Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. துரோகத்தின் தருணம் by ஃபெய்ஸ் அஹ்மத்ஃபெய்ஸ் இன்னும் சிறிது நேரத்தில் கூரைகளின் மீது தன் ஒளியை வாரி இறைத்துவிடும் தன்னுள் இருந்த பிம்பங்கள் மறைய கண்ணாடிகளுக்கு தாகம் எடுக்கும் தூசிபடிந்த தாரகை சொர்க்கத்தின் கண்ணீராய் கீழே விழும் சிலர் தங்கள் பாழடைந்த அறைகளில் தனிமையை போர்த்திக் கொள்வார் வேறுசிலர் விரக்தியை போர்த்தி இருப்பார் இது நீசத்தனமான துரோகத்தின் தருணம் அனைத்து கருணையும் முடிவுக்கு வரும் தருணம் அனைவருக்கும் சுயநலமே நோக்கமாக மாறும் தருணம் எங்கே செல்வாய் நீ என் ஊர் சுற்றி நெஞ்சமே உன்னிடம் யார் சினேகம் கொள்வார் இன்னும் கொஞ்சம் காத்திரு விடியலின் அம்பு பாய்ந்து குருட்டுக் கண்களுக்கு பார்வைகிட்டும் வரை அன்னியோன்னியமான முகங்களுக்கு காத்திரு …

  2. வெளியினிலும் தெரியும் வெறுங்கால் தடங்கள்...... சடா கோபன் காணி நிலம் வேண்டும் என் சொந்த காணி நிலம் வேண்டும்! உயர் காப்புவலயம் உள்வாங்கிக் கொண்ட என் காணி நிலம் வேண்டும்! பட்டைகட்டி துலா மிதித்து என் பூட்டன், நிலம் செழிக்க நீர் இறைத்த அந்தத் தோட்டத்துக் கிணத்திலே ஒருவாளி தண்ணியள்ளி என்தொண்டை நனைத்திடல் வேண்டும் என் காணி நிலம் வேண்டும்! ஆயிரமாய் சப்பாத்துக்கள் அழுத்திச் சென்றாலும் இலட்சங்களாய் சில்லுகள் உருண்டு திரிந்தாலும் அழியாது சுவடுகள் எந்தனது முன்னோரின் வெறுங்கால் சுவடுகள்.... ! சாகாது இன்னும் பத்திரமாய் அங்கு உயிர்ப்போடு இருக்கிறது…

  3. a உன்னை ஒரு தமிழனாகப் பார்த்தால் படி இதை!. ''நான் முதலில் இந்தியன்'' என நினைத்தால் படிக்காதே இதை! வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி கன்னியாகுமரியிலிருந்து கை...தட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும் ஈழத்தமிழன் ; அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான் இங்கிருக்கும் சோழத்தமிழன்! சோழத் தமிழன் சோர்வு தவிர்க்க- ஓர் 'அண்ணா' வாய்த்தது போல்- ஈழத் தமிழன் ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி' வாய்த்தான்! முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது - தமிழின் உயிரும் மெய்யும்; ஆனால்- ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது- தமிழரின் உயிரும் மெய்யும் ! பிரபாகரன்! அவ் ஆறெழுத்து அல்…

    • 1 reply
    • 1.4k views
  4. பேனையை விட எனக்கு பென்சிலாக இருக்க ஆசை ஏனெனில் நீ சீவி கூர் பார்க்கையில் உன் கன்னங்களில் அடிக்கடி... முத்தமிடலாம்.

  5. By ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் - சுதந்திர விடியல் இதுவல்ல கரை படிந்த வெளிச்சம் இரவு குதறித் துப்பிய விடியல் இதுவல்ல எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியரைந்த தெளிந்த விடியல் இதுவல்ல பரந்து விரிந்த வானத்தின் கால்வெளியில் தாரகை நிரைத்து நிற்கும் இலக்கொன்று இருக்கும்! பொங்கிப் பெருகும் இரவின் அலைகள் அமைதி கொண்டு கழுவிச் செல்லும் கரையொன்று இருக்கும் இதயச் சுமையை ஏற்றிவரும் ஓடம் தங்கி இளைப்பாறும் துறையொன்றிருக்கும் என்று எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியலைந்த தெளிந்த விடியல் இதுவல்ல! புரியாத புதிராய் வாலிப ரத்தம் தழுவத் தூண்டும் கரங்கள் கிரங்கிப்போன பார்வைகள் அன்பும் அழகும் தொட்டும் தொலைவில்.... இருந்தும் காவு கொடுத்த காதல்கள் எத்தனை? விடியலின் சுடர்மிகு…

  6. அழகு மலர்களின் மெளன மொழியில் காதல் கொண்டு.. விரியும் இதழ்களின் காந்தக் கவர்ச்சியில் கவர்ந்து..கள்ளுண்டு கலவி கண்டு கருத்தரிக்க உதவுகிறான் காதல் தூதுவன் இவன்..! அந்த விசயத்தில் இவன் ஒரு "பிளே பாய்"..! மானுட உலகம் மாற்றி அமைத்திட்ட இயற்கையின் நியதியில் கருத்தடை மாத்திரைகள் கருப்பைகளுக்கு விடுமுறை தர யோனிகளுக்கோ ஓய்வில்லாத உரசல்கள்..! உராய்வு நீக்கிகளுக்குக் கூட அங்கு பஞ்சம்.. கிழியும் அந்த உறைகளின் வியாபாரமோ இன்று உச்சியில்..! நிமிட நேர உள்ளக் களிப்பில் போதை கண்டு.. உடலில் சேரும் அந்த மாத்திரை நஞ்சுகளின் தாக்க அறிதல் இன்றி கூடிக் களித்திருக்குது மானுட சமூகம்..! பாவம் இவன் அதே.. மானுட உலகின் அரக்கச் சிந்தனையில் பூச்சி கொல்லி…

  7. ஹைக்கூக்கள் 10 பார்த்து சிரித்ததால் முறிந்தது அடுத்த வேலியின் பூவரசந்தடி மங்கலம் பாடிக்கொண்டிருந்தாள் மனைவி மங்களம் தலையாட்டிக்கொண்டிருந்தது வேலியில் இருந்த ஓணான் இராணுவத்தால் வெட்டப்பட்டிருந்தது வேலி அழகாய் தெரிந்தது பக்கத்து வீட்டு கிணற்றடி இற்றுப் போனது கூரை சிரித்தன விண்மீன்கள் நீ தூங்கியதால் நான் தூங்கவில்லை குறட்டை. விரல்களின் நளினத்தால் விளைந்தது நல்ல இசை நடனமாடியது குழந்தை. நிலவில் கூட மேடுபள்ளமுண்டு இல்லை உன்முகத்தில் மேக்கப். வல்வையூரான்.

  8. யாழ் நகர் இந்துக்கல்லூரி பல கலை பயில் கழகமும் அதுவே தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே கீதம் இசைத்த கல்லூரி...! நல்லூரின் வீதியிலே இராசையா திலீபனை பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..! பொன்னம்மான் தொடங்கி... பல நூறு வேங்கைகள் தமிழீழக் களத்தில் அணிவகுக்க அழகு பார்த்த கல்லூரி..! ஒப்பரேசன் லிபரேசனிலே ராதா என்ற சாதனையாளனை சரித்திரமாக்கிய கல்லூரி..!! இன்று.. கிரிக்கெட் தொடர் என்று ஆனந்தாவோடு போடுவதென்ன.. சதிராட்டமா..???! ஆனந்தாவின் சிங்கள மைந்தர்கள் கோத்தபாய முதல் பொன்சேகா கண்டு பசில் ராஜபக்ச வரை.. பேரினச் சிங்களச் சேனையின் மூத்த இனவெறியர்கள்..! அன்னையே தெரியுமா அந்தச் சேதி உந்தனுக்கு..! தமிழினக் கொலையின் போர்க்குற்றவாளிகள் வேறு யா…

  9. Started by விசுகு,

    ஆளும் கட்சிக்கு வரி மீது ஆசை எதிர்க்கட்சிக்கு கரி மீது ஆசை மக்களுக்கு மானியம் மீது ஆசை தாத்தாவுக்கு முதல் போக ஆசை பாட்டிக்கு மகனோடு வாழ ஆசை மகனுக்கு - அம்மாவின் பென்சன் மீது ஆசை மருமகளுக்கு ஒரு சமையல் ஆசை கணவனுக்கு உழைக்க ஆசை மனைவிக்கு புருசன் வீட்டிலிருக்க ஆசை பிள்ளைக்கு அப்பா அம்மா வெளியில் போக ஆசை வாடிக்கையாளருக்கு வங்கிக்காட் மீது ஆசை வங்கிக்கு வட்டிமீது ஆசை விற்பவனுக்கு விலைமீது ஆசை வாடிக்கையாளனுக்கு கழிவு மீது ஆசை வாகன ஓட்டிக்கு வேகம் மீது ஆசை புகை பிடிப்பவனுக்கு- நூறு ஆயுள் மீது ஆசை இந்துவுக்கு இந்தியாவை ஆள ஆசை இசுலாமியருக்கு உலகை ஆள ஆசை கத்தோலிக்கருக்கு காசால் ஆள ஆசை வாலிபருக்கு திருமண ஆசை …

  10. வேதப் பொருளே வெற்றுச் சிலையா நீ? சக்தியின் பெருவடிவே சங்காரத் திருவுருவே சிம்ம வாகனியே சிங்காரப் பெருந்தேவி சும்மா கிடக்கிறாயே.... உன் சுயம் எங்கு போனது? வேட்டை ஆடுகிறாய், வீதியுலா வருகிறாய் பாட்டம் கிடந்துழலும் பிள்ளைகளைப் பாராமல் மாற்றாரை உன் மண்ணில் மகிழ்ந்துலவ வைக்கிறாய் உனக்கென்ன கொலுவிருக்கும் இடமெல்லாம் கொண்டாடப் பெருங்கூட்டம் பட்டுப்பளபளப்பும், தங்கத் தகதகப்பும், பளிச்சென்று ஒளிவீசும் வைரச்சிலுசிலுப்பும், வெள்ளிக் கொலுசும், – வீரத் திருவாளும் , அள்ளி முடித்த கார்கொண்டை அலங்கரித்த வெள்ளி, பிறையும், துள்ளிக் குதித்தொளிரும் மின்னி மிடுக்கும் காணக்கண் போதாது அம்மையே….- ஆயினும்........ கள்ளச் சிரிப்பொளிரும் – உன் வதனக்கோலம் முள்ளாய் …

  11. a ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே ! நீ எங்கே இருக்கிறாய் ? ````````````````````````````````` ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே! தமிழீழத்தின் அடிமையிருள் ... போக்க வந்த வீரத்திருச்சுடரே! தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே! இந்திய நாய்களின் வேட்டை மானே! நீஎங்கே இருக்கிறாய்? உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய் உன் ஆர்த்த அரியணை மேனிக்குக் குறி வைத்திருப்பதாய்ச் சொல்லிச் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களே, இராசீவின் வஞ்சக வேடர்கள்! தஞ்சம் கோராத தமிழனே! அஞ்சாமையின் தொகுப்பே! நீ,எங்கே இருக்கிறாய்? கனிவுக்குக் கைகொடுத்து, கல்போன்ற நின்தோளை நீவீ,-உன் கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள், உன்னைச் சுட்டுப் பொசுக்கக் குறிவைத்துத் திரிகிரார்களாமே! மறம் மாண்ட தோற்றமே! அறம் மா…

  12. சண்டை களத்தில் சமருக்குப் பயந்து சாவுகளைச் சாட்டி சமுத்திரங்கள் தாண்டி சந்துபொந்தெங்கும் சரணடைந்திட்ட சாமிகளே... "சமரு"க்கு மட்டும் சாலை வரும் சங்கதி கண்டு சந்தி சிரிக்குது..! சனங்களின் பயபக்தியில் சன்னதமாடும் சாமியார்கள் சட்டுப்புட்டென்று சதுரம் வளர்க்க சந்தர்ப்பம் வழங்கியது போதும்..! சரித்திரம் படைக்க சண்டைக்குப் போன தேசம் சரிந்து கிடக்குது சார்ந்திருக்குது சந்ததி ஒன்று..தப்பிப் பிழைக்க..! சாவில் தான் சந்தர்ப்பம் கண்டும் கரங்கொடுக்க மறந்தீர்..! சரிந்தது போதும் அவ்வினம்.. சரணடைந்தொரு அடிமை வாழ்வில் சண்டித்தனம் இயற்றியதும் போதும்..! சட்டுபுட்டென்று காரியம் ஆகட்டும் சில்லறைகள் நிறையும் உண்டியல்கள் ஊருக்குப் போகட்டும் சாலை வரும் சாமிகளே…

  13. அவசரப்படும் மனிதர்கள் அடைக்கப்படும் முன்கதவுகள் அடங்கி கூடடையும் பறவைகள் அமைதியாகிப்போகும் தெருக்கள் - என அந்திகள் அழைத்துவருவன அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன, நழுவிச்செல்லும் கதிர்களும் மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும் அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும் புதர்களின் அரவங்களும்- இந்த அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன. இந்த, அந்திகள் இருளை மட்டும் சுமந்து வருவதில்லை பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும் பயம் நீங்காத சில இரவுகளையும் கூட அழைத்து வந்து விடுகின்றன, அநாயாசமாய் அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன அரவங்களும் ஆந்தைகளும் புதிரான சில மனிதர்களும். என்னவோ தெரியவில்லை........... இன்னும், அந்திகள் வருவது …

  14. போய்வா காதலா போய்வா !!! என்னை பிடித்த என் காதலா..... என்னை சீண்டுவதிலே என்ன இன்பம் உனக்கு?? உள்ளம் குமுறியே ஊமையான நான் , பாடுவேன் என்று ஏன் நினைக்கின்றாய்?? உன் பார்வையில் நான் ஒரு கொடுமைக்காரி.... அப்படியே இருப்பேன் நான் உனக்கு. வார்த்தை ஊசியால் என் மனதை குத்துவதை விட்டுவிடு... என் மனம் பாறையாகி நாளாச்சு என்காதலா . எங்கள் காதல் வளரும் என்று எனக்குத் தெரியவில்லை ... என் கை பிடிக்க முதலே என் கண்ணீல் நீர் வருவது உனக்கு இன்பம்....... உன் நினைவை மறக்க நான் நினைக்கின்றேன் போய்வா காதலா போய்வா... நாம் நடந்த கடற்கரையில் என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........ போய்வா காதலா போய்வா!!!! மைத்திரேயி 23 02 2013

  15. யார் தீனி போடுகின்றார்களோ அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள் தீனியில் பங்கு கேட்ட நாய்களை கடித்துக்குதறியது. சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது சில நேரம் தன்பாட்டில் கடித்து எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள் மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள் வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!! "எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்" சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி அழைத்துச் சென்றார்கள் எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள் வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு கப்பாத்து பண்ணிவிட்டார்கள் இது நாய்களின் அந்திம காலம் வேட்டையாடவும் தென்பில்லை செல்லப்பிர…

  16. சீனியம்மா என்னைப்பெற்றது என் அம்மாவானாலும் சிறுவயதில் உன்மடிதானே என் இடம் என் சீனியம்மா... நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி சித்திரமாய் என்னை வளர்த்தாய் ... உன்கை பிடித்தே நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது உலகமே என்கால் அடியில் ........ காலம் என்ற நதியில் கரைபுரண்ட வெள்ளத்தில் நீயும் நானும் மல்லுக்கட்டினோம்......... ஒவ்வரு வருடமும் இங்கு தோல் உரிந்து முடி உதிர்ந்து குளிர் வேளையில் உறையும் ஃபைன் மரங்கூட வெய்யில்பட புதுப்பெண் போல் பொலிவு பெறும்........ குருவிகளும் தேன் வண்டுகளும் ஃபைன் மரத்தை சுத்திவர , உனக்கும் எனக்கும் மட்டும் ஏன் சீனியம்மா கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல் பொலிவு இழக்கின்றோம் ?????????? காலம் கிழித…

  17. சித்திரை நினைவுகள் சித்திரை நிலவில் நித்திரை நீக்கி - உன் முத்திரை விழி பார்த்திருந்தேன்... நிலவின் குளிர்ச்சி உந்தன் முகத்திலா..... உன் முகத்தில் குளிர்மை நிலவின் முகத்திலா - என்று குழம்பிய கணங்களைக் கடப்பதுதான் காதலின் சுகமா என்றிருந்தேன்.... என்னில் ஒட்டிய நினைவு நீயடி... உன் விழியால் எனை நனைத்தாயடி... உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி.... அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி.... வலிக்கும் நிலத்தில் தான் என் வாழ்வு.... மறுபடி நீ வந்து - என்னை மணக்கும் பொழுதில் தான் பலிக்கும் என் நினைவென்று... சிந்திய முத்துக்கள் கொண்டு என்னை வழியனுப்பியவள்.... குரல் கேட்டு நாலு சித்திரை கடந்துவிட்டது.... அவள் நினைவுகளோ - என்னை அகல மறுக்கிறது...... எங்களைக…

  18. நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக் கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள் ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ…

    • 7 replies
    • 1.2k views
  19. {சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது} அரபிய மணற்படுக்கையின் அற்புதங்களே ஈச்சை மரத்து வேர்களே.. கூலிகளாய் நாம் அங்கு சிந்திய வியர்வை சிதறிய நீரில் வளர்ந்து பெருத்த திமிர்களே..! எட்ட வளர்ந்து கனி தரும் போது ஒட்டகமாய் தாங்கி நின்று பறித்துப் பெட்டியில் அடைத்து ஏற்றி விட்டு நாம் கூனி விட்டோம்..! எஜமானர்களின் எண்ணெய் காசில் நீரோ நிமிர்ந்து நின்று மினுமினுக்கிறீர்..! விமானம் ஏறி ஆசை கொண்டு அரபுலோகம் வர தங்கை மீது பழிமுடித்து அவள் தலை கொய்தீர்..! நீரோ.. வேரூன்ற கப்பலேறி தமிழீழம் வருகிற…

    • 82 replies
    • 6.3k views
  20. உய்தல் தேவஅபிரா மரணத்தைக் காலமும் கடலும் மட்டுமே எழுது மென்றிருந்தோம். எம் வாழ்க்கையின் மரணத்தை அரசர்களே எழுதினார்கள். மரணம் பெருநிலமானது… வாழ்வோ சிறுதுளியானது…. கரைத்துவிட அஸ்தி இல்லை.. கண்ணிர் விடச் சமாதியில்லை… காணாமல் போகவும் காத்திருக்கவும் கையறவும் நேராத போரொன்று சொல்.. இருப்பவரை ஏறிமிதிப்பவர்க்கு இறந்தவர்களை ஏறிமிதிப்பது கடினமா என்ன? உனதும் எனதும் பெறுமதி இருத்தலில் இருந்ததா? இறப்பில் இருந்ததா? இறக்கப் பழக்கிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் இருக்க விரும்பிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் கலந்து விசும்பில் அலைகின்றன. போரின் சதிரில் ஆடிவிட்டு பேயலையும் பெருநிலத்தில் …

  21. Started by கறுப்பி,

    • 3 replies
    • 833 views
  22. வந்தோரை வாழவைத்து வீட்டிலே தூங்கவைத்து வாசலில் படுத்தறங்கும் இனம் எம்மினம் சண்டை என்று வந்தாலும் சமாதானம் என்று சொன்னாலும் சமனாக மதிப்பளித்து இன்று போய் நாளை வா என இன மானம் காத்த இனம் உலக வரைபடத்தில் யேசு கேட்டதை காந்தி கனாக்கண்டதை வள்ளுவன் சொன்னதை அரங்கேற்றி அரசமைத்த இனம் நரிக்குண நாட்டவனின் நடிப்பில் மயங்கி சுற்றி வந்த வர்த்தகஅரக்கர்களின் பிடிக்குள் சிக்காது செய் அல்லது செத்துமடியென செய்து காட்டிய இனம் முள்ளிவாய்க்காலில் தன்னை தானே பெட்டியடித்து சர்வதேசத்துக்கு குறிவைத்த தலைவன் சொல்லிய செய்தி கொன்றால் விடுதலை விட்டாலும் அது தான்.. தீர்க்க தரிசனம் அவனது ஆயுதம் இனி போராட்டம் உங்கள் கையில் அவன் கை காட்டியது வெளியில் எல்லாம…

    • 26 replies
    • 2.6k views
  23. வீர வேலன் எங்கள் தோழன் ஊருக்கு நீ பாலகன் வீரர்களுக்கு நீ மாவீரன் கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான் நீ நொண்டி விளையாடினாய்... கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி நீ பந்து விளையாடினாய்.... பதுங்கு குழிகளுக்குள் மறைந்து கண்ணாமூச்சி விளையாடினாய்... நீ விளையாடிய விளையாட்டையும் கொரில்லா பயிற்சியாக ரசித்தார் உம் தந்தை உலகத் தமிழ்த் தந்தை... கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும் நெஞ்சை துளைத்த குண்டுகளையும் ஒன்றாகவே பார்த்த வீரன்... வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும் மார்பு பசிக்கு குண்டுகளையும் உண்ட வீரன்... நீ! பூக்களின் தேசத்தில் போர்க்களம் புத்தன் கை பிடித்தே யுத்தம் செய்த ஆரிய அரக்கன்... புத்தமும் காந்தியமும் கை கோர்த்தே பாலச்சந்த…

  24. கவிதைகளால் மலர் தொடுத்துன் கழுத்தினிலே மாலையிட்டேன் கனிவான வார்த்தைகளாலுன் காதுகளில் இசை படித்தேன் காதல் மேவ காரிகையுன் கனியிதழில் இதழ் பதித்தேன் காலமெல்லாம் நீயே என்றுன் கரம் பற்றி நான் இருந்தேன் செந்தமிழில் செல்லமா யுனை செல்லக் கண்ணம்மா என்றேன் உந்தன் செல்லக் குறும் பையெல்லாம் உயிரோ டணைத்து உவகை கொண்டேன் உந்தன் தூக்க சந்தம் கேட்டு எந்தன் தூக்கம் நா னடைந்தேன் ஜென்ம மெத்தனை யெடுத்தாலுமினி உன் னோடு தான் வாழ்ந்திடுவேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.