Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நெதர்லாந்து நீதிமன்றில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வாதாடி வெற்றியைப்பெற்றுத்தந்த வழக்குரைஞர் அவர்களின் ஐ.நா.முன்றலில் கடந்த 05.03.2012 அன்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் சிறப்புப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அவர், மக்கள் எப்போதும் அவர்களுடன் இணைந்துநின்று போராடுவதில், எந்த நாட்டினது அரசாங்கமும் இனிமேல் குற்றம்காண முடியாதென்றும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்லன என்பதை, ஐரோப்பிய நீதிமன்றங்கள் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ளும் காலம் கனிந்துவிட்டதென்றும் கூறி உரையை நிறைவு செய்க…

  2. குறுகிய காலத்துக்குள் ஒன்றரை லட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் காணி அமைச்சினூடாக நாட்டில் குறுகிய காலத்தில் ஒன்றரை இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்னமும் வழங்க இருக்கின்றோம் என காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி. எஸ்.குணவர்த்தன தெரிவித்தார். கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையில் கேட்போர் கூடத்தில் நிலஅளவை உதவியாளர் பதவிக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளது. அமைச்சர்கள் சுயாதீனமாக தங்களது சேவைகளை வழங்குவதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று அரச தொழில்கள் பெறுவோர் சிறந்த நம்பிக்கையான ச…

  3. 07 Oct, 2024 | 03:50 PM ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோ…

  4. பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால திரைப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது. http://news.lankasri.com/show-RUmqyDSZPdko5.html

  5. ஆயிரம் வருட அபிவிருத்தியை ஒரு வருடத்தில் செய்துள்ளோம் என அமைச்சர் சம்பிக ரணவக்க குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, இந்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினால் அரசாங்கம் எந்த விதத்திலும் கடன் சுமைக்குள் தள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது : இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்க…

  6. புது தில்லி, மார்ச் 20: குடியரசுத் தலைவரின் உரையில் இலங்கை விவகாரத்தைச் சேர்க்க வலியுறுத்தி மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வந்த தீர்மானம் தோல்வியைத் தழுவியது. இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 6 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாயின. 6 திருத்தங்கள்: குடியரசுத் தலைவர் உரையில் இலங்கை விவகாரத்தை சேர்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா, அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன் ஆகியோர் சார்பில் 6 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்…

  7. அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு, தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் அரசாங்கத் தலைவர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலிருந்து, அரசாங்கத்துடன் தொடர்பில் காணப்படுவதாகத் தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக எதிர்காலத்தில், நாடாளுமன்றமானது அரசியலமைப்புச் சபையாக மாற்றப்படுமெனத் தெரிவித்த அவர், இந்த விடயம் பற்றி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக அரசாங்கமானது, அனைத்துக்…

  8. இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை உதவித் தொகையினை இரு மடங்காக அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான முறைமைகளை உறுதிப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர ஆகியோர் 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி கைச்சாத்திட்டதுடன், அதற்கான இராஜதந்திர ஆவணங்களும் பரிமாறப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 600 மில்லியன் இலங்கை ரூபாவா…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. சிறையிலிருந்து ஜெயதீபன் எழுதிய கடிதம் கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயதீபன் என்ற கைதி தனது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகோரிய கடிதமொன்றினை எழுதியுள்ளார். ஜெயதீபனும் அவரது சகோதரனும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களது தாயாரும் ஒரு சகோதரனும் எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். ஜெயதீபன் தனது குடும்ப நிலமை பற்றி எழுதிய கடிதம் வருமாறு :- உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- விபரங்களைப் பெற்றுக் கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com Skype – Sh…

    • 0 replies
    • 765 views
  11. நல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு மாரப்பன இராஜினாமா? ஜோனுக்கு நியமனம்? இரு தினங்களுக்குள் முடிவு குழுமமே விலக வேண்டுமாம் நல்லாட்சி வெடித்துச் சிதறியது ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் அவன்ட் காட் கப்பல் தொடர்பான விவகாரம் சூடுபிடித்திருந்த நிலையில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை நேற்று திங்கட்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார். அவன்ட் காட் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் சிவில் சமூகத்தினரும் விமர்சனம் செய்ததுடன் அந்த உரைக்கு எதி…

  12. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள்! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிர…

    • 2 replies
    • 867 views
  13. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார இதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து எந்த விவகாரமும் இல்லை, ஆனால் அது சிவில் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதே பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மோர்னிங் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சிவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றமையே பிரச்சினைக்குரிய விடயம் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். நம்பகதன்மை மிக்க தகவல்களை அடிப்படையாக வைத…

  14. மாலைதீவு ஜனாதிபதிக்கு "லங்கா மித்ர விபூசன" பட்டம் வழங்கப்படவுள்ளது 2ஃ12ஃ2008 3:14:58 Pஆ வீரகேசரி இணையம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமிக்கு லங்கா மித்ர விபூசன என்ற சிறப்புப் பட்டம் இன்று வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாத்திய வேறுபாடுகள் குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டும் வகையிலேயே இலங்கையில் வழங்கப்படும் இந்த உயர் தேசிய கௌரவப் பட்டடம் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலைத்தீவு ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபத…

    • 3 replies
    • 1.6k views
  15. ஜெனிவா தீர்மானம்: சிறிலங்கா அரசு குத்துக்கரணம் – பீரிசையும் காலை வாரியது [ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 00:06 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஏற்க முடியாது என்றும் அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வமான கருத்தல்ல என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாகவும், இதற்கு கட்டுப்படப் போவதில்லை என்றும் ஜெனிவாவில் இருந்து திரும்பிய சிறிலங்கா அரசகுழு கடந்த திங்கட்கி…

    • 2 replies
    • 1k views
  16. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நேற்று முன்தினம் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் நடந்த பூரண ஹர்த்தால் தமிழ் மக்களின் உணர்வு பூரணமான செயற்பாடு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அகிம்சைப் போராட்டங்களில் சில போராட்டங்கள் உரிமை கோரக் கூடியவை. இன்னும் சில போராட்டங்கள் அரசியல் அமைப்பு ரீதியில் உரிமை கோர முடியாதவை. இத்தகையதொரு போராட்டமாக கைதிகளின் விடுதலைக்காக வடக்கு கிழக்கில் நடந்த பூரண ஹர்த்தாலைக் கூறிக்கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு தமிழ் மகனும் தாமாகவே முன்வந்து அகிம்சை வழியில் போராட்டத்தை முன் னெடுப்பது என்பது இதன் பொருளாகும். இந்த வகையில் மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு க…

  17. ------------------------------------------------------------------------------------------------------------------------------------

    • 1 reply
    • 1.2k views
  18. இன்று மாலை 5.30 மணியளவில் கோப்பாய் தெற்கு வீரகாளி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதிப்பு பார்ப்பவர்களைப் பதற வைத்து பக்தி மயமாக நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் , முதியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பக்திமயமாக பங்குபற்றிய தீ மிதிப்புக் காட்சி இதோ thx http://newjaffna.com/

  19. கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு – அமெரிக்க, ஐரோப்பிய இராஜதந்திரிகள் புறக்கணிப்பு சிறப்புச் செய்தியாளர்Aug 30, 2019 by in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடக்கும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு- 2019 பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை ஆரம்பமானது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்த, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட சிறப்புரை நிகழ்த…

  20. வீரகேசரி இணையம் - உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது. இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப…

  21. அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித்தமை …

    • 1 reply
    • 530 views
  22. சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல்; வெளியாகியுள்ளன. அவர்கள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை துரிப்படுத்தியுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவர்களது சஞ்சிகையான தாபிக்கின் 12ஆவது பதிப்பிலேயே, அபு ஷுராயா தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில், அபு ஷுராயா, சிறிய வயதிலிருந்தே, சமயக் கற்கைகளில் ஆர்வம் காட்டியதாகவும், இலங்கையில் தனது கல்வியைப் பூர்த்தி செய்த பின், வெளிநாட்டில் ஷரியா பற்றிக் கற்றதாகவும், இலங்கையின் உள்ளூர் மொழிகள் (தமிழ், சிங்களம்) தவிர…

  23. 71 பயணிகளுடன் கிழக்குக் கடற்பரப்பில் சென்ற இழுவைப் படகு சிறீலங்கா கடற்படையினரால் தடுப்பு இலங்கையின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 71 பயணிகளுடன் இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர். 150 கடல்மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்றுகொண்டிருந்த இவ் இழுவைப் படகை சிறீலங்காப் கடற்படையினர் விரைந்து சென்று தடுத்துள்ளனா. இழுவைப் படகும் 71 பயணிகளும் கடற்படையினரால் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளின் முடிவில் இப்படகில் 91 பேர் இப்படகில் வந்ததாகவும், இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இப் பயணிகள் பர்மா அல்லது பங்களாதேஷ் நாட்டைச…

  24. 29 மில்லியன் செலவில் புணர் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்ட குளத்தில் கசிவு - குளோபல் தமிழச் செய்தியாளர் கிளிநொச்சி:- கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் வாண்கட்டிற்கு அருகில் கசிவு ஏற்பட்டுள்ளது, குறித்த கசிவு தொடர்பில் பொறியியலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், அவரது ஆலோசணையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குளம் 2010ம் ஆண்டு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புணரமைப்பு செய்யப்பட்டது. சுமார் 29 மில்லியன் செலவில் புணர் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 2013ம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வாண்கட்டின் கீழ் பகுதியில் கசிவு ஏற்பட்டதனை தொடர்ந்து விவசாயிக…

  25. ஐக்கிய நாடுகள் சபை பராமரிப்பில் அகதிகள் முகாமை ஒப்படைக்க வேண்டும் - பழ.நெடுமாறன் 3/9/2008 6:19:30 PM வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபை பராமரிப்பில் அகதிகள் முகாமை ஒப்படைக்க வேண்டும். மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் நல்ல உடல்நலத்துடன் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார் என தமிழர் தேசியத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது, இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த எம்.பி. சிவநேசன் உட்பட 3 எம்.பி.க்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழ் எம்.பி.க்களுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அங்கு மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இந்திய உச்ச நிதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். பகவதி தலைமையில் 11 பேரை கொண்ட சர்வதேச கண்காணிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.