கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உலகின் அத்தனை தட்டுக்களிலும் சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த அத்தனை கிண்ணங்களும் பலவித எண்ணங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன! வாழ்வெனும் விருந்துக்கு அங்கிருந்த அனைவரும் கட்டாய விருந்தாளிகள்! பித்துப் பிடித்து தேடியலையும் சுயநல விரல்களுக்கு... அப்படியொரு வெறி! போட்டிபோட்டு முண்டியடித்து... ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை! சில வாய்கள் சிரித்தபடியே செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன! வேண்டாமென ஒதுங்கிப்போகும்... ஒவ்வொரு நொடியிலும், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், மானிட விரல்களுக்குள்... திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்! எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...? என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை! அவசியமுமில்லை...!! எதை ஏந்துகிறோமோ…
-
- 9 replies
- 1.4k views
-
-
வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை தின்றுவிட தயாராகிறது பெரும் பூதமொன்று.. முதலில் ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது. வெப்பத்தாலோ காற்றாலோ ஆவியாகிவிடாமல் அடையாளமாகிப் பூத்துக் கிடந்த அந்த முதல் துளி வெறுமையை உடைத்து அலங்கரித்துக்கொண்டது தன்னை.. பின்னொரு பொழுதில் நீண்ட பாலைநிலங்கடந்த வெப்பத்தோடு இறங்கத்தொடங்கியது நிலைகொள்ளாமல் இறகுகளை களைந்துவிட்டு அடைக்கலமாக அடம்பிடிக்க ஆரம்பித்து சிதைவுகளால் ஊடுருவி வேர்களால் பினைக்கத்தொடங்கியது. மேகத்திலிருந்து இறந்துபோன நட்சத்திரங்களின் ஆசைகளுடன் பூதங்கள் இறங்கத்தொடங்கின.. ஒளிந்து கொண்டேன் வேர் முடிச்சுக்களில்,
-
- 0 replies
- 452 views
-
-
கடவுளைத்தேடி நீ ஆலைய கருவறைக்குள் அமைதியாய் போய்விட்டாய், அம்மா என்ற கடவுள் என்னோடு இருப்பதால் உன்னைத்தேடியே ஆலயம் வந்தேன். முகம் கொடுத்து பேச முடியாதவனாய்-உன் பாதணிகளுக்குள் மலர் வைத்துப்போனேன். நீ கடைக்கண்ணால் கண்டதையும் நான் கண்டேன், வீதியோர குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு நீ சென்றபோது மலருக்கு தெரியாது உன்னக்கு என்னை பிடிக்காதென்று இப்போதெல்லாம் நான் வெளியே போவதில்லை. உன்பிம்பம் விழுந்த என் வீட்டுக்கண்ணாடியை சமையலறையில் மாட்டிவிட்டேன். உன் நினைவுகள் என்னை தீண்டும்போது சமயலறைக்கு ஓடிவிடுவேன், உன்பிம்பம் பட்ட கண்ணாடி முன்னே கண்ணீர் வடிக்க, அம்மா கண்டுவிடுவாள் என்று வெங்காயம் உரித்த படி நான்......
-
- 2 replies
- 602 views
-
-
ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! அந்த நாட்கள் தீயின் நாக்குகளால் தின்னப்பட்ட தீராத்துயர் எங்கள் வீரத்தின் விலாசங்களை வெ(கொ)ன்ற நாட்கள். வெற்றிகள் தந்தெங்கள் விடுதலைச் சுவடுகளில் வீரம் எழுதிய மகனாரும் , மகளாளும் இறுதிச் சமர் புரிந்து எரிந்து கரைந்த 5ம் ஆண்டு நினைவில் ஆனந்தபுரம் அழியாத நினைவாக....! பூக்களின் வாசனை கலந்த பொன்னிதழ் விரியும் புன்னகை முகங்கள் பொசுங்கிக் கிடந்த நாளை வசந்த கால மலர்வாசம் தரும் ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! இழப்பின் கதைசொல்லும் என்றைக்கும் இதயம் நிரம்பிய துயர் தருமாதம் நஞ்சு கலந்து எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட நிலத்தின் கதைசொல்லும் நீங்காத…
-
- 1 reply
- 653 views
-
-
அம்மா வெளிநாட்டில் உன்பிள்ளை என்று உனக்கு மகிழ்ச்சி. என் வாழ்க்கை எது என்று நீ அறிந்து கொண்டால் அம்மா நீயும் அழுவாய். வானை முட்டும் கட்டடங்கள், வடிவான வீதிகள் உழைத்து கழைப்பில்திரியும் எமக்காகவோ என்னவோ வீதியெல்லாம் இளைப்பாற ஆசனங்கள், வண்ணமான பூங்காக்கள் எல்லாம் கண்ணைக்கவரும்-ஆனால் அம்மா-என் நெஞ்சமோ உங்களைத்தேடும் நித்திரைக்கு போவேன். தலையருகே உன் படம்-என் தலை நீ கோதுவதாய் கற்பனை செய்வேன், கண்ணீர் சொட்டும்-என் தலையணை நனைந்தே போகும் வாய் விட்டு அழத்தோன்றும் அடக்கிவிடுவேன், தலையணையை கடித்துக்கொண்டு லேசாக கண்கள் மூட அலாரம் எழுப்பிவிடும் வேலைக்கு போ என்று அவசரமாய் எழுந்து ஓடுவேன் காலையில் காப்பியும் …
-
- 11 replies
- 2.1k views
-
-
அடியே, உன்னத்தானடி ஒருக்கா பாரடி ஒரு பதிலாச்சும் சொல்லடி ஒன்பது மாசமா துரத்திரனடி உன் தோழியவாச்சும் கண்ணுல காட்டேன்டி வயசு போன வாலிப பசங்களோட சேர்ந்து குறும்பு காட்டி உசுப்பேத்துறேயடி பேசாப் பொருள பேசி வெக்கப்பட வைக்கிறயடி வெள்ளிக் கிழமை விரதத்தை முடிச்சு வைக்காதேயடி ஊருக்கு முன்னே ஊர் கதை சொல்லி வரும் கிழவியடி நீ வெட்டுற எடத்துல வெட்டி, குட்டுற எடத்துல குட்டி, தட்டுற எடத்துல தட்டிக் கொடுக்குற தங்கமே இணையக் கடலில மூழ்கவிடாம நல்ல கரை சேர்க்க வந்த நாவாய் பெண்ணே பல்பொடி தேடும் முன்னே பாய்ந்து வருவேன் உனை பார்த்து சிரிக்கத்தானே நாடு கடந்தவரை நாட்டிலினைக்கும் நறுமுகை நீயே காலத்தின் கருவூலம் கட்டாயம் விதைக்க வேண்டும் வரலா…
-
- 18 replies
- 2.2k views
-
-
இருண்டு போய்க் கிடந்த, அமாவாசை இரவொன்றில், வெளிச்சத்தின் தேவை கருதி, வந்துதித்த நிலவு நீ! வானத்தின் சந்திரன் கூட, விடுமுறையில் செல்வதுண்டு, இரவும் பகலும், உறங்காத விழிகள் உன்னுடையவை! நான் பிறந்த தேசத்தின், அழகைப் போலவே, நீயும் வித்தியாசமானவள்! அதனால் தானோ என்னவோ, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது! வானுயர்ந்த மலைகளோ, வளம் கொழிக்கும் நதிகளோ, வெண்பனி பொழியும், தண்மை காவிய மேகங்களோ, அங்கிருக்கவில்லை! வாடைக்காற்றும், வியாபாரக் காற்றுக்களும், காவி வருகின்ற மேகங்கள், கருக்கட்டினால் மட்டும், மழை பெறுகின்ற தேசம்! இருந்தாலும், வானுயர்ந்த பனைகளும், வளம் கொழிக்கும் வயல்களும், அந்தத் தூவானத்திலும், பிறப்பெடுத்து வாழ்ந்தன! வானம் வஞ்சித்து வ…
-
- 20 replies
- 1.8k views
-
-
நாலிரண்டு திக்கிருந்தும் - நல் அருவிகளாய் ஊற்றெடுத்து யாழெனும்...... ஆழியிலே சங்கமித்து ஆனதுகாண் அருஞ்செல்வம் மானமது காக்கும் மறக்குலத்தின் மாவிளக்கே தேனமிழ்தே தாயகத்தின் மணம் உணர்த்தும் தனிமலரே திசை வெளிகள் உன் உறவொளிரும் தீந்....தமிழால் யாழ் இசைக்கும் நரம்பொளிரும் பாரொளிரும் பருவமது பதினாறின் பேரழகே! நாமொளிரக் களமுவந்த யாழ் அரங்கே நீ வாழீ. வானமெனத் தமிழ் பரந்த வலையுலகத் திருவே, ஊனுனதாய், உளமுனதாய் கானமிது எழுகிறதே கண்மணியே..... ! எம் கவின்வனமே! காலவெளி கடந்தும், காற்றுவெளி நிறைந்தும் நீ ஆனதென வாய்கள் மலர்ந்தும் வாழிய நீ பல்லாண்டு
-
- 15 replies
- 1.2k views
-
-
கருத்துக்களம் -- கற்றுக்குட்டிகளின் நந்தவனம் ! ஓடியாடித் திரியலாம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம் கும்மியடிச்சு பாடலாம் குலவையிட்டு மகிழலாம் கற்றுக்குட்டிகளின் நந்தவனம் -- இது கற்றோர்க்கு அய்யனின் குறளோவியம் ! வண்ணங்கள் வீசும் முகப்பு வந்தாரை வரவேற்கும் சிறப்பு நறுந்தேன் மலர்களாய் கலைஞர்கள் நாடிடும் வண்டுகளாய் வாசகர்கள் ! தூரமாய் வாழ்ந்திடும் மனிதர்கள் - முகம் தெரியா உறவுகளின் மரண்ங்கள் துடித்தே வந்திடும் பண்பாளர்கள் -- அவர் துயர்தனைப் பங்கிடும் பங்காளிகள் ! சக உறவுகளையும் நேசிக்கிறோம் செமையாய் சன்டையும் போடுகிறோம் சுவையாய் பிரியாணிகள் செய்திடுவோம் சுடுதண்ணி வைப்பதில் சொதப்பிடுவோம் ! இரவே காணாத யாழ் இணையம் -- இதில் எங்கே தோன்றும…
-
- 13 replies
- 1.3k views
-
-
யாழ் அது எனது வாழ்வு அதன் உறவுகள் எனது உடன் பிறப்புக்கள் யாழ் எனக்கு எல்லாம் தந்திருக்கிறது ஐயா அண்ணன் அக்கா தங்கை தம்பி மாமன் மச்சான்......... யாழ் எனக்கு தாய் அமைதி வழி நடந்து அடிவாங்கி ஆயுதம் தூக்கி நரித்தனமாய் அழிக்கப்பட்டு உருக்குலைந்து இனி என்ன செய்ய என்ற நிலையில் நான் சாய்ந்த மடி யாழ்........... யாழ் என் தங்கை போல அழகு செய்ய ஆசை நடந்த நல்லவை அனைத்திலும் நானும் பங்காளி ஆபத்து வந்தபோது காவலன் யாழ் என் பெண்டாட்டி போல அதன் அருமை எனக்கு தெரிவதில்லை எனது பலவீனங்களை நான் ஒரு போதும் வெளியில் சொல்வதில்லை யாழில்லையென்றால் நான்? சொல்லமாட்டேன்.............. அவள் வாழிய பல்லாண்டு....... தமிழிருக்கும் வரை அவள் இருப்பாள்.
-
- 13 replies
- 944 views
-
-
"யாழ்" என் காதலி கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக் கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன் விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்.. களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன் காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும் வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள் நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.. வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான் அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..! எண்ணி…
-
- 18 replies
- 1.3k views
-
-
பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம் பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள் அங்கவட்கோர் நாளில் அடுத்ததுயர் கேளிர்! பாற்குடஞ் சுமந்து பையப்பைய நடந்து சந்தைக்குப் போம்போது தான்நினைந்தாள் மாது: "பாலையின்று விற்பேன் காசைப்பையில் வைப்பேன்" முருகரப்பா வீட்டில் முட்டைவிற்பாள் பாட்டி கோழிமுட்டை வாங்கிக் குஞ்சுக்குவைப் பேனே புள்ளிக்கோழிக் குஞ்சு பொரிக்குமிரண் டைஞ்சு குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து விரந்துவளர்ந் திடுமே வெள்ளைமுட்டை யிடுமே முட்டைவிற்ற காசை முழுதுமெடுத் தாசை வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூத் தொப்பி வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு வெள்ளைப்பட் டுடுத்து மினுங்குதொப்பி தொடுத்துக் கையிரண்டும் வீசிக் கதைகள்பல பேசிச் சுந்தரிபோல் நானே கடைக்குப்போ வேனே …
-
- 6 replies
- 3.2k views
-
-
யாழில் 'கவிதை சீசன்' என்பதால், 'பணம்' திரைப்படத்தில் என்.எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடலை வருத்தம் கலந்த கற்பனையோடு என்னால் முடிந்த வரையில் 'உல்டா' செய்துள்ளேன்! எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? காற்று வீச சுத்திக் கிற…
-
- 8 replies
- 1.1k views
-
-
அகவை பதினாறு காணும் யாழ் மகளே நீ வாழி . .கற்றோரும் மற்றோரும் கத்துக்குட்டிகளும் காளைகளும் கன்னியரும் .கற்றுத் தெளிந்தோரும்.. கற்க வருபவருக்கும் நீ கலைமகள். கண்ட நாள்முதல் மீண்டும் மீண்டும் காண வைத்தாய் .. அனைவரையும் அணைக்கும் ஆலமரம் நீ.. ஜாதி மத பேதமின்றி சகலருக்கும் சரி சமமாய் பிறப்பிலிருந்து இறப்பு வரை அறிவிக்கும் கருவியாய்.. ஊரிலிருந்து உலக செய்திவரை அத்தனயும் தரும் அமுத சுரபியாய் . .பருகத்தேவிட்டாத தேனாய் நாளும்பொழுதும் வளரும் யாழ் களமே நீ வாழி நான் மட்டும் மல்ல ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும் கொள்ளுபேரன் பேத்திகளும் உன் பேர் சொல்ல வேண்டும். என்ன துயர் வரினும் எழுகவே யாழ் களமே
-
- 10 replies
- 802 views
-
-
'வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒருமுறை விசேஷமாக நடக்கும் ஆழ நீரினுள் அப்பா மூழ்க மூழ்க அதிசியங்கள் மேலே வரும் கொட்டாங்குச்சி,கோலி, கரண்டி துருபிடித்த கட்டையோடு உள்விழுந்த ராட்டினம், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்' சேற்றுக்குள் கிளறி எடுப்போம் நிறையவே, 'சேறுடா சேறுடா' வென அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோசம் கலைக்க யாருக்கு மனம் வரும்? "படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார். இன்று வரை அம்மாவும் கதவுக்கு பின்னாலிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசி வரை அப்பாவும் மறந்தேபோனார் மனசுக்குள் தூர் எடுக்க"... #விகடனில் ப…
-
- 9 replies
- 3.2k views
-
-
யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா! நெடிதுயர்தல், நீள் வளர்தல் அனைத்துமாய் நின் மாற்றம் குரலொலியில் தெரிகிறது ஆண்மையின் ஏற்றம் செறிந்த பலம் குவிந்து நிமிர்கிறது நின் மார்பு அகண்ட பெரு வெளியில் விரிகின்றன உன் தோள்கள் யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா தமிழேந்தி வலையுலவும் மெட்டழகா பதினாறின் விடலையே பயமேது உனக்கு பால் வடியும் முகத்தில் அரும்புதடா மீசை பக்கவாட்டு கன்னங்களில் படருதடா புற்கள் இலக்கியத்தில் உனைச் சொன்னால் இரும்பூக்கும் என் சொல் இன்றுனக்கு பதினாறாம் இளையவனே! தவழ்பருவம் முடித்துவிட்டாய்.. தமிழேந்தித் திரிந்து தரணியை வரி அமிழ்ததொன்றே அவ…
-
- 18 replies
- 2.1k views
-
-
வண்ண முகம் கொண்டவளே வடிவழகு யாழ்களமே கண்ணழகு கொண்டவளே கருத்தூன்றிப் பார்ப்பவளே பன்முகம் கொண்டவளே பவளவாய்ச் சொல்லமுதே பாடல் புனைகின்றேன் பாராட்ட உன்னையடி பதினாறு வயதில் பாவைநீ பார்த்து மயங்கிடும் அழகோடு பருவ எழில் பொங்க பார்ப்பவரை உன்பின்னே அலைய வைக்கின்றாய் கோல மயில் உன்னழகைக் கண் குளிரக் காணவென்றே கோடி மக்கள் நாடித் தினம் காலநேரமின்றி கண் விழித்து வருகின்றார் கருத்தூண்றி உன்னைக் கவனித்தும் வருகின்றார் தம் திறமை காட்டி உன்னைக் கவர்ந்திட தம்மால் முடிந்த வரை உன் தாள்களில் வரைகின்றார் ஆசை மனம் காட்டி ஆவலொடு நிதமும் ஆர்பரிக்க நிற்கின்றார் ஆனாலும் நீயோ பகட்டில்லாப் பாவை அனைவரையும் அரவணைத்து ஆசைமுகம் காட்டாது அன்பு மனம் காட்டி ஆண் பெண் பேதமின்றி அணைத்த…
-
- 9 replies
- 665 views
-
-
இணைய பரந்தவெளியில் .. பல்லாயிரம் முகவரியில் .. பாமரன் முதல் பண்பாளன் வரை .. தேடி அலையும் தேடலில் ... கூகுளில் மூழ்கி யாழில் மிதந்தேன் .. என்ன ஆச்சரியம் அதிசய தீவா.. அல்லது மூழ்கிய குமரிகண்டமா.. எங்கும் தமிழ் ..எதிலும் தமிழ் .. நெஞ்சம் நிறைந்த தமிழ் என்னை ... நிலை குலைய வைத்த தமிழ் .. நானே என்னை தேடிய தமிழ் .. என்னை நானே வளர்க்க உதவிய தமிழ் .. எல்லாம் ஒருங்கே கண்டேன் உலவி யாழில் .. வணக்கம் வைத்து அழைப்பதில் இருந்து .. அழகா விருந்தினரை சுற்றி காட்டி .. எங்கு நீங்கள் என்ன தமிழ் படிக்கலாம் .. என்று அறைகள் பிரித்து அடுக்கடுக்கா .. பல சுவை தமிழ் படைத்து நிறைந்திருக்கு .. யாழ் உலாவி ... தமிழ் தோன்றல் முதல் தேசியம் வரை .. தமிழை அழகா செதுக்கி வைக்க உளிகள் பல ..…
-
- 10 replies
- 1.1k views
-
-
நித்தம் எங்கள் முத்தம் வந்து சத்தம் போட்டு-எம்மை துயில் எழுப்பினாய், ஆதவன் மறையும் வேலை அமைதியாய்-உன் அலையோசை எழுப்பிஎம்மை தாலாட்டினாய், நாம் பிறந்து வளர்ந்தது உன் உன்மடியில், எங்களை பெற்றவள் மடியில் வாழ்ந்ததை விட-எம் பசிபோக்க உன்மடியில் தானே தாயே நாம் இருந்தோம், நீ இறவாத வரம் பெற்ற தாயம்மா, எம்மை வாழ வைத்த கடவுள் கடலே நீயம்மா. என்றும்போல் அன்றும்தானே-எம்மை அலையோசை தாலாட்டி அமைதியாய் உறங்கவிட்டாய் அன்னையாய்-எம்மை அரவணைத்து காத்தவளே, உன் அலையனுப்பி-எம் உறவளித்ததேனோ? தாயே, அன்றும் உன்னை நம்பித்தானே உன் கரைமேலே கண்மூடினோம், ஊர்புகுந்து உறவளித்தாய் உரெல்லாம் பிணம் விதைத்தாய், என் அப்பாவை க…
-
- 1 reply
- 668 views
-
-
விதைகளை தின்னும் தேசத்தில் முகிழ்த்தவளே, கனவுகளை கருவறுக்கும் கொலைவாள்களிடையே எழுந்தவளே.. இழப்பின் வலிகளை மொழிகளால் இறக்க முனைந்தவளே இழிகாலதில் இறங்கிய ஊழியின் மகளே.. குருதி குடிக்கும் பேரினத்தின் குரல்வளையில் விலங்கு பூட்டவா நீ எழுந்தாய் ... இல்லையே.. அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே நீ அமர்ந்தாய் வீதியில்... விபூசிகா... வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே உன் குரலணுக்களின் தீண்டலால் தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் கருகி நைந்துபோன திடல்களிலும் ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன.. வேரீரமிழந்து இலையுருத்திக் கிளைசிதைந்து போன பெருமரத்தில் கூடுகள் அழுகின்றன. உடல்சுமந்த குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்.. எட்டப்பர்கள் நாங்க…
-
- 6 replies
- 695 views
-
-
தாயே உனக்காயும் விபூசிக்காகவும். அம்மா அம்மா என - நீ அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம் நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள் இன்று போல.....! உன்னைக் கைவிடோமென நம்பிய உனது பிள்ளைகளின் கனவுகள் மீது உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன. உனது கண்ணீரை உனது துயரங்களை நீ சொல்லியழுகிற போதெல்லாம் மறுமுனையில் உனக்காய் உனது குழந்தைகளுக்காய் அழுத நாட்கள் அதிகம் தாயே....! நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள் விதையாகிப்போன பின்னும் வீரத்தின் அடையாளமாய் அவர்கள் விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில் வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் அங்கேயே வாழ விரும்பினாய்....! ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய் அவனது வரவைத் தானே நீ தினமும் ஏ…
-
- 6 replies
- 894 views
-
-
கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…
-
- 0 replies
- 488 views
-
-
என் வணக்கம் தீஞ்சுவைத் தமிழால் உனைப் பாட வந்தாரே அரசமகனார் யாழே, உனைப் பாட வந்தாரே!!! எட்டுத்திக்கிலும் பட்டி தொட்டியெங்கிலும் உன் கால் பதித்து, தமிழால் ஒன்றிணத்தாய் எனைப்போல் பல தமிழரை . இன்று, நீ வாலைக் குமரியென்றும் கட்டிளங்காளையென்றும் அணிபிரிந்து அளக்கின்றனர் உனைப்பற்றி ....... செந்தமிழ் மொழியாள் உனக்கேது பால் ?? மொழிக்குமுண்டோ ஆண்பால் பெண்பால்?? எனைகேட்டால் , தமிழ்மொழிப்பாலே உன்பால் என்பேன் ........ நித்திரையிலும் எனைத் தட்டி செல்லக்கதை பேசும் என் இனத்து யாழ் நீ .... உன் நரம்புகளை மீட்டியே நாளும் ஒரு இசை படிப்பேன் உன் மீது தூசு விழவும் நான் விடேன் என் யாழே !!!!!!! நீ ........ வாழிய வாழியவே பல்லாண்டு ந…
-
- 17 replies
- 2.2k views
-
-
கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…
-
- 0 replies
- 370 views
-
-
அம்மாவுக்காய் சில வரிகள் ----------------------------------- அம்மா, சும்மா எல்லோரும் காணும் கடவுள், என் அம்மா, மனித உருவில் நான் கண்ட தெய்வம், என்னை சுமந்தபோது-அவள் கருவறை நிறைந்திருந்தது, வறுமையால்-அவள் வயிறுமட்டும் வெறுமை, ஒற்றை வயிற்ரை நிரப்ப முடியாதவள், பெற்ற என் வயிற்ரை போராடினாள், பற்றைக்குள் செத்த மரங்களின் குச்சிகளை-தன் வலிமைக்கேட்ப ஒடித்துக்கொண்டு உச்சி வெய்யிலில்-அவள் பாதணியில்லா பாதங்களை பதித்து வந்து-என் பசி போக்கினாள், சில நேரம்-அவள் விற்காத விறகுகளை விலையேதும் பேசாமல் அரைப்படி அரிசிக்காய் போட்டுவிட்டு, அறைவயிரேனும் எனக்கு நிரப்பி விட்டால். நிரந்தரமாய் தன் வயிற்ரை காயவிட்டு. அம்மாவின் கண்…
-
- 0 replies
- 438 views
-