ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கி மற்றும் துப்பாக்கி தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
இந்த நாடு இங்கு வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனங்களுக்கும் சொந்தமானது. இந்த அடிப்படையை மாற்றி, இந்நாட்டை சிங்கள பௌத்தருக்கு மாத்திரம் சொந்தமான நாடு என மாற்றி அமைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை, வெளியே இருந்து வந்தவர்கள் என்று கூறிவிட்டு, முழு நாட்டுக்கும் நீங்கள் ஏகபோக உரிமை கோருகின்றீர்கள். இது தவறானது. வௌ;வேறு காலகட்டங்களில், வௌ;வேறு பிரிவுகளாக வெளியிலிருந்து வந்த வரலாறு நம் எல்லோருக்கும் ஆங்காங்கே வரலாற்றில் இருக்கின்றது. ஆகவே வெளியேற வேண்டுமென்றால் நாம் எல்லோருமே வெளியேற வேண்டும். வேடர்களுக்கு நாட்டை கையளித்துவிட்டு நாம் எல்லோரும் வெளியேற வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் வெளியில் இருந்…
-
- 0 replies
- 529 views
-
-
ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர் என இராஜங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவ்வாறு செயற்படவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹிட்லர் இலங்கைக்கு நன்மை ப…
-
- 1 reply
- 726 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த கப்பம் கோரல் கொள்ளை கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்களிடமும் பொதுமக்களிடமும் இவர் தலைமையிலான ஈ.பி.டி.பியினர் கப்பம் பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக யாழ். வணிகர் கழகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாணைகளுக்கு உட்படுத்த…
-
- 6 replies
- 594 views
-
-
பிறவிக்குறைபாட்டினால் வருடாந்தம் 3000 குழந்தைகள் மரணம் குழந்தைப் பருவத்தில் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார கல்விப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்தார். இவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலகில் மனிதப்பிறவியே சிறந்த படைப்பு ஆனால் அங்கவீனம் ஒருவனுக்கு பிறக்கும் போதே தோன்றுமாயின் அது அவனது பெற்றோர் இழைக்கும் தவறாகும். இவர்கள் உண்ணும் முறையற்ற உணவும், குடிபானங்களும், அழகுசாதன பொருட்களும் இப்படியான மறைமுக தாக்கங்களை கர்ப்பத்திலே ஏற்ப…
-
- 0 replies
- 247 views
-
-
எவ்வாறு தமிழ் பயங்கரவாதிகள் 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்த நூற்றுக்கனக்கான அப்பாவிகளை கொன்றதை ஏற்க முடியாதோ அதே போன்ற ஈனத்தனமான செயலே இதுவாகும். ஆனாலும் காத்தான்குடி தொழுகையாளிகள் மீது நடந்த கொலைகளுக்காக முஸ்லிம் சமூகம் தமிழ் கிராமங்களை தாக்கி கொள்ளை, கொலைகளில் ஈடுபடாமல் பொறுமை காத்தது. ஈஸ்டர் தாக்குதலை சேர்ந்தோர் முஸ்லிம் சமூகத்தை சேந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் சமூகம் இன்று வரை பாரிய விலைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த இடத்தில் மல்கம் கார்தினலை பாராட்ட வேண்டும். அவர் இன்று வரை இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளோரை கண்டறியும்படி அரசை வல…
-
- 0 replies
- 243 views
-
-
கேப்பாப்புலவு " இது ஒரு இராணுவ பாசறை" கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். இந்த பாரதியின் வரிகள் தமது சொந்தநிலங்களை படையினரிடம் தொலைத்து கேப்பாப்புலவு மாதிரிக்கிராமம் என்னும் போர்வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்பது போன்ற உணர்வில் வாழும் கேப்பாப்புலவு மக்களுக்கு வெறும் வரிகளாக மட்டுமே இன்றும் இருக்கின்றது. தென்னைமரமும் பசும் சோலைகளும் பச்சைவயல்வெளியும…
-
- 0 replies
- 365 views
-
-
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் ஊடுருவல்? கடற்படையினர் கடும் பாதுகாப்பு இந்தியாவில் கொரோனாத் தொற்று மோசமடைந்திருப்பதால் அதற்கு அஞ்சி அங்கிருந்து பொதுமக்கள் இலங்கைக்குள் ஊடுருவலாம் எனக் கருதப்படுகிறது. அதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படையினர் தமது கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இலங்கைக் கடற்படையின் இந்தக் கெடுபிடிகளால் இலங்கை மீனவர்கள் – குறிப்பாக வடக்கு, கிழக்கு மீனவர்கள் – அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்திருக்கின்றது என விசனம் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பேசாலை மீனவர்கள் கடற்படையினரிடம் பதிவு செய்தே இனிக் கடலிற்குள் செல்ல முடியும் எனக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். இதற்கமைய பேசால…
-
- 0 replies
- 405 views
-
-
15மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். வட மாகாணம் உட்பட ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். யுத்தம் காரணமாக சேதமடைந்த வட வகுதிக்கான ரயில் பாதை புதிதாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சுமார் 23 வருடங்களுக…
-
- 0 replies
- 403 views
-
-
கேப்டன் அலி கப்பலுக்கு அனுமதி வழங்குகிறோம்: இந்தியாவுக்கு வந்த ராஜபக்சே சகோதரர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய தமிழர்கள் நிவாரண பொருட்களை கேப்டன் அலி என்ற கப்பலில் அனுப்பி வைத்தனர். ஆனால் அதனை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் நிவாரண பொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்ப இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடைய ராஜீவ்-ஜெவர்த்தனே ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ராஜபக்ஷே சகோதரர்கள் பசில் ராஜபக்ஷே மற்றும் கோத்தபயா ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளனர். அவர்கள் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசினர். அப்போது கப்பலை அனுமதிப்பத…
-
- 24 replies
- 2.5k views
-
-
நோர்வே வாழ் ஈழத்தமிழர்களுக்கான நாடுதழுவிய ஜனநாயக மக்கள் கட்டமைப்பு தமிழீழம் தொடர்பான நோர்வே வாழ் ஈழத்தமிழரின் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி நோர்வே வாழ் ஈழத்தமிழர் மக்களவைக்கான யாப்பை உருவாக்கும் பணியில் சமுகப்பிரதிநிதிகள் அடங்கிய உருவாக்கக்குழு ஒன்று முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது. 1) நோர்வேயில் வாழுகின்ற ஈழத்தமிழரின் நலன்களைப் பிரதிபலித்தல், 2) தாயகத்தில் அல்லலுறும் எமது உடன்பிறப்புக்களின் மனித உரிமைக்காய்க் குரல் கொடுத்தல், 3) ஈழத்தமிழரின் அரசியல் அவா தொடர்பான தெளிவான அடிப்படைகளில் வழுவாத நிலையில் நின்று செயற்படுதல். ஆகிய மூன்று முக்கிய குறிக்…
-
- 0 replies
- 832 views
-
-
77ஆவது அகவையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினமான இன்று (16), தனது 77 ஆவது அகவையில் காலடி எடுத்துவைத்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய காலப்பகுதியில், நாட்டில் இடம் பெற்ற போர் தொடர்பில், சர்வதேசத்தைத் திசை திருப்பச் செய்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைப் பறை சாற்றியவராவார். மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த போதும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகாகவும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணம் செய…
-
- 0 replies
- 303 views
-
-
தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர், கனகரட்ணம் ஆகியோர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் ஆகிய மூவரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை நீதிவான் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி கொழும்பில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பார்வையிடச் சென்றபோதே குறித்த மூவரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை நீதிவான் வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 684 views
-
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா கோஷங்கள் ஆலயமெங்கும் பரவ, ஆலய மணிகள் அனைத்தும் ஓங்கி ஒலிக்க, நாதஸ்வர தவில் கான மழை பொழிய கொடியேற்றப் பெருந்திருவிழா இடம்பெற்றது. இன்றைய கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமான மஹோற்சவத் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளன. http://goldtamil.com/?p=6348
-
- 0 replies
- 692 views
-
-
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் ரூபா நிதியுதவி (நா.தனுஜா) கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 200,000 யூரோ நிதியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இலங்கை ரூபாவில் சுமார் 48 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்த நிதியுதவியின் மூலம் கப்பல் தீப்பரவலால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை புத்தளம், மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1…
-
- 4 replies
- 442 views
-
-
கொல்லப்பட்ட தமது உறவினர்களுக்காக மேலும் இழப்பீட்டுத் தொகையை பட்டினிக்கு எதிரான நிறுவனத்திடம் இருந்து கோரப்போவதில்லை என்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் சுட்டுக்கொல்லப்பட்ட, பட்டினிக்கு நிறுவன பணியாளர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பட்டினிக்கு எதிரான நிறுவனத்திடம் இருந்து மேலும் இழப்பீடு கோருவதற்கான படிவங்கள் சிறிலங்கா அரசால் தமக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறான படிவங்கள் எவையும் வழங்கப்படவில்லை என்று அதிகாரிகள் மறுத்தாலும் அத்தகைய மூன்று கடிதங்களை பார்த்ததாக பிபிசி தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு மூதூரில் நடைபெற்ற மோதல்களின்போது, பட்டினிக்கு எதிரான நிறுவனத்தின் 17 பணியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்தக் கொலைகளுக்கு…
-
- 0 replies
- 371 views
-
-
இந்தியாவின் 67 வது சுதந்திர தினம் இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரவத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இந்தியாவின் யாழ்ப்பாண்திற்கான துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் இந்தியக் கொடியினை ஏற்றி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இத்துடன் இந்திய ஜனாதிபதியின் உரை துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வடமாகாணத்தில் புகையிரதப் பாதையினை அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரிகள், இந்திய வங்கியின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/32281/64//d,fullart.aspx
-
- 2 replies
- 605 views
-
-
இந்திய மீனவர்களை தடுக்க புதிய வேலைத்திட்டம் (புதுடில்லியிலிருந்து க.கமலநாதன்) இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தடுக்கும் நோக்குடன் மத்திய மற்றும் மாகாண அரசுகளினால் ஒன்றிணைந்தவேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியல் வைத்து அவரை சந்தித்த போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19485
-
- 0 replies
- 220 views
-
-
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று அயர்லாந்து வர்த்தக சங்கங்களின் மகா சபை வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெற்கில் மைத்துனர்கள் இருப்பதாக கூறினாலும் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமுமே உண்மையான மைத்துனர்கள் என ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. பொருட்களின் விலை அதிகரிப்பு, சம்பள பிரச்சினை, ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை, ஜனநாயக உரிமைகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வன்முறை,அடக்குமுறை மூலமே பதிலளித்து வருகிறது. இப்படியான பிரச்சினைகளை எம்மால் புறந்தள்ளிவிட முடியாது. அதிகாரத்தை தக்கவைப்…
-
- 2 replies
- 627 views
-
-
வீரகேசரி நாளேடு - யாழ்ப்பாணம் மாநகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முடியப்பு ரெமிடியஸ் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர் 4,223 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைத் தட்டிக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் போட்டியிட்ட துரைராஜா இளங்கோ (றீகன்) 3,387 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இதேவேளை தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி 424 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். இத்தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி 83 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தெரிவானோரது விபரம் வருமாறு: துரைராஜா இளங்கோ (றீ…
-
- 2 replies
- 909 views
-
-
மே-18 ஆம் திகதி முல்லைத்தீவு செல்லும் ஜனாதிபதி! [Saturday 2017-05-06 18:00] முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்டத்துக்கு செல்லவுள்ளார். வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கவே ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பி…
-
- 0 replies
- 495 views
-
-
ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!! ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. நாடு முழுமையாக திறக்கப்பட்டதும் ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, 18,200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டிற்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தது என அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதேவேளை சுற்றுலாத்…
-
- 89 replies
- 4.6k views
-
-
உலகளாவிய ரீதியில் தமிழர்களுக்காக குரல்கொடுப்பதாக உரிமை கோரும் திராவிட முன்னேற்றக்கழகம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக பங்களிப்பை வழங்குவதில் தோல்வி கண்டுவிட்டதாகவும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான தாயகத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான பாரிய சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சியின் இராஜ்ஜியசபா எம்.பி.யான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் முன்னணிப் பங்காளியாக திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்துவருகின்ற போதிலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்திருப்பது தொடர்பாக திராவிடக் கட்சியை நாச்சியப்பன் குற்றஞ்சாட்டியிருக்கிறார் என்று ஸ்ரேற்…
-
- 1 reply
- 1.2k views
-
-
போதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்: மனோ கவலை..! (நா.தனுஜா அண்மையில் இடம்பெற்ற ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணத்திற்குப் பின்னால் அரசாங்கம் ஒழிந்துகொள்ள முயற்சிக்கின்றது. ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. போதியளவு ஊதியமின்மையினால் மலையகத்தில் அதிகரித்துவரும் வறுமையின் காரணமாகவே அங்குள்ள பெண்களும் சிறுவர்களும் வீட்டுவேலைகளுக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அரசாங்கம் உடனடியாகத் தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன…
-
- 0 replies
- 262 views
-