Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 100வது திரைப்படம் திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். இப்படி இலட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை தொட்ட உங்கள் அபிமான நட்சத்திரத்தில் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் திரைப்படங்கள் சிவாஜிகணேசன் - நவராத்திரி எம்.ஜி.ஆர் - ஒளிவிளக்கு ஜெமினி கணேசன் - சீதா ரஜினிகாந்த் - ஸ்ரீராகவேந்திரா கமல்ஹாசன் - ராஜபார்வை ஜெய்சங்கர் - இதயம் பார்க்கிறது சிவக்குமார் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி விஜயகாந்த் - கேப்டன் பிரபாக…

    • 6 replies
    • 3k views
  2. மனம் திறக்கிறார் கோபிநாத் 'இன்று ஊடகங்களின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. இன்று பொதுத்தமிழ், வட்டார வழக்குகளை மீறி வந்திருக்கிறது.' 'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப்பெரும் குற்றமாகாது' 'ஒருவர் நல்ல தமிழில் பேசும்போது அவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்று பாராட்ட வேண்டாம்' 'தமிழ் மொழியை ஒரு உணர்வு பூர்வமான ஒரு சடங்காக பார்ப்பதை நிறுத்தவேண்டும். மொழி கற்றலின் அடிப்படையில் பார்க்கவேண்டிய ஒன்று' கடந்தவாரம் ஒரு மாலை வேளை சென்னை கோடாம்பாக்கத்தின் ரங்கராஜன்புரம் ஓரிரு வாகனங்களை மட்டுமே உள்வாங்கி கொண்டு அமைதியாக இருந்தது. பெல்லவி அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே கீழே தமிழகத்திற்கே உரித்தான ஒரு சிறிய பெட்டிக்கடை பெஞ்சு, மடித்து கட்டிய வேட்…

    • 19 replies
    • 3k views
  3. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு; ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்; இசை: ஷான் ரோல்டன்; இயக்கம்: த.செ. ஞானவேல். வெளியீடு: அமெஸான் பிரைம் ஓடிடி. விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் 'ஜெய் பீம்'. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மன…

  4. என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் எழுந்துள்ள புகார்கள் பொய்யானவை என்பதை நிரூபித்து நடிகர் ஸ்ரீகாந்த்தை மணப்பது நிச்சயம் என்று வந்தனா உறுதிபட தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த்துக்கும், துபாயில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இந்த செய்தி வெளியான அடுத்த சிலநாட்களிலையே பெரும் அதிர்ச்சி குண்டு வெடித்தது. மணமகள் வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்ன் ஆகியோர் மீது பல கோடி பணத்தையும், சொத்துக்களையும் மோசடி செய்ததாக வழக்கு உள்ளதாக வெளியான அந்த செய்தியால் ஸ்ரீகாந்த் குடும்பம் நிலைகுலைந்தது. கல்யாணப் பத்திரிக்கை அச்சிடும் பணியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார் ஸ்ரீகாந்த்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி. கல்யாணம…

  5. கல்லூரி - திரை விமர்சனம் http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3241.htm http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3239.htm 'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன். கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான். பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள். பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர். கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல…

  6. மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது. நேற்று, அவரது மகன் சுப்ரமணி திருமணம், மத…

  7. [size=4]சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.[/size] [size=4]சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.[/size] [size=4] [/size] [size=4] விஜய் பிறந்த நாள் படங்கள் [/size] [size=4]குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.[/size] [size=4]லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போ…

  8. நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிட்டவர் யார் தெரியுமா? சென்னை: நாட்டாமை படத்தில் பெண் பார்க்கும் காட்சியில் மிக்சர் சாப்பிட்டவர் யார் என்பதை தெரிவித்துள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மிக்சர் சாப்பிட்டது யார் என்ற செய்தி நாட்டுக்கு ரொம்ப முக்கியமா என்று நீங்கள் நினைக்கலாம். பிரபலம் ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக எதுவும் செய்யாமல் மிக்சர் சாப்பிடுவது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. நாட்டாமை படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சியை வைத்து தான் இத்தனை மீம்ஸுகளும். ட்விட்டரில் வேறு மீம்கள் போட்டுத் தாக்குகிறார்கள். …

  9. விட்டால் ரஜினிக்கே சொல்லித்தருவார் போலிருக்கிறது ரம்பா! முதல்வர் கலைஞரை சந்திக்க திடீரென்று அவரது வீட்டிற்கு சென்றார் ரம்பா. போதாதா... அரசியலில் நுழையப் போகிறார் என்றும், திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்றும் ஏராளமான கசமுசாக்கள். முதல்வரை சந்தித்து அவருக்கு பக்கத்தில் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டவர், முகங்கொள்ளாத சிரிப்போடு வெளியே வந்தார். அவரை சூழ்ந்து கொண்ட நிருபர்கள் 'நீங்க திமுகவிலே சேரப்போவதாகவும், பிரச்சாரத்திற்காக தமிழகத்தை சுற்றி வரப்போவதாகவும் தகவல்கள் வருகிறதே?' என்றார்கள். அப்போது ரம்பா சொன்னதுதான் ரஜினி ஸ்டைல் வார்த்தைகள்! 'அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. எது எப்போது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? ஆண்டவன் என்ன…

    • 0 replies
    • 2.9k views
  10. எம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா? துணை நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரு விண்மீன் என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில்க் ஸ்மிதாவின் முதல் படம் இணைய தேடி எனும் மலையாளப்படம் ஆகும். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் முதல் படமான வண்டிச்சக்கரம் எனும் படத்தில் பார் (மதுபான சாலை) வேலை செய்யும் பெண்ணாக ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயராகவும், அ…

  11. கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார…

  12. தமிழ் திரைப்பட இயக்குனர் தருண்கோபி இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணை திருமணம் செய்கிறார். திமிரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் தருண்கோபி. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து காளை என்ற படத்தை இயக்கினார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தருண்கோபி, தற்போது ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்துவிட்டாய், காட்டுப்பய ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தருண்கோபிக்கும், இலங்கை தமிழ் பெண் ஜானு லிங்கேஸ்வ‌ரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் ஜானு இலங்கையை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் வருகிற ஜனவரி மாதம் 15ம்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது. …

  13. நயன்தாரா ரகசிய திருமணமா? தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தற்போது பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘அறம்’ விரைவில் திரைக்கு வருகிறது. ‘இமைக்கா நொடிகள்’, ‘வேலைக்காரன்’ ‘கொலையுதிர் காலம்’, ‘கோகோ’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வலம் வருகின்றன. தெலுங்கு, மலையாள பட உலகிலும் இதுபற்றி…

  14. முத்தக்காட்சியா... ம்ஹூம் மாட்டேன்... என அடம்பிடிக்கும் நடிகைக்கு மத்தியல் விஜய்யின் முத்தத்திற்காக வெயி்ட்டிங்கில் இருப்பதாக மனம் திறந்து கூறியிருக்கிறார் சோனா. மிருகம் படத்தில் நாயகன் ஆதியிடம் காசு கறக்கும் வேசி பெண்ணாக நடித்தவர்தான் இந்த சோனா. தற்போது வெளிவந்திருக்கும் 'பத்து பத்து' படத்திலும் வயதான கணவனுக்கு கம்பி நீட்டிவிட்டு இளைஞனுடன் சேரத்துடிக்கும் கேரக்டரில் பெயர் வாங்கிவிட்டார். 'குசேலனி'ல் வடிவேலுவுக்கு இவர்தான் ஜோடி. 'பத்து பத்து' படத்தில் பாஸ் மார்க் வாங்கியதையொட்டி தனது சந்தோஷத்தை மீடியாக்களுடன் பகி்ந்து கொண்ட சோனா மனம் திறந்து பேசியதாவது... "என்னை எல்லோரும் ஆங்கிலோ இண்டியன் என்று தவறாக புரி்து கொண்டார்கள். என் அப்பா பிரான்ஸ், அம்மா இலங்கையைச…

  15. நிருபர்களின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்லும் அந்த சிறுவனை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் வரும். மழலை மேதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் மாஸ்டர் கிஷன், சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது கரிகால் சோழன் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறுவன்தானே என்று கரிகாலனை ஒதுக்கியவர்கள் அந்த மன்னனின் அறிவுத்திறனுக்கு முன் தலை வணங்கினார்களே, அதுதான் நடந்தது அன்றைக்கும்! தன் 9-வது வயதில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் கிஷன். இந்த சிறுவனை பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் முன் வந்து கிஷன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கிஷெராப்! நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் கிஷன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக…

  16. கார்த்தியுடன் காதல்! தமன்னா பற்றி கிளம்பியிருக்கும் முதல் காதல் கிசுகிசு. ‘தமன்னாவைக் காதலிக்கவில்லை’ என்று தொடர்ந்து மறுத்து வருகிறார் கார்த்தி. தமன்னா இதுவரை சைலன்ஸ்.ஹாலிடேவிற்காக அமெரிக்கா சென்று திரும்பியவரிடம் பேசினோம்.எந்த டென்ஷனும் இல்லாமல் கூலாக காதல் கிசுகிசுக்களுக்குப் பதிலடி கொடுக்கிறார் தமன்னா. ‘‘எல்லாம் ‘பையா’ படத்தின் வெற்றியால் வந்த விளைவு. பையாவில் எங்களுக்குள்ள இருந்த லவ் கெமிஸ்ட்ரிதான் இந்தக் காதல் கிசுகிசுக்கள் கிளம்பக் காரணம். அதுவும் அடுத்த படமும் நாங்க இணைந்து நடிப்பதால் புரளிகள் இன்னும் அதிகமாயிடுச்சு. எங்களுக்குள் லவ் இல்லை. கார்த்தி என்னுடைய நண்பர்கூட இல்லை. சினிமா எனக்கு 9 tஷீ 5 வேலை. இதுல என்கூட கார்த்தி வேலை பார்க்கிறார், அவ்வளவுதான். கா…

    • 0 replies
    • 2.9k views
  17. மீண்டும் கற்பு சர்ச்சையில் குஷ்பு! பாமக வக்கீல் நோட்டீஸ்!! மீண்டும் கற்பு குறித்த விவாதத்திற்குள் நுழைந்து ஆறிப் போன புண்ணை நோண்டிப் பார்த்துள்ளார் குஷ்பு. அவரது புதிய பேச்சால் ஆத்திரமடைந்த பாமக வக்கீல் ஒருவர் குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிந்தே, சென்சிட்டிவான விஷயங்களை பப்ளிக்காக பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வது சிலரின் வழக்கமாக உள்ளது. தாங்கள் பேசும் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் யோசிக்காமல் பேசி விடுவார்கள். குண்டைப் போடுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிப்பதே இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்புவையும் சேர்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு முன்பு கற்பு குறித்துப் பேசி…

    • 16 replies
    • 2.9k views
  18. இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட வேண்டியதுதான்... காரணம் இதுவரை ஹாய் மச்சான்ஸ்... எப்டிக்து... நீ என்கு வேணும்... என்றெல்லாம் வெளியில் மட்டுமே பேசி வந்த நமீதா, இனி திரையிலும் தனக்கு தானே பின்னணி பேசப் போகிறாராம். அய்யோ... தாங்காதும்மா... என்று அலறும் உங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல், ஒரு தமிழ் வாத்தியாரிடம் இருமாத பயிற்சி எடுத்த பிறகே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் நமீதா (அப்போ அந்த வாத்தியாருக்கு தமிழ் மறந்துபோவது நிச்சயம்!!). இப்போது அவர் நடித்துவரும் இந்திரா விழா படத்துக்காகத்தான் இப்படியொரு மெகா ரிஸ்க்கில் இறங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ராஜேஷ்வர். நமீதா பேசுகிற தமிழை விடுங்கள்... தமிழை குஜராத்தியில் எழுதி வைத்துப் பேச…

    • 14 replies
    • 2.9k views
  19. அவர் இறந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் அவர் எழுதிய பாடல்களைக் கொண்ட பல படங்கள் திரைக்கு வரக் காத்துக்கொண்டிருக்கின்றன. அதில், சில பெரிய இயக்குநர்கள் படங்களும் அடக்கம். கலைஞனுக்கு அவன் மரணம் முடிவல்ல என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார், நா.முத்துக்குமார்! பாடல்களை ரசிப்பதில் இரண்டு வகைகள் உண்டு. குழந்தைப் பருவத்தில் பெரும்பாலும் இசையில் மூழ்குவதே ரசனையின் வடிவமாக இருக்கும். முதிர்ச்சியை நோக்கி வாழ்க்கை நகர நகர இசையைக் காட்டிலும் வரிகளே நமக்கான தேடலாக மாறும். காதல், அன்பு, ஏக்கம், பிரிவு, நட்பு, வலி, ஊக்கம், தேவை, வெற்றி, தோல்வி என வாழ்வின் எந்த ஒரு நிலைக்கும், சூழலுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனதில் தொடர்புபடுகிறதென்றால், அது பெர…

    • 2 replies
    • 2.9k views
  20. காமெடி நடிகர் கருணாஸ் படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் படங்களுக்கு இசையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படம் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் மேலும் அவர் கையில் இரண்டு படங்கள் உள்ளன. இந்தப் படங்களில் ஒன்றை ‘கற்றது தமிழ்’ பட இயக்குநர் ராம் இயக்குகிறார். இன்னொரு படத்தை மனோகர் என்னும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இந்தப் படங்களுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. கதாநாயகிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் தேடி வருகிற காமெடி வாய்ப்புகளை தவறாமல் தலையசைத்து ஓ.கே. சொல்கிறாராம் கருணாஸ். இப்படி பல அவதாரங்களை இவர் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ப…

  21. நடிகை அல்போன்சா, தலைமறைவு.... போலீஸ் தேடுகிறது! கணவரை அபகரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகை அல்போன்சா நேற்று தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சைதாப்பேட்டையை சேர்ந்த சுஜாதா என்பவர் தனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன்னை கொலை செய்து விடுவதாக அல்போன்சா மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். புகார் மனுவுடன் அல்போன்சாவும் ஜெய்சங்கரும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் அடங்கிய சி.டி.யையும் கொடுத்திருந்தார். மத்திய குற்றப் பிரிவு கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வரதட்சணை தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளா தேவி இது குறித்து விசாரணை நடத்த…

  22. தமிழ்த் திரைப்படங்களும் சாதனைகளும் 1 தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம் 2 அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 3 ஒரு நாளில் எடுக்கப்பட்ட திரைப்படம் 4 வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் தமிழ்த்திரைப்படம் 5 வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் 6 அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம் 7 தமிழில் வெளிவந்த முதல் 70 எம்.எம் திரைப்படம் 8 தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதற் திரைப்படம் [தொகு] தமிழ்த்திரையுலகின் முதல் பேசும்படம் 1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படமாகும். [தொகு] அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் 1944-ல் வெளிவ…

  23. தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட அம்பு, அயல்நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் தீவிரவாதிகளை பஞ்சராக்குகிறது. ஏன்? 'அம்பு' யாரென்று சொல்லத் தேவையில்லை. கொலைகள் ஏனென்பதுதான் கதையின் மைய முடிச்சு. குக்கிராமத்திற்கு வரும் நயன்தாராவை ஒரே நொடியில் மனசுக்குள் வீழ்த்துகிறார் விஜய். காதலாகி கசிந்துருகும் நயனின் உதவியோடு வெளிநாட்டுக்கு பறக்கிறார். அங்குதான் நயனின் அப்பா பிரகாஷ்ராஜ் இருக்கிறார். சம்பந்தம் பேசுவதற்காகதான் இந்த பயணம் என்று நாம் யோசித்தால், அடுத்தடுத்த படிகள் என ஃபாஸ்ட் ஸ்டெப் வைக்கிறார் விஜய். ஏகப்பட்ட கொலைகள். எக்கச்சக்க சண்டைகள். இறுதியாக அப்பாவை கொன்ற நால்வரை நசுக்கிவிட்டு அம்மாவின் விரதத்தை முடித்து வைக்கிறார் விஜய். நம்பி கழுத்தறுக்கிற வேடம் விஜய்க்கு. நம்…

  24. உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நிலங்களாக மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி வந்தனர். இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின் குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். இதனிடைய…

  25. ராஜராஜ சோழனின் போர்வாள் எனும் படத்துக்கு மக்கள் முன் இசையமைக்கப் போகிறார் இளையராஜா என்று முன்பே கூறியிருந்தோம். அவர் அப்படி இசையமைக்கப் போகிற இடம் ரொம்ப சுவாரஸ்யமானது. மாமன்னன் ராஜராஜ சோழனின் குரு எனப்படும் கருவூர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில்தான் இளையராஜா மக்கள் முன் மெட்டமைக்கிறார்.இந்த இடம் கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. கருவூர் சித்தரின் ஜீவசமாதி உள்ள இடத்தில் இசைஞானி இசையமைப்பதைக் காண பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது .இளையராஜா இந்த இடத்தைத் தேர்வு செய்தது ஏன் தெரியுமா? சோழ மன்னர்களில் தலை சிறந்தவரான ராஜராஜ சோழனுக்கு குருவாகத் திகழ்ந்தவர் கருவூர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.