Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றார் திவ்யா.அவர் கூறியதாவது:என் வாழ்வில் பல முறை கடுமையான கட்டங்களை கடந்திருக்கிறேன். விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க கேட்டு நிறைய வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்துதான் ஒப்புக்கொள்கிறேன். என்னை கவனிப்பதைவிட நான் நடிக்கும் படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். எவ்வித எதிர்மறை கேள்விகளுக்கும் இனி பதில் அளிக்கப்போவதில்லை. ஏதாவது ஒரு கருத்தை சொன்னால் அதை ஊதி பெரிதாக்கி விடுகிறார்கள். கதையே கேட்காமல் நட்புக்காகவும். மரியாதைக்காகவும் ஒப்புக்கொண்ட சில படங்கள் தோல்வியாக அமைந்தது. அதைப்பற்றி பேசுகிறவர்கள், 2008ல் பெரிய ட்டான எனது படங்களைப்பற்றி பேச தயங்குவது ஏன்? தமிழில் Ôபொல்லாதவன்Õ வெற்றிக்கு…

  2. தடைகள் பல கடந்து வெளியான விஸ்வரூபம் தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்தியா ஆகிய மூன்று ஃபாக்ஸ் ஆபீஸ்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூல் செய்தது! விஸ்வரூபம் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் எதிர்பார்ப்பு வானளாவ உயர்ந்து நிற்கிறது. காரணம் சமீபத்தில் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் எப்போது வெளிவரும் என கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தற்போதைய நிலை என்ன? ‘விஸ்வரூபம் ’ படத்தின் திரைக்கதை எழுதும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததால், முதல் பாகத்தில் நீக்கப்பட்ட காட்சிகளோடு புதிதாக பல காட்சிகளையும் சேர்த்து தயாராகி வருகிறது இந்த இரண்…

  3. லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன் இசை தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு. இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந…

  4. பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல் வீடு திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அதன் வெள்ளிவிழாவை போற்றும் வகையில் வீடு திரைப்படத்தின் இயக்குனர், பாலு மகேந்திராவுடன் ஒரு நேர்காணல். கு. ஜெயச்சந்திர ஹஸ்மி வீடு – ஒவ்வொரு நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழும் குடும்பத்திற்கும் ஒரு லட்சியம். நாம் போகும் பாதையில் கற்களாய் எழுப்ப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வீட்டின் பின்னும் பல வலிகளும் கண்ணீரும் கலவையாகவே கலக்கப்படுகின்றன. சினிமா – நாயகனின் அதிரடி அறிமுகம், ஹீரோயினின் கவர்ச்சியாட்டம், நகைச்சுவைக்குத் தனி ட்ராக், சண்டை, பாடல்கள் என பிம்பம் எழுப்ப்ப்ட்டிருக்கும் சினிமாவின் உண்மையான இயல்பும், வீச்சும் தாக்கமும் மிக பிரம்மாண்டமானது. நம் மனதில் கண்ணறியாமல் நுழைந்து பல ந…

  5. தீபாவளிக்கு தமிழில் வெளியாகிறது சங்கராபரணம்! 35 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு... கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது. கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம், கடந்த 1979 ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித…

    • 6 replies
    • 1k views
  6. டூயட் பாடுவதும், டிஷ்யூம் போடுவதும் மட்டுமே ஒரு திரைப்படத்தின் அம்சமும் கதாநாயகனின் பொறுப்பும் அல்ல என்பதை பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்தும் அற்புதம் இந்த அடைக்கலம். விபரம் அறியா பருவத்திலேயே அப்பாவை (தியாகராஜன்) பிரிந்து அம்மா சரண்யாவுடன் மாமா ராதாரவியின் வீட்டில் வளரும் அண்ணன் - தங்கையாக பிரஷாந்த் - உமா. தங்களுக்காக கஷ்டப்படும் மாமா, அம்மாவின் நிலையுணர்ந்து அண்ணன் தங்கை இருவரும் பொறுப்பாக மருத்துவ படிப்பு படிக்கின்றனர். ஒரு அதிர்ச்சியில் அம்மா சரண்யா இறந்துபோக மனைவியின் காரியம் நிறைவேற்ற பதினாறு வருடங்கள் கழித்து ஊருக்குள் வருகிறார் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன். இத்தனை வருடம் இருக்கும் இடம்கூட தெரியாமல் இருந்த அப்பாவை பார்த்ததும் கோபத்தில் பொங்கியெழ…

  7. Started by kirubakaran,

    'தாய்மார்களின் பேராதரவுடன்', 'இளைஞர்களின் எழுச்சியில்', 'அனைவரும் விரும்பும் ஆல் கிளாஸ் படம்'. தினசரியை பிரித்தால் கண்ணில் தென்படும் சினிமா விளம்பரங்கள் இவை. சமீபகாலமாக இதில் மாற்றம். 'தமிழில் ஒரு உலக சினிமா', 'தமிழில் ஒரு ஈரானிய படம்' என்று இந்த விளம்பர வாசகங்கள் பரிமாணம் பெற்றிருக்கின்றன. தமிழக தாய்மார்களையும், இளைஞர்களையும் பின்னுக்கு தள்ளிய உலக சினிமாவிலும், ஈரானிய சினிமாவிலும் அப்படி என்ன விசேஷம்? இவற்றின் சிறப்பம்சம் என்ன? தமிழ் சினிமாவுக்கும் இவற்றுக்கும் உள்ள ஆதார ஒற்றுமைகள் வேற்றுமைகள் என்னென்ன? தமிழ் சூழலில் புதிதாக முளைத்திருக்கும் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க வந்திருக்கிறது 'உலகசினிமா' புத்தகம். இதன் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். …

  8. கதாநாயகன் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட் கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் விஷ்ணு மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில் இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது. ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி…

  9. சர்க்கார் அரசியல் - ஜெயமோகன் சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு…

  10. முதன் முதலாக தமிழில் வெளிவந்திருக்கும் டைம்மிஷின் சப்ஜெக்ட் திரைப்படம் ! ஈராஸ், ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனங்களின் பங்களிப்புடன விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகள்… கதைப்படி, இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் இரண்டாமவரான சையின்டிஸ் டாக்டர் சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக் கெடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தபட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற…

    • 0 replies
    • 1k views
  11. தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எழுத்தாளரை, அடியாட்களுடன் வந்து மிரட்டியதாக நடிகர் விவேக் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் நான் காமெடியன் நிஜத்தில் வில்லன் என்று மிரட்டல் வசனம் பேசி, வீட்டை காலி செய்யச் சொல்லி, ரகளையில் ஈடுபடுகிறார். எனவே, விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விவேக்குக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு சென்னை கே.கே., நகரில் உள்ளது. அந்த வீட்டில் சுப்ரஜா என்ற எழுத்தாளர் வாடகைக்கு இருக்கிறார். 2005ம் ஆண்டு மே மாதம் முதல் ஏழாயிரம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இவர் கே.கே., நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் வீட்டின் உரிமையாளர் காமெடி…

  12. விமர்சனம்: புஷ்பா 2 ! KaviDec 05, 2024 21:00PM உதயசங்கரன் பாடகலிங்கம் குடும்பத்தோடு ரசித்து மகிழலாமா?! ‘இது பான் இந்தியா படமல்ல, ஒரு தெலுங்கு படம்’ என்றே ‘புஷ்பா’ பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறி வந்தார் இயக்குனர் சுகுமார். ஆனால், அதன் தெலுங்கு, மலையாள ‘டப்’ பதிப்புகளை விட இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியது. பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நாயகன் அல்லு அர்ஜுனுக்குத் தனி ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமானது. இதன்பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தார் நாயகி ராஷ்மிகா மந்தனா. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு அது. அதன் தாக்கத்தின் காரணமாக ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மட…

  13. கொண்ரெக்ரர் நேசமணிக்கு இன்று 59 ஆவது பிறந்த நாள் - கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்.! சென்னை: இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் வடிவேலுவை மீம்ஸ் கிரியேட்டர்களின் அரசன் என்றே சொல்லலாம். வடிவேலுவின் நகைச்சுவை மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலையே கிடையாது. தினந்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக இருப்பது வடிவேலுவின் நகைச்சுவை தான். ஒருவரை கோபப்பட வைக்கவேண்டும் அல்லது அழ வைக்க வேண்டும் என்றால் அது அனைவராலும் முடிந்து விடும் அதுவே ஒருவரை வாய்விட்டு சிரிக்க வைக்க எல்லோராலும் முடிந்து விடுமா என்ன. நிச்சயம் முடியவே முடியாது.ஆனால் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாய் விட்டு வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்க…

  14. ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம். கதைக்களம் ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே. இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறைய…

  15. செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை குற்றம் இல்லா குற்றப்பத்திரிகை - நீதிபதிகள் தீர்ப்பு பத்து வருடங்கள் இருக்குமா? இல்லை, அதற்கு மேலேயே இருக்கும். செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை திரைப்படம் தடைசெய்யப்பட்டதை இன்னும் சில வருடங்கள் கழிந்தால் பொன் விழாவாக கொண்டாடலாம். சம்பவங்களை படமாக்கி பிரபலமடைந்த செல்வமணிக்கு அதுவே ஆபத்தாகவும் முடிந்ததும். ராஜீவ்காந்தி கொலையை குற்றப்பத்திரிகை என்ற பெயரில் எடுத்து, சென்ஸாரால் அது தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றம் சென்றதற்கான பலன் இப்போதுதான் தெரியத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்தினம் இப்படத்தை சென்னை போர் ப்ரேம் ப்ரிவியூ தியேட்டரில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா மற்று…

    • 0 replies
    • 999 views
  16. செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர். செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நாளடையில் காதல் மலர்ந்தது. பெற்றோர் துணையுடன் இருவரும…

  17. வில்லு படத்தின் ஷ•ட்டிங் அங்கே நடைபெறும் நாளில் இருந்தே, தகவல்களுக்கு பஞ்சமில்லை. நயன்தாரா, விஜய் இருவரும் ஜாலி டூயட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ஒருபக்கம். ஆனால் டயலாக் பேசி நடிக்க வேண்டிய பிரகாஷ்ராஜ், டயர்டாகி திரும்பிவிட்டார் இன்னொரு பக்கம். காரணம்? வைகைப்புயல்... பாடல் கட்சிகள் மட்டுமல்ல, படத்தில் இடம் பெறும் வசனக்காட்சிகளையும் அங்கு எடுக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் பிரபுதேவா, நாயகன், நாயகி, மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரீமன் ஆகியோருடன் ஸ்விட்சர்லாந்து போய்விட்டார். இவர்களுடன் பிளைட் ஏற வேண்டிய வடிவேலு மட்டும், கடைசி நேரம் வரைக்கும் ஏர்போர்ட்டுக்கு வரவேயில்லை. அடுத்த பிளைட்டில் வந்து சேர்வார் என்று நம்பி பிளைட் ஏறிய யூனிட்டிற்கு அதிர்ச்சி. அடுத்தடுத்த பிளைட்டுகள் ஸ்விட…

  18. 46வயதுடைய ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை அவர் மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார். 2008இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் ஊர்வசி கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை 2வது திருமணம் செய்துகொண்டார். சிவபிரசாத்தை திருமணம் செய்த பிறகு எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறினார் ஊர்வசி. ஆனால் தற்போது 46 வயதான…

    • 0 replies
    • 998 views
  19. ராஜீவ் காந்தி கொலையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு படங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வந்தபோது அந்த கொடும் சம்பவம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ். more

  20. விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் சுரேஷ் கோபி, ராம் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டு கலந்துக் கொண்டார். மேலும் இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவின் போது விக்ரம் நிறைய வேலைகளில் பிசியாக இருந்ததால் அர்னால்டுடன் பேச வாய்ப்பு கிடை…

  21. தியேட்டரில் படம் பார்த்து... விழுந்து, விழுந்து சிரித்த... வாலிபர் மரணம். மும்பை: மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மங்கேஷ் படத்தை…

  22. இப்போதே உரிமையாக, காதலரின் வீட்டில் இருக்கிறார் கீதாஞ்சலி. தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள். செல்வராகவனின் வருங்கால மனைவி. பேட்டியா... வெரிகுட்!'' - சிநேகிதியிடம் சிரிக்கிறார் செல்வா. கீதாஞ்சலி பேசியது எல்லாமே செல்வா மீதான காதல்... காதல்... காதல்! காதல் ஆரம்பமான கதை? ''நான் சென்னைப் பொண்ணுதான். பிரிட்டனில் புரொடெக்ஷன் மேனேஜ் மென்ட் படிச்சுட்டு வந்தேன். அந்தச் சமயம் செல்வா கம்பெனிக்கு இணைத் தயாரிப்பாளர் வேணும்னு கூப்பிட்டாங்க. செல்வாவைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி நிறையப் பயமுறுத்தினாங்க. 'அவர் ரொம்ப ரிசர்வ்டு டைப்’, 'அவர்கிட்டே வேலை செய்யுறது ரொம்பக் கஷ்டம்’னு சொன்னாங்க. ஆனால், முதல் சந்திப்பிலேயே அது எதுவும் நிஜம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன். …

    • 0 replies
    • 995 views
  23. உரு பட்டேல் என்ற பெயரை இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். டாலர்களில் புரளும் மில்லினர். குஜராத்தில் பிறந்த உரு பட்டேலுக்கு ஓர் ஆசை. ராமாயணம் கதையை படமாக்க வேண்டும்! இதே ஆசையுடன் திரிந்த இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி 'ராமாயணம்' என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயார் செய்து, அஜய்தேவ்கானை ராமனாகவும் அவரது மனைவி கஜோலை சீதையாகவும ஆக்கி விட்டார். இந்தப் படத்தின் பட்ஜெட் நூற்றைம்பது கோடி! ராஜ்குமார் சந்தோஷியின் இந்த அட்டாக்கால் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் உரு பட்டேல், 'அனுமான்' என்ற பெயரில் அதே ராமாயண கதையை தயாரிக்கிறார். இதுவொரு சர்வேதச புராஜெக்ட். பட்ஜெட் ராஜ்குமார் சந்தோஷியின் ராமாயணத்தைவிட அதிகம். இதனை புரிந்து கொள்ள ஒரு சின்ன சாம்…

    • 0 replies
    • 995 views
  24. கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமலஹாசன் சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி உள்ள நடிகர் கமலஹாசன், தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து இன்று கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், " எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் கு…

    • 4 replies
    • 995 views
  25. Started by வீணா,

    OSCAR awards : பதினோரு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது Martin Scorsese - இயக்கத்தில் வந்துள்ள மற்றொரு சிறந்த படமான Hugo ! Martin Scorsese - நமது "இன்னொருவனின் கனவு" தொடரின் முக்கிய நாயகன். Michel Hazanavicius-யின் "The Artist " திரைப்படம் பத்து ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை 'THE ARTIST' படத்தினை இயக்கிய Michel Hazanavicius வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான் ஆஸ்கார் விருதை தட்டி சென்றார் "Jean Dujardin" for "The Artist". சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றார் "Meryl Streep" for "Iron Lady"... சிறந்த மூல திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றது Midnight In Paris B…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.