வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
மன்னிப்பு கேட்கவில்லை... அசின் மீது நடவடிக்கை [^] நிச்சயம்! - ராதாரவி சென்னை: நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்பு [^]களையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார். தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர். அங்குள்ள தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக…
-
- 3 replies
- 1.2k views
-
-
‘காலா’ சுவாரஸ்யங்கள்: கம்ப்ளீட் ஸ்கேனிங் ‘காலா’ படம் குறித்த சின்னச் சின்ன சுவாரஸ்யத் தகவல்களை ‘தி இந்து’ வாசகர்களுக்காக தொகுத்துத் தந்துள்ளோம். ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, உடனேயே ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்த படம் ‘காலா’. “கபாலி படத்தை உங்களுக்காக இயக்கினீர்கள். ‘காலா’ படத்தை என் ரசிகர்களுக்காக இயக்குங்கள்” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதால், ரஜினிக்கான பில்டப்ஸ் படத்தில் நிறைய இருக்கிறது. அதேசமயம், தன்னுடைய வழக்கமான கருத்துகளைப் படம் முழுக்கச் சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித். ரஜினியின் காதலியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
கோமாளிகள்! இலங்கைத்தமிழ் சினிமாவில் அதிக வசூலையீட்டிய திரைப்படம். இத்திரைப்படம் வெளியானபோது யாழ்ப்பாணம் , கொழும்பு நகர்களில் ஐம்பது நாள்களைக்கடந்து ஓடியது. ஏனைய இடங்களிலும் நன்கு ஓடியது நினைவிலுள்ளது. வி.பி.கணேசனின் 'புதிய காற்று' வெற்றியைத்தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகியபோது இதனை நான் பார்க்கவில்லை. யாழ் வின்சர் திரையரங்கில் ஓடியது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் 'கோமாளிகள் கும்மாளம்' என்னும் பெயரில் சுமார் இரண்டு வருடங்கள் வாராவாரம் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற வானொலி நாடகமிது. எஸ்.ராம்தாசின் கதை, திரைக்கதை வசனத்தில், எஸ். இராமநாதனின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்துக்கு இசையினை கண்…
-
- 3 replies
- 1.2k views
-
-
எந்திரன் பார்த்தேன் அ.முத்துலிங்கம் நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள். கனடாவில் ‘எந்திரன்’ வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள…
-
- 9 replies
- 1.2k views
-
-
வெயிலை தணிக்கும் ஏ.சி. பிரபல நடிகர் வீட்டில் வெப்பத்தை ஏற்றியிருக்கிறது. ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் இருக்கிறது விஜயகுமாரின் வீடு. அவர் மனைவி மஞ்சுளா, அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மனைவி ஆகியோர் அதில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 11 மணி அளவில் இரண்டாவது மாடியிலிருந்து புகை கசிந்திருக்கிறது. சில நிமிடங்களில் வீடே புகைமண்டலமாக மாற அலறி அடித்து தீயணைப்புத்துறைக்கு போன் செய்திருக்கிறார்கள். அதற்குள் இரண்டாவது மாடியிலிருந்த அறையின் மெத்தை, தரைவிரிப்பு, புத்தகங்கள் என அனைத்தையும் தின்று ஜீரணித்து விட்டார் அக்னிபகவான். 'தாமிரபரணி' ஷுட்டிங்கில் இருந்த விஜயகுமாரும், அவரது மருமகனும் 'தாமிரபரணி' இயக்குனருமான ஹரியும் உடனே வீட்டிற்கு தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,KV MANI படக்குறிப்பு, பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா இன்று தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸ…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வீறுகொண்டு எழுந்திருக்கிறார் சினேகா. ஏகப்பட்ட கிசுகிசுக்கள், கதவு தட்டாத படவாய்ப்புகள் உட்பட கடந்த வருடம் பிரச்சனைகளையே பெட்சீட்டாக போட்டு தூங்கினார் சினேகா. அதையெல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு மீண்டும் புத்துணர்வுடன் புறப்பட்டிருக்கிறார் சினேகா. தங்கர்பச்சான் இயக்கும் 'பள்ளிக்கூடம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் சினேகா, பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் தென்னிந்திய அளவில் அதிகமான விளம்பர படங்களில் நடிப்பது சினேகாதான் என விளம்பர ராணி பட்டம் கொடுத்து பாராட்டியுள்ளது. முன்பைவிட உடம்பை குறைத்து ஜொலி ஜொலிக்கும் சினேகாவிடம் கூடுதல் அழகின் ரகசியம் பற்றி கேட்டால் நீண்ட பட்டியலை தருகிறார். "முன…
-
- 0 replies
- 1.2k views
-
-
லக்ஷ்மி சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 4 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு4 / 5 நடிகர்கள் பிரபுதேவா,ஐஸ்வர்யா ராஜேஷ்,திவ்யா பாண்டே,கருணாகரன் இயக்கம் ஏ எல் விஜய் சினிமா வகை Drama கரு: நடனம் ஆடி 'இந்தியாவின் பெருமை' என்ற பட்டம் பெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற துடிக்கும் 10 வயது மகளின் நடனப் போராட்டமே இப்படக்கரு கதை: இந்த படத்தின் மெயின் கேரக்டர் லக்ஷமி. ஸ்கூலுக்கு செல்லும் 10 வயது சிறுமி. இந்த பொண்ணுக்கு நடனம் தான் எல்லாமே. இந்தியாவின் பெர…
-
- 1 reply
- 1.2k views
-
-
தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்…
-
- 11 replies
- 1.2k views
-
-
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ
-
- 2 replies
- 1.2k views
-
-
டோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் கவர்ச்சிப் புயல் ஹன்ஸிகா ஐதராபாத்தில் ஒரு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டார். மஸ்கா எனும் தெலுங்குப் படப்பிடிப்புக்கு போகும்போதுதான் இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக கையில் காயத்துடன் (ரத்தம் கொட்டியது!) தப்பிவிட்டார். உடனே அவரை பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிப் போனார்கள். சிகிச்சைக்குப் பிறகு நன்றாக ஓய்வெடுங்கள் என மருத்துவர்கள் கூறினாலும் இருப்புக் கொள்ளவில்லையாம் அம்மணிக்கு. அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மருக்குவமனையிலிருந்து வெளியே வந்துவிட்ட ஹன்ஸிகா, நேராக படப்பிடிப்புத் தளத்துக்குப் போய்விட்டார். கதாநாயகிக்கு விபத்து என்பதால் படப்பிடிப்பை ரத்து செய்துவிடும் மூடிலிருந்த இயக…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்" ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது! அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேவாவின் இசையில், குகநாதனின் இயக்கத்தில் "தமிழ்ப் பாசறை" நவம்பர் 26இல் வெளிவருகிறதாம். மேலதிக செய்திகளுக்கு
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒரு பெண் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்வதற்குமுன், ஏராளமான கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் போகிற இடம் எனக்குப் பாதுகாப்பானதுதானா? நான் எந்த உடையினை அணிய வேண்டும்? அந்த உடை மிகவும் இருக்கமானதாக இருக்கிறதா? அந்த உடை அணிந்தால், என்னுடைய உடலை வெளிக்காட்டுவதுபோல் இருந்துவிடுமா? எதிலே நான் அவ்விடத்தை அடையப்போகிறேன்? நான் போகவேண்டிய இடத்தில், தனியே நான் நடக்கலாமா? அல்லது ஆண் துணையுடன்தான் நடக்கவேண்டுமா? இப்படியான கேள்விகள் பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப் போயிருக்கிறது. பெண்களுக்கு நிகழ்த்தப்படுகிற உடல்ரீதியான வன்கொடுமைகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. (நன்றி - விக்கிபீடியா) கதைச்சுருக்கம்: எகிப்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=2] ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கதையில் தொடங்கி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதன் பின்னணி வரை நீள்கிறது மாற்றான். [/size][size=2] விஞ்ஞானி ராமச்சந்திரனின் மரபு அறிவியல் சோதனை காரணமாக சூர்யா இரட்டையர்களாக பிறக்கிறார்கள். [/size] [size=2] இருவருக்கும் சேர்த்து ஒரு இதயம் தான். அப்பா பால் பவுடர் வியாபாரத்தில் முதலிடம் பிடிக்கிறார். வெளிநாட்டு பெண்மணி ஒருவர் ராமச்சந்திரன் நடத்தும் நிறுவனத்தை உளவு பார்க்க வருகிறார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தன்னுடைய வெற்றிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ராமச்சந்திரனின் சூழ்ச்சியால் இரட்டையர்களில் ஒருவர் இறக்கிறார். அவரின் இருதயம் மற்றொருவருக்கு பொருத்தப்படுகிறது.[/size] [size=2] அவர் வெளிநா…
-
- 0 replies
- 1.2k views
-
-
துணிச்சலான போலீஸ் அதிகாரி உபேந்திரா. அவரைப் பார்த்து போலீஸ் வேலையில் சேர்கிறார் விஷால். தப்பு செய்பவர்களைத் தண்டிக்கிறார். இந்நிலையில் முதல்அமைச்சர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்கிறார். அவரது பதவியை கைப்பற்றும் ஆசையுடன் கோட்டா சீனிவாசராவ் உள்பட 4 மந்திரிகள் காய் நகர்த்துகின்றனர். அடியாட்களை வைத்து சக மந்திரிகள் 3 பேரையும் தீர்த்துக்கட்டச் சொல்கிறார் சீனிவாசராவ். அவர்கள் கொல்லப்படுகின்றனர். ஆனால் கொன்றது தனது அடியாள் இல்லை, வேறொரு நபர் என்று தெரிந்ததும் திகிலடைகிறார். திடீர் கொலைகாரனை கண்டுபிடிக்கச் சொல்லி விஷாலுக்கு உத்தரவிடுகிறார். தீவிர வேட்டைக்கு பின் கொலையாளியை பிடிக்கும் விஷாலுக்கு அதிர்ச்சி. அவரை பிடித்து ஜெயிலில் போடுகிறார். இதற்கிடையில் குழந்தைகள் சா…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் ரிலீஸ்! இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான். இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இளங்கோவுடன் ஒரு நேர்காணல்... கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி? ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய…
-
- 15 replies
- 1.2k views
-
-
காட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை?! - கடம்பன் விமர்சனம் காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன். மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய பல பிரச்னைகளைக் கொடுக்கிறார். ஆர்யாவும் அவர் இடத்தினரும் அதை எப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல் மாடல்! அதிரடி கிளப்பிய ஸ்ரீரெட்டி.! சென்னை: நிச்சயம் அரசியலுக்கு வருவேன், தமிழ்நாட்டிற்குதான் என்னுடைய சேவை என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக கூறினார். தமிழில் நடிகர் ஸ்ரீகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் புகார் கூறினார். தொடர்ந்து சென்னையில் தங்கியுள்ள ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் தெலுங்கு நடிகர் நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துக்களை கூறி வருகின்றார். இதனால் தொடர்நது டைம்லைனில் வருகிறார். செய்தியாளர் சந்திப்பு இந்நிலை…
-
- 5 replies
- 1.2k views
-
-
என் காதல்... ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரை அஞ்சு வருஷம் ஒரு பொண்ணைக் காதலிச்சுட்டு இருந்தேன். அப்ப ப்ரீத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பெஸ்ட் ஃப்ரெண்ட். பக்கத்துப் பக்கத்து வீடு. என் காதலில் திடீர்னு ஒரு பிரேக். அவங்க 'போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க வெளியூர் போறேன்'னு சொன்னாங்க. நீதானே என் பொன்வசந்தம்... நான் அப்போதான் காலேஜ் முடிச்சுட்டு, சென்னை வந்திருந்தேன். கையில பத்து பைசா கிடையாது. வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை. உதவி இயக்குநரா சேர்ந்தா, சம்பளம் கிடைக்காது. 'நீ போகாதம்மா... நாம இங்கேயே ஒண்ணா இருக்கலாம்'னு சொல்றேன். ஆனா, என் பேச்சைக் கேட்கலை. சண்டை. போய்ட்டாங்க. அதுதான் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துல ஒரு போர்ஷன். நொந்துட்டேன்.…
-
- 5 replies
- 1.2k views
-
-
ரீமா சென் கர்ப்பம்... மார்ச்சில் குவா குவா! நடிகை ரீமா சென் கர்ப்பமாகியுள்ளார். மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரீமாவுக்கும் அவரது காதலர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வந்துவிட்டார் ரீமா. தமிழில் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறையில் நடித்து வந்தார். இந்தியில் அவர் நடித்த கேங்ஸ் ஆப் வஸீபூர் -2 பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர் வயிறும் வளர்ந்துவிட்டது. எனவே ஷூட்டிங்குகளுக்கு இனி வரமாட்டேன் என்று கூறிவிட்ட ரீமா, மருத்துவ பரிசோதனை செ…
-
- 13 replies
- 1.2k views
-
-
அஜீத்தை 'கிங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது. விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது. இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு சில படங்கள் நம் மனதை விட்டு அகலாமல் உழன்று கொண்டேயிருக்கும். சில படங்கள் பார்க்கும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் படம் விட்டு வெளியே வந்ததும் ஞாபக அடுக்குகளிலிருந்து தேட வேண்டியிருக்கும். இன்னும் சில படங்கள் அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இருக்கும். இதில் யுத்தம் செய் எந்த விதம்? சென்னையில் ஒரு முக்கிய சரகத்தில் தொடர்ந்து மனித கைகள், ஒரு டப்பாவில் போடப்பட்டிருக்க, ஏற்கனவே தொலைந்து போன தன் தங்கையை கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஜே.கே எனும் சிபிசிஐடி ஆபீஸரான சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது ஒரு வாய்ப்புடன். இந்த கேஸை கண்டுபிடித்தால் அவரது தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்க அனுமதி தருவதாய் சொல்கிறார் சிபிசிஐட…
-
- 0 replies
- 1.2k views
-
-
அந்தி சாய்ந்தது 'இது ஒரு பொன்மாலைப் பொழுது'வைரமுத்துவின் முதல் திரையிசைப் பாடலான, "இது ஒரு பொன் மாலைப் பொழுது" பாடலை மீட்டும்போதெல்லாம் நிழல்கள் நாயகன், ராஜசேகர் மனத்திரையில் வந்துபோவார்.ஒரு மெல்லிய வயலின் இசையைத்தொடர்ந்து வரும், "வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒருநாள் உலகம் நீதிபெறும் திருநாள் மலரும் சேதிவரும் கேள்விகளால் வேள்விகளை நான் வெல்வேன்" என்ற பாடல் வரிகளை பலமுறை திரும்பத் திரும்ப கேட்ட ஞாபகம். வைரமுத்துவையும் ராஜசேகரையும் அறிமுகமாக்கிய இந்த பாடலை ரசிக்காத உள்ளங்களே தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கமுடியாது. இன்று ராஜசேகர் யார் என்று கேட்டால் சரவணன் மீனாட்சி சீரியலின் நடிகர் என சொல்லும் இளம் மட்டத்துக்கு, நிழல்கள் படத்தின்பின் இயக்குநர் ரா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சூரியன் உதிக்கிறானோ இல்லையோ, குசேலன் பற்றிய செய்திகள் இல்லாமல் விடிவதில்லை தமிழர்களின் பொழுது. புளோரா நடிக்கிறார், சுஜா நடிக்கிறார் என்று நாளரு கவர்ச்சியும், பொழுதொரு அட்ராக்ஷனுமாக வளர்கிற குசேலன் பற்றி இன்னொரு புதிய செய்தி. நடிப்பாரோ, அல்லது நடிக்க மாட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடல் காட்சியில் ரஜினியோடு ஆட சம்மதித்துவிட்டாராம் கமல். அதில்லாமல் ஒரு காட்சியில் நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம். நடிகர் கமல்ஹாசனாகவே படத்தில் தோன்றுகிறார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேரும் படம் இது. இடையில் இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட எத்தனையோ தயாரிப்பாளர்கள் முட்டி மோதினாலும், தனித்தனியாக நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார்கள் இருவரும். வ…
-
- 2 replies
- 1.2k views
-