வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட "சிகை" நடிகர் கதிர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை. சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்தியாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு. தியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட…
-
- 4 replies
- 1.1k views
-
-
தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர். தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாக…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்பாலா தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம்Â சுவடுகள்ஜெய்பாலாவே இதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஒளிப்பதிவும் செய்கிறார். இவர் ஹாலிவுட் திரைப்பட கல்லூரியில் பயின்றவர். நாயகியாக மோனிகா நடிக்கிறார். உன்னதமான காதல் உறவுகளையும் குடும்ப உறவுகளையும் யதார்த்தமான முறையில் சித்தரிக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. இதில் சரண்யா, ராஜேஷ், கே.ஆர்.விஜயா, மோகன் சர்மா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கிறார். ஐம்பது இசைக் கலைஞர்களுடன் 1960 மற்றும் 70-களில் நடந்தது போல் பாடல்கள் லைவ்வாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் 'சுவடுகள்' படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந…
-
- 2 replies
- 544 views
-
-
ஒவ்வொரு வருடமும் இமயமலை சென்று வரும் ரஜினி, எந்திரன் படப்பிடிப்பினால் இரண்டு வருடம் இமயமலைப்பயணத்தை தள்ளிப்போட்டார். எந்திரனின் இமாலய வெற்றிக்குப் பிறகு, இமயமலைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அவர் பாபாவின் குகைக்குச் சென்று தியானம் செய்தார். உலகமே அவர் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அவர் தனிமையும் அமைதியும் நிறைந்த இமயத்தில், தனது நெருங்கிய நண்பர்கள் இருவர் துணையுடன் பாபாவின் குகைக்குச் சென்றார். மிகவும் ஆபத்தான குகை என்று சொல்லப்படும் இந்த இடத்தில் அவர் தியானம் செய்தார். பின்னர் அவர் பாபாவின் ஆசிரமத்தில் தங்கினார். ரஜினி, தீபாவளிக்கு முன் சென்னை திரும்புகிறார்.http://www.tharavu.com/2010/10/blog-post_1579.html
-
- 0 replies
- 839 views
-
-
[size=5]ரஜினி எனும் தொன்மமும் இந்தியக் குடும்பமும்[/size] ஆர்.அபிலாஷ் ஒவ்வொரு சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும்போது ரஜினிதான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்களும் மெல்ல மெல்ல கூடுதலாகப் பல வர்ணங்களை இந்தப் புனைவில் சேர்த்துவிட்டுச் செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம், விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்துதான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன. இது போல் மேலும் சில நாயகர்களுக்கும் தொன்மங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பரோ பகாரியாக, கண்ணியமானவராக, வீரராக, மென்மையான, நேர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
நடிகர் சத்யராஜ் ரஜினி தன் மிகச்சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது சத்யராஜ் ஆற்றிய உரை நேரடியாக ரஜினியைத் தாக்குவதுபோலவே அமைந்திருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில் ரஜினியைப் பாராட்டிப் பேசியது போல இருந்தது. பெரியார் வலைக்காட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி சத்யராஜ் வழங்கிய சிறப்புச் செவ்வியில் இது குறித்து உண்மையில் ரஜினி பற்றிய உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சத்யராஜ் பதிலளிக்கையில், உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப் பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
‘ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?’ என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப். ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது. இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான். கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
அரசியலோ ஆன்மீகமோ... சும்மா இருக்கும் ரஜினியைச் சீனுக்குள் நுழைப்பதில் கெட்டிக்காரர்கள் நமது பத்திரிகையாளர்கள். அப்படித்தான் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனியிடமும் ஒரு கேள்வி கேட்டார் பத்திரிகையாளர் ஒருவர். ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வரும் பதினெட்டாம் தேதி துவங்குகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆறு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் டோனி. மொகாலி அணியை ப்ரீத்தி ஜிந்தா தனது காதலருடன் சேர்ந்து வாங்கியுள்ளார். கொல்கத்தா அணியை வாங்கியிருப்பவர் ஷாரூக் கான். டெல்லி அணி தனது விளம்பரத் தூதராக அக்ஷய் கு…
-
- 6 replies
- 1.6k views
-
-
கபாலி படம் வெளியாகும் போது, அவரின் கட் அவுட் அல்லது போஸ்டரில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரஜினி ரசிகர்களுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கபாலி. இந்த படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது, அவர்களின் ரசிகர்கள் அவர்களின் கட் அவுட் மற்றும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று. எனவே, கபாலி படம் வெளியாகும் போது, பாலாபிஷேகம் செய்வதில் ரஜினி ரசிகர்கள் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், அப்படி செய்ய வேண்டாம் என பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்யநாராயனா …
-
- 2 replies
- 411 views
-
-
சென்னை விமான நிலையத்தில் ரஜினி கண்ணெதிரே பெண் டாக்டரை அவமானப்படுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறி அம்பலத்திற்கு வந்துள்ளது. சென்னை தி.நகரில் மில்லினியம் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருபவர் அய்யாதுரை. இவரது மகள் டாக்டர் உமா தனபாலன், மகன் சிவாவும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த மாதம் சென்னை வந்த இவர்கள் இருவரும் ஜனவரி 13-ந் தேதி அமெரிக்காவுக்கு லூப்தான்சா விமானத்தில் திரும்பிச்செல்ல டிக்கெட் வாங்கியிருந்தனர். இந்நிலையில் டாக்டர் உமாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் டிக்கெட்டை ரத்து செய்து பிப்ரவரி (இம்மாதம்) 5-ந் தேதிக்கு மாற்றிக்கொண்டார். விமான பயண விதிமுறைப்படி, உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான மருத்துவ சான்றிதழை சமர்பித்தால் அபராதத்தொகை இல்லாமல் மாற்றியமைக்கப்பட…
-
- 7 replies
- 2.2k views
-
-
சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அதிர்ச்சி, ரஜினி கேட்டதில் அதிரிச்சி அடைய வேண்டாம் - சீமான் இந்த வாரம் குங்குமத்தில்... Thanks idlyvadai.blogspot.com
-
- 6 replies
- 6.2k views
-
-
ரஜினி கிண்டலடித்தாரா? - குழப்பத்தில் சந்தானம் கதாநாயகர்களைப் போல நகைச்சுவை நடிகர்களுக்கும் இரசிகர்களால் பட்டம் வழங்கப்படுகிறது. வடிவேலுக்கு வைகை புயல் என்று பட்டம் இருக்கிறது. வடிவேலுவை தொடர்ந்து தற்போது காமெடியில் கோடிகளை குவித்து வரும் சந்தானத்திற்கு இதுவரை பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறை இனி நீங்கப்போகிறது. தற்போது சந்தானம் ஆர்யாவுடன் நடித்து வரும் படம் சேட்டை. ஹிந்தி டெல்லி பெல்லியின் ரீமேக். கண்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலும், விளம்பரங்களிலும் சந்தானத்தை காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் குறிப்பிடப் போகிறார்கள். இதற்கு சந்தானமும் ஒப்புதல் கொடுத்து விட்டாராம். சந்தானம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம்…
-
- 1 reply
- 655 views
-
-
ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். பிரபல வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த கேள்வி பதில்: கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவி…
-
- 0 replies
- 595 views
-
-
நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி......... ரஜினி என்னும் மகா அரசியல்வாதி : 2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன். சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து விய…
-
- 2 replies
- 725 views
-
-
கவிஞர் கொடுக்கல் வாங்கலில் கறாரானவர்.கொடுக்கல் வாங்கல் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம்.அன்பைக் கொடுத்து அந்த அன்பை இரண்டு மடங்காக வாங்கிவிடுவார்’’ என்று கமல் சொன்னார். கமல் குறிப்பிட்டது கவிப்பேரரசு வைரமுத்துவை, அவரது மகன் கபிலன் திருமண விழாவில். கமல் சொன்னது உண்மைதான்.கவிஞர் அத்தனை அன்பைக் கொடுத்திருந்த தால்தான் காலையிலேயே கலைஞர் அரங்கம் அன்பு உள்ளங்களால் நிறைந்திருந்தது. அரங்கில் முதலில் வந்த பிரபலம் ரஜினி.வெள்ளை நிற வேட்டி சட்டையில் எளிமையாக இருந்தார்.மகள் திருமணத்தை திருப்தியாக முடித்த நிம்மதி தெரிந்தது. அவரைத் தொடர்ந்து பிரபலங்கள் வரிசையாய் வரத் துவங்கினர்.உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் கவிஞரின் நண்பர்கள். இங்கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
ரஜினியின் ரோபோட் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூனும் நடிக்கவிருப்பதாக புது செய்தி பரவியுள்ளது. ஷங்கரின் பிரமாண்டப் படைப்பான ரோபோட்டில் நடிக்கும் கலைஞர்கள் தேர்வு படு கமுக்கமாக நடந்து வருகிறது. ரஜினியைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயை முடிவு செய்தனர். இப்போது பிற கலைஞர்கள் பக்கம் ஷங்கர் பார்வையைத் திருப்பியுள்ளார். படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டருக்கு அர்ஜூனை, ஷங்கர் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இது வில்லன் ரோல் அல்லவாம். சூப்பர் நடிகர் ஒருவருடன் அர்ஜூன் இணைவது இது முதல் முறையல்ல. முதன் முதலில் அவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன், குருதிப் புணல் படத்தில் இணைந்து நடித்தார். அதில் கமலுடன் சேர்ந்து, அர்ஜூன் கேரக்டரும் வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்ட…
-
- 0 replies
- 1k views
-
-
இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் ரஜினியின் 'சிவாஜி' படத்தில் சந்தியாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி படத்தில் லைட்மேன் வேலைசெய்வது கூட பெருமையான விஷயம்தான். அந்த வகையில் கடைசிநேரத்தில் சந்தியாவும் 'சிவாஜி'யில் முக்கிய பங்காற்றுகிறார். கதாநாயகி ஸ்ரேயா இருக்கும்போது சந்தியாவுக்கு என்ன வேலை.... என்று நீங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதற்குள் 'சிவாஜி'யில் சந்தியாவின் ரோல் என்ன என்பதை நாங்களே சொல்லிவிடுகிறோம். கடந்த வாரம் இயக்குனர் ஷங்கரிடமிருந்து வந்த போன், சந்தியாவின் மொபைலை எழுப்பியது. போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த நொடியே சந்தியாவின் முகமுழுவதும் பூரிப்பு பூத்தது. படத்தில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுக்க யார்யாரையோ தேர்வு செய்து பார்த்தும் ஒருவரும் தேரவில்ல…
-
- 1 reply
- 966 views
-
-
ரஜினி படத்துக்கு 330 கோடி ரூபாய் காப்புறுதி பிரபல தமிழ் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஒன்று சுமார் 330 கோடி ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அளவுக்கு இதுவரை எந்தத் திரைப்படமும் இந்தியாவில் காப்புறுதி செய்யப்பட்டத்தில்லை எனவும் காப்புறுதி வல்லுநர்கள் கூறுகின்றனர். எந்திரன் 2 எனப் பெயரிடப்பட்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அந்தப் படம் தற்போது தயாராகி வருகிறது. மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்தப் படம், இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் திரைபடத்துறையில் அண்மைக் காலமாக பல படங்கள் காப்புறுதி செய்யப்பட்டு வருகின்றன. படப்படி…
-
- 0 replies
- 237 views
-
-
வியாழக்கிழமை, 14, ஜூலை 2011 (8:50 IST) ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்த தயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்த நிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக…
-
- 1 reply
- 634 views
-
-
ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே! எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார். கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது: "ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஜாக்கி சான் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 1980லி…
-
- 0 replies
- 766 views
-
-
குசேலன் தோல்வி, ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டது போன்றவற்றால் ரஜினியின் இமேஜ் அடிவாங்கியிருப்பது குறித்து யார் கவலைப்படுகிறார்களோ இல்லையோ எந்திரன் படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் பெரிதும் கவலைப்படுகின்றனர். ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கமாட்டேனென அஜித் கூறியதாகச் செய்தி வெளியானதும் ஏகன் படம் பல வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களால் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் அஜித்தைக் கூப்பிட்டு உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு ஆணையிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதே போன்று ரஜினிக்கும் உத்தரவு போடப்பட்டிருக்கிறது. கூடுதலாக மிகுந்த செலவுடன் தயாரிக்கப்பட்டு வரும் எந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
டிசம்பர் மாதம் பல்வேறு படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் 3Dல் தயாராகியிருக்கும் 'சிவாஜி 3D' படம் வெளியாக இருக்கிறதாம். ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'சிவாஜி 3D' படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம். ரஜினி, ஸ்ரேயா, சுமன் நடித்த சிவாஜி படத்தினை ஷங்கர் இயக்கி இருந்தார். இப்படம் 2007-ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜி படத்தினை 3Dல் வெளியிடலாம் என்று தீர்மானித்து அதற்கான பணிகளை ஏ.வி.எம் நிறுவனம் மேற்கொண்டு இருந்தது. அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் தீபாவளி அன்று வெளியிடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அதனைத் தள்ளி வைத்து, படத்தினை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு …
-
- 1 reply
- 468 views
-
-
ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார். சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார். அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார். பின்னர் அவர் அந்த க…
-
- 0 replies
- 518 views
-
-
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சத்தியநாராயணா திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி 1996ம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இதுவரை இதற்குத் தெளிவான பதில் எதையும் ரஜினி தரவில்லை. ஆனால் சமீப காலமாக ரஜினி ரசிகர்கள், தங்களது தலைவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என நெருக்க ஆரம்பித்துள்ளனர். விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ஆந்திராவில் சிரஞ்சீவி என பல நடிகர்களும் அரசியலில் குதித்து கலக்கிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் ஒதுங்கியிருப்பது சரியல்ல என்று அவர்கள் ரஜினியை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு உச்சகட்டமாக கோவையில் ரஜினி ரசிகர்கள் தனிக…
-
- 1 reply
- 1.4k views
-
-
ரஜினிகாந்த்தின் சிவாஜி பட கேசட்டுகளை பஸ் டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கி தங்களது தலைவரின் பாடல்களை ஒலிக்கச் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். சிவாஜி பட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி விட்டன. எங்கு பார்த்தாலும் சிவாஜி பட பாட்டாகவே இருக்கிறது. இந்த நிலையில் தங்களது தலைவரின் பாடல்களை மேலும் பிரபலப்படுத்த முடிவு செய்த சிவகாசி நகர ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான ஐடியாவை அமல்படுத்தியுள்ளனர். கை நிறைய கேசட்டுகளுடன் பேருந்து நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்த பேருந்துகளில் ஏறி, டிரைவர்களுக்கு கேசட்டுகளை இலவசமாக வழங்கி அண்ணே, மறக்காம தலைவர் பாட்டை ஒலிக்க விட்டபடியே வண்டியை ஓட்டுங்கள் என்று அன்பொழுக கேட்டுக் கொண்டனர். அதேபோல, கண்டக்டர்களுக்கும் ஒரு பிரதியைக் கொடுத்…
-
- 17 replies
- 3k views
-