ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
தர்மத்தைக் காப்பாற்ற யுகம் தோறும் நான் அவதாரம் எடுக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. ஆக, இங்கு தர்மம் என்பது மிகவும் முக்கியமானது. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் தர்மம் பின்பற்றப்பட வேண்டும். இல்லை யேல் அதுவே மிகப்பெரும் பாவமாகும். இதனாலேயே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிறார் இளங்கோ அடிகள். எனினும் அரசியல் பிழைத்ததை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் காண முடிந் தது. இதை நாம் கூறுவதற்காக தேர்தலில் அறம் பிழைத்ததாக யாரும் கருதிவிடக் கூடாது. மாறாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவை நம்பவைத்து தோற் கடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வஞ் சகத்தனத்தையுமே இங்கு நாம் குறிப்பிடுகின் றோம். ஆம்,…
-
- 1 reply
- 272 views
-
-
பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததும், பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படுமென, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ராஜகிரிய பிரதேசத்தில் இன்று (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரையாற்றிய தேரர், சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும், இந்த நாட்டுக்கு இப்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள …
-
- 4 replies
- 884 views
-
-
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் மேற்கண்டவ…
-
- 2 replies
- 780 views
-
-
(நா.தனுஜா) எமது தரப்பில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்வதற்காக செயற்பட்ட சிலரே, தற்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பைக் காப்பாற்றிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வதாக அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்ததும், சற்றும் தாமதிக்காமல் சூட்கேஸுடன் வெளியேறினார். அவ்வாறு செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது என்ன செய்கின்றார்? பிரதமர் என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான உரிமை அவருக்கில்லை. அரசியல் இராஜதந்திரம…
-
- 1 reply
- 437 views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பின்பற்றும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனாவின் கடற்கலங்கள் எதனையும் கோத்தபாய ராஜபக்ச தனது நாட்டிற்குள்அனுமதிக்கமாட்டார் என புதுடில்லி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாகயிருந்தவேளை மூத்த ராஜபக்ச சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தமை குறித்து இந்தியா கடும் சீற்றமடைந்தது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தொட…
-
- 11 replies
- 924 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் மினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.virakesa…
-
- 5 replies
- 926 views
-
-
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, கண்டி ஸ்ரீ தலதமாளிகைக்கு, நாளை (20) காலை விஜயம் செய்து, மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இதன்போது அவர், மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரரையும் கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கத் தேரரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து அவர், ராமக்ஞ நிக்காயவின் மஹாநாயக்க தேரரையும் கெட்டம்பே ராஜோபவனாராம விஹாரையின் விஹாராதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மலையகம்/ஜனதபத-கடட-தலதமளககக-நள-வஜயம/76-241217
-
- 0 replies
- 426 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இந் நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/69284
-
- 0 replies
- 661 views
-
-
முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் சற்று முன் தனது 88வது வயதில் காலமானார். இவர் உடல்நலக் குறைவுக் காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/69280
-
- 0 replies
- 476 views
-
-
சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே…
-
- 19 replies
- 1.6k views
-
-
தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும், தமிழர்களும் முஸ்லிம்களும், இந்நாட்டிலேயே வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கிப் பிடித்துக்கொண்டு, வெவ்வேறு நாட்டவர்களைப் போன்று பயணிக்க இந்நாட்டுக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் பயணிக்க முடியாதென்று சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கை எங்கள் தாய்நாடு. நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள், கல்விக் கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நாம் காட்ட வேண்டும். வழியைத் தேடவும் வேண்டும்” என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தனது பேஸ்புக்கில் கணக்க…
-
- 0 replies
- 895 views
-
-
அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவும் இராஜினாமா 12:06 am November 19, 2019 0 206 Views ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக ரணவக்க தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டது முதல் இடம்பெற்றுவரும் அமைச்சர்களின் இராஜினாமா தொடரிலேயே அமைச்சர் சம்பிக்கவும் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/192614/
-
- 1 reply
- 581 views
-
-
-க. அகரன் எதிர்வரும் காலங்களில் இளைஞர் - யுவதிகளை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்த ஈழவர் ஜனநாயக முண்ணனியின் தலைவர் க. துஷ்யந்தன், அவர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து, தமிழ் - சிங்கள மக்களிடையே சகோதர ஒற்றுமையை உருவாக்கி, தமக்கு இருக்கின்ற அடிப்படை, தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார். வவுனியாவில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது, விரிவாக பேசியிருந்ததாகவும் அதற்கு பசில் சாதகமான பதில்களை தமக்கு வழங்கியிருந்தா…
-
- 3 replies
- 559 views
-
-
ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். “தமிழ் அரசுக்கட்சியினர் இவ்வளவு தூரம் குத்திடியடிச்சும் 13 இலட்சம் வாக்குகளால் கோட்டாபய வெற்றி பெற்றுள்ளார். நீங்க…
-
- 5 replies
- 957 views
- 1 follower
-
-
இலங்கை நேரம் காலை 08:00 இன் போது: சஜித் பிரேமதாச 9,99,720 (48.69%) கோட்டாபய 9,12,534 (44.44%) அனுரகுமார 66,054 (3.22%) சிவாஜிலிங்கம் 8,566 (0.42%) ஏனையவை 66,467 (3.24%)
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம், 1000 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டோர் தங்களது வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியமை அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியது. இவ்விடயம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், “சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டிக்க வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தா…
-
- 10 replies
- 923 views
-
-
வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன் வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன் Published on 2019-11-19 15:26:50 கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்த நாட்டில் வடக்கு மற்று கிழக்குக்கும் தெற்கும் இடையில்இருக்கும் பாரிய இடைவெளியினை குறைப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன் என ஜனநாயக மக்கள்முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடும் போது.. தொலைத்த இடத்தில் தான் தேட வேண…
-
- 1 reply
- 347 views
-
-
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் நாளினை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது தேர்தல் பிரச்சார காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறி…
-
- 11 replies
- 1.6k views
-
-
பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஐதேக எதிர்ப்பு Nov 19, 2019 | 1:56by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ” நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு அளிக்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும், பொதுத் தேர்தலை பெப்ரவரி 15 அல்லது அதற்குப் பின்னர் நடத்துவதற்கு உடன்பட்டால், ஐதேக நாடாளுமன்றக் குழு அதுகுறித்து பரிசீலிக்கும். தேர்தலுக்கான நாள் குறித்து அடுத்த சில நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். …
-
- 0 replies
- 300 views
-
-
-செ.கீதாஞ்சன் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரைக்கேட்டாலே தாம் அச்சம் கொள்வதாகத் தெரிவித்த முல்லைதீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, அவரால் தரப்படும் காணாமல் ஆக்கப்படடவர்களுக்கான மரண அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் கூறினார். முல்லைத்தீவு மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கடந்த கால செயற்பாடுகளை எண்ணி தற்போது அச்சத்துடன் இருப்பதாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் குறித்து சர்வதேசம், புதிய ஜனாதிப…
-
- 0 replies
- 558 views
-
-
(எம்.மனோசித்ரா) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ளதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எனினும் பொதுத் தேர்தலுக்கு செல்வதாக இருந்தாலும் அதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பிலும் ஏனைய அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும். எனவே வியாழக்கிழமை மத்திய செயற்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் இதன்போது அது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டும் மத்திய குழு கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி…
-
- 1 reply
- 269 views
-
-
பேரம் பேசி உரிமை பெற ஒட்டகம் தான் முஸ்லீம்களின் தெரிவாக இருக்கும் : மகளிரணி தலைவி ஹஸ்மியா ! (அபு ஹின்சா ) 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவராக இருப்பவர் முன்னாள் ஆளுநர் எம்.எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் மட்டுமே. பாட்டு போட்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் இந்த சமூகத்துக்கு செய்த சேவைகளை விட ஆளுநராக இருந்த எமது முஸ்லிம் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் செய்த சேவைகள் அதிகம்.என பிரச்சார குழு மகளிரணி தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அக்கரைப்பற்றில் இன்று பகல் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய போது, …
-
- 9 replies
- 2.2k views
-
-
புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு ஆரம்பம்! புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. கடமைகளை பொறுப்பேற்கிறார் புதிய ஜனாதிபதி கோட்டாபய! இலங்கையின் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இதற்கமைய இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார். அத்தோடு ஜனாதிபதி செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாள…
-
- 1 reply
- 426 views
-
-
பூஜித், ஹேமசிறிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காதமை காரணமாக இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை அடுத்து கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இருவரும் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கடந்த…
-
- 0 replies
- 319 views
-
-
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போகும்: தயக்கம் காட்டும் உறுப்பினர்கள்! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஓய்வூதியம் இல்லாமல் போய்விடும் என்பதனால் பொதுத் தேர்தலுக்கு செல்ல ஆளும்தரப்பு தயக்கம் காட்டுகின்றனர். அவ்வாறு கலைக்கப்பட்டால் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என அறிய முடிகின்றது. இதேவேளை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திலிருந்து விலகுவதா அல்லது நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குத் செல்லலாமா என்பது குறித்த இறுதி முடிவு, அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னர் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி வட்டார தகவல்கள் த…
-
- 0 replies
- 319 views
-