கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நோர்வீஜிய கலாச்சார அமைப்பும் ஒஸ்லோ குல்த்தூர் ஸ்கூலும் என்னிடம் உலகம் வெப்பமயமாதல் பற்றி நாடகம் ஒன்று எழுதும்படி கோரினர். உலகம் வெப்பமயமாகி உருகி பிரளயம் ஏற்பட்டபின்னர் நிலத்தை தேடி படகுகளில் அலையும் மக்களை அடிப்படையாக வைத்து மறை முகமாக எங்கள் கதையையும் சொல்லும்வகையில் நாடகம் ஒன்று எழுதியிருக்கிறேன். நாடத்தில் தமிழ் மாணவர்களும் ஒஸ்லோ பலே பள்ளி நோர்வீஜிய மானவர்களும் ஒஸ்லோ நாட அமைப்புகளைச் சேர்ந்த நோர்வீஜியர்கள் ஆபிரிக்கர்களும் நடிக்கின்றனர். ஆங்கில நோர்வீஜிய கதைச் சுருக்கமும் வசனங்களும் உண்டு. இறுதி முடிவில் இயற்க்கை அன்னை இரக்கப் பட்டு வெள்ளத்தை உறைய வைக்கிறாள் எல்லோரும் சேர்ந்து பனியை பந்துகளாக்கி விழையாட்டு விழையாட்டாய் மலை முகடுகளுக்கும் துருவங்களுக்கும் எறிகிறார்…
-
- 13 replies
- 1.7k views
-
-
மானத்தி அவள்; தமிழச்சி!! செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா! 1 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு; உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!! ————————————————————– 2 மானத்தில் - தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் - பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் - தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் – சிங்களனுக்கு!! ————————————————————– 3 அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஒன்று பார்த்தவரையெல்லாம் எரித்திருப்பாள், அல்லது – தன்னையாவது எரித்துக் கொண்டிருப்பாள்!! ————————————————————– 4 தப்பித் தவறி அவள் பிள்ளை இதை பார்த்திருந்தால்- எத்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
கேளு மச்சான் கேளு ! நாங்க சொல்லுறத கேளு...! வேணாம் உனக்கு Girl ! நெஞ்சில் கொட்டிடும் தேள்! சுத்தி வரும் World ! இங்கு பொண்ணுங்க ரொம்ப Bold ! உன்னிதயம் ஆகும் Malt ! அதைத் தாக்கிடும் Hi-Volt! நீ ஒரு white board ! அவள் இதயம் ரொம்ப Hard ! அவளுக்கு எல்லாமே Sport ! அவள் காதலும் ரொம்ப short ! உன் மனசோ மெல்லிய Glass ! அவள் பார்ப்பாள் Hi-Class ! அவளுக்கு நீ Useless ! ஆவாய் நீ Needless ! அவளுக்கு தேவை காசு! அதுக்காக ஆகணுமா நீ தேவதாசு!? தூக்கியெறிஞ்சா எல்லாம் தூசு! இல்லையென்றால் சிலுவையில் நீ யேசு! காதலித்துப் பாரு! கண்ணில் ஓடும் ஆறு! தேடித் திரிவாய் Bar ! நீ அடிப்பாய் Beer ! நீயும் கொஞ்சம் மாறு! உன் இலட்சியங்கள் வேறு! முட்டிமோதிப் பாரு! வெற்றி பெறு…
-
- 17 replies
- 1.7k views
-
-
மடியொன்று கண்டேன்! ஆழமறியா அண்ணன் அணியை-என்றும் பலம் சேர்த்துப் பகை முறிக்க- அண்ணன் திசை நோக்கித் திளைக்காமல் நடந்தனரே-எம் மாவீரச் செல்வங்கள், இவர்கள்பணி நீயேற்று-மக்கள் துயர்துடைக்க விரைந்து சென்று, அவர்களுள் ஒருவனாய்- இன்று மீளாத்துயில் கொள்வோனே! உன் திறனை நானறியேன்- அதை உன் நண்பர் சொல்லிடவே செவிமடுப்பேன்- ஆனால் உன்சுமையை நானறிவேன் எட்ட நின்று. ஊரவரில் முன்நின்று உறுதியுடன் பேசிடுவாய்- இருந்தும் வேதனைகள் உள்ளவரை வெறுமனவே விடமாட்டாய்- உன்னுடன் நெருங்கிப் பழகினதோ மூன்றே மூன்று மாதங்கள்தான்- அதனுள் புரிந்தவைகளோ ஏராளம் ஏராளம்!- ஒருபுறம் சிறியவர் கருத்தை ஆர்வமுடன் நீயேற்றுப் பணிவுடனே நடந்திடுவாய்- மறுபுறம் மூத்தோர்கள் வியந்திடவே நேர்மை…
-
- 13 replies
- 1.7k views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள் தாய் நாட்டில் உதவி வேண்டி நிற்கும் உறவுகளுக்காய்...... அனைத்துலகம் எங்கிருக்கும் எம் அனைத்துலக உறவுகளே ! எங்கள் வன்னியின் அவலங்களை இன்று உலகமெங்கும் அறிவீர்கள் வாழ்விழந்து போன எங்கள் நிலைமையையும் அறிவீர்கள் இன்று மரங்கள்தான் நம் வீடு மணல்தரை தான் நம் படுக்கை காட்டு மிருகங்கள் தான் நம் உறவு குண்டுபோடும் கழுகுகள்தான் நம் எதிரி. எமக்கு வீடு இருந்தும் எம் வாழ்வை காட்டில்தான் வாழ்கின்றோம் காரணம் புரியவில்லை கண்டபடி ஓடுகின்றோம். காலையில் எழுந்தபின்னர் தண்ணீர் தான் நம் உணவு அதன் பின்னர் பசிக்காய் அழுவதுதான் நம் கவலை. பசியின் கொடுமையினால் பழைய உணவை உண்டுவிட்டு புசித்த பின்னர் சிலவேளை …
-
- 12 replies
- 1.7k views
-
-
கேட்டேன் தந்தான்... கேட்டேன் அன்பை தந்தான் மறுக்காமல் என்னிடம் கேட்டான் பல கேள்விகள் குடுத்தேன் அனைத்திற்கும் அவன் எதிர்பார்த்த மாதிரியே பதில்கள் இருந்தான் உறவாய் நீண்ட உறவானது எமது உறவு...இன்று முடிக்க நினைக்கிறான் இதற்கும் பதில் என்ன தெரியுமா என்னிடம் ஆமாம் முடித்துவிடு உன் ஆசைக்கு நான் தடை நிற்பதில்லை... தொடங்கியவனும் நீ முடிக்க நினைப்பதும் நீ ஆனால் தொடங்கியதை முடிப்பதற்கு நான் தயார் இல்லை...உன் ஆசைக்கு நான் என்றும் மறுப்பு தெரிவிக்க போவதுமில்லை நீ முடிந்ததாய் நினை நான் நினைவுகளுடன் இருப்பேன் அது போதும்
-
- 13 replies
- 1.7k views
-
-
-
இந்: உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள இல:உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு கிறங்குறேன் நொருங்குறேன் ஆனால் அவனே என் மாப்புள்ள இந்:கொஞ்சி நான் மிஞ்சுறேன் மிஞ்சி நான் கொஞ்சுறேன் ஏன்டி இந்த நாடகம் இல: கெஞ்சி நான் அஞ்சுறேன் அஞ்சினா கெஞ்சுற நானும் அவன் ஞாபகம் இந்:சொல்லாம சொல்லாம மூடி வெச்சு என்ன அங்கேயும இங்கேயும் அலையவிட்ட இல: அல்லாம கில்லாம நோக வெச்சு என்ன முன்னாலும் பின்னாலும் மொன இந்: ஓத்துக்கிட்டா மாமன் தான் கட்டிக்க வாரேன் வாரேன் இல: வெட்டுனா ஒட்டுறா ஒட்டுனா வெட்டுறா லூசு பையன் மாதிரி …
-
- 3 replies
- 1.7k views
-
-
ரொம்பக் குளிருதடி... கொஞ்சம் பாரேன்டி! தேகம் நடுங்குதடி... பக்கம் வாயேன்டி! வெள்ளை நிறத் தேவதையே... வண்ண முலாம் பூசுறியே! கிட்ட வந்து முட்டுறியே... தட்டி விட்டுப் போகிறியே! தொட்டுப் பார்க்க முன்னால... கட்டிப் போடுறாய் கண்ணால! ஓரங்கட்டுறாய் தன்னால... ஒண்ணும் முடியல என்னால! கண்ணைச் சிமிட்டாதே... கடித்துக் குதறுதடி! என்னை மிரட்டாதே... எண்ணம் சேர்ந்து மிரளுதடி! என்னைத் தூண்டி இழுக்கிறாய்... எல்லை தாண்ட அழைக்கிறாய்! இன்பத் தொல்லை தருகிறாய்... தீண்டும் முன்பே மறைகிறாய்! வண்ணம் தந்த வானவில்லே... எங்கேயுன்னைக் காணவில்லை! கனவில் வந்து போறவளே! -உன் நினைவில் நொந்து போகிறேன்டி!
-
- 20 replies
- 1.7k views
-
-
“திணை” செப்டம்பர் 2016 இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். யாழ் தோழர்களின் வாசிப்பும், கருத்துகளும் கவிதைத் தளத்தில் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன. ஸ்டிக்கர் --------------- மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்! இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள் வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை. நவீன உலகுக்கேற்ப நீதிகளை மறைபொருளாக வழங்குகிறார்கள். மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும் இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர் குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும். குறைந்தபட்சம் கோபத்தில் கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும். சிகரெட் பெட்ட…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிங்களக்கோட்டையில் சீறியே பாய்ந்த புலிவீரர்களிற்கு காணிக்கையாக. . . . ஏறுது ஏறுது புலிக்கொடி பார் ஏற்றிடுவோர் எம் மறவர் பார் வெற்றியை முத்தமிட்ட வீரர் மாற்றான் பகைமுடித்த தோழர் தோற்காமல் நின்ற தமிழர் கூற்றவனை கொன்றழித்து காற்றிலே கரைந்திட்ட புலிவீரர் அன்று உற்றார் உறவினரை இழந்தோம் வேற்று மனிதராய் வாழ்ந்தோம் - அந்த கற்கால வாழ்க்கை கழிந்ததடா - கண்முன்னே பொற்கால வாசல் தோன்றுதடா வலிகள் தாண்டி வலிமை தாங்கி வழிகள் பல கண்டோம் எம் கதியை எண்ணி கலங்கியதில்லை - தினம் விதியை வென்று நின்றோம் பொறுமை போர்த்தி போர்க்களம் வென்று புதுமைகள் பல செய்தோம் தலைவன் வழியிலே தடைகள் பலவுடைத்து தமிழனாய் தலைநிமிர்ந்தோம் அன்னியசக்தியின்…
-
- 6 replies
- 1.7k views
-
-
தேநீர் கவிதை: ஓவியங்கள்! பிசிறின்றி நேர்த்தியாய் வரையப்பட்ட ஓவியங்கள், அழகான சட்டமிடப்பட்டு கண்காட்சிக்கென எடுத்து வைக்கப்பட, ஓவியக் கூடத்தில் வரையும்போது கீழே சிந்தப்பட்ட வண்ணப் பிசிறுகள் பார்வையை ஈர்க்கின்றன... சட்டமிடப்பட்ட ஓவியங்களை விடவும் கூடுதல் அழகோடு. ***** வரைந்து முடித்த ஓவியத்தில் ஏதோவொன்று குறைவதான நிறைவின்மையில் ஆழ்ந்திருந்தான் ஓவியன். உள்ளே ஓடி வந்த …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆயிரம் கைகள் கூட்டி மறைத்திட வானம் மறைந்திடுமோ - இப் பாரில் நடந்திடுமோ - எங்கள் செந்தமிழ் மீதினில் ஏறி மிதிக்கநம் வீரம் குறைந்திடுமோ - எங்கள் மானம் மறைந்திடுமோ பொய்கள் விதைக்கிறார் புரளி கிளப்பிறார் ஒன்றும் பலிக்காது - அட பொய்கள் விதைத்துப்பின் நாளை விளைச்சலில் மெய்கள் முளைக்காது சூது என்றும் ஜெயிக்காது யாரும் அழுத்தலாம் கேடும் நினைக்கலாம் கண்ணீர் வடிக்கோம் யாம் - எவர் காலும் துடைக்கோம் யாம் இப்பாரில் தமிழினம் ஓங்கி வளர்ந்திட யாகம் வளர்ப்போம் யாம் - அதில் வாழ்வைக் கரைப்போம் யாம்
-
- 7 replies
- 1.7k views
-
-
மலரும் ஆண்டே!!!... பறந்து போனதோ இல்லையோ பதற வைத்த ஆண்டு 2007 எத்தனையோ இளவல்களையும் புன்னகைப் பூவையும் தன்னுள் இழுத்துக்கொண்ட ஆண்டு! கண்களில் தமிழீழம் தாகம் மின்ன மின்ன ஒவ்வொரு ஆண்டையும் வரவேற்கின்றோம் நம்பிக்கை மாறாப் புன்னகையோடு!. எங்கள் வீட்டிலும் ஏட்டிலும் எழுதப்பட்ட சோக காவியங்களை எரியூட்டி எம்மை உயிர்ப்பிக்க செய்கின்றன போர்களமாடும் எம் உயிர் நாடிகள்! இழப்புகளின் எல்லை விரிந்துகொண்டே செல்லும் வேளையிலும் தன்னம்பிக்கை தளராத் தலைவனின் கொள்கைதான் நீர் வார்க்கிறது காயும் எங்கள் உயிர்வேர்களுக்கு!. மலரும் ஆண்டே! இரத்த வாடை நீக்கி இன்பம் கூட்டுவாயா?! அவல ஓலம் போக்கி அன்பு மொழிகள் மீட்டுவாயா?! உப்புக்கண்ணீர் துடைத்து சொந்தங்கள் சேர்ப்பாயா?! எங்…
-
- 4 replies
- 1.7k views
-
-
இதயதின் வலிக்கு ஆறுதல் தருவது இணையத்தளம் சரிதானே??? நாம் சந்தித்ததும் அங்கு தானே என்றும் போல நீயும் உலவாவந்திருப்பாய் நானும் அதே வளமை போலவே வந்தேன் நினைத்திருப்போமா நீயும் நானும் இணையத்தினாலே இணைவோம் என்று எத்தனை சண்டைகள் சச்சரவுகள் வந்தாலும் இறக்கவில்லியேடா நம் உறவு வியக்கின்றேன் நீ பலமுறை எழுதி இருக்கின்றாயேயடா பிரிவு என்பது உறவுக்காகா தானே என்று சந்தித்தபோது சாதாரணமாய் தோன்றினாய் பத்தும் பலதும் பேசி மகிழ்ந்தோம் நண்பர்களாய் இன்று நீ இன்றி வேறில்லை என்று நினைக்கும் அளவுக்கு என்னில் நீ ஊறிவிட்டாயடா இதனால் நீ என்னவனும் ஆனாயடா... இன்று நமக்குள் இருக்கும் உறவுக்கு பெயர் என்ன என்று நீ சொல்லுவாயா சொல் என்னவனே காலம் தன் வேகத…
-
- 14 replies
- 1.7k views
-
-
"தமிழ் முரசு"(ஞாயிறு பதிப்பு){சிங்கப்பூர் தமிழ் தினசரி} இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை... மிக இலகுவான மொழி நடை... இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின... நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன் வேர் வாசிகள் - பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள். மண் சுதந்திரம் மானம் என்றவர்கள் வெடித்துச் சிதறினார்கள். களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள். கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன்
-
- 6 replies
- 1.7k views
-
-
மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.7k views
-
-
வெளி நாட்டு காற்றிலே கவிதைகள் அணல் பறக்கும் ஏராளாமாய்! ஆனாலும் ஏளனமாய் இன்றும் விடுதலை வெற்றி நமதென்று கூவியழைத்தார்! தோல்வி கண்டு துவண்டு அழுதார்! வெல்லும் போது; மட்டும் வாழ்த்து பாடினார் தோற்க்கும் போது மட்டும் சிலர் சோக கீதமிசைத்தார்!. அனுப்பிய பணங்கள் ஆயுதம் அணிந்ததாய் மட்டுமே இதுவரை இல்லை செய்தி! இதுவும் வரலாம் காலகிரமத்தில்! ஏனெனில் கவிதைகள் மட்டுமல்ல செய்திகளும் இங்கே கற்பனையில்! துன்பத்தின் மீதிலேறி பாடுவார்! துன்பத்தை வெல்ல துயர்துடைப்பு என்பர்! வெட்கத்தை விட்டு சொன்னால் வேற்று வேட்டுக்கள் தான் நாம்! வேற்றுவன் கேட்கிறான் எம்மை! வேதாந்தம் பேசவா முடியும் அவருடன்? கேட்கிறார் அறிவார்ந்த கேள்வியாய் சிலர்! வேதாந்தம் சித்தாந்த…
-
- 13 replies
- 1.7k views
-
-
தமிழன் - யாரோ? கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் - ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்! தமிழன் என்றால் யாரோ- ? முயற்சி செய்பவருக்கு தடையாய்- இலாபம் இல்லை என்று தெரிந்தும்..... ஏட்டிக்கு போட்டியாய் ஏதும் செய்ய நினைப்பவன்! தமிழன் எவரோ- தாயை தவிக்க விட்டு - பாயை சுருட்டி கொண்டு பரதேசம் ஓடுபவன்! தமிழன் என்ன செய்வானோ? உப்பு யாரும் அள்ளினால்- சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்! உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்! தமிழன் இன்னும் என்ன செய்வானோ-? கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் எழுதுவான் - கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் மூக்கை இடையில் நீட்டுவான்! தமிழனுக்கு வீரம் உ…
-
- 4 replies
- 1.7k views
-
-
எப்படி நான் தாங்கிடுவேன்... அப்பன் அடித்தாலே ஆவென்று அலறுபவன் எப்பன் நோவெனிலும் ஏலாமல் கிடந்தமவன் முற்றம் முழுதும்-பிணமாகிச் சுற்றங்கள் செத்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே... கோழி அடைகிடக்க குஞ்சுக்காய் தவித்தமகன் கேவி அழமுதலே ஊரை கூவி அழைத்த மகன் கத்தி அழ யாருமற்று-சொந்தங்கள் கொத்துக்கொத்தாய் செத்தகதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... விக்கல் எடுத்தாலே கெக்கலித்து நின்றமவன் முள்ளுத் தைத்தாலே பாயில் மூன்று நாள் படுத்த மவன் செல்லுக்குத் துண்டுகளாய்-என்னினம் சிதறிப் பிளந்த கதை எப்படி நான் தாங்கிடுவேன் ஏப்பிரலும் முடிஞ்சிடுச்சே.... நெருப்புச் சுட்டாலே நேர்த்திக்கடன் …
-
- 11 replies
- 1.7k views
-
-
இலைகளை உதிர்த்து நிர்வாணாமாய் நின்று கொண்டிருக்கும் மரங்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டன ஒன்றும் செய்யாமல் அமைதியாக காத்திருந்த புல் தானாக முளைக்க தொடங்கிவிட்டது நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த மெக்சிகோ ஆண் ஹம்மிங் பறவையொன்று இணைதேடி ரீங்கார ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது பனிக்காலம் முழுதும் தூங்கிக் கழித்த பாண்டா குட்டியொன்று தன் முதல் மூங்கில் குருத்தை ருசிக்க தாயாராகி விட்டது இரையை பிடிக்க முடியாதவாறு ஊர்ந்து செல்லும் ஒசையை வெளிப்படுத்தும் பைன்மர சருகுகளை பாம்புகள் வெறுத்துக் கொண்டிருக்கின்றன 'களவு' எனும் உயிர்ப்பித்தலுக்கான முதல் பாடத்தை ஒநாய் தன் குட்டிகளுக்கு கற்பித்துவிட்டிருந்தது கலவி முடிந்தும் மூர்க்கம் குறையாத காடா மான் க…
-
- 10 replies
- 1.7k views
-
-
மச்சி நீ கேளு கதையை ... நேற்று இதால போனவா .. இன்னைக்கு என்னை கடக்கையில் .. சைக்கிள் வேல் அடித்து போறா.. நான் பார்க்கவில்லை அவாவை .. நினைப்படி உனக்கு என நண்பிக்கு சொன்னா .. சிங்கிசா பாவடை ...லுமாலா சைக்கிள் ... முன்னுக்கு சின்ன கறுத்தக்கூடை .... பச்சை தொப்பி போட்டு நெற்றியில் ... கோபுரம் போல ஒட்டு பொட்டு .. ஒற்றை பின்னல் கட்டி அழகான சிலேட்டு ... செம அழகடா திரும்பி பார்க்கும்போது ... எங்க படிக்கிறாள் என்ன செய்கிறாள் ... யாருடைய மகள் ..யாருடைய பேத்தி ... அண்ணன் தம்பி இருப்பாங்களா .. ஒருவளை அவங்கள் எனக்கு பழக்கமா .. நேற்றுவரை இருந்த புத்தன் மனம் ... எப்படி மாறியது இன்று கண்ணனா .. நாளைக்கு வா மச்சி ஒரு ரவுண்டு போவம் .. ஆளின் வீடு பார்ப்பம் எந்த தெருவென .. பொறு பொறு வைக்காத போன…
-
- 11 replies
- 1.7k views
-
-
மாறிவிடு தமிழினமே அநியாயச் சிங்களத்தின் ஆக்கினைகள் பொறுக்காமல் அந்நியத்தை வந்தடைந்த அன்பான சோதரரே அதிகாரச் சிங்களத்தின் அடக்குமுறை தாங்காமல் அகதிகளாய் புலம்பெயர்ந்த அன்பான உறவுகளே அந்நியத்தில் நீர்செய்யும் அழுக்கான செயல்கள்தந்த கவலைகளை இறக்கிவைக்க கண்ணீரால் எழுதுகிறேன் புலம்பெயர்ந்த மண்ணில்நீh புரிகின்ற அராஜகத்தால் புண்ணான மனத்துடன்நான் புலம்பியிதை எழுதுகிறேன் சீருடனே வாழுமுந்தன் சிறப்பினைநான் காணவந்தேன் சில்லறைச் செயல்கண்டு சினந்துநான் எழுதுகிறேன் குடும்பம் போல்நீங்கள் கூடி வாழாமல் குழுக்கள் பலசெய்து குழம்புவதும் முறைதானோ அண்ணன் தம்பியாக அனுசரித்து வாழாமல் அடிதடியில் இறங்கிநீரும் அழிவதுவும் …
-
- 7 replies
- 1.7k views
-
-
ஏன் மௌனமானாய்....??? சிங்களவன் அழிகையிலே சீறி எழும் உலகமே... எம் தமிழ் அழிகையிலே ஏன் உனக்கு மௌனமோ...??? பயங்கர வாதியேன்றேன் பயங்கரமாய் தூற்றுகிறாய்...??? பயங்கரமாய் வந்து அவன் பயங்கரங்கள் ஆடுகிறான்... பார முகமாய் ஏனோ நீ பாரினில் இருக்கிறாய்...?? ஏழை என்றா எம் தமிழை ஏறி இன்று மிதிக்கிறாய்....??? நடு நிலை என்றேன் நா வறள கத்துகிறாய்... இன்று நடு நிலை மறந்தேன் நரகத்திலே கிடக்கிறாய்...??? நா நனைந்து எம் தமிழர் நாட்கணக்காய் ஆச்சு... நலிவடைந்து உடலதுவோ உயிர் பிரியும் நிலை போச்சு.... நின்மதி இன்றியவர் நிர்கதியாய் ஆச்சு... எண் கணக்கில் பயங்கரங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
என்னை கைப் பிடித்தவன் மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை அதேபோல் நானும் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்னை அவன் இயக்கினான் நானும் இயங்கினேன் தோளில் சுமந்தான் நானும் அழகாக தூங்குவேன் நண்பனுக்கு அறிமுகம் செய்தான் அவன் என்னை பார்த்து வியந்தான் ஒரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை எதிரி என்றான் இன்னோரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை துரோகி என்றான் மற்றொருநாள் இவன் வீழ்ந்தான் நானும் வீழ்ந்தேன்,முனகினான் மற்றொருவன் ஒடி வந்தான் என்னை தூக்கினான் நிறுத்தினான் அவன் முனகளை இனியோரு நாள் இவனும் வீழ்வான் நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன் ஆனால் என்னை இயக்குபவன் .......
-
- 14 replies
- 1.7k views
-