கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
என் கண்களே எனக்குப் பிடித்த ஒளிப்பதிவுக் கருவி காரணம் அதற்கு உன்னை மட்டுமே பிடிக்கத் தெரியும் * என் பல முத்தங்களுக்கு சில முத்தங்களையே திருப்பித் தந்திருக்கிறாய் நீ உன்னை என்னிடம் இழப்பதற்காகவா முத்தக் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் * கவிதை என்று யார் கேட்டாலும் உன் பெயர் சொல்வேன் உன் பெயர் என்னவென்று எவர் கேட்டாலும் நான் எழுதாத காவியம் என்பேன் * என்னை எழுத வைத்தவள் நீ என்றாலும் நான் கவிஞனானது உன்னை அழைத்து அழைத்துத்தான் * உன்னைப் பற்றி எழுத நினைத்தபோதெல்லாம் எழுதிக் கொண்டேயிருந்தேன் உன்னை விட எழுத நினைத்தேன் எழுதுவதையே மறந்துவிட்…
-
- 2 replies
- 938 views
-
-
நட்பு நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. நிலவு வரும் வரை நாமிருக்க நம் கலாச்சார கண்களும் நம்மை விட்டுவைக்கவில்லை. இன்னொரு நாள்… கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. அவள் தடுமாறி அலைக்குள் விழுந்த போதும் என்னால் அவளை அணைக்க முடியவில்லை. கடலோ அவளை நனைத்துப் போனது. மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. அலை கூட அ…
-
- 6 replies
- 2.3k views
-
-
[size=5]கார்த்திகை இருபத்தேழில் நாம் துயிலும் இல்லம் செல்வோம்.............................. தம்மினத்தை நெஞ்சில் கொண்டார் தம்மண்ணை பூசிக்கொண்டார் தலைவன் சொல்லை கொண்டார் தளரா நிலையும் கொண்டார் ...... நெஞ்சிலே உறுதி கொண்டார் நெருப்பில் அணையாத நிலை கொண்டார் தலைவனை தமையனாய் கொண்டார் தமிழீழம் வேதமாய் கொண்டார் இல்லம் துறந்து வந்தார் .....இலட்சியம் தளரா நிலை கொண்டார் கார்த்திகைப்பூவாய் மலர்ந்தார் ....நல்ல கவிதைப்பூக்கள் தந்தார் ....[/size]
-
- 0 replies
- 656 views
-
-
[size=1] [size=4]தொழுவான் தமிழன்[/size][/size][size=1] [size=4]தொடர் தொல்லை கொடுத்தால் [/size][/size][size=1] [size=4]அழுவான் அடங்கியேயவன் [/size][/size][size=1] [size=4]விழுவான் காலிலேன்றே யார்ப்பரித்த தன்று பகை![/size][/size] [size=1] [size=4]ஆண்ட இனம், [/size][/size][size=1] [size=4]அரசுகொடி சுற்றமென்று வாழ்ந்த இனம்,[/size][/size][size=1] [size=4]கண்டமெல்லாம் கடந்து தமிழ் [/size][/size][size=1] [size=4]கொண்டுசென்று நிலைத்த இனம், [/size][/size][size=1] [size=4]பண்பாடிப்பாங்காய் பளுவின்றியொரு[/size][/size][size=1] [size=4]பகையின்றி வாழ நினைத்த இனம்,[/size][/size] [size=1] [size=4]இனங்கள் சமமென்று [/size][/size][size=1] [size=4]இதயத்தால் உரைத்…
-
- 7 replies
- 822 views
-
-
[size=3] [/size] [size=3]நீங்கள் சே குவாராவின் பிள்ளைகள். முத்தங்களுடம் உங்களை பிரிகிறேன், உங்கள் அன்பு அப்பா சே குவாரா (1965)[/size] [size=2]தன் குழந்தைகளுக்கு எழுதப்பட்ட[/size][size=3] [size=2]தோழர் சே குவாரவின் இறுதி கடிதம்...!"[/size] [size=2]"அன்புள்ள [/size] [size=2]இல்டிடா , அலைடிடா, கமிலோ , மற்றும் எர்னெஸ்டோ [/size][/size][size=2] ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள், உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன், நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம், குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் ந…
-
- 0 replies
- 527 views
-
-
வாழ்வுண்டோ? மண்ணை இழந்து மனையைத் துறந்து வருந்தியும் வாழ்வுண்டு! பொன்னை இழந்து பொருளைத் துறந்து புழுங்கியும் வாழ்வுண்டு! கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து கலங்கியும் வாழ்வுண்டு! உன்னை இழந்தால் தமிழே உலகில் ஒருநொடி வாழ்வுண்டோ? இன்பத் தமிழே! இயக்கும் இறையே! இனிமை படைத்தவளே! துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக் துயரைத் துடைத்தவளே! அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை அளிக்கும் அருந்தமிழே! உன்றன் புகழை உலகில் பரப்ப ஒருநாள் மறவேனோ! ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்! உயர்மிகு நன…
-
- 0 replies
- 465 views
-
-
கடப்பு வைச்சு காத்திருந்த வேளை - மர்மமாய் கழுத்திறுகி இறந்தது ஓர் ஆடு. கள்வரும் அது கண்டு.. கட்டியே இழுத்துச் சென்றார். கண்ணியமாய் நீதி உண்மை விளம்ப முன்..! கள்ளுக் கடையருகில் கள்ளக் கடை விரிச்சு கள்ளாடும் ஆனது பங்கிறைச்சி. கள்ளின் வெறியதில் கழிவு விலை கேட்ட இடத்தில் கன்னம் பறக்க கதறி அழ கட்டிப்புரண்டு.. கண்டபடி நடந்தது அடிபாடு. களத்திலும் அது கதை.. கட்டுரை என்றாக கடைசியில் கன்னம் பழுத்த கூட்டம் கழுதைக் கத்தல் கத்துது கதைகள் பல விடுகுது... கள்ளாட்டுக்கும்... யாரும் உரிமை கோரவில்லை.. கறுத்தாடு அதுவும் கோரை தின்றே.. "கேர்ணல்" ஆனது என்று. களவெடுத்தது நாமும் அல்ல கள்வரும் அல்ல - நாம் கண்ணியமானவரே என்று. கடைக்கண் விழி திறந்து கவனமாய் சிரிக்…
-
- 17 replies
- 1.1k views
-
-
எழுதிட மறுக்குது மனக்கோல் எழுதிட எடுத்தேன் எழுதுகோல் இயங்கிட மறுத்தது மனக்கோல் எழுதி எழுதி என்ன பயன் எதற்கும் தீர்வு இல்லை எனின் நாளும் நாளும் தொடருது அவலம் தடுத்திட வழி காண எவருமில்லா துயரம் போதும் போதும் பேசி ஏமாற்றும் நாடகம் முடிந்தால் மக்களைக் காப்பாற்ற வழி வேண்டும் அல்லல்பட்டு அல்லபட்டு அழிவதுதான் தமிழர் தலைவிதியோ என்று எண்ணிடும் போது இதயம் துடிக்கிறது அதனால் எழுதிட மறுக்குது மனக்கோல் வெற்று ஆரவாரங்களோ எல்லாம் என வெதும்புகின்றது உள்ளம் சொத்துக்கள் சேர்ப்பவரும் அரச இருக்கைகள் காப்பவர்களும் தான் அதிகமாகிவிட்டனர் என்னும்போது அழுவதா? கொதிப்பதா? என தெரியவில்லை. மெல்ல அரங்கேறும் இனக்கொலைக்கு உடந்தையாளர்கள்தான் கூடுமான…
-
- 2 replies
- 771 views
-
-
தமிழ் மொழி! தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும்போது மட்டும் இ..ஈ.. சூடு பட்டால் மட்டும் உ...ஊ.. அதட்டும்போது மட்டும் எ..ஏ... ஐயத்தின்போதுமட்டும் ஐ... ஆச்சரியத்தின்போதுமட்டும் ஒ...ஓ... வக்கணையின் போது மட்டும் ஒள... விக்கலின்போது மட்டும் ...? என்று தமிழ் பேசி மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல் உன் மொழி தமிழ் மொழியென்று !!! http://pudhiyatamilan.blogspot.com.au/2011/08/blog-post_31.html#!/2011/08/blog-post_31.html
-
- 0 replies
- 515 views
-
-
என்ட வாழ்க்கையில நான் கன தடவை திரும்பத் திரும்பக் கேட்ட ஊர்ப் பாட்டு இதுதான் (இயக்கப் பாடல் தவிர்த்து).... மயங்கீட்டென் இசையில.
-
- 3 replies
- 742 views
- 1 follower
-
-
எனக்குள் ஒருவன் இருக்கின்றான் எனக்குள் ஒருவன் இருக்கின்றான் அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான் அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த அவனியே என் காலடியில் அடைக்கலம் போல் தோன்றும் அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும் அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என் ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும் ஆலயம் போல் அமைதியானதுண்டு. 01.06.2004 http://inuvaijurmayuran.blogspot.ch/2013/12/blog-post.html
-
- 0 replies
- 590 views
-
-
தேசிய கீதம் ஆனைவாய்க் கரும்போ? அனலிடைப்பட்ட புழுவோ? சட்டியிலிருந்து சற்றே சறுக்கி; அடுப்பினில் விழுந்த மனிதர் நாம் தாவார மில்லான், தனக்கொரு வீடில்லான், தேவாரம் மோதுதல் ஏதுக்கடி? தேசிய மேயில்லார்க்கு தேசிய கீதமொரு பொல்லாப் போடி? பொறுமையிழந்தவர் தம்மைப் போற்றி இசைப்பர் இன்னும் கோடி, இறைவனுண்டென்றால் சேருமொரு புது வாழ்வு தேடி. -அறியாதவன் http://www.valampurii.com/online/viewnews.php?ID=13381
-
- 1 reply
- 710 views
-
-
உன்னை விட்டு - நான் ஒரு கணமும் விலகவில்லை விலக நினைத்தாலும் -அது என்னால் முடியவில்லை என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்கிறாய்- ஆனால் மௌனமாக இருக்கிறாய் - மௌனமாகவே துரத்துகிறாய் என்னுடன் பேசாமல் மௌனமாக இருந்ததேன் ?? என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்ந்ததேன் ?? என்னை விடாமல் துரத்தியதேன் ?? ஏன் ?? ஏன் ?? ஏனெனில் நீதான் எந்தன் நிழல் நான் உந்தன் நிஜம் !!!
-
- 31 replies
- 4.5k views
-
-
அன்புக் கரம் நாடும் அகதிகள் இறைவன் படைப்பால் தமிழர் ஆனோம் தமித்தாய் வயிற்றுப் பாவி ஆனோம் தாய் நாட்டில் அகதி ஆனோம் தவமது இருந்தோம் பசியது தாங்கினோம் ஆண்டுகள் பல ஓடியும் ஆதரிப்பார் யாருமின்றி அந்நியர் நாட்டில் அகதிகள் ஆனோம் அன்புக்கரம் நீட்டி ஆதிரித்தான் அந்நியன் அந்நியன் உணர்வுகள் நமக்கு இல்லையே? நம்மவர் உணர்வுகள் உறங்குவது ஏனோ ? அகதிக்கு அகதி நாம் நம் நாட்டில் அகதியாம்! எம்மவர் காத்திட அன்புக்கரம் நீட்டுவோம் வாரீர்..? வரிகள் : வசீகரன் அச்சில் : 12.03.93 நன்றி : தமிழன் (பத்திரிகை)
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் இந்தக் கவிதை என்னுடையது இல்லை . முகநூலில் என்னை நெருடிய முள் அவ்வளவே . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************************************** காதலின் புனிதத்தை காமத்தின் பெயரால் கறைபடிய விட்டதும் காணாமல் கருவுக்கு உயிர் கொடுத்து தெருவில் எறிந்த மனிதமற்ற மண்புழுக்களே வார்தைகள் கொண்டு உங்களை திட்டுவது தமிழுக்கு நான் செய்யும் துரோகம்.... நல்ல உள்ளங்களே யாரும் ஆனாதையாக பிறப்பதில்லை இந்த சமுதாய சனியன்கள் சிலரால் உருவாக்க படுகிறார்கள்................... நன்றி : முகநூல்
-
- 5 replies
- 779 views
-
-
கவிஞனுடன் உரையாடல்....! பாவலனே உன்னை பாவால் வணங்குகிறேன்- உந்தன் பு வாிகள் கோர்த்து- உனக்கு பு மாலை சாத்துகிறேன்... வேண்டாம் இதுவென்று வௌியில் எறியாதே ஏழை நானென்று எட்டி உதையாதே... உயர்ந்த மாளிகைக்கு உழைத்தவர் வீதியிலே வாடகைக்கு வந்தவர்கள் வானத்து வீதியிலே... ஆகா என் வாிகள் அர்த்தங்கள் ஆயிரங்கள் என்னை விட மேலானாய் எழுதிடவே எழுதிடவே... ஆட்டங்கள் போடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார் வீழ்வோமா நாமென்று வீராப்பு பேசுகின்றார்.. மமதையில் மிதப்பவர் மனிதரா நீ சொல்லு..? இவருள்ளம் அழுக்காகி இருப்பதனை நீ காணு.. தன்னிலை மறந்ததினால் தலைக்கணத்தில் சுற்றுகிறார் இவர் ஆயுள் எதுவரையோ இவைதன…
-
- 1 reply
- 1.1k views
-
-
அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூலேணி பிடித்தேறிய காலங்கள் பொற்காலமல்லவோ உமக்கு ? வலுத்தவர் மகிழ…
-
- 0 replies
- 525 views
-
-
அகரத்தில் தொடங்கி ஆயுத எழுத்தானது என் இனம் . சிகரத்தை தொட்டே சிங்க பரம்பரையை சிதறச்செய்தது ஒருகாலம் . மெல்லினமாய் நின்ற என் இனத்தை வல்லினமாக்கினான் ஒருவன் . பல்லினம் கொண்ட நாட்டில் ஏன் ஓரினத்திற்கு மட்டும் நாடு வேண்டும் ??? என்று கச்சைகட்டின பலதேசங்கள் . மலினப்பட்ட மானிடக்கொலை மலிவாகவே மலிந்தது என்தேசத்தில் . நீதியும் நியாயமும் இறுக மூடின தம் கண்களை . சிங்கத்திற்கு நேரடியாக வேட்டையாடும் பழக்கம் இல்லை . மறைந்திருந்தே சூது செய்து இரை கௌவ்வும் . வல்லினமாய் நின்று மெல்லினமான என் இனம் மீண்டும் வல்லினமாக , சொல்லும் செயலும் நேர் கோட்டில் வந்தாலே வல்லினமாகும் . இல்லையேல்!!!!!!!!!!!!!!!!!
-
- 12 replies
- 975 views
-
-
இங்கு இணைந்திருக்கும் பலரைப்போல நானும் தமிழீழ பாடல்கள் விரும்பி கேட்பேன்.. சில பாடல்கள் எழுதியும் வைப்பேன்.... சினிமா பாடல்வரிகள் தான் முழுதும் எழுதி நிறைய இணையத்தளங்கள் உள்ளன. இது போல் தமிழீழ பாடல்வரிகள் உள்ள எந்த இணையத்தளமும் யாருக்கும் தெரிந்தால் எனக்கும் அந்த இடத்தை காட்ட முடியுமா? நான் றொம்ப தேடிப் பார்த்தேன்...எனக்கு எங்கயும் கிட்டுது இல்லையே...
-
- 3 replies
- 1.6k views
-
-
பாய் விரித்து படகெடுத்து பாய்ந்து கடல் ஆண்டவர் பார் முழுதும் தமிழர் என்று போய்த் திரும்பி மீண்டவர் தாய் மடியில் மீண்டெழுந்து நாங்கள் அன்று ஆளுவோம் தாவும் கடல் புலிகளினால் நாளை கடல் ஆளுவோம் ஏறி வரும் பகை யாவும் இனி இல்லை எனும் நிலை ஆகும் மாறி அடித்திடும் காற்று கடல் மீதினில் புலிக்கொடி ஏற்று - நன்றி முகநூல்
-
- 0 replies
- 1.2k views
-
-
உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை
-
- 6 replies
- 1.7k views
-
-
நான் அவனுக்கு கடிதம் எழுதினேன் அது அவனிடம் போய் சேர வில்லை முட்டி அலை மோதி என்னிடம் வந்தது அவனின் முகவரி சரியாய் தெரியததால்
-
- 8 replies
- 1.6k views
-
-
மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017
-
- 0 replies
- 830 views
-
-
நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் ... நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் நிறைந்திருக்கிறேன் . ஒளிர்விடும் சுடர்நான் காலடி எங்கும் தனிமை இருளை சுமந்திருக்கிறேன் . நடுவூரில் பழுத்த நல்ல மரம் நான் வேர்கள் இன்னும் எனை தேடிக்கொண்டு .... மாவிலை தோரணங்கள் சூடி சந்தன வாசம் பூசி பூரனப்பட்டவனாய் நிற்க முயலவில்லை நான் உங்களைப்போல் . கண்ணாடிகள் அலங்கரிக்கப்படுவதால் _முக கறைகள்என்றும் மறைவதில்லை . நிழல்களை எடைபோட்டு நிரப்பிக்கொள்ளவும் கனவுகளை கருவாய் சுமந்து திரியவும் ஏக்கதொப்பைகளை ஏற்றிக்கொண்டு நிற்கவும் சம்மதித்ததில்லை _என் மனசாம்ராட்சியம் உங்களை போல் . அரிதாரம் பூசி முகத்தை மறைத்தாலும் முகவரி…
-
- 3 replies
- 933 views
-
-
தியாக தீபமே தமிழ் மக்களுக்காய உண்ணாநோன்பிருந்து (15-09-1987 தொடக்கம் 26-09- ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதையை மீள்பிரசுரம் செய்கிறேன்.... தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே…
-
- 5 replies
- 720 views
-