கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சூதிலும் சூழ்ச்சியிலும் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள் நாங்கள் தெரிகின்றதா எங்களை ?? மகசீன் சிறை என்றும் காலி சிறை என்றும் வருடங்கள் காறித் துப்பியதே எங்களை!! தெரிகின்றதா எங்களை ?? சிறையில் இருக்கும் நாங்கள் வாழக்கூடாதாம் என்று ஒருகூட்டம் , வாழவேண்டும் என்று இன்னுமொருகூட்டம் !! தெரிகின்கிறதா எங்களை ?? சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை உங்கள் அடியின் வலி......... குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!! கொட்டும் மழையும் பாம்புக் கடியும் பயிற்சிக் கடுமையும் ஒருநாள் இனித்தது எங்களுக்கு, எங்களைப் போல் பலர் களத்தில் பகைவருடன் பொருதி நின்றபொழுது அடித்த விசில்களால் குளம்பித்தான் போனோம்....... எல்லா மக்களும் எங்களுடன் தான் என்று, …
-
- 98 replies
- 5.6k views
-
-
நாட்டைவிட்டு ஓடிவந்த நாதேறிகளை நட்புக்கரம் நீட்டி வரவேற்று அடைக்கலம் கொடுத்து தன் நாட்டையே அவனுக்குத் தாரை வார்ப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் காலம் காலமாய் கட்டிக் காத்த கொள்கைகளை கடாசிவிட்டு அறிவுக்கு உதவாத அவன் கொள்கைகளைப் பின்பற்றி அவனோடு கூத்தடிப்பான் தமிழன் ரொம்ப நல்லவன் மாற்று இனத்தான் தன்னை மெச்சுவதற்காக தன் இனத்தானை அவனிடம் காட்டிக் கொடுத்து அவனிடம் கைத்தட்டல் பெறுவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன்மொழி பள்ளி இருக்க பிறமொழி பள்ளிக்குத் தன் பிள்ளைகளை அனுப்பி அந்த மொழியில் தன் பிள்ளைகள் பேசுவதைக் கண்டு பூரித்துப் போவான் தமிழன் ரொம்ப நல்லவன் தன் தாய்மொழியைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு பிறர் மொழியில் உரையாடி அந்த மொழி வளர நீரூற…
-
- 5 replies
- 1k views
-
-
[size=4]கர்ணனின் கதையில்.[/size] [size=4]புதைந்திருக்கும் அர்த்தங்கள்![/size] [size=4]கால வெள்ளம் கூடக்,[/size] [size=4]கரைக்க முடியாத உண்மைகள்![/size] [size=4]ஆயிரம் திறமைகள்,[/size] [size=4]ஆண்மையின் கம்பீரம்,[/size] [size=4]சத்திரிய வீரம் மட்டுமே,[/size] [size=4]காறித்துப்புகின்ற கர்ச்சனை![/size] [size=4]விசுவாமித்திரனே, [/size] [size=4]வியந்து போன வீரம் தான்![/size] [size=4]பிரமாஸ்திரத்தின் ரகசியம்,[/size] [size=4]மறந்து போகச் சாபமிட்டான்.[/size] [size=4]அன்னைக்குக் கூட,[/size] [size=4]அவனது ரகசியம் தெரியும்![/size] [size=4]அவளின் அரச வாய்கள்,[/size] [size=4]கூடப் பூட்டப் பட்டன![/size] [size=4]தேர்ச் சில்லின் புதைப்பில்,[/size] [size=…
-
- 6 replies
- 852 views
-
-
சிறுவர்கள் பீரங்கிகளை முறிப்பார்கள் தீபச்செல்வன் சிறுவர்களுக்காக பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும் சேகரிக்கப்பட்டிருக்கின்றன துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன? ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும் அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும் நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய் எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய் புரட்சியையும் எதிர்ப்பையும் கொல்ல முடியாது சனங்களை அடக்கும்பொழுது புரட்சி குருதியில் பெருக்கெடுக்கிறது வாழ்வின் பாடலை நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு அந்நியப்படைகளே! எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்? வாழ்வை மூடியிருக்கும் உங்கள் அதிகார நிழலை எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்? முதியவர்கள் …
-
- 0 replies
- 642 views
-
-
பனையடி வினை பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியே தனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன் இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று எந்தப்பனையும் எதுவும் பேசவில்லை நூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த பழக்கத்தை விடுவதில் ஏராளம் தயக்கங்கள் ஒவ்வொரு தளும்பாய் பனை நீளம் படர்ந்திருந்தது. நானறிய நூற்றாண்டுகளை விழுங்கி விழுங்கி எல்லா வெறிக்கும் வழிவிட்ட பனையே முறிகின்றாய் பெரும் பழி சூழ் வினையில். ஒவ்வொரு பனையாய் முறிகின்றாய் முறிந்த பனைகள் துளிர்ப்பதுண்டோ? தோப்பெல்லாம் பெருந்தீ மூண்டெரிந்தாலும் புதுக் குருத்தெறியும் வரமுடைய தாலமே கால நிழலின் குழியுள் இதோ உனது நாட்கள் செத்தழிகின்றன எல்லா வெறிக்கும் வழி விட்ட முந்தைப் பெரும் பழியெலாம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=4]கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி ஆறுதல் சொல்ல வரவில்லை தினகுறிபிற்கு தெரியும் என் மனதின் வலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி வெளிச்சத்தை இன்னும் தரவில்லை [/size][size=1] [size=4]மரணத்திற்கு தெரியும் என் வாழ்கையின் வலி ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும் நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...[/size][/size]
-
- 3 replies
- 1k views
-
-
[size=1]எத்தனை தடவைகள் [/size][size=1] மயிரிழையில் உயிர்தப்பினேன் [/size][size=1] எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை [/size][size=1] கிளைமர் பாதைகளில் எமது பயணம் [/size][size=1] வாழும் ஒவ்வொரு நாட்களும் [/size][size=1] போனஸ் நாட்கள் - இருந்தும் [/size][size=1] மகிழ்ச்சிட்கு குறைவில்லை [/size][size=1] கடமைச்சுமையால் [/size][size=1] உடல் களைத்தாலும்[/size][size=1] உள்ளம் இளமையாய் இருந்தது [/size][size=1] இழந்தவரின் கனவையும் [/size][size=1] சுமந்து வாழ்கையில் [/size][size=1] எதையும் தாங்கிற்று மனம் [/size] [size=1] இன்று [/size][size=1] நடைப்பிணமாயிற்று வாழ்வு [/size][size=1] கவிதை வாழ்வு கந்தலாய்க்கிடக்கிறது [/size] [size=1] -நிரோன…
-
- 2 replies
- 476 views
-
-
வான் மழை கழுவி வந்த வானவில்லின் வர்ணம் கொண்ட மலரே..... தென்றலிடம் கடன் வாங்கிய விசிறி கொண்டு திரவியமாய் பரப்பும் நறுமணம் கொண்டவளே.. மெல்லிதழ் தான் அசைத்து என்னை மெல்ல அழைத்திட்டாய் செவ்விதழ் விரித்து உன் தேனமுதம் பருகவிட்டாய்... எள்ளளவும் மனப் பயமின்றி நான் உன்னை தழுவி இன்புற்றேன் உன் பட்டுடல் பட்டு பக்குவமானேன்..! நான் மட்டும் உன் அன்புக்குக் காதலனாக மாலைக்குள் நீ வாடினாலும் உன் ஆயுள் முடிந்தாலும்... உன் சந்ததி பெருக்கும் மகரந்தம் தாங்கியவனாய்..! தியாகத்தின் செம்மல் நீ... உன்னை நாளும் ஆணை ஆடையாய் மாற்றிடும் மனிதப் பெண்ணுக்கு உவமை சொல்பவன் ஓர் மடையன்..! [size=2]Photo taken …
-
- 6 replies
- 791 views
-
-
சோழப் பெருமன்னர் சிந்தனையில் உதித்த கொடி குமரி முதல் இமயம் வரை பறந்த கொடி தமிழன் இராய்ச்சியம் இந்து முதல் பசுபிக் வரை நின்ற கதை சொன்ன கொடி.. எங்கள் பெருந்தலைவன் பிரபாகரன் தானை தாங்கி நின்ற கொடி... நம் தமிழர் உயிர் மூச்சில் அசையும் கொடி.. தமிழீழத் தேசியக் கொடி..! முள்ளிவாய்க்கால்தனில் சாட்சியங்கள் இன்றி... மண்ணோடு புதைந்திட்ட மண்ணின் புதல்வர்கள் மானம் காத்த கொடி... புலம்பெயர் மண்ணில் ஈழத்தமிழன் அடையாளம் காட்டும் கொடி...! நாம் தமிழராய் ஓரணியில்.. தமிழகம் தாங்கி நிற்கும் கொடி எங்கள் புலிக்கொடி..! இத்தனை பெருமையும் இருந்து என்ன பயன்... 1948 முதல் 2009 வரை சிங்களம் எமை வெறியாட தூண்டிய கொடியாம்... இன்று எம் …
-
- 21 replies
- 2.3k views
-
-
குண்டுமல்லி தோட்டத்திலே குவிந்திருக்கும் மல்லிகையே - உன் கூட்டாளி நானிருக்கேன் குவளைமலரே கண்ணுறங்கு!! கைகொட்டி சிரித்திருக்கும் பட்டுமேனி பெட்டகமே யார் கண்ணும் படுவதற்குள் காந்தள்மலரே கண்ணுறங்கு!! ஈசானி மூலையிலே உலையங்கே கொதிக்குதம்மா போயி நானும் பார்த்துவரேன் பூந்தளிரே கண்ணுறங்கு!! பசும்பால் வாங்கிடவே பணமிங்கே போதலியே உலைத்தண்ணி ஊத்திவாறேன் மாந்தளிரே கண்ணுறங்கு!! கட்டுமரக் கப்பலோட்டி கடலுக்கு போன அப்பா பொழுதடைய வந்திடுவார் பூச்சரமே கண்ணுறங்கு!! அயரை மீனும் ஆரமீனும் அள்ளிக்கொண்டு வருவாரடி அதுவரைக்கும் பொறுத்திருக்க ஆரவல்லி கண்ணுறங்கு!! வாளைமீனும் வழலை மீனும் வலைபோட்டு பிடித்தமீனும் வட்டியிலே போட்டுத்தாற…
-
- 0 replies
- 605 views
-
-
[size=5]கவிதையின் கவிதைகள் .[/size] http://puradsi.com/wp-content/uploads/2012/08/Sivanthan030812-UK_004.jpg சொந்த மண் சிவந்தபோது சிதறிப்போனோம்! மண்விட்டு முதலடி வைத்தபோதே அகதியானோம்! அவதிப்பட்ட அகதிகளாய்... அநியாயமாய் விரட்டப்பட்டோம்! வாழ்மனை முற்றம் சுற்றம் சொந்தமண் எல்லாமே தூரவிட்டு, அல்லாடும் வாழ்வோடு தூரதேசங்களில் அடைக்கலமான... அவதிதேசத்தின் அகதிகள் நாம்! சொந்தமண்ணோடு எம்மூர் நினைவுகளும், ஊர்த்தெருவின் புழுதிமண் வாசனையும் பெய்தமழையில் எம் கண்ணீரில் கரைந்துபோக... பழைய நினைவுகளாய் அடங்கிப் போகிறது! மீண்டும் மீண்டும் துளிர்க்கும் நினைவுகள் ஊர் ஞாபகங்களை மீள மீள உயிர்ப்பித்தாலும், இன்றைய செய்தித்தாளின் சேதிகளும் ஊர்க்கத…
-
- 2 replies
- 666 views
-
-
[size=4]இது வரை குளத்தில் மட்டுமே மீன்களைப் பார்த்திருக்கிறேன் முதன் முறையாக உன் முகத்தில் கண்கள் வலை வீசுவது யார்? கரையில் இத்தனை காவலர்கள் - இமை முழு நிலவு முகத்தில் இடது வலதாய் இரு மூன்றாம் பிறைகள் - புருவம் என்ன அதிசயம் தென்றலைத் தாலாட்டும் கூந்தல் அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை பார்த்து விட்டேன் இதழ்களை வரைந்தது யார்? ஏய் அழகுத்தீவே சிரிக்காதே நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...[/size]
-
- 3 replies
- 649 views
-
-
[size=3] [size=4]கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.[/size] [size=4]ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.[/size] [size=4]காவியக்கவிஞனே![/size] [size=4]உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்[/size] [size=4]நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்[/size] [size=4]தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்[/size] [size=4]தங்கள் குணம…
-
- 0 replies
- 679 views
-
-
வேர்களை நினைந்தழுதபடியே தூங்கிப்போன நீண்ட ஒரு துயரநாளின் நடு நிசியில் தூக்கம்களுக்கிடையே கனவுகளின் வீதியில் கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த ஊரை எரிக்கும் நினைவுகளை பின்தொடர்ந்தேன்... கழுகளுக்கஞ்சிய கண்களில் மிரட்சியுடன் சேதி சொல்லி அழைத்துச்சென்ற நினைவுகளின் கரங்கள் எல்லாவற்றிலும் தழும்புகள் நிறைந்து கிடந்தன... ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும் சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன... உற்றுப்பார்க்கிறேன்.. ஈழத்து இதிகாசங்களில் எழுத்தப்பட்ட பெயர்கள் எச்சங்களைத் தேடியவாறு.. முகவரி கொடுத்தவர்களின் எச்சங்களின் முகங்கள் எல்லாம் வறுமைக் குழிகளுக்குள் அடித்த சுழிகளுக்கிடையே செத்தழிந்துகொண்டிருந்தன.. …
-
- 29 replies
- 3.9k views
-
-
யுத்தக்கல் சுமக்கும் சிறுவன் தீபச்செல்வன் ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும் சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம் செல்துளைத்த ஓட்டைக்குள்ளால் பள்ளியிலிருந்து பார்த்த பொழுது அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில் ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர் யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான் கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில் விளையாடும் குழந்தைகளில்லை குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுப…
-
- 2 replies
- 575 views
-
-
1, பூனையார் பூனையார் எலி பிடிக்கும் பூனையார் பதுங்கிப்பதுங்கி எலி பிடிக்கும் பூனையார் எலிகள் எல்லாம் சேர்ந்தன திட்டம் ஒன்று போட்டன பூனையார் கழுத்தில் மணிகட்டினால் பூனை வரும் சத்தத்தில் ஓடி நாங்கள் தப்பலாம் திட்டம் நல்ல திட்டம் எலியாருக்கு கொண்டாட்டம் யார் பூனைக்கு மணிகட்டுவது? எலியாருக்குள் திண்டாட்டம் யார் பூனைக்கு மணிகட்டுவது? எலியாருக்குள் திண்டாட்டம் பூனையார் பூனையார் பதுங்கித்திரியும் பூனையார் எலியாரின் திட்டம் கேட்டு கொடுப்புக்குள் சிரித்துக்கொண்ட பூனையார் பகிடி பார்க்க மீயா மீயா சத்தம் போட்ட பூனையார் எலியாரின் கூட்டமும் போச்சு அவர் போட்ட திட்டமும் போச்சு ஓடி ஒளித்தனர் எலியார் …
-
- 9 replies
- 2.2k views
-
-
ஒரு கவித படிச்சேங்க . ரெம்பவே ஃபீலிங்கா இருந்திச்சு . உங்ககூட ஷேர் பண்ணிக்கிறேன் . நிலந் தொடாமல் மிதந்தேன் உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது நான் லேசாகி உதிர்கிறேன் அலைகள் என்னை மோதுகின்றன யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது? திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின எவர் அவற்றை என்னிடம் துரத்தியது? யார் கரையில் என்னை வீசியது? எவரது கைகளவை? காணாமல் போகிறேன் நீரோடு கலக்கிறேன் கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில் உறைந்து கிடக்கிறேன் ஈரமண்ணாக. http://thoomai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
-
- 3 replies
- 636 views
-
-
கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி [size=3] என் இதயத்தை ஆக்கிரமித்ததால் கண்களால் கைது செய்ததால் நினைவில் சித்திரவதை செய்வதால் பெண்ணே நீயும் கொடும் படை போலடி உடலெங்கும் பெரும் கிளர்ச்சி செய்த்தால் உணர்விலே கொடும் தீப்பற்ற வைத்ததால் இதயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதால் கண்ணே உன் முத்தமும் அரபு வசந்தம் போலடி எட்டா விலையில் இருப்பதால் தடவலால் ஊக்கம் பெறுவதால் தகவல் பரிமாற்றம் செய்வதால் பலான பெண்ணே நீயும் ஐ-பாட் போலடி வன்பொருளும் மென்பொருளுமிருப்பதால் என்பொருள் முடிவடையச் செய்வதால் என் நேரத்தை என்றும் இழுத்தடிப்பதால் பெண்ணே நீயும் கணனி போலடி[/size][size=3] Posted by வேல் தர்மா at 02:18 Thanks: http://velthar…
-
- 1 reply
- 567 views
-
-
ஞாபகத்தில் இருக்கிறது அழகாய் நிழலாய் ஒரு முகம். ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை. அலையும் நீரில் அலைவதாய் அது. வயது தொலைந்து வாழ்வின் எல்லையின் தனிமையில் இளமையை அசை போட்டபடி. நிறைவாய் ஒரு நீ.........ண்ட ஞாபக உறவு. வாழ்வு இயல்பாய் நகர்ந்தும் அம்முகம் அடிக்கடி வரும்... மறையும். கொல்லைப்புறத்துப் பொட்டு வேலிதான் அவனது போக்கு வரத்து. பனம்பாத்தியடியில் கிளுவங்குச்சி முறித்துக் கொட்டில் கட்டி, குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி மரப்பாச்சி பொம்மையும் செய்து, கொட்டாங்குச்சியில் சோறும் காய்ச்சி, தொட்டாச்சிணுங்கி இலையும் தேங்காய்ப்பூக் கீரையும் கறிகளுமாய். அம்மாவின் சோட்டிக்குள் நானும், அப்பாவின் வேட்டிக்குள் அவனுமாய். …
-
- 0 replies
- 693 views
-
-
இவர்களுக்கானதே! ----------------------------- நேற்று எம் முன்னோர் இன்று நாம் நாளை இவர்களும் ...... மாற்றத்தைத் தேடும் மாந்த நேயனே தியாக தீபத்தின் பொன் மொழியறிந்தாய் மக்கள் போராட்டமொன்றே மண்ணை மீட்குமென்ற மகத்துவம் புரிந்து நோன்பினில் இருந்தே தேசியம் காக்கும் கடைமையில் இருந்தாய் மெல்லென எழுகின்ற கதிரொளியாக எங்களின் இளையோர் உலகை ஒருநாள் வென்றெழும் போது இவர்களுக்கான தாயகம் விடியும் புலியினைத் தாங்கிய எம்கொடி பறக்கும்!
-
- 6 replies
- 625 views
-
-
[size=3][size=4]உலகின் எந்த ஒரு இனமும்[/size][/size] [size=3][size=4]கருணைக்காக இவ்வளவு காலமும் ஏங்கி இருக்காது . உலகின் எந்த ஒரு இனமும் சுதந்திரத்திற்காக இவ்வளவு வாதைகளை தாங்கியிருக்காது.[/size] [/size] [size=3]உலகின் எந்த ஒரு இனமும் வாழ்தலின் பொருட்டு இவ்வளவு இழப்புகளை எதிர்கொண்டிருக்காது. [size=4]உலகின் எந்த ஒரு இனமும் சர்வதேசத்தால் இவ்வளவு தூரம் புறக்கணிக்கப் பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் தன் இனத்துரோகிகளால் இவ்வளவு அபத்தமாக காட்டிக் கொடுக்கப்பட்டிருக்காது. உலகின் எந்த ஒரு இனமும் இறையாண்மையின் பெயரால் இவ்வளவு கொடூரமாக கொன்றொழிக்கப் பட்டிருக்காது. . பக்கத்தை வெளியிடு உலகின் எந்த …
-
- 0 replies
- 676 views
-
-
தினமும் என் இராப்பொழுதுகள் விட்டுச்செல்லும் கனவுகளில், ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் அடிக்கடி கனவில் வரும்! நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்! சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும் சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும் என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின் இதமான தேகச்சூடும், என் தோளில் பரவிநின்ற அழகான அவள் கூந்தலும், அதனினிய வாசமும், எம் புன்சிரிப்பும்... எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை பொறாமைப்பட வைத்திருக்கும்! உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை மனதோடு ரசித்துக்கொண்டிருந்த... என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள், கழிந்துபோன நாளிகைகளில்... விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல் உணர்த்துகின்றன... அனைத்தும் கனவ…
-
- 20 replies
- 1.4k views
-
-
நீர்த்துளி வடிவ நாட்டில் சிந்துகின்றான் ஈழத்தமிழன் உயிர்த்துளிகளை... அறிந்த பொது கொட்டுதடா எங்கள் உள்ளத்தில் உதிரத்துளிகள் ஆகாயமும் சிந்தியது மழைத்துளிகளை கண்ணீர் துளிகளாய்... படித்தேன்... மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்று; ஆனால் உயிர்த்துளி...? http://kavithai7.blogspot.fr/2012/08/blog-post_10.html#more
-
- 0 replies
- 466 views
-
-
[size=5]கவிதையின் கவிதைகள் .[/size] வாழ நினைக்கும்போது வாடவைக்கும்! வாழ்வதற்காய் வாழ்வை தேடவைக்கும்! மணித்துளிகளில் நகரும் வாழ்வு, துளித்துளியாய் வளரும் நினைவு, கணப்பொழுதில் தோன்றி மறையும்... மின்னல்போல் மின்னி மறையும்! அனுபவங்கள் புரியவைக்கும் வாழ்வில், எல்லாமே ஒரு போராட்டம்! போராடி வெல்லும்போது... வாழ்வின் எல்லை முன்னால் நிற்கும்! பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நடக்கும் போரில்... கடந்து போகும்வரை கலக்கங்கள் சூழ்ந்தாலும், கலங்காத மானிடம் மட்டும் வெற்றிகொள்ளும் வாழ்வுதனை!
-
- 0 replies
- 793 views
-
-
கிரேக்கம் தந்த ஒலிம்பிக் கிறக்கம் தனில் உலகம்.. கிலோ கணக்கில் உலோக நாணயங்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று... முடிசூடிக் கொள்ளும் மன்னர்களோ அநேகர் பணக்கார வீட்டு செல்லக் குழந்தைகள்..! மனித உழைப்பும் திறமையும்.. அன்று கிரேக்கம் தனில் விளையாடி நிற்க பணமும் தொழில்நுட்பமும் இன்று... விளையாடும் வியாபாராமனது ஒலிம்பிக்..! இங்கிலாந்தின் பொருண்மியம் சரிந்து விழும் சங்கதி கூட செல்லாக் காசாச்சு.. சிரியாவின் இனப்படுகொலை சிந்தனை விட்டுப் போயாச்சு ராஜபக்சவின் மனிதப் படுகொலைக் குற்றங்கள் மன்னிக்கப்பட்டு மறந்தாச்சு.... இப்படி எத்தனையோ அநியாயங்களை அப்படியே மென்று விழுங்குது இன்றைய ஒலிம்பிக் அதற்கு தங்கப் பத…
-
- 7 replies
- 1.1k views
-