வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
வைரமுத்துவின் வார்த்தையில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது -சினேகன் சீறல்! இந்த வருடம் Ôஹிட்Õ அடித்ததில் ஏக குஷியாக இருக்கிறார் பாடலாசிரியர் சினேகன். போக்கிரியில் Ôமாம்பழமாம் மாம்பழம்...Õ விற்றவர் இவர்தான். பருத்தி வீரனில் அத்தனை பாடல்களும் சினேகன்தான்! கைபேசியில் வருகிற அத்தனை அழைப்புகளும் பருத்திவீரன் பாடல்கள் பற்றியேதான் பேசுகின்றன. Ôரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார்Õ என்கிற சினேகனுக்கு ஏற்கனவே சிரித்த முகம்! இப்போது, இன்னும்...இன்னும்....! தினமும் ஜிம்முக்கு போகிறார். என்னவென்றால் ஹீரோ என்கிற அடுத்த அவதாரத்திற்குதானாம்! அட....! மனிதனுக்கு Ôதான்Õ என்ற அகங்காரம்தான் இருக்க கூடாது. அதைதான் Ôநான்Õ என்ற அகங்காரம் இருக்க கூடாது என்று திரித்து சொல்லிவிட்டார்கள். தமிழில் …
-
- 0 replies
- 920 views
-
-
வைரமுத்துவை விடாத சின்மயி மின்னம்பலம்2022-02-12 வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு "வைரமுத்து இலக்கியம்-50" என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் நேற்று சென்னையில் வெளியிட்டார். இதற்கு பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை பாடி தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி. எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ, அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சி அடைய…
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரசன்ன குருக்களின் குரலில் வெளியான பாடல் பாராட்டுக்களை பெற்றுள்ளது. adminNovember 28, 2023 யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. வெகு விரைவில் திரை…
-
- 5 replies
- 754 views
- 1 follower
-
-
மூத்த மகன் விஷாலின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்த பிரபுதேவா, சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 'வில்லு' ஷ¨ட்டிங்கில் கலந்துகொண்டார். நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகிலுள்ள வீட்டில், தன் மகன் விஜய்யுடன் ரஞ்சிதா நடித்த காட்சிகளை பிரபுதேவா இயக்கினார். இதில் நயன்தாரா, கீதாவும் நடித்தனர். பிறகு பின்னி மில்லில் விஜய், நயன்தாரா நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=419
-
- 0 replies
- 1.5k views
-
-
பாலியல் தொழிலாளி, பாலியலை தூண்டும் படங்களில் நடிக்கும் நடிகை என யாராக இருப்பினும் அவர்களின் சமூக அந்தஸ்து அவர்கள் புழங்கும் இடங்கள், பண பலம், வர்க்க பலம் ஆகியற்றை முன்னிட்டே கட்டமைக்கப்படுகிறது. ஷகிலா பாலியலை தூண்டும் படங்களில் நடித்தவர். விரும்பி அல்ல, ஆரம்பகால நிர்ப்பந்தங்களால். ஆனால் நீலப்படம் அளவுக்கு அவள் கீழிறங்கவில்லை. ஷகிலாவின் இன்றைய சமூக அந்தஸ்து எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். படங்களிலும் அவரை பாலியல் நகைச்சுவைக்கு பயன்படும் போகப் பொருளாகவே பயன்படுத்துகிறார்கள். தூள், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவரை சினிமா விழாக்களுக்கு அழைப்பதற்குக்கூட இங்கு ஆளில்லை. எனில் சினிமா தாண்டிய நிகழ்வுகளில் பார்வையாளராகக்கூட அவரை கற்பனை …
-
- 0 replies
- 1.4k views
-
-
ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டது - 26.10.2007 By JBR ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டதாக அதி்ல் நடிக்கயிருந்த நடிகர் ஷாருக்கான் தெரிவி்த்தார். 'ஜீன்ஸ்' படம் முடிந்ததும் ஷங்கர் எழுத்தாளர் சுஜாதா துணையுடன் உருவாக்கிய கதை 'ரோபோ.' இந்தியாவில் ரோபோக்களின் ஆதிக்கம் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பதை பின்னணியாகக் கொண்ட சயின்ஸ்பிக்ஷன் இது. 'ரோபோ'வில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டது. படத்தின் பட்ஜெட் மற்றும் கதையில் ஏற்பட்ட திருப்தியின்மை காரணமாக அப்போது 'ரோபோ' கைவிடப்பட்டது. 'சிவாஜி'க்குப் பிறகு 'ரோபோ'வின் ஒருவரி கதையை ஷங்கர் ஷாருக்கானிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்துவிட, தானே தயாரிப்பதாக கூறினார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக முடிவானது. ஷங்கர் திரைக்கதை அமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஷங்கரின் அடுத்த படத்தின் பட்ஜெட் 120 கோடி!? வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007( 16:49 IST ) ஷங்கர் அடுத்து இந்தியில் படம் இயக்கப்போகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்..எல்லாம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. யெஸ்..ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். ரோபோ படத்தின் அவுட்லைன் சொல்லிவிட்டார் ஷங்கர். ஏற்கனவே கமல்,அஜித் என்று நினைத்து பண்ணப்பட்ட கதை. இப்போது ஷாருக்கானுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார். கேமெராமேனாக மீண்டும் கே.வி.ஆனந்த் பண்ணுகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.120 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் இந்தப்படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். Webdunia .com
-
- 4 replies
- 1.5k views
-
-
இயக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன. தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவ…
-
- 4 replies
- 4.7k views
-
-
ஷங்கரின் தடாலடி முடிவு - சரிகிறதா சினிமா சாம்ராஜ்யம்? ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுகிறார் என்றொரு பரபரப்பு செய்தி சினிமா உலகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இந்த செய்தி உண்மையா என்பது குறித்து ஷங்கர் தரப்பு இன்னும் விளக்கமளிக்கவில்லை. ஷங்கர் ஒருபோதும் எஸ் பிக்சர்ஸை மௌனமாக்கப் போவதில்லை, நஷ்டத்தை கண்டு பதறுகிற மனிதரல்ல அவர் என இன்னொரு தரப்பு நம்பிக்கையூட்டுகிறது. இந்த இரண்டில் எது உண்மை என்பதை ஆராய்வதல்ல நம் நோக்கம். இப்படியொரு பிரச்சனை எதனால் கிளம்பியது என்பதே இன்றைய கவலைதரும் விஷயம். காதல், வெயில், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, ஈரம் போன்ற நல்ல பல சினிமாக்கள் தமிழில் வரக் காரணமாக இருந்ததும், பாலாஜி சக்திவேல், வசந்தபால…
-
- 0 replies
- 797 views
-
-
தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக 'ஐ' எனப் பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் ஷங்கருடன் இணைபவர் விக்ரம். நாட்டின் தலையாய பிரச்சினையான தேர்தல் முறைகேடுகள் பின்னணியில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழில் 'ஐ' என்றால் ஐவர் என்று ஒரு பொருள் உண்டு. ஆங்கிலத்தில் 'நான்' என்று சொல்லலாம். படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் மணிரத்னம் படத்தை துறந்ததோடு, மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துள்ளாராம். விரைவில் படத்தின் பிற விவரங்களை ஷங்கர் வெளியிடவிருக்கிறார் http://tamil.onein…
-
- 3 replies
- 970 views
-
-
பாலிவுட்டின் இந்த வருட 'மோஸ்ட் வான்டட்’ திரைப்படம் 'Ra. One’. 'Random Access Version 1.0’ என்பதன் சுருக்கம்தான் 'ரா-1’. ஷங்கரின் 'ரோபோ’வை (இந்தி 'எந்திரன்’)விட பவர்ஃபுல் சினிமாவாக 'ரா-1’ இருக்க வேண்டும் என்று தூக்கம் பார்க்காமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக் கான். ஷங்கர் சொன்ன 'எந்திரன்’ கதை பிடிக்காமல், அதில் இருந்து விலகினாலும், அந்தக் கதையின் ஒன் லைனைத் தழுவித்தான் ஷாரூக் இந்தப் படத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஏற்கெனவே ஒரு பேச்சு பரவிக்கிடக்கிறது. அதனால், 'எந்திரன்’ படத்தின் அட்வான்ஸ்டு ரீ-மேக்தான் ரா.1 என்ற கிண்டல் பேச்சை அடித்துத் தூள் தூளாக்கும் வெறியுடன் உழைத்துக்கொண்டு இருக்கிறார் ஷாரூக். பெரும் பட்ஜெட் படம் பற்றிய சிறு துளித் தகவல்கள்! …
-
- 2 replies
- 982 views
-
-
ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் ரோபோ படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு சிவாஜியை ஏ.வி.எம். நிறுவனம் ரூ.80 கோடி செல வில் தயாரித்து உலகம் முழுவதும் திரையிட்டப்பட்டு ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஷங்கரின் அடுத்த படம் என்ன? ரஜினி நடிக்கப்போகும் புதிய படத்தின் பெயர் என்ன? என்பது கேள்வியாக இருந்தது இந்நிலையில் சிவாஜிக்கு பிறகு ஷங்கரும், ரஜினியும் மீண்டும் ரோபோ படம் மூலம் இணைகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.ரோபோவை தயாரிக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கே.கருணா மூர்த்தி, ஈரோஸ் மல்டி மீடியா கிஷோர் லுல்லா ஆகியோர் வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தை இந்திய திரையுலகி…
-
- 5 replies
- 2k views
-
-
ஆர்.எஸ்.கார்த்திக், அஞ்சலிராவ் நடிக்கும் படம் ‘பீச்சாங்கை’. அசோக் இயக்குகிறார். அவர் கூறியது: விபத்தில் சிக்கும் ஹீரோ, ஏலியன் ஹேண்ட் சின்ட்ரோரம் என்ற ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார். இதில் அவரது பீச்சாங்கை அவர் சொல்படி கேட்காமல் மாறுபட்டு செயல்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள், அரசியல் சட்டையர், கடத்தல் என வெவ்வேறு களத்தில் கதை பயணிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பகலில் நடத்துவதற்காக போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தும் அனுமதி தரவில்லை. இரவில் ஷூட்டிங் செய்து கொள்ளுங்கள் என்றனர். எனது கதை பகலில் நடப்பது. அதை எப்படி இரவில் எடுக்க முடியும். இதுபோல் பல படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு மட்டும் பகலில் பெரிய …
-
- 0 replies
- 282 views
-
-
ஷங்கர்: உருமாறும் உடல்களின் அழகியல் ஆர். அபிலாஷ் சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா காலத்தில் இருந்தே மனித வாழ்வின் சீரழிவு, மீட்சி, மலர்ச்சி ஆகியவற்றை உடல்களில் நிகழ்த்திப் பார்க்கும் ஆர்வம் நமக்கு இருந்துள்ளது. அதனாலேயே திறமையும் அழகும் மிக்க நாயகன் நோய் (ரத்தக்கண்ணீர் (1954), தெய்வமகன் (1969)) அல்லது வறுமை (பராசக்தி (1952), கப்பலோட்டிய தமிழன் (1961), நல்ல நேரம் (1972)) அல்லது சதியால் (பராசக்தி, பாசமலர் (1961), உத்தம புத்திரன் (1958), அடிமைப்பெண் (1969), ஆயிரத்தில் ஒருவன் (1965), நாடோடி மன்னன் (1958), எங்க வீட்டுப் பிள்ளை (1965), குடியிருந்த கோயில் (1968), மலைக்கள்ளன் (1954), மதுரைவீரன் (1956)) நொடிந்து, உருமாறி சீரழிந்து போன நிலையில் தோன்றி போராடுவது அல்லத…
-
- 1 reply
- 783 views
-
-
ஷாப்பிங் சென்றபோது பரபரப்பு;நயன்தாரா & பிரபுதேவாவை துபாயில் ரசிகர்கள் முற்றுகை! துபாயில் ஷாப்பிங் செய்யச் சென்ற நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Ôநயன்தாராவுடன் காதல் எனது தனிப்பட்ட விஷயம் என பிரபுதேவா கூறினார். இந்த காதலை மறைக்காத நயன்தாரா, திருமணம் செய்யும்போது அனைவருக்கும் தெரிவிப்பேன்Õ என்றார். பிரபுதேவாவின் பெயரை அவர் தனது கையில் பச்சை (டாடூ) குத்தியிருக்கிறார். நயன்தாரா ஷ¨ட்டிங் செல்லும் இடங்களுக்கெல்லாம் பிரபுதேவாவும் செல்வதாக கூறப்பட்டது. இந்நி…
-
- 5 replies
- 3.2k views
-
-
ஷாருக்கான் எங்கு பேசினாலும் அவர் தனது பேச்சுக்களில் ஒரு தத்துவமிக்க, மேலாண்மை கருத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். அப்படி தான் இந்த மாதம் துபாயில் நடந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல தனது நகைச்சுவையான பாணியில் தனது பேச்சை துவங்கினார் ஷாருக். அதில் தனது தந்தை தனக்கு அளித்த ஐந்து பரிசுகள் தன்னை வாழக்கையின் அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றதாகவும், முன்னேற அவை ஒவ்வொன்றும் பாடங்களை கற்றுத்தந்ததாகவும் கூறினார். ஷாருக்கான் ''ஹாய் அனைவருக்கும் வணக்கம், இங்குள்ள யாரவது என் உரை பிடிக்கவில்லை என்றால் பாதியில் எழுந்து செல்லலாம். ஃபீல் ஃப்ரீ. ஏனென்றால் ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும். வாழ்க்கையில் என் தந்தை எனக்கு தந்த ஐந்து பரிசுகள் என்னை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய செய்ய…
-
- 0 replies
- 427 views
-
-
நடைபெற்றுக்கொண்டிருக்கும் 5வது ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷாருக்கான் மதுபோதையில் சண்டையிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு மும்பை வான்கடே மைதானத்திற்குள் செல்வற்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டுள்ளமைக்கு ஹிந்தி சினிமாத் துறையினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 917 views
-
-
காசு வரவர அதன் மீதுள்ள காதல் அதிகரிக்கும் என்பது நூறு சதவீதம் சரி. 'பிக் பிரதர்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்று கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு காசு ஆசை விடவில்லை. 'பிக் பிரதர்' அனுபவத்தை மீண்டுமொரு முறை காசாக்க முயற்சிக்கிறார். 'பிக் பிரதர்' நிகழ்ச்சியே ஒரு சுவாரஸியமான ஏற்பாடு. பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை அப்படியே பார்ப்பது ஒரு வித அனுபவம் என்றால், அதில் கலந்து கொள்வது வேறு மாதிரியான சுவாரஸியம். அதுவும் ஷில்பா ஷெட்டி எபிசோட், நாய், இனவெறி, சரியாக சமைக்காத கோழிக்கறி என்று பாலிவுட் மசாலா படங்களை மிஞ்சி விட்டது. உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தை சுயசரிதையாக எழுதி வெளியிட்டால் என்ன என்று தோன்றியிருக்கிறது ஷில்பா ஷெட்…
-
- 0 replies
- 991 views
-
-
நாகரிகம் வளர்ந்த பிறகும் இனவெறி துவேஷம் அடங்கவில்லை. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியை நிறவெறி காரணமாக திட்டிய வெளிநாட்டு பிரபலங்களுக்கு உலக அளவில் கண்டனங்கள் குவிகின்றன. இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம், 'சேனல் - 4.' இந்த தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' ஆண், பெண் பிரபலங்களில் சிலரை ஒரே வீட்டில் தங்க வைத்து, அவர்களின் அன்றாட நடவடிக்கையை 'லைவ்' வாக படம் பிடிப்பார்கள். இது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அந்த வீட்டில் தங்குவதற்கு தகுதியான நபர்கள் யார் என்பதை ஓட்டளித்து தீர்மானிப்பார்கள். கடைசி இடத்தை பிடிக்கும் நபர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். இப்படி விலக்கப்பட்டு கடைசிய…
-
- 0 replies
- 1k views
-
-
ஷில்பாவைக் கடித்த நாய்! மேலும் புதிய படங்கள்திருப்பதியில் தோழி வீட்டுக்கு வந்த இடத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியை தோழி வீட்டு நாய் கடித்து விட்டதாம். கடந்த சில நாட்களாகவே தொடர் துன்பத்தில் உழன்று வருகிறார் ஷில்பா. சமீபத்தில் துபாய் சென்றிருந்தார் ஷில்பா. அங்கு அவருக்கு கடும் சளி, இருமல், நெஞ்செரிச்சல் வந்து படாதபாடுபட்டுள்ளார். அது போதாதென்று அதற்கு முன்பு ஒரு நாயிடம் சிக்கி மீண்டுள்ளாராம் ஷில்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், துபாயில் நான் இருந்தபோது கடும் சளி, நெஞ்செரிச்சல், இருமலால் பெரும் அவதிப்பட்டேன். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் பெரும்பாடு பட்டு விட்டேன். அதற்கு முன்பு திருப்பதியில் உள்ள எனது தோழி வீட்டில் தங்கியிருந்த போது அவரது வீட்டு நாய் என்ன…
-
- 9 replies
- 2.3k views
-
-
ஷூட்டிங் போனா..நடி நடி...வீட்டுக்குப் போனா படி படி- பசங்க-2 சுட்டீஸுடன் ஒரு ஜாலி சந்திப்பு! ஒரு மரம் நிலத்தில் வளர்வதற்கும் தொட்டியில் வளர்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.பரந்து விரிந்து வளர வேண்டிய மரம் போன்றவர்கள் தான் குழந்தைகள்.அவர்களை தொட்டிகளில் அடைத்து போன்சாய்களாய் மாற்றிச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைகளை குழந்தைகளாய் வளரவிடுங்கள்.இந்த ஒன்லைன் பேரண்ட்டைல் மெசேஜ் தான் பசங்க- 2. இயக்குநர் பாண்டிராஜ் இதற்கு முன்னதாக இயக்கிய ’பசங்க’ திரைப்படம் நடுத்தர வர்க்கக் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.பசங்க-2 இன்னும் ஒருபடி மேலே இருக்கும் உயர்நடுத்தர வர்க்கக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் கல்வியாலும…
-
- 0 replies
- 668 views
-
-
வைகைப்புயல் வடிவேலு மீண்டும் நடிக்க வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் குஷியோடு வெயிட் பண்ணிக் கொண்டிருக்க, வடிவேலோ அதுபற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏழரையைக் கூட்டிக் கொண்டு அளப்பறையைக் கொடுக்கிறாராம். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வடிவேலு தமிழ்சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகிறார் என்றதும் ஒட்டுமொத்த திரையுலகமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சந்தோஷம் இன்னும் ஒரு மாசம் கூட நீடிக்காது போலிருக்கிறது. காரணம் அந்தளவுக்கு வடிவேலுவின் அளப்பறை ஓவராக இருக்கிறதாம். யுவராஜ் டைரக்ட் செய்து வரும் 'கஜபுஜராஜ தெனாலிராமனும், கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கும் வடிவேலு சமீபத்தில் தான் அந்தப்பத்துக்காக ஒரு பாடலையும் பாடினா…
-
- 0 replies
- 575 views
-
-
ஷோபா - அதிசய தேவதை! ஷோபா மகாலக்ஷ்மி மாதிரிதான் அவரின் முகம் அமைந்திருந்தது. அதனால்தானோ என்னவோ மகாலக்ஷ்மி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், அந்த மகாலக்ஷ்மி, பின்னாளில் தேவதையென நம் மனதில் இடம்பிடித்தார். அப்போது அவரின் பெயர் வேறானது. அந்தப் பெயரே... வேரென இன்றைக்கும் ஊன்றி நிற்கிறது. அந்தப் பெயர்... ஷோபா! தட்டுங்கள் திறக்கப்படும் எனும் வாசகம் ஷோபாவுக்கும் பொருந்தும். 1962ம் வருடத்தில் பிறந்தவருக்கு 1966ம் ஆண்டில், அதாவது நான்கு வயதிலேயே கதவு திறந்து கலைத்தாய் இவரை வரித்துக்கொண்டாள். தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற தமிழ்ப் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்…
-
- 0 replies
- 600 views
-
-
ஆர்.ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை. ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
-
- 1 reply
- 626 views
-
-
ஷ்ரியாவின் அம்மா ஸ்னேகா! இளையவர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையை ரஜினிக்காக முன்பு தளர்த்திய ஷ்ரியா, அடுத்து சரத்குமாருக்காகவும் தனது கொள்கையை தியாகம் செய்துள்ளார். ராதிகாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைகிறார் ஷ்ரியா. இளம் தலைமுறையினருடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையுடன் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஷ்ரியாவும் ஒருவர். இந்த நிலையில் ரஜினியின் சிவாஜி பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தபோது தனது கொள்கையைத் தளர்த்தி சிவாஜியில் நடித்தார். இப்போது தனது கொள்கையை மீண்டும் தளர்த்தி சரத்குமாருடன் இணையவுள்ளார். ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஷ்ரியா. இதற்காக அவருக்கு…
-
- 4 replies
- 2k views
-