வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஆண் குழந்தைக்குத் தாயான ஜெனிலியா பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் ஜெனிலியா. அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஜெனிலியா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இத்தகவலை ரிதேஷ் தேஷ்முக், சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஜெனிலியாவும், ரிதேஷும் கடந்த 2003-ம் ஆண்டு ‘துஜே மேரி கசம்’ படம் மூலமாக ஹிந்தியில் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. மஸ்தி, தேரே நால் லவ…
-
- 3 replies
- 728 views
-
-
தமிழ் திரைப்படத்துறையின் பழம் பெரும் இயக்குநர் சி.ருத்ரய்யா (67), சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சி.ருத்ரய்யாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான “அவள் அப்படித்தான்” என்ற திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், பிரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த அந்த படம், இந்தியாவில் வெளியான மிகச்சிறந்த 100 படங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட ருத்ரய்யா, மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற அவருக்கு ஒரு மகள் உண்டு. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார். தனது இறுதிக் காலத்தை சென்னை லாயிட்…
-
- 12 replies
- 2.7k views
-
-
மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்! சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இரு நூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக் கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கினர். இந்த சண்டைக் காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சியை அமைத்தார். …
-
- 2 replies
- 895 views
-
-
சென்னையில் இருப்பது கடும் நரகம்தான்.பட்டை வெயில் , கடல் வேறு இருப்பதால் வேர்த்து ஊற்றிக்கொண்டேயிருக்கும். பொண டிராஃபிக் , பொல்யூஷன் , மக்கள் கூட்டம் & குப்பை கூளம்.அதனால் எல்லோரும் கடு கடுவென எரிச்சலோடுதான் திரிந்து கொண்டிருப்பார்கள்.ஏசி இல்லாத வீடுகளில் புணர்ச்சி கூட திட்டிக்கொண்டே எரிச்சலோடுதான் நடக்கும். இந்த மாதிரி சூழ்நிலையில் , சினிமா ஸ்டாரக்ள் ,அரசியல்வாதிகள் , பிஸினஸ்மேன்கள் , பல்கலைக்கழக பேராசிரியர்கள் , அறிவு ஜீவிக்கள் என பலரும் சீரியஸாக ஜோக்கர் வேலை பார்ப்பதால் கொஞ்சம் பேலன்ஸ் ஆகி , ரிலாக்ஸ் ஆகி சென்னையில் வாழ்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். ரஜினி அரசியலைப்பற்றியும் , அவரது பட ரிலீஸுக்கு முன்பு , நான் அரசியலுக்கு ....என ஆரம்பித்து ஏதேனும் உளறிக்கொட்…
-
- 2 replies
- 760 views
-
-
திருமணமே முடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து ஒற்றைக் காலில் நின்ற இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமாகிய அனர்கலி ஆகார்ஷா இரகசிய திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரையே அனார்கலி திருணம் முடித்துள்ளதாக தெரியவருகிறது. அனார்கலியின் திருமணத்தை நடத்தி வைக்க இலங்கையில் இருந்தும் ஒரு குழு அமெரிக்கா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மை நிலை குறித்து ஆறிய ´அத தெரண கொசிப்´ பிரிவு அனார்கலி ஆகார்ஷாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தெனிலவு வேலையில் பிசியாக இருக்கிறாரோ தெரியவில்லை. எனினும் திருமணம் முடித்த அனார்கலி தனது கணவருடன் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவ…
-
- 7 replies
- 1.2k views
-
-
திரைப்படம் - ஹிட்லர் உமாநாத் இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் - மலேசியா வாசுதேவன், சுருளிராஜன் .......... .......... அழுதிடுவார் அது அராபி ராகம், கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம், சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி, சினுங்கிடுவார் இது சிந்து பைரவி, சீக்கி அடிப்பார் அது நாட்ட குறிஞ்சி, சத்தமிடுவார் அது சங்கராபரணம், குரட்ட போட்டா ... குரட்ட போட்டா அது கேதாரம், கும்பகர்ணனே இதுக்கு ஆதாரம். நடையழகு இது ரூபக தாளம், நாடி துடிப்பினிலே ஆதி தாளம், அப்படியே படம் பிடிக்க கேமிரா இல்ல, அம்புட்டையும் சொல்ல நானும் கம்பனும் இல்ல.... மகாராசன் கோட்டையில கோவில் வாசலு, உடுத்த வேஷ்டியையும் கேட்டு வந்தா - தான் உடுத்தி இருக்கும் வேட்டியையே உடு…
-
- 2 replies
- 1.3k views
-
-
கும்கி படப்பிடிப்பில் ஒத்துழைக்கும் யானை பெரிய நடிகர்கள், இயக்குநர், டெக்னீஷியன்கள் உள்ளடங்கிய புராஜெக்டா என்று பார்த்துத்தான் ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் பணம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு அந்த புராஜெக்டை ஆரம்பித்திருக்கும் தயாரிப்பாளரின் சொத்து, அவர் தயாரித்த முந்தைய படங்களின் ட்ராக் ரெக்கார்ட் ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். கொடுத்த காசைத் திரும்ப வாங்க முடியவில்லையென்றால் படத்தின் விநியோக ஏரியாவையோ, அல்லது சாட்டிலைட் ரைட்ஸையோ ஹோல்டிங் வைத்திருப்பார்கள். இவர்களது நோக்கமே வட்டியும், முதலும்தான். படத்தின் தரமோ, அல்லது அதன் கதையோ எதுவும் பிரச்சினையில்லை. இந்த இரண்டு வகையில் ஏதாவது ஒரு பிடிமானம் இல்லையென்றால் படம் வெளியாகும் முன்பு, என்னிடம் இந்தத் தயாரிப்பாளர் கடன் வாங்க…
-
- 0 replies
- 552 views
-
-
இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன். முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் அந்த இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டால், படம் இன்னும் தெளிவாகப் புரிய வாய்ப்பு உள்ளது. 1. Interstellar and Time Travel 2. Interstellar and Black Holes ஒருவேளை எந்த விபரமும் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அத்தனை கடினமானவை அல்ல. அவை வரும்போதே அவற்றுக்கான விளக்க…
-
- 1 reply
- 3.1k views
-
-
ஒரு படம் எப்படி எடுக்கப்படக் கூடாது என்பதற்கான சகல கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள படம் ‘புலிப்பார்வை’. ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்ட காட்சிகள், இப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் இருக்கின்றன. ஒன்று – படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சி. அடுத்தது – இடைவேளை முடிந்து படம் மீண்டும் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் காட்சி. இந்த இரண்டு காட்சிகளிலும் நடித்த நடிகர்களுக்கு வசனங்கள் இல்லை என்றாலும், அவர்கள் இவ்விரு காட்சிகளிலும் சிறப்பாக நடித்து தங்கள் திறமையை வெளிபடுத்தி இருந்தார்கள். ஆனால், இந்த இரண்டு காட்சிகளையும் அனைத்து திரைப்படங்களிலும், தேவையென்றால் இணையத்தில்கூட பார்க்கலாம். இந்த இரண்டு காட்சிகளும் “புகைபி…
-
- 4 replies
- 1.2k views
-
-
Thunderstruck, all alone, I stand here at the edge of the cliff. I crawled the dense forest to get here The tribes and wild and strays They say `Jump, jump from the cliff.' As I look down, naked, cold and trembling, The ferocious sea I see with its mouth OPEN It's ready to swallow me. The noises are unbearable the place so dark. As I decided to jump in the sea I saw the North Star. I remembered how it shone above my blessed home where singing hugging and laughter awaited me I said, `Wait I want to go home.' The voices murmured, `End the journey.' `Jump! Jump you ugly thing.' I smiled to them and pitied them, They don't know I have wings."
-
- 1 reply
- 649 views
-
-
சூப்பர் ஸ்டாருக்கு கலைஞருக்கான நூற்றாண்டு விருது சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு இந்திய மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ரசிகர்கள் ஏராளம். அவரது ரசிகர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர் என்று அரசியல் தலைவர்களே தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் ரசிகர் பட்டாளம் உள்ள ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர பா.ஜ.க கடும் முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ரஜினிக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. நிகழ் ஆண்டுக்கான சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுற…
-
- 5 replies
- 1.5k views
-
-
கமல் | படம்: கிரண் சா 'உத்தம வில்லன்' படத்தில் கமல் ‘உலக நாயகன்’ எனத் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக மட்டுமின்றி, சக படைப்பாளியாகவும் பயணிக்கும் கமல் ஹாசனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களுக்கு இதுவரை தமிழ் சினிமா செய்தவை என்னென்ன? எதை நான் சொல்றது..? சம்பளம், பாடம், சவுக்கடிவரை எல்லாமே கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. நான் பெற்றவை எல்லாம் இங்கிருந்து பெற்றவைதான். கற்றவையும் துன்புற்றவையும் இங்கிருந்து வந்தவைதான். தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் மாற்றங்களை அப்டேட் செய்துகொண்டாலும்கூட, தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியிலான சாதக நிலையை அனுபவிக்கும் சூழல் பரவலாகவில்லையே... தொழி…
-
- 0 replies
- 796 views
-
-
மாஸ்டர் டைரக்டர்! எஸ்.கலீல்ராஜா ஒரு சினிமா எப்போது தொடங்கும்? உண்மையில் ஒரு படம் முடிந்த பின்தான், அது ஆரம்பிக்கும்! ஜாக்கி சானின் பக்கா ஆக்ஷன் படத்தைப் பார்த்து முடித்தவுடன் பைக் திராட்டிலை வேகமாக முறுக்கினால்... 'தாரே ஜமீன் பர்’ பார்த்துவிட்டு கண் கலங்க வெளியே வந்தால்... 'சதுரங்க வேட்டை’ பார்த்துவிட்டு, 'ஊர்ல எம்புட்டு ஃப்ராடு இருக்காய்ங்க... சூதானமா இருக்கணும்’ என மனதுக்குள் நினைத்தால்... அது நல்ல சினிமா. இதெல்லாம் நமக்குத் தெரிந்த கமர்ஷியல் உதாரணங்கள். படம் முடிந்து வெளியே வந்ததும், 'மனுஷன் பின்னிருக்கான்யா... ஆனா, கிளைமாக்ஸில் என்ன சொல்ல வர்றாரு?’ எனப் பிரமிப்பு விலகாமல் பார்த்தால், 'அந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்’ என முடிவுசெய்தால்... அது 'கிறிஸ…
-
- 0 replies
- 1.7k views
-
-
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து 19-வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலக மொழிகளில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த வரிசையில் இடம்பெறும் இந்திய மொழிப் படங்களை தேர்வு செய்ய பிரபல சினிமா இயக்குனர்கள் லெனின் ராஜேந்திரன், கே.மதுபால், எம்.சி.நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 55 படங்கள் இந்த தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் இருந்து 7 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3 இந்தி, 2 வங்காளம், ஒரு மர…
-
- 0 replies
- 488 views
-
-
இரண்டு வருடமாக இயக்குநர் ஷங்கர் இயக்கிவரும் படம் ’ஐ’. இது அவருடைய கனவு படம். இப்படத்திற்கு தனது உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். கடந்த மாதம் வெளியான ஐ படத்தின் டீஸரை பார்த்து இந்திய திரையுலமே வியந்து போனது. மேலும் தென்னிந்திய சினிமாவில் இந்த டீஸர் பெரும் சாதனையை நிகழ்த்தியது. இப்படத்திற்காக விக்ரமுடன் எமி ஜாக்ஸன், ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து எல்லோரையும் பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.. இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே.. http://www…
-
- 2 replies
- 726 views
-
-
இவர் பேட்டியைப் பார்க்கும் கதை உண்மையிலேயே திரடப்பட்ட கதை போலதான் இருக்கின்றது. "கத்தி படத்தின் கதை, அதில் வரும் காட்சிகள், சண்டைக் காட்சி, பாடல் மற்றும் பின்னணி இசை போன்றவை ஒரிஜினல் கிடையாது. பல படங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டவை" என்று சமூக வலைத் தளங்கள் மற்றும் இணைய தளங்களில் ஏகப்பட்ட ஆதாரங்களுடன் செய்திகள் பரவி வருகின்றன. 'நான் எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என வீடியோ பேட்டியொன்றில் கூறிய இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இப்போது பதில் சொல்லும் கட்டாயத்துக்கு வந்திருக்கிறார். காரணம், அணி வகுக்கின்றன அவருக்கு எதிரான ஆதாரங்கள். இந்தப் படத்தின் கதை மீஞ்சூர் கோபி என்ற எழுத்தாளர் மற்றும் இயக்குநருக்குச் சொந்தமானதுதான் என்பதற்கு, சினிமா பிரபலம் ஒருவரே சாட்சியாக …
-
- 5 replies
- 2.1k views
-
-
ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் டீசர் எனப்படும் முதல் சிறு முன்னோட்டப் படம் இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது. அதில் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் மற்றும் கம்பீரம் அவரது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டீசர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன. ட்விட்டரில் ரஜினி, லிங்கா, டீசர் என்ற வார்த்தைகளே முன்னணியில் உள்ளன. 41 நொடிகள் மட்டுமே வரும் இந்த டீசர், பார்க்கும் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் கால ரஜினி, இன்றைய நவீன கால ரஜினி என இரு தோற்றங்களில் ரஜினி அசத்துகிறார். இவருக்கு 64 வயது என கோயிலில் கற்பூரம் அடித்து…
-
- 2 replies
- 811 views
-
-
தமிழ் சினிமாவைப் பற்றி இன்று வெளியாகும் செய்திகளில், படத்தின் தரம், வணிக வெற்றி, திருட்டு டி.வி.டி போன்ற செய்திகளுக்குச் சமமான அளவில் படத்தின் கதை திருடப்பட்டது பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன. முன்பெல்லாம் பாடலின் மெட்டு, கதைக் கரு போன்றவை எந்தப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இப்போது இணையமும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு நிகரான பங்கு வகிக்கும் சமூக வலைதளங்களும் இந்தத் திருட்டுகளைக் கண்டுபிடிப்பதை எளிதாகவும் விரைவாகவும் ஆக்கிவிட்டன. பல வங்காள, மராத்திக் கதைகள் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழ்ப் படங்களாகியிருக்கின்றன. ஆங்கிலப் படங்களிலிருந்து கதையை எடுப்பது என்பதைப் பலரும் செய்திருக்கிறார்கள். தன் கலை, அரசியல் வாழ…
-
- 1 reply
- 618 views
-
-
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார். “தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கெளரவம் என நடிகர் கமல்ஹாசன் தெரித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு... தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டப் பணிகள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள…
-
- 0 replies
- 494 views
-
-
பல தடைகளை தாண்டி திரைக்கு வந்திருக்கும் படம் கத்தி. விஜய், சமந்தா, சதீஷ், நீல்நிதின் முகேஷ் நடித்துள்ள இந்த படம் இன்று ரசிகர்களின் பேராதரவோடு திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யுடன் முருகதாஸ் இணையும் இரண்டாவது படம் கத்தி. கத்தின்னு தலைப்பு வெச்சுட்டாங்களே இந்த மாதிரி தலைப்பையெல்லாம் இயக்குநர் ஹரி படத்துக்குதானே இருக்கும்னு நினைச்சேன். கதிரேசன், ஜீவானந்தம் என்று இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கிறார். தன்னூத்து என்கிற கிராமத்தில் இருக்கு வறட்சியை காரணமாக வைத்து ஐடி கம்பெனி ஒன்று அந்த கிராமத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது. ஆனால் அதே ஊரில் பிறந்து வளர்ந்த மேல்படிப்பு வரை படித்த ஜீவானந்தம் அதை தடுக்க முயற்சி செய்கிறார். தன்னூத்து என்கிற கிராமம் பல வருடங்களுக்குமுன்…
-
- 39 replies
- 8.8k views
-
-
டிசம்பரில் பூஜாவுக்கு திருமணம்... ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்! சென்னை: வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார். உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விடியும் முன்... இந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார். திருமணம்... இனி தொடர்ந்து தமிழ்ப் ப…
-
- 14 replies
- 2.4k views
-
-
குரோம்பேட்டையில் சிலையாக நிற்கும் 'விஷ்வா பாய்'. சென்னை: விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை செய்து அதை குரோம்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் திறந்து வைத்துள்ளனர். இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. கத்தி படம் நல்ல வசூல் செய்து வரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் தளபதியை சிலையாக வடித்துள்ளனர். ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை, கண்ணாடி அணிந்தபடி அதாவது தலைவா படத்தில் வரும் விஷ்வாபாய் கதாபாத்திரம் போன்று உள்ளது விஜய்யின் சிலை. இந்த சிலை திறப்பு விழா இன்று சென்னை, குரோம்பேட்டையில் நடைபெற்றது. மக்கள் பார்க்கும் வகையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் சிலை நிறுவப்பட்…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆங்கில பட ரசிகர்கள் முடிந்தால் போய் பார்க்கவும் .
-
- 0 replies
- 428 views
-
-
லூசி தைவானில் படிக்கும் ஒரு மாணவி. அவளது நண்பன் ஒருமுறை ஒரு பெட்டியை ஜாங் என்பவனிடம் கொடுத்துவர சொல்கிறான். லூசி மறுக்கிறாள். அவன் அந்தப் பெட்டியை அவளது கையில் விலங்கிட்டுவிடுகிறான். லூசிக்கு வேறு வழியில்லை சாவி உள்ளே ஜாங்கிடம் இருக்கு என்கிறான். சரி என்று பெட்டியை கொடுக்க செல்கிறாள் லூசி. அந்த பெரிய ஆடம்பர விடுதியின் வரவேற்பில் ஜாங்கை பார்க்க வந்திருப்பதாக சொல்கிறாள். படீர் என்கிறது துப்பாக்கி வெளியில் நின்றுகொண்டிருந்த பாய்பிரண்ட் காலி. ஒரு ஆறுபேர் லூசியை தூக்கிக் கொண்டுபோய் ஜாங்கின் ஆடம்பர அறையில் விடுகிறார்கள். தொடரும் ஒவ்வொரு காட்சியும் கொடூரமாக இருக்க லூசி பதறுகிறாள். கண்முன்னால் சில கொலைகளும் முகத்தில் தெறித்த ரத்தமும் லூசியை மட்டுமல்ல நம்மையும் பதறடிக்கின்ற…
-
- 0 replies
- 2k views
-
-
நிஜவாழ்க்கை கற்பனையைவிட கிளர்வூட்டுவது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை முழுமையாக உணரவேண்டும் என்றால் உண்மைச் சம்பவங்களில் இருந்து திரையில் விரிந்த ரஷ் பார்க்கவேண்டும். இயக்குனர் ரான் ஹோவர்டின் ஆகச் சிறந்த படம் என்று யு.எஸ்.ஏ டுடே சொல்லியிருக்கிறது. பார்த்தல்தான் புரியும். இரண்டு பார்முலா ஒன் ஓட்டுனர்களுக்கிடையே நிகழும் ஆரோக்கியமான போட்டி விரைந்தோடும் கார்களில் சடுதியில் வரும் மரணம் என படம் தொய்வின்றி பறக்கிறது. இயக்குனர் ரான் ஹோவர்ட் நிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன் ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம் ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படம். …
-
- 0 replies
- 910 views
-