ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளை…
-
- 1 reply
- 633 views
-
-
யாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது அ…
-
- 2 replies
- 975 views
-
-
வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் தில்லையடிரயில்வேகடவைக்கு அருகில் உள்ள சிறிய கட்டடமொன்றின் சுவரில் புத்தளம் தம்பபண்ணி வரலாற்றைக்குறிக்கும் ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது.புத்தளம்,தில்லையடிப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.புத்தளம்பிரதேசத்தில் தம்பபண்ணி எனும் இடத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாற்றை பிரதிபலிக்கின்ற வகையில் குறித்த படம் வரையப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு வரையப்பட்டகுறித்த ஓவியம் செவ்வாயக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.இதன்போது இவற்றை வரைந்த பெரும்பான்மை இன இளைஞர்கள் இதனை திறந்து வைத்த தினம் பாதைகளில் கவனிப…
-
- 1 reply
- 590 views
-
-
வவுனியா நகரசபை பூங்காவில் "வவுனியா கெத்து" tiktok நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நேற்று tiktok செயலி நண்பர்கள் ஒன்று கூடியிருந்தனர். இவ்வொன்றுகூடலை சிறகுகள் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் தமது விசேட டெங்கு ஒழிப்பு நாளாக மாற்றியுள்ளார்கள். வவுனியா நகர பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் டெங்கு அற்ற வவுனியவை உருவாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் அதன் முக்கியத்தவத்தையும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். இவ் நிகழ்வில் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல இளைஞர் ,யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70899
-
- 1 reply
- 423 views
-
-
பால் மாவின், விலையில் மாற்றம். இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் வகையில் பால்மாவுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலை 40 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த 24ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 50 ரூபாயினாலும் 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பால்மா…
-
- 4 replies
- 1.1k views
-
-
354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக மாற்றம்! நாட்டிலுள்ள 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் இந்த வேலைத்திட்டம் நேற்று (புதன்கிழமை) வட்டவல ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் சகல ரயில் நிலையங்களையும் தான் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ரயில் நிலையங்கள் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அபிவிருத்திச் செய்யப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். இதேபோன்ற ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்…
-
- 2 replies
- 486 views
-
-
(நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி சுட்டி அறிக்கையானது இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவ்வறிக்கையின் பிரதியை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரொபேட் ஜக்காம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோரிடமிருந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார். மனித அபிவிருத்தி சுட்டியில் கடந்த ஆண்டு 76 ஆவது இடத்திலிருந்த…
-
- 1 reply
- 620 views
-
-
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொருத்தமான நீர் நிலைகளில் இறால் வளர்ப்பு மற்றும் நண்டுப் பண்ணை போன்றவற்றுக்கான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான உத்தரவுகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, கடலரிப்பு, துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளை பயன்படுத்துவதில் நிலவி வருகின்ற நடைமுறை ரீதியான சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்களை இதன்போது மன்னார் மாவட்ட மீன…
-
- 1 reply
- 968 views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. -பிரசாந்தன் நவரத்தினம்.-
-
- 83 replies
- 9.6k views
- 1 follower
-
-
கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை-இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதும் அது மாறாத அரசியல் நிலைப்பாட்டுடன் நீடிக்க வேண்டும் என்பதே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்களிடையே ஒரு பொதுவான கருத்தாகும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும், கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமது வகிபாகம் மற்றும் முக்கியத்துவம் குறித்து ரெலோ மற்றும், புளொட் ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் …
-
- 4 replies
- 510 views
-
-
(நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாகக் கூறியிருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையின் 9 மாகாணங்களையும் ஒருங்கிணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18–80 வயது வரையான 1300 பிரஜைகளிடம் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால்…
-
- 6 replies
- 1.2k views
-
-
காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது என ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும், கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா இலங்கையிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். குறித்த அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் அவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக…
-
- 5 replies
- 1.3k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி போராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி பெயரளவில் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இதே 1948-ம் ஆண்டுதான் இலங்கையும் வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நாளே தமிழர்களுக்கான மனித உரிமை மீறலின் குறியீட்டு நாள். 21ம் நூற்றாண்டின் மிகமோசமான இனவழிப்பு நடந்தேறிய இலங்கைத் …
-
- 0 replies
- 334 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பூநகரி - வாடியடி சந்தைக்கான கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு, பதவி ஏற்ற நாளிலிருந்து, “சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டுமே, நான், இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டேன்” என்கிற மமதையில் கூறிக்கொண்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இதுவரை, வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரைக் கூட தெரிவுசெய்ய மனம் இல்லாதவர், தமிழர்களுக்க…
-
- 0 replies
- 470 views
-
-
கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன் கீழ் தமிழர்களை அச்சுறுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தா…
-
- 23 replies
- 2.3k views
-
-
காங்கேசன்துறையில் பொலிஸ் சிற்றுண்டிச்சாலை திறப்பு காங்கேசன்துறையில் பொலிஸ் சிற்றுண்டிச்சாலை ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டது. பொது மக்கள் மற்றும் பொலிஸாருக்கு குறைந்த விலையில் சிற்றுண்டிகளை வழங்குவதற்காக குறித்த சிற்றுண்டிச் சாலை திறக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. சேனாதிரா தெரிவித்தார். இந்தச் சிற்றுண்டிச்சாலை காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அண்மையாக உள்ள இடத்தில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேயவர்த்தன, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்னவும் இணைந்து சிற்றுண்டிச்சாலையைத் திறந்து வைத்தனர். குறித்த சிற்றுண்டிச் சாலை…
-
- 1 reply
- 645 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் லோகதயாளன் நியமிக்கப்படலாம் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைய மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்க கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதனால் யாழ். மாநகர மேயரின் பதவி காலியாகிவிடும். யாழ். மாநகர சபை பட்ஜெட் தோல்வியடைந்த நிலையில், அடுத்த வாசிப்புக்களிலும் தோல்வியடைந்தால் மேயராக ஆர்னோல்ட் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது. புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் ஆர்னோல்ட் மேயர் பதவியில் தொடர்வது என்பது சந்தேகம்தான். இதனால், அவரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கும் நோக்கில் அவரின் அரசியல் குரு சுமந்திரன் இந்த வேலைத் திட்டத்தை எடுத்த…
-
- 1 reply
- 711 views
-
-
இலங்கை சுகாதார துறையினருக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு! இலங்கை சுகாதார துறையினருக்கு உலக சுகாதார அமைப்பான WHO அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. WHO வின் தென்கிழக்காசியாவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் வைத்தியர் Poonam Khetrapal Singh இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோய்க்குக் காரணமான HIV வைரஸ் ஆனது, தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவது இலங்கையில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எயிட்ஸ் மட்டுமன்றி, பிறப்பிலிருந்து ஏற்படும் பால்வினை நோயான சிஃபிலிஸ் இற்கான வாய்ப்பும், இலங்கையில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, இலங்கையில், தாயிடமிருந்து குழந்தைக்கு HIV வைரஸ் பரவுவது குறித்த எந்தச் சம்பவமும் …
-
- 0 replies
- 265 views
-
-
சிறீலங்கா ரெலிகொம் | தலைவராக சமால் ராஜபக்சவின் புதல்வர்? தொடரும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி விஸ்தரிப்பு சிறீலங்கா ரெலிகொம் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி சிறீசேனாவின் தம்பி குமாரசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவரது இடத்தில் சமால் ராஜபக்சவின் புதல்வர் ஷமிந்திரா ராஜபக்சவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பதிலாக, குமாரசிங்க சிறீசேனவுக்கு மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பம்: றோஹித, நாமல், மஹிந்த, ஷிராந்தி, யோஷித குமாரசிங்க சிறீசேனவுக்கு மேலதிகக் கொடுப்பனவுகளுடன், மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபாய்கள் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததென்றும், புதிய ஜனாதிபதி அதை 2.5 லட்சத்துக்குக் கு…
-
- 0 replies
- 372 views
-
-
வடக்கிலுள்ள தமிழர்களின் மனங்களை நாம் வெல்ல வேண்டும் – றோஹித ராஜபக்ச டிசம்பர் 10, 2019 “வடக்கில் வாழும் பெரும்பான்மைத் தமிழர் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. அதற்கான முழுப்பொறுப்பும் எமது கட்சியயே சாரும்” என பிரதமர் ராஜபக்சவின் மகனான றோஹித ராஜபக்ச கூறியிருக்கிறார். வடக்கில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களது மனங்களை வெல்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தவறிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார். “வடக்கில் உள்ள ஒருவரும் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இது அவர்களது பிழையல்ல. எங்களுடைய தவறு. வடக்கிலுள்ள மக்களின் தேவைகளை அறிய எங்களால் முடியாமல் போய்விட்டது. அவர்களின் தேவைகளென்ன என்பதை நாம் முதலில் அ…
-
- 0 replies
- 198 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நால்வர், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். அரச பலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டைப்பறிச்சான் தெற்கு, இறால்குழி, மகிழ்ச்சேனை பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரி 56 ரக துப்பாக்கி, மகசின் 2, தோட்டாக்கள் 61, கைக்குண்டு 3, டெட்டனேட்டர் 3, 9 மி.மீ தோட்டாக்கள் 31 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான முன்னாள் ப…
-
- 0 replies
- 655 views
-
-
(ஆர்.யசி) ஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான "டி.டி.102 ஹருசாம் " மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டதுடன் கப்பலின் கட்டளை தளபதி ஓஹ்சிமா டேருஹிசா இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்புகளையும் முன்னெடுத்தார். இச் சந்திப்பின் போது இரு நாட்டு கடற்படை கூட்டு ரோந்து மற்றும் பயிற்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு வருகை தந்துள்ள "டி.டி.102 ஹருசாம் " போர்க்கப்பலானது 151 மீட்டர் நீளமும், 4550 தொன் நிறையும் கொண்டதாக உள்ளதுடன் இக்கப்பலில் …
-
- 1 reply
- 566 views
-
-
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான வலுவான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதை போன்று கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இலங்கை யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களை உயர் பதவிகளிற்கு நியமிப்பதன் மூலம் வேண்டுமென்றே தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஊக்குவிக்…
-
- 0 replies
- 333 views
-
-
(ஆர்.யசி) இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பான முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ அதிகாரிகளை சிறையில் அடைக்கப்பட்ட காரணிகள் கண்டிக்கத்தக்க காரணிகள் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினர். ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கடந்த 9 ஆம் திகதி உத்தியோக…
-
- 2 replies
- 799 views
-
-
மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கமும் இணைந்து 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினத்தினை ஹட்டனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். 10.12.2019 இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் சர்வதேச தேயிலை தினத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இந்த தேயிலை தினம் தேயிலை தொழிலாளர்களுடைய வாழ்க்கை வரல…
-
- 0 replies
- 275 views
-