ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
பாறுக் நஜீ- Eliana Apicella எனும் அமெரிக்க பிரஜை அண்மையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் விடுதி இலக்கம் 6 இல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல்வளரி அழற்சி (Appendicitis) இருப்பது கண்டறியப்பட்டு குடல் வளரியை அகற்றும் அறுவைசிகிச்சை (Appendicectomy) சத்திர சிகிச்சை நிபுணர் Dr. P. K. Ravindran தலைமையில் வெற்றிகரமா மேற்கொள்ளப்பட்டது. இன்று 11.08. 2020 பூரண சுகத்துடன் அவர் சத்திர சிகிச்சை விடுதியை விட்டு வெளியேறும் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட சேவையை பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள வைத்திய சேவையை விட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட…
-
- 2 replies
- 578 views
-
-
இனப்பிரச்சினைக்கு அனைத்து கட்சி மாநாட்டின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் - புலம்பெயர் தமிழர்கள் [ வியாழக்கிழமை, 15 சனவரி 2009, 04:19.31 PM GMT +05:30 ] இலங்கை இனப்பிரச்சினைக்கு அனைத்து கட்சி மாநாட்டின் ஊடாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணப்படவேண்டும் என தமிழர்களும் வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழர்களும் எதிர்பார்ப்பதாக ரொயட்டர் செய்திசேவை தெரிவித்துள்ளது. ரொயட்டர் செய்திசேவையின் பிரைசன் ஹல் இது தொடர்பில் செய்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையின் 25 வருடக்கால யுத்தத்தி;ல் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை படையினரால் காட்டுப்பகுதிக்கு ஓரங்கட்டப்பட்டுள்ளனர், எனினும் ராஜதந்திரிகளும் இந்திய அரசியல்வாதிகளும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வுக்காணப்பட வ…
-
- 0 replies
- 739 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் குறித்த ஹக்கீமின் குற்றச்சாட்டு கேலிக்கூத்து! – கைதிகளின் உறவினர்கள் ஆழ்ந்த கவலை!! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு துளியளவேனும் அக்கறையில்லை என்பதையே அவரின் கேலிக்கூத்தான கருத்துகள் வெளிப்படுத்துகின்றன என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற குற்றவியல் நடைமுறைக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கைதிகள் தொடர்பில் இங்கு பேசினாலும் அவர்கள் குறித்தான தகவல்களை வழங்கத் தவறிவிட்டது என்று கூறினார். அமைச்சரின் மேற்படி கருத்தானது தமிழ் அரசியல் கைத…
-
- 3 replies
- 517 views
-
-
9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் : அரசியலமைப்பு குறித்து கர்தினால் இலங்கை மதச்சார்பில்லாத நாடு என்ற மேற்குலகத்தின் கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை கிடையாது எனத் தெரிவித்துள்ள கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையின் அரசியலமைப்பின் 9 ஆவது ஷரத்து நீக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் திரு இருதயநாதர் தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ஆண்டகை அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கை மதச்சார்பில்லாத நாடு என்ற கெ…
-
- 8 replies
- 509 views
-
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் ஆவணி 30ஆம் திகதி வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 11மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி யாழ்மாவட்ட செயலகத்தில் ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். அதேபோல் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்பமாகி காந்திபூங்கவரை சென்று ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் மழை,வெயில்,பனி பாராது தமது உறவுகள் கிடைப்…
-
- 0 replies
- 313 views
-
-
"இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் எதிரொலியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தங்கும் வசதிகளை இந்திய அரசு கவனித்து வருகிறது. ஈழத் தமிழ் அகதிகளுக்கான பராமரிப்புப் பொறுப்பை அரசு எப்போது ஏற்றுக்கொண்டதோ அன்று முதல் இவ்விவகாரம் "உள்நாட்டுப் பிரச்சினை' என்ற வட்டத்தைக் கடந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடும் உரிமை இந்தியாவுக்கு வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட எல்லா உரிமையும் உண்டு மட்டுமல்ல; கணிசமான பொறுப்பையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கிய பங்காற்ற வேண்டும். சொல்லொணாத் துன்பங்களுக்குள்ளாகி தினமும் உயிர் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ஈழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனோ கணேசனைப் புகழ்ந்த தினகரனின் ஆசிரியரை, விரட்டினார் புலிகேசி மகிந்தர் ஜன 30, 2013 கொழும்பிலிருந்து வெளிவரும் அரச ஆதரவுப் பத்திரிகையான தினகரன் வாரமஞ்சரியில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனைப் புகழ்ந்து ஆசிரியர் தலையங்கம் எழுதியமைக்காக அந்தப் பத்திரிகை ஆசிரியரை சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணியிலிருந்து விரட்டியுள்ளார். மனோ கணேசனின் நண்பராக இருக்கும் குறித்த பத்திரிகை ஆசிரியர் தினகரன் வார மஞ்சரியின் ஆசிரியராக பணியாற்றுகிறார். கடந்த 13 ஆம் திகதி குறித்த பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் மனோ கணேசனைப் புகழ்ந்து அவர் எழுதிவிட்டார் என்றே அவரை சிறீலங்காவின் ஜனாதிபதி தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக தினகரன் பத்திரிகை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து…
-
- 0 replies
- 554 views
-
-
யாழில் இவ்வருடம் "பியர் "பாவனையில் குறைவு யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த 6 மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் நுகர்வு 27% ஆல் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும் இவ்வருடம் கடந்த 6 மாத புள்ளிவிவரங்களின்படி 7 இலட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும…
-
- 18 replies
- 2.2k views
-
-
இலங்கையில் போரை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்குமாறு இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து சட்ட மன்றத்தில் வெள்ளிக்கிழமை (23.01.09) முதல்வர் கருணாநிதி தீர்மானம் முன்மொழிகிறார் நன்றி: நககீரன்
-
- 17 replies
- 3.7k views
- 1 follower
-
-
புயலாக வீசும் வடக்கின் வசந்தம் - யாழ் ஏழாலையைச் சேர்ந்த இளைஞரைக் காணவில்லை- உறவினர் முறைப்பாடு 07 பெப்ரவரி 2013 வடக்கில் இலங்கை அரசு கூறிக்கொள்ளும் வடக்கின் வசந்தம் புயலாக வீசிக்கொண்டிருக்கும் நிலையினில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மனிதஉரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் காணாமல் போன இளைஞரது குடும்பத்தவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கை சேர்ந்த குறித்த இளைஞரான 25 வயதுடைய வரதராஜா ஜெகதிஸ் என்பவரே காணாமல்போயுள்ளதாக இவரது குடும்பத்தவர்களினால்; முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் திருநெல்வேலி கலட்டி வீதியில் உள்ள வாகன திருத்தகத்தில் வேலைபார்த்து வந்த நிலையிலேயே நேற்று புதன…
-
- 1 reply
- 369 views
-
-
யாழ்.பொலிஸ்நிலைய கட்டடம் அடுத்த மூன்று மாதங்களில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு யாழ் அசோகா ஹோட்டலில் இயங்கி வரும் பொலிஸ்நிலையம் இன்னும் மூன்றுமாதங்களில் முற்றாக அகற்றப்பட்டு அந்தக் கட்டடம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமென பொலிஸ்நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பொலிஸ்நிலையத்திற்கென பண்ணைப் பகுதியில் புதிய பொலிஸ் நிலைய கட்டடம் அமைக்கப்பட்டு கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.எனினும் பழைய பொலிஸ் நிலையத்தில் யாழ் பிராந்திய பொலிஸ் பிரிவு போக்குவரத்துதுறைப் பொலிஸ் பிரிவு தற்போது இயங்கி வருகின்றன. இந்தநிலையில் அடுத்த ம…
-
- 0 replies
- 260 views
-
-
ஈரான் - இலங்கை உறவு மேலும் வலுவடைகிறது ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறந்த உறவு காணப்படுவதாகவும் இரு நாடுகளுக்கிடையிலான வெளியக உறவு மேலும் வளர்ச்சியடைந்து செல்வதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலெஹி தெரிவித்துள்ளார். ஈரானுக்கான இலங்கை தூதுவர் மொஹமட் பெய்சால் ராசினை நேற்று சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சுமூக உறவை வலுப்படுத்திக் கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை ஈரான் மெற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையுடனான பொருளாதார, சுகாதார மற்றும் கலாச்சாரம் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளப்படும் என ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். h…
-
- 4 replies
- 714 views
-
-
அனைத்து கூட்டமைப்பு சார்பில் தமிழின ஈகி முத்துகுமார் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய்! தமிழின ஈகி முத்துகுமார் குடும்பத்தினர்க்கு தமிழக அரசு தர முன் வந்த 2 இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை அவரது குடும்பத்தினர் ஏற்க முடியாதென அறிவித்துவிட்டனர். இந்நிலையில் முத்துகுமார் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் எமது அமைப்பு தரா முன் வந்துள்ளது. முத்துகுமார் மரணத்திற்கு டெல்லி அரசும், தமிழக அரசுமே முழுப் பொறுப்பு. பணத்தை வீசியெறிந்து இந்தக் குற்றத்திலிருந்து இவ்வரசுகள் தப்ப முயல்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களப் படை வெறியர்களால் ஒவ்வொரு முறை படுகொலை செய்யப்படும் போதும், இவ்வாறே பணம் வீசப்படுகிறது. சிங்களர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ இவ்வரசுகள் …
-
- 12 replies
- 1.9k views
-
-
(செ.தேன்மொழி) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரம், இராணுவ பின்னணியை கொண்ட ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது , இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்தமட்டில் அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலில் முன்னேறி வந்தவர். நீண்டகால அரசி…
-
- 4 replies
- 620 views
-
-
விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தர…
-
- 9 replies
- 3.4k views
-
-
emergency debate at canadian parliment....
-
- 18 replies
- 3.3k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதை ஐ.நா. சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பாலச்சந்திரன் குறித்த போர்க்குற்ற ஆதாரம் மட்டுமன்றி இன்னும் அதிர வைக்கும் பல ஆதாரங்கள் தம்மிடம் இருக்கின்றன என்றும் சனல் 4 அதிரடியாக அறிவித்துள்ளது. சனல் 4 ஆவணப்பட இயக்குனர் கல்லும் மெக்ரே, தமிழக தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரிட்டனிலிருந்து வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார். இலங்…
-
- 3 replies
- 871 views
-
-
பெல்ஜியத்தில் சொக்லெட் தயாரித்த ரணில் (படங்கள் இணைப்பு) பெல்ஜியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்லெட் நிறுவனமொன்றில் வைத்து சொக்லெட்டுகளை தயாரித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொக்கலட் தயாரிப்பதை போன்ற புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வது மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரதமர் பெல்ஜியம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12472
-
- 1 reply
- 376 views
-
-
பேராசிரியர் சிசிறா ஜெயசூர்யா( Sisira Jayasuriya)அவர்களின் நேர்காணல் Australian ABC interview of Prof. Sisira Jayasuriya Prof. Sisira Jayasuriya La Trobe University, Australia BA (Ceylon), PhD (ANU) Biography Sisira Jayasuriya is Director, Asian Economics Centre, and Associate Professor in economics having moved to the University of Melbourne from La Trobe University where he was Reader in Economics. He obtained his Bachelors degree in economics from the University of Ceylon and his Masters and PhD from the Australian National University and held appointments at the Australian National University and the International Rice Research Institute, Philippi…
-
- 0 replies
- 916 views
-
-
கடலில் படகுப் பேரணி நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும் நேரே சந்திக்க வைத்து பேச்சு நடத்துவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சந்திப்புக்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கச்சதீவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூ…
-
- 5 replies
- 421 views
-
-
மாணவர் கொலையை கண்டித்து வடக்கில் நாளை பூரண கதவடைப்பு யாழ்.பல்லைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடரும் அரச பயங்கரவாதத்தை கண்டித்தும் வட மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. கடந்த 21ஆம் திகதி யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் யாழ்.பல்லைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். மேற்படி சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று மாலை 3.30 மணிக்கு தமிழ்தேசியகூட்டமைப்பின் 4 அங்கத்துவ கட்சிகளும் ம…
-
- 0 replies
- 246 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றித்தான் நமக் கெல்லாம் தெரியும். ஆனால், அங்கே 'சிங்கள விடுதலைப்புலி'களும் இருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் சிங்கள தலைவர்களுக்குத்தான் இப்படியரு முத்திரை குத்தி அவர்களின் தலைக்கும் விலை வைத்திருக்கிறது சிங்கள அரசு. அப்படி முத்திரை குத்தப்பட்டவர்தான் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் பொதுச்செயலாளரான சிறீதுங்க ஜெயசூர்ய. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் பதின்மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் சிறீதுங்க. பிறப்பால் சிங்களர் என்றா லும் இலங்கையில் சிங்களர்-தமிழர் ஒற்றுமைக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவர். இதனாலேயே இவருக்கு 'சிங்களப் புலி' என்று முத்திரை குத…
-
- 0 replies
- 830 views
-
-
கோவையில் இன்று பொதுக்கூட்டம் வைகோ, ராமதாஸ் பங்கேற்பு கோவை: இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்கக் கோரி கோவையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை ராஜபக்சே அரசின் சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருகிறது. காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லாமல் ஈழத்தமிழர்கள் செத்து மடிந்து வருகிறார்கள். சிங்களர்களின் துப்பாக்கிகளுக்கு பலியான தமிழர்கள…
-
- 0 replies
- 671 views
-
-
வன்னியில் இறுதிப்போரின்போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம். உள்ளக விசாரனைகள் எதனையும் இலங்கை மேற்கொள்ளும் என்று நாம் நம்பவில்லை இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபை வளாகத்தில், "மோதல் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படம் வெளியிடப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். "மோதல் தவிர்ப்பு வலயம், திரையிடப்படுவதற்கு முன்னர், அறிமுகவுரை நிகழ்த்தினார் அவர். "நீதித்துறைச் சுதந்திரம், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணைகளுக்கு இலங்கையில் இடமில்லை என்று தமிழ்த் தேசியக் கூ…
-
- 1 reply
- 629 views
-
-
தொடர்ந்தும் கொலைப் பொறியாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை; 49 பேர் காயம் [ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2009, 03:47.38 PM GMT +05:30 ] வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வலைஞர்மடம், பொக்கணை ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கும் பின்னர் பிற்பகல் 3:30 மணிக்கும் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளன…
-
- 0 replies
- 634 views
-