ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
அரசாங்கத்தின் இயலாமையை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் – கயந்த! by : Jeyachandran Vithushan நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் இயலாமை பற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வெங்காயத்தின் விலை உயர்வுக்கு தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்களே காரணம் என குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த மூன்று மாதங்களில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வரி குறைப்பை நடைமுறைப்படுத்தியிருந்தாலும்…
-
- 0 replies
- 267 views
-
-
கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களுக்கு ரவூப் ஹக்கீம் முக்கிய அறிவிப்பு by : Yuganthini ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 29 ஆவது பேராளர் மாநாடு, கண்டி- பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “சரியாகவோ, பிழையாகவோ, தடுமாற்றத்தின் காரணமாகவோ அல்லது ஏனைய காரணங்களினாலோ கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் இ…
-
- 0 replies
- 249 views
-
-
வடக்கு முஸ்லிம்கள் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற வேண்டும்- ரிஷாட் புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகம் இழந்து தவிக்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை, மீளப்பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளையும் முயற்சிகளையும் மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு முஸ்லிம்கள், இந்தப் பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தம்மாலான முழுப்பங்களிப்பையும் நல்க வேண்டுமெனவும் அவர் மேலும் கூறினார். புத்தளத்தில் 90 ஏக்கர், 25 ஏக்கர் மற்றும் ஸ்லாமத்புரம் ஆகியவற்றில் வாழும் வடக்கு முஸ்லிம்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சந்தித்துக் கலந்துரையா…
-
- 1 reply
- 441 views
-
-
கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம்? February 24, 2020 கொரோனா வைரஸ் இலங்கையில் பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்கும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டனர். கொரோனா பரவும் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தென்கொரியாவின் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தென்கொரியாவிற்கான இலங்கைத…
-
- 3 replies
- 426 views
-
-
எழுவைதீவில் இருந்து வந்த சுமார் 30 பேர் அடங்கிய குழுவொன்று நேற்று வலம்புரி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டது. கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலம்புரி - சங்குநாதத்தில் வெளிவந்த ஆலடி மாநாட்டில்; எழுவைதீவு முருகமூர்த்தி வித்தி யாலய மாணவர்களை எழுவைதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு மாற்றுகின்ற முயற்சியில் தீவகத்தில் உள்ள கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டிருந்தமைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகக் கூறி, வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்த மேற்படி கத்தோலிக்க மதம் சார்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழு வலம்புரி அலு வலகத்தையும் வலம்புரி அலு வலக உத்தியோகத்தர்களையும் சாடும் நோக்குடன் உள் நுழைந்ததுடன், கத்தோலிக்க மதத்திற்க…
-
- 34 replies
- 2.9k views
-
-
இரா.சம்பந்தன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார்.! ஐ நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடு்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வே்ணடும் என தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 6.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் இன்று கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலகத்தி இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆராயப…
-
- 0 replies
- 433 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஜெனிவா பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகும் தீர்மானத்தை தொடர்ந்து, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம் பெயர் அமைப்புக்கள் மிக தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையின் உள்ளக விவகாரத்தினை நல்லாட்சி அரசாங்கம் தங்களின் அரசியல் தேவைகளுக்காக சர்வதேசத்தின் மட்டத்தில் கொண்டு சென்றது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பினை வழங்கியது. கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுகளுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவில்லை. மாறாக புலம் ப…
-
- 3 replies
- 417 views
-
-
(செ.தேன்மொழி) நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்காகவா உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் காலத்திலே நல்லாட்சி அரசாங்கத்திக் எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதாமானது உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலை குண்டுத்தாக்குதலாகும். எதிர்தரப்பினர் ஐக்கிய தேசியக் முன்னணி மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.இது எமது கட்சிக்கு மாத்திரமன்றி , எமது ஜனாதிபதி வேட்பாளருக்கும் பெரும் பாதிப்பை ஏற்…
-
- 2 replies
- 420 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை…
-
- 0 replies
- 226 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் “மன்னாரில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வோர் அரசியல் பாதையில் பயணிக்கும் பொழுது தமிழர்களுடைய தமிழ் தேசியம் சிதையுமே ஒழிய வேறு இலாபம் எதுவும் இல்லை. இவை எமது வாக்குகளை சிதைக்கும் செயலே” என, சட்டத்தரணி டினேஷன் தெரிவித்தார். அண்மையில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக ஊடக சந்திப்பின் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர். குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களினுடைய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தற்போ…
-
- 19 replies
- 2.7k views
-
-
தமிழ் மக்களின் மகா சிவராத்திரி நிகழ்வில் தானும் கலந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு உலகெங்கும் வாழும் இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி தின கொண்டாட்டத்தில் இலங்கை வாழ் இந்துக்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக் கிரியைகள் மூலம் துர்க்குணங்கள் இருந்து விலகி உரிமையை பெற்றுக்கொள்ள முடி…
-
- 16 replies
- 1.6k views
-
-
-செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, மணலாறு ஆகிய 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில், 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 05 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மணலாறு பிரதேச செயலக பிரிவில் 02 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். துணுக்காய் பிரதேச செயல…
-
- 1 reply
- 882 views
-
-
பூவின் மீதமர்ந்தும் அமராமலும் மெல்லப் படபடக்கும் வண்ணத்துப் பூச்சியின் மெதுமை போன்றது, ‘பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள்’ நாடகம், செவ்வாய்க்கிழமை (25) மாலை 6.30 மணிக்கு மருதானை எல்பின்ஸ்ட்டன் அரங்கில் நடைபெறும் அரச நாடகவிழா – 2020 இல் அரங்கேறவுள்ளது. பயங்கரமாகவே வெளித்தெரியும் போர்க்கால வாழ்வும், வெளித்தோற்றப்பாட்டில் பெருமிதமாகவும், உள்ளார்ந்தமாகப் பயங்கரமும் வன்முறையான சமூக வாழ்வில் சற்று விலகிச் சிந்திக்க முனையும் யதார்த்தத்தை நோக்கி நகர முனையும் சிறிசொன்றின் துயர வாழ்வும் அதனை விளங்கமுனையாத சமூக இருப்பின் மீதான எதிர்வினைதான் பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள் நாடகம். நடைமுறையிலுள்ள சமூக வாழ்க்கை முறையும், நடைமுறைக் கல்வி முறையும் மேலதிகமாக குரூரமான போர்க்க…
-
- 0 replies
- 447 views
-
-
-செ.கீதாஞ்சன் புதுக்குடியிருப்பு - குரவில் பகுதியில் உள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 40 பேருக்கு, இன்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. முல்லை ஸ்டார் இசை சங்கமத்தின் ஏற்பாட்டில், ஜேர்மனி கேர்னெ ஒன்றியம், அகரம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, ஸ்ரீ சபாரத்தினம் அறக்கட்டளை ஆகியோரின் நிதி உதவியுடன் இந்த உலர் உணவு பொதி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குகனேசன், ஸ்ரீசபாரத்தினம் அறக்கட்டளை தலைவரும் ஓய்வுபெற்ற உபதபால் அதிபருமான க.கணேசகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதன்போது முல்லை ஸ்டார் கலைஞர்களின் வளர்ச்சிக்காக, ஸ்ரீ சபாரத்தினம் அறக்கட்டளையினரால் நிதி உதவியும் வழங்கவைக்கப்பட்டது. http://www.tamilmirror.l…
-
- 0 replies
- 506 views
-
-
மதங்களின் பெயரில் இடம்பெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி மதவாததை தூண்டுபவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக வடக்கு கிழக்கில் மதவாத ரீதியான கருத்து மோதல்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்லின மக்களும் பல சமயத்தவர்களும் வாழும் இந்த நாட்டில் தனித்துவமும் சகிப்புத்தன்மையுடனும் வாழும்போதுதான் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கமுடியும். அதைவிடுத்து மதத்தின் பெயரிலோ இனத்தின் பெயரிலோ மேலாதிக்கத்தையோ வன்முறைகளையோ பிரயோகிக்கும் மனப்பாங்கை ஒருபோதும் ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 387 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது -இரா.சம்பந்தன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்த தீர்மானம் தகுதி இழக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.யுத்தம் நடந்தபோது ஆட்சியிலிருந்தவர்கள், 2019இல் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பி இன்று தீர்மானத்தில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர். 2015ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்ற…
-
- 2 replies
- 418 views
-
-
இலங்கை அரசின் முடிவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார் ரவிநாத் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தின் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தலைவர் எலிசபெத் டிச்சி பிஸ்ல்பெர்கரை (Elisabeth Tichy-Fisslberger) சந்தித்த வெளியுறவு செயலாளர், இலங்கை அரசு எடுத்த முடிவு குறித்து தகவல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர…
-
- 0 replies
- 686 views
-
-
நான் துரோகி என்றால் த.தே.கூட்டமைப்பிலுள்ள அனைவரும் துரோகிகளே என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் அன்று மாவையைத் தவிர அனைவரையும் சுடச்சொல்லித்தான் கட்டளை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்போதாவது என்னைத்துரோகி என்று சொன்னாரா? யாராவது சொல்லட்டும். பகிரங்கமாக சவால் விடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் நேற்று -22- இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நான் அம்பாறைக்கு வந்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகுமாம். சரி …
-
- 0 replies
- 446 views
-
-
தற்போது செயலிழந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகவே காணப்படும் என மலேஷியா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு மலேஷிய சட்ட மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு பதிலளிக்கும் வகையில் மலேஷிய உள்துறை அமைச்சர் Muhyiddin Yassin இதனை தெரிவித்துள்ளார். இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலிலேயே உள்ளடக்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மலேஷிய ஆளும் பக்காத்தான் ஹரப்பன் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சி…
-
- 0 replies
- 335 views
-
-
கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை- மாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லையென அக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே பலரதும் கோரிக்கையாகவும் இருக்கின்றது. ஆகையினால் அதனைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலிறுத்தி மன்னாரில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் யாழில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது கட்சியைப் பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்ப…
-
- 1 reply
- 371 views
-
-
இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்களின் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன. பிரித்தானியா, சுவிஸ்,கனடா ஆகிய நாடுகளில் உள்ள சட்டவல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் முதற்கட்ட பொறிமுறைகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு உத்தியோக பூர்வமாக தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பினை நாளை ஆரம்பமாகும் 43ஆவது கூட்டத்தொடரில் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறவைக்கும் செயற்பாட்டினை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினுள் மட்டுப்படுத்தி வைப்பதானால் எவ்விதமான பயனும் பாதிக்கப்…
-
- 2 replies
- 532 views
-
-
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களிற்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததாலேயே, சவேந்திர சில்வா மீதான தடையை அமெரிக்கா விதித்தது. அமெரிக்காவை பின்பற்றி ஏனைய நாடுகளும் தடைகளை விதிக்குமென எதிர்பார்க்கிறோம். ஒருவருக்கல்ல, இன்னும் பலரிற்கு தடைகள் வரலாமென எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். யாழில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர் “ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை விலகுவதால் வலுவிழக்காது. இந்த தீர்மானங்கள் இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஏற்கனவே இலங்கை எதிர்ப்பு தெரிவித்தபோதும், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது! இலங்கை மீனவர்கள் 24 பேர் பங்களாதேஷ் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் தென்கிழக்கில் உள்ள துறைமுக நகரமான சிட்டகொங் கடற்பரப்பில் வைத்தே இந்த மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த மீனவர்கள் பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் பயணித்த 4 மீன்பிடி படகுகளையும் பங்களாதேஷ் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு, கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் 24 பேரும் நேற்றிரவு படேங்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுகள…
-
- 1 reply
- 517 views
-
-
சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்கின்றோம் – கூட்டமைப்பு! by : Jeyachandran Vithushan பெரும்பான்மை மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வையே தமிழர்கள் எதிர்பார்ப்பதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மெல்கம் ப்ரூஸுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீர்வுத்திட்டம் தொடர்பாக பெரும்பான்மை மக்கள் சரியான திசையில் வழிநடத்தப்பட வேண்டும் என இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவ…
-
- 22 replies
- 1.6k views
-
-
காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கங்களின் தலைவி கலாஞ்சனி, செயலாளர் லீலா, மற்றும் அனந்த நடராஜா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலநாயகி ஆகியோரும் ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளனர். அடுத்துவரும் நாட்களில் ஜெனீவா செல்லும் இவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஐ.நா அரங்கினுள் கருத்துக்களை முன்வைக்கவுள்ளன…
-
- 2 replies
- 400 views
-