Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தியாக தீபமே தமிழ் மக்களுக்காய உண்ணாநோன்பிருந்து (15-09-1987 தொடக்கம் 26-09- ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதையை மீள்பிரசுரம் செய்கிறேன்.... தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே…

    • 5 replies
    • 714 views
  2. ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்.. ---------------------------- பூக்களைப்பிய்த்தெறிந்த காற்றுக்கு தெரியப்போவதில்லை பூக்கள் மென்மையானவை அழகானவை அன்பை பரப்புபவை என்று... ஆற்றாமையுடன் துவண்டுவிழும் இதயமொன்றின் பாடல்களைகேட்கும் பொறுமையும் அதற்கு இல்லை.. ஆயினும்... இதயத்தின்பாடல்களை கிழிந்து தொங்கும் இதழ்களின் ஓவியத்தை ஒடிந்த பல இறக்கைகள் சுமந்துகொண்டுதான் செல்லும்.. அவற்றில் ஒன்றாய் என் கவிதைகளும் பயணிக்கலாம்.. என் நேற்றைவரை எழுதி முடித்த விதிக்கிழவன் மார்பை பார்த்து என் மலர் மனதை பிய்த்தெறிய காற்றை ஏவிவிட்ட கதைக்கு நீதி கேட்க, அவன் எழுப்பிய ஆயிரமாயிரம் சிலுவைகளில் அறையப்பட்டு கனவழிந்து கண்ணீராய் செத்துப்போன காதல்களின் மொழியாய் பேச பூத்திருக்கலாம் என்கவித…

  3. ஒற்றைப் பேச்சில் ஒடிந்தே போனான்..! இனத்துக்காய் வீழ்ந்தோரை தூற்ற நீ யார்..??! கேள்விகள் கேட்க யாருமற்ற நேரத்தில் அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்..! அகோரமாய் தேசத்தில் நடந்ததை தரிசித்தவனுக்கு... ஊமையாகித் துணை நின்று அழித்தவனின் செயல் பாராட்டி சாகடித்துப் பின்... மனித உயிர்க்கான உரிமைகள் தேடும் "உண்மையை"க் கண்டறிவோரின் வேடங்கள் அவனுக்குப் புரியவில்லை..! வெகுண்டு எழுந்தவன் வேதனையில் துடித்தான்...! தன்னின மக்களுக்காய் குண்டு சுமந்த மண்டேலாவுக்கு ஒரு நீதி..!!! "உலக அமைதிக்கென்று" பசப்பி உலகை அடிமையாக்க.. ஊரூராய் குண்டு போடும் ஒபாமாவுக்கு நோபல் பரிசு..! சொந்த மண்ணில் இன அழிப்பை தடுத்து நின்றவனுக்கு "பயங்கரவாதிப்" பட்டம்...! அந்தப் பட்டம் அவ…

  4. தனியாக நானும் அலைகின்றேன் துணையாக நீயும் வருவாயா தூக்கங்கள் இன்றி தவிக்கின்றேன் கனவாக மட்டும் வருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) தவமாக நானும் இருகின்றேன் வரமாக நீயும் வருவாயா சுகமாக நானும் தொலைந்துவிட இதமாக உன்னை தருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) காதல் ஒன்றின் அர்த்தம் கண்டுகொண்டேன் பெண்ணே நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி வைத்த பின்னே சாயங்கால பூவாய் நீயும் பூத்திருந்தாய் சாலை தோறும் பெண்ணே உன்னை பார்த்திருந்தேன் (2) மலரே நான் மயங்கிவிட்டேன் மனதில் உன்னை சுமந்துவிட்டேன் (2) உயிரே என்னை வாழவிடு உயிரை கொஞ்சம் வாழவிடு (2) அங்கும் இங்கும் சுற்றும் வாலிபத்தில் பெண்ணே உன் காலுக்குள்ள நானும் சுற்றுகின்றேன் கண்ணே இரவினை பகைத்தேன் விழிகளினால் இதயமும் த…

  5. Started by அஞ்சரன்,

    உன் எழுத்தில் அம்சம் இல்லை உன் கருத்தில் ஆழம் இல்லை உன் சொல்லில் கூர்மை இல்லை உன் கவியில் உணர்ச்சிகள் இல்லை என்னை நோக்கிய கேள்வி என் பாணியில் போகட்டுமா நான் என்ன பெண்ணு பார்க்கவா போகிறேன் நான் என்ன கிணறு வெட்டவா போனேன் நான் என்ன சானை பிடித்தா தந்தேன் நான் என்ன பிட்டு படமா எடுத்தேன் என்னுள் எழும் இயல்பை உன்னுள் கொன்று புதைக்காமல் என் சமூகத்தின் முன் வீசி நின்றேன் பணம் என்றால் பிடித்து இருப்பார் தமிழ் ஆகிட்டே விலகி போகிறார் விமர்சனம் செய்கிறார் தெளிவெண்ணை கசக்கும் ஆனால் உடலுக்கு நல்லதாம் தமிழும் அப்டியே நான் பாரதி அல்ல பாமரன் .

  6. பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்.. ------------------------ காற்றையும் கடந்துபோகும் நிலவையும் கரைந்துபோகும் இரவையும் நினைவுகளால் கழுவிக்கொண்டே தொலையும் இந்த நாளொன்றில் கசிந்துகொண்டிருக்கின்றன கண்ணீர்த்துளிகளாய் ஞாபகங்கள்... அன்புச்சிதைவுகளின் காலப்படுக்கைகளுள் புதைந்துபோய்விடாமல் இன்னமும் என் இமையோரத்தில் எஞ்சி இருக்கின்றன உன் மேலான பிரியத்தின் படிமங்கள்.. ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் சிரித்தபடி உப்புக்கரிக்கும் இமைகளின் ஓரங்களில் ஓலமிடும் விசும்பல்களாய் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது மனது தனியாக... முன்னொரு நாள் சேர்ந்து நடந்த நீயில்லாத தெருவொன்றில் துருவக்காற்றில் ஒடுங்கிப்போகும் ஓரிரு ஓர்க் மரங்களும் நடுங்கியபடியே கடந்துபோகும் நாலைந்து ச…

  7. பொதுவாகவே தமிழ்நாட்டுகாவல்துறையினர் அனைவரும் என்றில்லாது விட்டாலும் அதிகமானவர்கள் ஈழத்தவன் ஒருவனை ஆத்திரத்தில் பேசும்போதும் அடிக்கும்போது வன்மத்துடன் அழைக்கும் பெயர் 'அநாதை அகதிப்பயலுகளா' என்பதுதான்.போனவாரம்கூட செங்கல்பட்டுதடுப்புமுகாமில் இப்படி சொல்லியே தாக்கியுள்ளனர்.அதனையே தலைப்பாக வைத்து ஒரு கவிதை (நன்றி: Tamil_Araichchi கூகிள் குழுமத்தில் ச.ச.முத்து) அநாதை அகதிப் பயலுகளா….! – ச.ச.முத்து செப் 6, 2013 1 அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோ, முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத…

  8. யுகமாறு காலம் நிலாந்தன் முந்தித் தப்பினவன் நீதிபதியானபோது பிந்தித் தப்பினவன் துரோகியாக்கப்பட்டான் குற்றவுணர்ச்சியின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு முந்தித் தப்பினவன் தனது வம்சத்தையும் வம்சவிருத்தியையும் பாதுகாத்துக் கொண்டான் பாதுகாப்பான ஒரு இறந்தகாலத்தைப் பெற்றவனெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளன் ஆனான் சீவியத்தில் நேசித்தவரை மரண நேரத்தில் கைவிட்டுச் சென்றவனெல்லாம் இறந்த காலத்தைத் தத்தெடுத்து விட்டான் சீவியத்தில் நேசித்தவரை மரணம் வரை பின்தொடர்ந்தவனோ மரணத்தால் உமிந்து விடப்பட்டு கைதியும் அகதியுமானான். வீரயுகமொன்றின் முடிவில் கொல்லப்படாதவனெல்லாம் கோழையெனில் தற்கொலை செய்யாதவனெல்லாம் ஒற்றனெனில் எங்களில் எ…

    • 3 replies
    • 678 views
  9. பசியாறல் அரிசி நன்றாக பூத்திருந்தது முன் விரிக்கப்பட்ட இலையில் பக்கத்தில் துணையாக காய்கறிகள் கரண்டியின் அளவைக் காட்டிச் சிரித்தது அரைத்தும் நிறம் மாறா பருப்புகள் நிறைந்த பிளாஷ்டிக்குள்ளிருந்து நீர் விளாவி உண்ணச் செல்ல மணம் ஈர்த்தது மதுவாகினி மழையாய் நைய் பொழிந்தாள் பசியடங்குதல் பரிமாறப்படும் பதார்த்தங்களால் மட்டுமல்ல… ந . பெரியசாமி பண்புடன் இணயதிற்காக http://new.panbudan.com/archives/11

  10. 1 பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து 'துழும்' என்னும் வரால்மீன்கள். என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் ஒரு மருங்கம் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்…

  11. ஊரை உறங்க செய்து நாய்களுக்கு தெரியாமல் நடந்து வெள்ளி பார்த்து திசை பிடித்து அவன் எல்லையை தொடும்போது ஆந்தைகள் முழித்து இருக்கும் அவன் மட்டும் விடிகாலை பொழுதில் குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க அவன் கால் அருகில் அரவம்போல் நகர்ந்து அவனை கடந்து போகும்போது உள்ளம் மகிழ்ந்து இருக்கும் உள்ளுக்குள் உள்ளே வந்துவிட்டோம் என இறுமாந்து நிமிர்ந்து நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும் யாரு நீ எங்க போறா .....பதில் யோசிக்க முன் சுடும் விசை கீழ் நோக்கி போகும் அதன் டிக் ஒலி அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும் ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும் சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு வலம் இடமா பாய்ந்து வேட்டுக்களை தீர்த்து எம்மை காப்பற்ற…

  12. Started by கோமகன்,

    ஓய்ந்த மழை பட்சிகளின் அயர்ச்சிகளை ஒன்றுக்கொன்று சீண்டிக்களைத்த மேகங்கள் தன்னிலை மாற்றி ஒழிகிறது களைகூட்டி காடு செய்த வானம் முன்பொருபோதுமில்லாத சிறகுகளிழந்து வெறித்துக் கிடக்கின்றது இரவைக் காத்து புத்தகங்களுக்குள் மறைத்த புகைப்படங்கள் காட்டும் புன்னகையும் பொருத்தமில்லாது பொய்த்து விடுகையில் விடுபட்ட சுவர்களுக்கிடையே குடிகொண்ட்ட கரப்பான்களின் ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள் நிலமூர்கிறது அங்கொரு மழை ஓய்கிறது.. யாழினி பண்புடன் இணையத்திற்காக http://new.panbudan.com/archives/401#more

  13. எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள் எதுவுமே நடக்கவில்லை...! வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...! வாங்க வந்தார்கள்!! தேவதைகளுக்கும் தேவை அதிகம் தேவையில்லாமல் தேடி வந்தார்கள்! அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்! வந்துபோனபின்... எம்மிடம் மிச்சம் மீதியாய் இருந்ததையும் அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!! வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு காட்சிதரும் தேவதைகளே! பாவம் நாங்கள்... சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!! போர் என்றும் சமாதானமென்றும் போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும் தீர்வென்றும் தீர்மானமென்றும் எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்! எதுவுமே நடக்கவில்லை! சாவின் விளிம்பில் நின்று கதறியபோது சாப்பிட ஏதுமின்றி திணறியபோது செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறி…

    • 6 replies
    • 795 views
  14. கண்டதும் காதல் கொண்டு கொண்டது கோலம் என்று கோதையர் மேல் காதல் கொண்டால் காயும் நிலைதான் காளையர்க்கு கொடியிடை வேண்டுமென்றும் கொள்ளை அழகு வேண்டுமென்றும் குருடராகிக் குனிந்து நின்றால் கோட்டான் கூட உமைக் குதறிடும் நல்லதும் கெட்டதும் நாலுவிதம் நம்மெதிரே உள்ளவைதான் நகல் நிகர்த்து நல்லது காண் நன்மை நீயும் பெற்றிடுவாய் கண் காணும் கவர்வின்றி உண்மைக் காதல் தான் வேண்டுமென்றால் கால்களில் வீழாது காதல் செய்வீர் கம்பீரமாய் நின்று காதல் செய்வீர் உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர் உத்தமி ஒருத்தி வந்திடுவாள் உண்மைக் காதல் தந்திடுவாள் உம்மை உய்யவும் வைத்திடுவாள் உணர்ந்து காதல் செய்திடுவீர் உண்மை அன்பைப் பெற்றிடுவீர் உன்மத்தராய் ஆகாமல் உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்

  15. Started by nedukkalapoovan,

    மாதா பிதா குரு தெய்வம் முன்னிலை இழந்தது ஆணியம் தாய் நாடு தன்னிலை இழந்தது ஆணியம் கருப்பையில்லா உடல் உயிரின் உன்னத இயல்பு இழந்தது ஆணியம் தாயைப் போல சேய் அடையாளம் இழந்தது ஆணியம் மொத்தத்தில்... தங்கு நிலையில் தொங்கி வாழுது ஆணியம். திடம் படு தோள் திமிரிரு ஆண்மை வீர வசனங்கள் குறைசலின்றி.. தோளின் வலு சுமையோ தாங்க முடியாது திணறியே போகுது திறனிழந்த நெம்பாக துணையிழந்த ஆணியம். பூமிதனை மிதிக்காமல் பெண்ணினந்தான் வாழ்ந்திடுமோ? பூப்பாதம் என்ன பூம் பஞ்சால் ஆனதுவோ தசையும் எலும்பும் 45 முதல் 100 கிலோ.... பெண்ணே பெண்ணை மிதிக்கும் கொடுமை காண மறுக்கும் குருட்டு ஆணியம். கங்கை சரஸ்வதி காவேரி வற்றுதல் உயிர்க்கு இழப்பு பூமிக்கு வறட்சி. பெண்ணின் அன்பு பெண்ணி…

  16. மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்றலிலோ வரால் மீன்களின் இராப்போசனத்திலோ நாணல்கள் அசைகின்றன. வண்டின் பாடலில் மயங்கி மொட்டுகள் துகில் அவிழ்க்கிற மாலை. அழிக்கப்பட்ட காடுகளும் காடு மண்டிய வயல்களுமானதே நீர்ப் பறவைகளை இழந்த என் மருத வழி. எனினும் நீர் ஓடி நெல்தழைத்து நீர்ப்பறவை வான் நிறைய ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் முட்டையாய் காத்திருக்கும…

  17. யாருக்காக இது யாருக்காக இந்த விசாரனை மனித உரிமை விசாரனை யாருக்காக பிள்ளையே நவீ பிள்ளையே போ போ புத்தனே தெய்யனே வா வா மரணம் என்னும் தூது வந்தது அது ஐக்கிய நாசபை வடிவில் வந்தது சொர்க்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது தமிழனைத் தானே நான் கொன்றது பலி ஏன் என்மீது வந்தது தமிழனுடன் உறவைத்தானே நான்நினைத்தது மாகாணசபை பிரிவு வந்து ஏன் என்னை பயம் காட்டுது எழுதுங்கள் என் நாட்டில் நான் ஆயுள்கால ஜனாதிபதி என்று ஒலமிடுங்கள் என் நாட்டில் ஐ.நாடுகள் சபை நுளம்பு சபை என்று ஐநாசபை அங்கத்துவம் என்பது எம்மை பித்தனாக்கி அலைய வைப்பது எங்கிருந்து அறிக்கை வந்தது இன்று எங்கிருந்து விசாரனை வந்தது இந்தியாவிலிருந்து தினம் ஆட்டுகின்றவன் ஆடுகின்ற நாடகம் இது

    • 15 replies
    • 1.4k views
  18. இத்தழிந்து போய்விடவில்லை என் இனத்தின் நம்பிக்கை. கொழுந்தெறித்து கிளைபரப்பிய இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே பார்...... செத்துவிடவில்லை எங்கள் வேர்களில் இன்னும் நம்பிக்கை. என்ன செய்யப்போகிறாய் இனி.... எங்களை கொன்ற கதையை யார்யாருக்கோவெல்லாம் வென்ற கதையாக சொன்னாய்..... எங்கள் பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை மாலை புனைந்து கொண்டாடினாய்..... எங்கள் மகவுகளின் நெஞ்சுகளில் நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு மண் வணங்கி மகிழ்ந்தாய்..... உனக்கான காலமென்று ஒன்றிருந்தால் எமக்கான காலமொன்றும் வரும் ! மீண்டும் வரும் !! *********************** காலம் திரும்புகிறது. நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள் குருவிச்சியும் இனி வரக்கூடும் வன்னியன் குதி…

  19. காலைக் கதிரொளியில் காற்று வரும் வழியில் - புதுக் காதல் கண்களுடன் உன் முகம் மாலை மயங்குகையில் மார்பில் ஜடை தவள -நகை மலரும் கண்களுடன் உன் முகம் நீண்ட இரவொன்றில் நிலவின் கீற்றொளியில்- நீர் மல்கும் கண்களுடன் உன் முகம் பாழும் பகலொன்றில் பாதைகள் மாறிய போது - துயர் நிறைந்த கண்களுடன் உன் முகம்....

  20. கைகள் இரண்டை கழுவாமல் கோக்குறாங்க உடல்கள் இரண்டை குளிக்காமல் தழுவுறாங்க இதழ்கள் இரண்டை எச்சிலுன்னு பாராமல் கவ்வுறாங்க நாக்கு இரண்டை நாதாரிகள் நக்கிறாங்க..! வாய்கள் இரண்டில் வார்த்தைகளோ ஆபாசம் கண்கள் இரண்டில் காட்சிகளோ அபந்தம் கைகள் இரண்டில் வேலைகளோ அசிங்கம்..! சோடி இரண்டு புதர்களுக்குள் குத்தாட்டம் உடல்கள் இரண்டு கார்களுக்குள் பந்தாட்டம் கால்கள் இரண்டு போடுவதோ கரகாட்டம்..! இணையத்தில் இணையுது இரண்டு FB இல் உடையுது இரண்டு துணிகள் துறந்து நடக்குது நாடகம் அதை காணொளின்னு பதியுது பகிருது காமத்தில் கோலோஞ்சினது..! கடைசியில்.. கொஸ்பிற்றல் நிறையுது பக்கெட்டுக்கள் குமியுது மாத்திரைகள் தீருது கூடவே கிருமிகளுக்கும் கொண்டாட்டம் அதுகளும் இது…

  21. அவர்கள் பார்வையில் எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில்- இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன சமையல் செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும் கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும் கதைக்கும் அவர்கள் எப்போதும் எனது உடலையே நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்........ அ.சங்கரி http://noolaham.net/project/01/16/16.htm

  22. Started by kayshan,

    நிரந்தரக் காயங்களின் தற்காலிக மருந்து எரிக்கும் நினைவுகளைத் தணிக்கும் எழுத்து துயரச் சாகரத்தின் சிறுதூரப் படகு மரணித்த மனந்தனிலே மலரமுயலும் குறிஞ்சி

    • 13 replies
    • 835 views
  23. அகதிக்காதல் நான் இடம் பெயர்த்தேன் என் இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.! #கேள்வி .! மழை இடியுடன் கூடியது காதல் வலியுடன் கூடியது வாழ்க்கை வேதனையுடன் கூடியது மனிதம் சுயநலத்துடன் கூடியது மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ? அனுபவிப்பு நீயூட்டனின் மூன்றாம் விதி பொய்த்து போவது மனைவியிடம் அடிவாங்கும் போது ..! (மொக்கை )

    • 6 replies
    • 1.3k views
  24. கனவில் வரும் தேவதை ... எனக்கு அந்த தேவதை தேவைப்படாதவள் அவளுக்கும் அப்படித் தான் இருக்கும் வரம் கொடுப்பதற்காய் அவள் வரமாட்டாள் என்பதும் தெரிந்ததே அப்படி இருந்தும் எப்படி அனுமதித்தேன்.. இளங்குவளை இதழ்களில் சொரிந்திருக்கும் பனிரசமருந்தியே - கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல உறைதலும் உய்குவதுமாய் கார அமிலக் கலப்பின் களைப்பு முடிந்து கண்ணயர்ந்தாலும் கனவில் வந்து விடுகிறாள்.. அனுமதியின்றி வந்து தட்சணை தராமலே சென்றுவிடுகிறாள் தேவதை கனவு முறிந்து எழுந்ததும் கல்லெறிகள் கலாச்சாரக் காவலர்களால் ... ........................ ஜீவா 25.08.2013 22.35pm (எத்தனை நாளுக்குத் தான் சீரியஸாவே எழுதிறது? ஒரு சேஞ்சுக்கு தான்) :lol: திருத்தம…

    • 10 replies
    • 1.3k views
  25. http://youtu.be/9eHfgta1ClQ உக்கிப்போன நினைவுகளில் துளிர்விடும் காளான் கனவுகள் ஆராதிக்க முடியாத பொழுதுகள் கரைந்து காணாமல் போகின்றது விறகில் எரித்த கரிப்பானையை கழுவுவதுபோல் துக்கம் படிந்த முகத்தை கழுவி கழுவி மீண்டும் அடுப்பில் வைத்தபடி வாழ்க்கை.. கச்சைக்குள் எதுவும் இல்லாத வெறுமை சனக் கூட்டத்தின் நடுவே அர்த்தமற்று நடக்கின்ற உணர்வு வெட்ட வெளியில் ஆணிவேர் அறுந்த மரமாய் எட்டுத் திசையில் இருந்து வரும் காற்றுக்கு அஞ்சியபடி.. எங்கும் எதையோ தேடியபடி.. நிச்சயமாக கடவுளை இல்லை. யாரோ ஒருவன் வந்து திடீர் என்று கன்னத்தில் அறைகின்றான் மறுகன்னத்தையும் காட்ட தென்பில்லாமல் நடந்தபடி.. ஏன் என்ற கேள்விக்கு இடமே இல்லை அடிமையாக விரும்பியவனுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.