Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காவல்துறை உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு காவல்துறை உத்தரவினை மீறிய காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் காவல்துறையினரின் உத்தரவினை மீறி பயணம் செய்தமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது எனவும் இந்த சம்பவம் தொடர்பில் கிரமமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துப்ப…

  2. கொட்டாஞ்சேனையில் காணாமல்போன இரு தமிழர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின (எம்.எப்.எம்.பஸீர்) கொட்டாஞ்ச்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி தமது வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணிக்கும் போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு தமிழர்கள் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்டவர்களின் தொலைபேசியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் …

  3. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகம், மத்திய அரசை தரக்குறைவாகவும் பேசி வரும் திரைப்பட இயக்குனர் சீமானை ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அப்போது பேசிய ஆற்காடு வீராசாமி சீமான் இன்றே கைது செய்யப்படுவார் என்றார் For a question raised in the Legislative assembly of Tamilnadu by the Congress members about the delay in arresting Director Seeman, who has spoken in support of Libertion Tigers and against Central Government; Arcot Veerasamy said he will arrested today. http://tamilnational.com/index.php?option=...&Itemid=297

    • 10 replies
    • 1.9k views
  4. பெண்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி யாழ் மாவட்டத்தில் கிராம மட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறி ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் யாழ் கன்னாதிட்டி காளி கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வசந்தம் விசன்றஸ்ட் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பயிற்சி நெறிக்காக சிங்கப்பூரில் இருந்து பயிற்றுவிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி நெறிகள் தொடர்ந்து ம…

  5. TNA நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் சதாசிவத்தின் செயலாளர் கடத்தப்பட்டுள்ளார் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் சதாசிவத்தின் செயலாளர் செல்லத்துரை சபாநாதன் (50) கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சனியன்று மாலை மூன்றரை மணியளவில் வைரவப் புளியங்குளத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஒரு பெண் உட்பட 10 பேர் கொண்ட ஆயுதக்குழுவினர் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் 250‐2142 இலக்கம் கொண்ட வெள்ளைநிற வானிலேயே இவரைக் கடத்திச் சென்றுள்ளனர். அவர் கடத்தப்படுவதைத் தடுத்த அவரது மனைவியையும் பொருட்படுத்தாது கடத்தல்காரர் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட செல்லத்துரை சபாநாதனுடைய மனைவி வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் …

    • 0 replies
    • 548 views
  6. 'புலிகள்' ஆட்டுக்குட்டிகள் போன்று மாறியது எப்படி? – ஓர் ஊடகத்தின் கண்ணோட்டம் [ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 08:42 GMT ] [ நித்தியபாரதி ] புலிகள் தற்போது ஆட்டுக்குட்டிகளாக மாறியுள்ளனர் என்பது அடையாளங் காணப்பட்டு, தமிழ் சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலகப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்காகும். இவ்வாறு Huffington Post எனும் ஊடகத்தில் Jack Healey தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தற்போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 80 மில்லியன் வரையானதாகும். அதாவது இது உலகமெங்கும் வாழும் யூத சன…

  7. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்த 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே சிறீதரசிங் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர். 'ஆனந்த விகடன்' வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள 'பூபாலசிங்கம்' புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இர…

  8. இலங்கையின் போர்க்குற்றம்: புதியதலைமுறை புதியஆதாரம் வெளியீடு http://puthiyathalaimurai.tv/pt-special-documentary-on-lankan-war-crimes இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்” கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை ராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின. இதேபோல ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும், சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன. கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத்தள்ளப்படுகிறார்கள்.. பின்னால் இருந்து வெற்றி எக்…

    • 7 replies
    • 1.2k views
  9. அரச நிதியைமோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது, பொலிஸ் நிதிக்குற்றப்பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/186307/அம-ர-க-க-வ-க-க-ன-இலங-க-ய-ன-ம-ன-ன-ள-த-த-வர-க-த-

  10. By M.D.Lucias இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களும் தவறானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத் தூதுவரான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் இருக்கின்ற அனைவரும் சமவுரிமைகளை அனுபவிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் என்றார். http://www.virakesari.lk/article/local.php?vid=3596

    • 1 reply
    • 556 views
  11. யாழில் குடு பேபி கைது! 180 மில்லிகிராம் குடு போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரபல குடு பேபி என அழைக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வைத்து குறித்த இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளனர். யாழ்.ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் திருடப்பட்ட துவிச்சக்கரவண்டியில் குடு போதை பொருளினை விற்பனை செய்வதற்காக வருகை தந்துள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு இவர் குறித்து கிடைத்த தகவலின் பிரகாரம், அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் உட…

  12. தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன் தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால், கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கிற்காக முன்னிலை…

  13. ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ‐ முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி: ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென முன்னாள் சட்ட மா அதிபரும், அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு தலைவருமான சிவாபசுபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிவிலியன் இழப்புக்களை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலா…

    • 0 replies
    • 939 views
  14. 23.03.2013 அன்று 15.00 மணியிலிருந்து Place Georges Pompidou என்ற அதிகமான மாணவர்கள் மற்றும் மக்கள் கூடும் நூலக பகுதியில் பிரான்சு இளையோர் அமைப்பினர் தாய்த் தமிழகத்தில் மிக எழுச்சியுடன் ஈழத் தமிழர்களை ஆதரித்து நடாத்தும் மாணவர் போராட்டம் பற்றிய விடயத்தை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு வழங்கியிருந்தனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் துண்டு பிரசுரங்களை பெற்றும், மற்றும் விடயத்தை நேரிலும் கேட்டறிந்து கொண்டனர். சுமர் 30 நிமிட நேரத்தில் மிகத்தொகையான பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மக்கள் இதை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டது கவனிக்கக்கூடியதாக இருந்தது. இவ்விடத்தில் இளையோர் அணிந்த ரிசேட்டில் ஈழ மக்களின் தன்னாட்சி தேசியம், சுயநிர்ணயம், நியாயம், நீதி என்ற சொற்பதங்கள் பொறிக்கப்பட்டிருந்தமை…

  15. வடக்கில் மதுபாவனை அதிகரிப்பு : தனி நபரின் நுகர்வு 5.7 லீற்றர் வடக்கில் மதுபாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மேலும் 2015 ஆம் ஆண்டு தனி நபரின் மதுபான நுகர்வு 5.7 லீற்றர் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது வாய்மூல வினாவுக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/14065

    • 3 replies
    • 415 views
  16. Support to LTTE will hurt cause of Lankan Tamils: BJP The Indian BJP today said any support to the LTTE in Tamil Nadu would hurt the cause of Sri Lankan Tamils, as the image of the banned outfit has suffered a "setback" in the state following its involvement in the assassination of former prime minister Rajiv Gandhi. BJP state president L Ganesan, in a statement said some persons from Tamil Nadu were vocally supporting the outlawed unit in the name of backing Sri Lankan Tamils and their actions went against the sovereignty and integrity of the nation. "Such action by persons could dissuade people of Tamil Nadu from supporting the Sri Lankan T…

    • 15 replies
    • 2.6k views
  17. கச்சதீவு பிரச்சினை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமாகி முடிந்துபோன ஒன்று அதற்காக இப்போது பிரச்சினை எழுப்ப தேவையில்லை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்துள்ளார். தற்போது ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரினை அடுத்து இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் கடும் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைக் கூறிவருகின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் தென் பகுதியிலும், சிங்களவர்களுக்கு வடகிழக்கு பகுதியோடும் தொடர்புகள் உள்ளன. இதை மறுக்க முடியாது. அப்படி குடியேறியவர்களுக்கு அப்போதே அரசாளும் உரிமை இருந…

    • 4 replies
    • 1.5k views
  18. டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரூபா மதிப்பை பாதுகாப்பதற்காக டொலர் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக வெளிநாட்டு இருப்புக்கள் குறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் இறுதியில் டொலரின் பெறுமதி 131 ரூபாவாக காணப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுவரையில் இலங்கையில் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்புக்கள் இருந்ததாகவும், தற்போது அது வரையில் 6 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டினுள் பாரிய நிதி நெருக்கடி ஒ…

  19. தமிழ் மக்களின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? கலாநிதி ஜேசுதாஸ்: சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 1975வரை பலவித சாத்வீக, அகிம்சா, காந்தீய முறைப் போராட்டங்களை குறிப்பாக தமிழரசுக் கட்சி சார்ந்த தலைவர்கள் நடத்தினார்கள். அவை எதிர்பார்த்த பலனளிக்காது போகவே 1975இல் இருந்து இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நாடினார்கள். அதில் முக்கிய அமைப்புக்களாக ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, எல்ரிரிஈ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றில் எல்ரிரிஈ தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் காலப்போக்கில் இந்திய‐ இலங்கை ஒப்பந்தத்தோடு ஜனநாயகப் பாதைக்குப் போனார்கள். ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் 1990இலிருந்து இந்த ஜனநாயக அமைப்புக்கள் சரியான ஜனநாயகப் பாதையில் போகமுடியவில்லை. காரணம் அதற்கான சூழ்நிலை…

    • 0 replies
    • 1.1k views
  20. யாழ்.நகரப்பகுதியில் அண்மையில் வைத்தியரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டதென கூறி மேல் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் மறுதலித்துள்ளனர். நெடுந்தீவு அரச வைத்தியசாலையின் பல்வைத்திய நிபுணர் ஒருவர் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை யாழ்.நகரப்பகுதியில் தாக்கப்பட்டிருந்தார். மது போதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த குழுஒன்றே வீண் முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான வைத்தியர் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் புகார் செய்ய முற்பட்டவேளை அதனை ஏற்க மறுதலித்த பொலிஸார் இராணுவப் புலனாய்வு பிரிவினருடன் முரண்படவேண்டாம் என ஆலோசனையும் தெரிவித்துள்ளனர். குருநகரை சேர்ந்த குறித்த நபர் தனது கிராமத்திலும்…

  21. இலங்கையின் வட கடலில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறப்படும் 26 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்.குடா கடற்பரப்பினுள் நுழைந்து ரோலர் படகுகள்மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களை வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளதுடன், அதிகாலை 3 மணிக்கு அவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்ததாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். எனினும், இந்த மீனவர்கள் வெளிநாட்டவர்கள் என்ற காரணத்தினால் தங்களால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதெனத் தெரிவித்து கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் 26 இந்திய மீனவர்களையும் படையினரிடமே திருப்பி ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து , இவர்களைப் பொறுப்பேற்றுள்ள ஊர்காவற்துறை பொ…

  22. பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல் முனைப்பு, புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் – பழ.நெடுமாறன் வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் முனைப்பிற்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க... http://www.pathivu.com/news/1201/54/.aspx நன்றி - பதிவு

  23. இலங்கையில் ஐ.நா வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு இலங்கையில்அரசாங்கம் அழைப்புகளை விடுத்துள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். அடுத்த ஆண்டு இலங்கையில் நடத்தப்படவுள்ள ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைக் கண்காணிக்கும் செயலகம் ஒன்று நேற்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. இந்தச் செயலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ‘ஐ.நா வெசாக் நாள் முதல் முறையாக இல ங்கையில் கொண்டாடப்படவுள்ளது. இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், வரும் 2017 மே 12ஆம் நாள் நடைபெறும்.…

  24. 1.15 பில்­லியன் டொலர்­க­ளுக்கு 99 வீத குத்­த­கையில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு வழங்­கப்­படும் ஜன­வ­ரியில் ஒப்­பந்தம் கைச்­சாத்து; அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம அறி­விப்பு (ஆர்.யசி) அம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்தித்திட்டம் தொடர்பில் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் சீனா­வுடன் முதற்­கட்ட உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­ள­வுள்ளோம். சீனாவின் 1.15 பில்­லியன் டொலர் முத­லீட்­டுடன் இலங்­கைக்கு 20 வீத பங்கு மற்றும் சீனா­வுக்கு 80 வீத பங்கு என்ற அடிப்­ப­டையில் 99 ஆண்­டு­கால குத்­த­கைக்கு அம்­பாந்­தோட்டை துறை­முகம் வழங்­கப்­படும் என்று அபி­வி­ருத்தி உபாய முறைகள் மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம …

  25. குழந்தைகள் எல்லோரும் வெள்ளையுள்ளத்துடனேயே பிறக்கின்றார்கள். பின் அவர்களது வாழ்நிலையை மாற்றி விடுவதில், சூழலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு செவ்வியில், தமிழர்களுக்காகப் போராட வேண்டுமெனும் எண்ணம் தோன்ற, தனது நான்காவது வயதில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் ஒரு காரணம் என்று சொன்னார். இளவயதுகளில் மனதில் பதிந்து விடும் நினைவுகள் எளிதில் மறைந்துவிடுவதோ, மறக்கப்படமுடிவதோ இல்லை. தற்போது ஈழமண்ணில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலையைச் சர்வதேசங்கள் எவ்விதம் கணிக்கின்றதோ தெரியாது ஆனால் ஈழத்தின் இளைய சமூகம் புலத்திலும் புலத்திற்கு வெளியிலும் சிறிலங்காவின் இனப்படுகொலையாகவே உள்வாங்கி…

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.