-
- 2 replies
- 635 views
-
-
ONE OF MY OLD POEM 1985 முதற் காதல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் ப…
-
- 7 replies
- 858 views
-