ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
கிழக்கை சிங்கள பௌத்த மாநிலமாக அடையாளம் காட்டவே கிழக்கு ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல்ல மேதானந்த தேரரின் கூற்று நிரூபித்துள்ளது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், https://newuthayan.com/கிழக்கை-பௌத்த-மாநிலமாக்க/
-
- 3 replies
- 749 views
-
-
விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்கவும்! கோத்தா ஆலோசனை விவசாயப் பயிர்கள் ஏற்றுமதியின்போது பூரணப்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். கண்டி – ஹசலக பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தபோதே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், விவசாய ஏற்றுமதிகளுக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மிளகை மீள் ஏற்றுமதி செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மிளகு விதைகள், மிளகுத் தூள் அல்லது வேறு பூரணப்படுத்தப்பட்ட விவசாய பொருட்களாக மாற்ற…
-
- 2 replies
- 361 views
-
-
சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து வர்த்தமானியை அரசு வெளியிட வேண்டும்..! கபே வலியுறுத்து! கொரோனா தொற்று காலப்பகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீண்டும் கொவிட்-19 அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த சூழலில், இவ்விடயம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அறிக்கையில், ”சுகாதார நடைமுறைகள் தொடர்பான இந்த தாமதமானது, பிரசாரங்கள் நடத்துவதை மிகவும் பாதித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல…
-
- 2 replies
- 369 views
-
-
FAROOK SIHAN - பாறுக் ஷிஹான் வரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் என்னை தோற்கடித்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் வேட்பாளருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார். அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் இவர் இன்று(11) விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தனது கருத்தில் தெரிவித்ததாவது தேர்தல் பிரசாரம் என்ற போர்வையில் கருணா அம்மான் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றார்.அவரது பிரச்சாரத்தில் அண்மைய…
-
- 2 replies
- 974 views
-
-
லக்ஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சராக வேண்டும் என்பதே சுமந்திரனின் விருப்பம்; சுரேஷ் உரை July 12, 2020 “ சுமந்திரனை பொறுத்தவரை அவருக்கு இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சராகுவதற்கு விருப்பம் இருந்தது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த லஷ்மன் கதிர்காமருக்குப் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக தான் இருக்க வேண்டும் என்பதில் அதிக விருப்பம் இருக்கிறது. அதனால் தான் பேரம் பேசி அமைச்சுப் பதவி பெறுவதற்கு வலுவான பாராளுமன்ற குழுவை கேட்டு நிற்கின்றார்” எனத் தெரிவித்திருக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்தின். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம…
-
- 2 replies
- 533 views
-
-
பாடசாலைகளை மூடுவது குறித்து அரசு அவசர ஆலோசனை! கந்தக்காடு புனர்வாழ்வு மையத் தொடர்பு காரணமாக நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கண்டறியப்படும் நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாக அறிய முடிகிறது. பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற் கொண்டே இவ்வாறான ஆலோசனை நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்று (12) மாலை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. https://newuthayan.com/பாடசாலைகளை-ஒரு-வார-காலத்/
-
- 1 reply
- 463 views
-
-
பயங்கரவாதத்தை விட பொலித்தீன் பாவனை ஆபத்தானது! – யாழ் கட்டளை தளபதி பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையானது பயங்கரவாதம் மற்றும் கொரோனாவை விட மிகவும் ஆபத்தானது என்று மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கழிவகற்றல் செயற்பாடு இராணுவத்தினரால் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் கொரோனா ஆகியவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. இந்நிலையில் பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பாவனையில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற வேலைத்திட்டத்தினை தற்போது முன்னெடுத்து வருகின்றோம். அதன் முதற…
-
- 0 replies
- 342 views
-
-
தொடர்கிறது இராணுவ மயமாக்கல்; இலங்கையின் நிலைமை படுமோசம் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது. இந்தப் படுமோசமான நிலைமை மிகவும் கவலையளிக்கின்றது.” இவ்வாறு அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமைகள் குறித்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளமென்ற் நயலேஷொஷி வூலே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைக்கான எனது விஜயம் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னரும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற ஆறு மாத காலத்துக்குப் பின்னரும் நான் விஜயம் மேற்கொண்ட வேளை பார்த்த நிலமை தற்போது மாற்றமடைந்துள்ளது. இது குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இலங்கையின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலை…
-
- 1 reply
- 476 views
-
-
இலங்கையில் 80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை! கொரோனா நிலைமை காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு இருந்தமையினால் புதிதாகப் பிறந்த 80,000 குழந்தைகள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மார்ச் – மே மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்கு பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தினால் முடியாமல் போனதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக பதிவு செய்யப்படாத குழந்தைகளை பதிவு செய்வதற்கு கைபேசி மூலமான பதிவு சேவை ஒன்று தொடங்கப்பட உள்ளது என்று பதிவாளர் ஜெனரல விதானகே தெரிவித்துள்ளார். இதன்படி பெற்றோர் தமது பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி கைப…
-
- 0 replies
- 281 views
-
-
இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் – உலமாக் கட்சியின் புதிய வெடிகுண்டு! திருக்கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும்” என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: “திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. …
-
- 0 replies
- 157 views
-
-
கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். புத்தூரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் ” தமிழ் தேசிய கூட்டமைப்புக்…
-
- 13 replies
- 1.3k views
-
-
போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்கிறார் சரத் வீரசேகர.! இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை. இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவையாகும்." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு ஆகியன தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாகக்கொண்டே ஜெனிவாவில் 30/1 யோசனை முன்வைக்கப்பட்டது. போர்க்குற்றம், ம…
-
- 0 replies
- 393 views
-
-
வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இராணுவத்தின் அலுவலகம்.. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். இராணுவ அதிகாரி மற்று…
-
- 5 replies
- 1.1k views
-
-
பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவுடன் தொடர்பு; ஒருவர் கைது! சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பலியானதாக கூறப்படும், பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவை சேர்ந்த சாரா மொஹமட் எனும் புலஸ்தினியின் சிறிய தந்தையான செ.தேவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு இன்று (11) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிம் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே அவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். https://newuthayan.com/பயங்கரவாதி-ஷஹ்ரான்-குழுவ/ சிறிய தந்தையான செ.தேவகுமார்🤔🤔
-
- 0 replies
- 419 views
-
-
மாணவராக உள்ளவர் துணைவேந்தருக்கு புள்ளி போட முடியுமா? யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் மீண்டும் சர்ச்சையொன்று கிளப்பப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறைகளின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெறவுள்ள துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீடு செய்யும் விசேட கூட்டத்தில் மதிப்பீடு செய்யும் பேரவை உறுப்பினர்கள் தொடர்பிலேயே இந்தச் சர்ச்சை எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகத்தின் நடப்பாண்டில் கலாநிதி கற்கை நெறிக்கு மாணவராகப் பதிவு செய்துள்ள ஒருவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுப் புள்ளியிடலை மேற்கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. பே…
-
- 1 reply
- 322 views
-
-
1000-கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவேன் – சுமந்திரன் நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என முன்னாள் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர் நிலையில் அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; மட்டு’விலில் ஆர்ப்பாட்டம்! ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன முன்னாள் ஓஐசியினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து இன்று (11) மட்டக்களப்பு – காந்தி பூங்கா முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தனவை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சந்தேக நபரான போதைப் பொருள் தடுப்புப் பணியக முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவவினால் அச்சுறுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்டிருந்தார். இதனைக் கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர…
-
- 0 replies
- 356 views
-
-
கருணாவை கைதுசெய்ய உத்தரவிடக் கோரி மேன் முறையீட்டு மன்றில் ரீட் மனு! (எம்.எப்.எம்.பஸீர்) கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை உடனடியாகக் கைது செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று ( ரீட் மனு) மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜூன் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றில் கருணா அம்மானின் கருத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்த, கடுவலை நகர சபையின் உறுப்பினரும் பகுதி நேர வகுப்பு ஆசிரியருமான போசெத் கலஹேபத்திரண குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஓரே இரவில் இரண்டாயிரம், மூவாயிரம் இராணுவ உறுப்பினர்களைக் கொன்ற தாம், கொரோனா தொற்றை விட ஆபத்தானவர் என கருணா வெளியி…
-
- 1 reply
- 443 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர் தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர் என்றும் எனவே, சாதாரண மக்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும் என்றும் குறிப்பிட்ட ஞானசார தேரர்இதற்காக நாமும் குரல் எழுப்புவோம் என மேலும் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண…
-
- 5 replies
- 741 views
-
-
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்! முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் என்னிடம் கூறிய விடயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் தெரிவித்துள்ளார். அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார…
-
- 5 replies
- 1.3k views
-
-
முன்னாள் எம்.பி சரவணபவனின் உதவியாளரது வீடு மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் – சங்கானை தேவாலய வீதியில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் உதவியாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (10) இரவு கூரிய ஆயுதங்களுடன் சென்ற இனம்தெரியாத குழு ஒன்று வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சொத்துக்களையும் அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளனர். https://newuthayan.com/சரவணபவனின்-உதவியாளரது-வ/
-
- 2 replies
- 725 views
-
-
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்து விசேட அறிவிப்பு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை(09) மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றினைத் தொடர்ந்து தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய எமது சுகாதார…
-
- 2 replies
- 517 views
-
-
ஏன் தமிழ் மக்கள் மாற்று அணிக்கு வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீவிர பிரசாரம் July 10, 2020 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்லை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுர விநியோகம் இன்று காலை மானிப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய இடங்களில் நடைபெற்றது. முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் த.சிற்பரன் ஆகியோர் தங்களுக்குரிய துண்டுப்பிரசுங்களை சந்தைக் கட்டிடங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிலையங்கள், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களுக்கு விநியோகித்து தங்களின் கொள்கைகள் தொடர்பான விளக்கங்களை மக்களிடம் தெளிவாக எடுத்துரைத்தனர். …
-
- 0 replies
- 468 views
-
-
இன்றும் தமிழ்நாட்டுடன் இணைந்திருக்கும் மதுரையோடு சிங்கள மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. சுருக்கமாக கூறினால் ஒருவர் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். நாம் மகாவம்சத்தை நம்பினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உண்மை வரலாற்றை பௌத்த குருமார் உட்பட எவராவது மறுப்பார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். தற்போது ஆலயங்கள் பௌத்த விகாரை என பௌத்த தோர்கள் தெரிவித்து வருவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டனம் தெரிவித்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையின்…
-
- 4 replies
- 1.1k views
-
-
அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர…
-
- 6 replies
- 880 views
-