ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
Published By: RAJEEBAN 12 AUG, 2023 | 07:46 AM கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக்கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது, எனினும் வெளியான தகவல்களை பர்வையிட்டதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனத…
-
- 22 replies
- 1.2k views
- 2 followers
-
-
விமானப்பைடை வான் தாக்குதலும் அரச, ஊடக பதிற்குறிகளும்(பீஷ்மர்) தமிழ்- சிங்கள கணக்கின் படி ஞாயிறன்று அர்த்த சாமத்தில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு போட்டமை அதிர்ச்சி மிகுந்த பாதிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்திற்று. ஒரு நாட்டிற்குள் இருந்து கொண்டு விடுதலைப் போராட்டமொன்றை நடத்தும் ஓர் இயக்கம் தனக்கென வான் விமான வலுவை பெற்றுள்ளமை இதுவே முதற்தடவை என்ற குறிப்புரை மிக முக்கியமானதாக அமையும். அதேவேளை, இந்த சம்பவம் இலங்கையின் தேசிய பிரச்சினை பற்றிய போராட்டம் எத்துணை ஆழமாகச் சென்றுள்ளது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த குறிப்பிற் இந்த சம்பவத்தை அரசாங்கமும் பொது நீரோட்ட சிங்கள ஊடகங்களும் எவ்வாறு நோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
Published By: VISHNU 14 JAN, 2024 | 10:10 AM யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா 15 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்பதற்காகவே நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். https://www.virakesari.lk/article/173902
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே ஐ.நாவின்; செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:சிறீலங்கா விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஏன் செயல்திறனற்று உள்ளார் என ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்ன சிற்றி பிரஸ் ஐ.நாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜெராட் அரோட் இடம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அழுத்தங்களே பானின் செயல்திறனற்ற தன்மைக்கு காரணம் என பிரான்ஸ் நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நாவின் அரசியல் பிரதிநிதி லியான் பெஸ்கோ சிறீலங்கா செல்வார் என ஐ.நா தெரிவித்தபோதும் அவர் தனது விஜயத்தை கைவி…
-
- 7 replies
- 1.2k views
-
-
மஹிந்தவின் கருத்து கலைஞருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளதாம்! வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் இராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று அந்த இலங்கை ஜனாதிபதி சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை: கேள்வி :- இலங்கைத் தமிழர்களுக்கு “தனித் தமிழ் ஈழம்” அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப்பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே? கருணாநிதி :- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200…
-
- 6 replies
- 1.2k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் கொலை May 20, 2011 பிரதேச வீடொன்றில் இளைஞன் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. . கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட வருடத்தில் இரண்டாம் வருடப்பிரிவில் கல்வி கற்று வந்த 23 வயதுடைய நாகராசா சபேஷ் ரூபன் என்ற இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. . சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிக்கொடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. viyapu.
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன் 12-01-2006 19:17 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்] விடுதலைப் புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் - நிமால் சிறிபால டி சில்வா. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைத்தரப்பினருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் அறிவிக்கும் பொழுதே, அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த செயல்பாடுகளை, அரசாங்கம் கண்டிப்பதாக தெரிவித்த அவர், நோவேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹேமின் இலங்கை வருகையின் பின்னர், சமாதான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான புதிய முன்னெடுப்புக்கள் ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு சந்திரகாந்தன் தெரிவு. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் அவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளருடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடிதாவும் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சந்திரகாந்தன் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லண்டலின் வசிக்கும் சந்திரகாந்தனை ஐரோப்பிய நாடுகளுக்கான பரப்புரைகளை மேற்கொள் வரவிருக்கும் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011 மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தை இலங்கையிடம் தெரிவித்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இலங்கை ஊடகங்களில் அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை. டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.கருணாநிதியை, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்துப் பேசிவிட்டு திரும்புகையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கடலோர காவல்படை மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ…
-
- 8 replies
- 1.2k views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தான் என்ன? சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்களாணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம். 30 வருட அமைதிவழிப் போராட்டத்தின் முடிவுக்காலத்தில், 1976 ஆம் ஆண்டு மே மாதம், தந்தை செல்வாவின் தலைமையில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பின் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க் கூடி வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் எனும் இடத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். சுதந்திரமும் இறைமையுள்ள தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் தமிழ்த்தேசியத்தின் மீட்சிக்கு தவிர…
-
- 3 replies
- 1.2k views
-
-
கருணா ஒட்டுக் கூலிக்குழுவின் சிறுவர் துஷ்பிரயோகம் அம்பலம். சிறீலங்க அரச படைகளின் ஆதரவுடன் கருணா குழு எனப்படும் துணை ஆயுதக் குழு கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை படையணியில் சேர்த்த வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள சர்வதேச உறவுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது சர்வதேச உறவுகள் நிலையத்தின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களை படையணியில் சேர்க்கும் கருணா குழுவின் செயல்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் துணை புரிவதாகவும் சில சந்தர்ப்பங்களில் நேரடியாக சிறுவர்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகமும் அந்த அறிகையில் சுட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் அரசாங்கத்தினாலும், அரசபடைகளாலும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உலகத் தமிழர்களாகிய நாம் இந்த மின்னஞ்சலினை அனுப்பி வைப்பதன் ஊடாக இன்னல்களினாலும், அவலங்களினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மாலான இவ்வுதவியினை செய்ய முன்வருவோமாக.. http://www.tamilrefugees.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
“இராவணன் தமிழன் அல்லது சிங்களவன். அது முக்கியமல்ல. அவன் இலங்கையை ஆண்ட ஒரு மன்னன். அவன் இலங்கையன்.” இவ்வாறு எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்கு பதிலளித்துள்ளது தெற்கின் கடும்போக்கு சிங்கள அமைப்பான ராவணபாலய அமைப்பு. எல்லாவல தேரர் “சுடர் ஒளி”க்கு கூறிய கருத்தில், “இராவணன் இலங்கையை ஆண்டது கட்டுக்கதை” என்று கூறியிருந்தார். இது தொடர்பில் வினவிய போதே ராவணபாலயவின் பொதுச்செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸதேரர் மேலும் தெரிவித்ததாவது, “விஜயன் இங்கு வந்தபோது குவேனி இங்கிருந்தார். குவேனியின் படையணியே விஜயனை கைது செய்தது. குவேனியின் பின்புலத்தை ஆராய முற்பட்டால் இராவணன் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டால் என்ன செய்வது? பலரும் பலவிதமாக கருத்துக்களை வெளியிடலாம். இராவணனுடன் 12 ஆண்டுகள் போர…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மைய…
-
- 0 replies
- 1.2k views
-
-
மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரமாக நினைவுகொள்ளத் தீர்மானம்! AdminMay 9, 2019 தமிழின படுகொலை வாரமாக மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒருவாரத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலத்தில் வடகிழக்கு மாகாணத்தின் 21 இடங்களில் இடம்பெற உள்ளதாகவும் இறுதி நாளான மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அ…
-
- 3 replies
- 1.2k views
-
-
யுத்த காலத்தில் புலிகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன? இப்போது இலங்கை தொடர்பாக அதிக ஆர்வம் ஏன்?; காரணத்தை விளக்குகிறார் ஆர்மிரேஜ் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பென்ற எண்ணப்பாட்டை சர்வதேச சமூகம் கொண்டிருந்தமை நியாயமற்றதும் ஆழ்ந்த சிந்தனையற்ற எண்ணப்பாடுமாகும் என்று அமெரிக்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் ஆர்மிரேஜ் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பான தகவல்களை ஆர்மிரேஜ் வெளியிட்டுள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புத் தொடர்பான மீளாய்வு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆர்மிரேஜ் இ…
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளும், அரசும் பெரும் சமருக்கு தயாராகி வருகின்றனர்: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும் பெரும் சமர் ஒன்றிற்கு தம்மை திரைமறைவில் தயார்படுத்தி வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டின் பாதுகாப்பு நிலவரத்தின் ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: விபரங்களுக்கு
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒரு வித்தியாசமான கருத்தியல் மாநாடு யூலை 20 வெள்ளிக்கிழமை தொடக்கம் 22 ஞாயிற்றுக்கிழமை வரை சிங்கப்பூரின் தேசிய பல்கலைக் கழக பேரவையால் நடத்தப்பட்டது. 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பேரவை முதன் முறையாக இந்த வருடம் உலகப் பல்கலைக் கழகத் தமிழ் இளையோர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.[/size][/size] [size=3][size=4]வேற்று மொழி கலவாத பேச்சுத் தமிழில் அமைந்த மாநாடாக இது அமைந்தது. தமிழினப் பெருமையைப் போற்ற வேண்டும் என்ற பிரதான நோக்கில் மாநாட்டை நடத்தாமல் இன்றைய உலகத் தமிழ் இளையோர்கள் தமிழ் அடையாளத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று பார்வையிடும் மாநாடாக இடம் பெற்றது.[/size][/size] [size=3][size=4]தமிழ் அடையாளப் பரிமாணங்கள் அனைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
மைத்திரி பதவி விலக நேரிடும்! அம்பலப்படுத்தும் அவரின் நெருங்கிய நண்பர் Report us Rakesh 58 minutes ago நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட்டு, அவமானப்பட்டு தலைகுனிய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று பிரதமரும் இல்லை, அமைச்சரவையும் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியே மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதி இதற்கு தடையாக இருக்கின்றார். எனவே, அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் இந்தமுறை திருவிழாவின் போது இரண்டாவது தடவையாகவும் சட்டம் வளைந்து கொடுத்துள்ளது. ஆலயத்திற்கு வருபவர்களிற்கான பொது நடைமுறை என ஆலய நிர்வாகமும், மாநகரசபையும் இணைந்து கடைப்பிடித்து வரும் நடைமுறை இரண்டாவது தடவையாகவும் நேற்று மீறப்பட்டது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்திற்குள் ஏற்கனவே மேர்வின் சில்வா வாகனத்தில் பிரவேசித்ததைப் போல, நேற்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வாகனத்தில் பிரவேசித்தார். நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள எப்.எம்மின் கலைகத்தை திறந்து வைக்க வந்த விக்னேஸ்வரன், ஆலயத்திருவிழாவிற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத்தடை பகுதியில் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளே பிரவேசித்தார். துவிச்சக்கர வண்டிகள் கூட…
-
- 7 replies
- 1.2k views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை சென்றடைந்திருக்கும் 492 இலங்கையர்களில் தம்பதி ஒன்றுக்கு அங்கு பிறந்த பெண் குழந்தைக்கு தமிழ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்குழந்தை கடந்த 23 ஆம் திகதி பிறந்தது. எம்.வி.சன்.சி தமிழ் பயணிகள் குழுவின் மத்தியில் முதன்முதல் கனேடிய பிரஜாவுரிமை இக்குழந்தைக்கே கிடைக்கப் பெறுகின்றது. கனேடிய சட்டத்தின் பிரகாரம் அங்கு பிறக்குகின்ற குழந்தைகள் அந்நாட்டுப் பிரஜைகள் ஆவர். Eelanatham.net
-
- 2 replies
- 1.2k views
-
-
காற்றில் கரையும் உயிர்கள்! மீண்டும் தமிழீழத் தகிப்பு தமிழகத்திலும் அனலாகப் பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பதுங்கியிருக்கும் காட்டுக்குள் அப்பாவித் தமிழர்கள் தஞ்சம் அடைகிறார்கள். பொதுமக்களின் வாழ்விடங்கள், சிங்கள ராணுவ முகாம்களாக உருமாறுகின்றன. இதற்கிடையில் தமிழக மீனவர்களைத் துளைக்கத் தவறுவதில்லை சிங்கள ராணுவத்தினரின் தோட்டாக்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு, 'இனி, இந்திய மீனவர்கள் சுடப்பட மாட்டார்கள்!' என்று பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மூலம் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறது. 'பிரபாகரன் இனி பதுங்கு குழிகளில் இருக்க முடியாது!' என்று சிங்கள ராணுவ அதிகாரி கொக்கரிக்கிறார். 'இலங்கை ராணுவம் இனி எங்களிடம் தஞ்சம் கேட்டு வரும்!' என்று ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
'அரசின் சிரேஷ் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயைப் படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே' என்று குற்றம் சுமத்தியுள்ள அரச உயர்பீடங்கள் அதற்காகப் புலிகளுக்கு எதிpரான கடும் நடவடிக்கைளை விரைந்து எடுக்க வேண்டும் என்று சீற்ற முற்றிருக்கின்றனர். தக்க பதிலடி தரும் விதத்தில் புலிகள் மீதான நடவடிக்கை விரைந்து தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து நிலைப்பாடு அரசுதலைமைக்குள் வலுத்து வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கினறன. அமைச்சர் ஜெயராஜை கொன்றமைக்காக புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதை ரட்ணசிரி விக்ரமநாயக்கா வெளிப்படையாகவே வற்புறுதிதியிருக்கின்றார். 'பயங்கரவாதிகளுக்கு எதிரான எமது நடவடிக்கைகளை நாம் மேலும் தீவிரப்டுத்த வேண்டிய வேள…
-
- 0 replies
- 1.2k views
-
-
அலரி மாளிகையின் தொலைபேசி இயக்குனருக்கு அந்த அழைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தொலைபேசியில் சிங்களத்தில் பேசிய பெண், தன்னை அனோமா பொன்சேகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சிறிலங்கா அதிபருடன் பேச வேண்டும் என்று கேட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தின் சார்பில் அவர் சிறிலங்கா அதிபரிடம் பொதுமன்னிப்புக் கோரவுள்ளதாக தொலைபேசி இயக்குனர் நினைத்துக் கொண்டார். உடனடியாக அவர் மகிந்த ராஜபக்சவிடம், அனோமா பொன்சேகா இணைப்பில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்ற கேட்பதாகவும் கூறினார். தொலைபேசியை எடுத்து “என்ன பிரச்சினை? எங்களால் என்ன செய்யமுடியும்?“ என்று கேட்டார் மகிந்த ராஜபக்ச. அழைத்தவர் ஓரளவுக்கு தயவாகப் பேசினார். வாழ்க்கைச்செலவு உயர்வினால் பொதுமக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கோரிக்கை. இணைந்த வடக்கு கிழக்கு மாகணத்தின் முதலமையச்சராக இருந்த வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றை ஏற்படுத்தவும் அரசாங்கத்தின் பங்காளிகளான கருணா, பிள்ளையான் ,டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மூலமாக அதனை நிர்வகிப்பதற்கும் இலங்கை அரசாங்கதிற்கு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் அரசியல் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று இந்தியா கருதுகின்றது. அதேசமயம் புலம் பெயர் நாடுகளில் …
-
- 2 replies
- 1.2k views
-