Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு ஆளுநர் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி : May 21, 2019 இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு இன்று மாலை சென்ற வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இறுதிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்ளுடனான ஆநுளரின் சந்திப்பு ஒன்று இன்று முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இதன…

  2. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராட முஸ்லிம்களுக்கு உருத்திரகுமாரன் அழைப்பு! சிங்கள, பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்வருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின்போதே அவர் இந்த அழைப்பினை முன்வைத்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின்போது ஜிகாத் அல் அமஜத் ஊர்காவல் படை போன்றவற்றின் வகிபாகத்தையும் தென் தமிழீழத்தில் தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்ட வரலாற்றையும் தான் கவனத்திற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவிலு…

    • 1 reply
    • 588 views
  3. உள்நாட்டு பதவி நியமனங்களில் வெளிநாடுகள் தலையீடு – மகிந்த சிறிலங்காவில் சில முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அபேராமய விகாரையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்காவில் வெளிநாடுகளின் தலையீடுகள் கடுமையாக உள்ளது. சில நியமனங்களை செய்யும் போது வெளிநாட்டு தலையீடுகள் இருக்கிறது என்ற உண்மை எனக்குத் தெரியும். குறிப்பிட்ட சிலர் பதவிகளுக்குத் தகுதியானவர்கள் என்றும் ஏனையவர்களை நிராகரிக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சி…

    • 3 replies
    • 453 views
  4. இக்பால் அலி யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர். எந்த வேறுபாடுகளின்றி நாங்கள் எல்லோரும் மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி பள்ளேகல இராணுவ முகாம…

    • 6 replies
    • 1.3k views
  5. யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்கள் புறக்கணிப்பு நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சில பல்கலைக்கழகங்கள் இன்று (புதன்கிழமை) மீள திறக்கப்படவுள்ளன. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்தவகையில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகிய பாடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனை…

  6. விடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை – ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஒரு சில அரசியல்தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே நாட்டில் பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகளையே அல்லது அதன் தலைவர் பிரபாகரனையே குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு கொள்கையுடன் போராடினார்கள். அவரை நம்பி பல உறுப்பினர்கள் இருந்தார்கள். அவ்வாறான நில…

  7. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலை- ஞானசார தேரரைச் சிறையில் பார்வையிட்டார் மைத்திரி! ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென அழுத்தம்- ரணிலும் கேட்டுள்ளார் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலையடுத்து சிங்கள அரசியல் கட்சிகளிடையே பலத்த முரண்பாடுகள், மோதல்கள் அதிகரித்துள்ளன. கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது. அதேவேளை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு …

    • 0 replies
    • 412 views
  8. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …

    • 2 replies
    • 674 views
  9. (எம்.மனோசித்ரா) அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து மற்றும் பௌத்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டமைப்புடன் இணைந்து குழுவொன்றினை நியமித்து அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் மகாகந்தே சுதத்த தேரர் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு இன்று சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/5…

  10. May 20, 2019 யாழ் வடமராட்சி கிழக்கை சேர்ந்த, முன்னாள் போராளி ஒருவர் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் வலிப்பு ஏற்பட்டு, கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் அமைப்பில் இருந்த அம்பிக்கோ என்றழைக்கப்படும் கமலதாஸ் அமலதாஸ் (அப்பையா) என்ற 34 வயதான முன்னாள் போராளியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். போரில் கடுமையான காயங்களுக்கு உள்ளான இவரது உடலில் செல் துண்டுகள் காணப்படுவதாகவும…

    • 7 replies
    • 704 views
  11. May 21, 2019 அம்பாறை – கல்முனை பிரதேசத்தில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமின் பிரதான அமைப்பாளராகக் கருதப்படும் கல்முனை சியாம் உள்ளிட்ட ஐவரை, அரச புலனாய்வுப் பிரிவின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் சிலர், நேற்றைய தினம் (20.05.19) கைது செய்துள்ளனர். http://globaltamilnews.net/2019/122373/

  12. May 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.19) கொழும்பு – ஷங்கிரி-லா நட்சத்திர விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ஆகியோரின் உயிரியல் மாதிரிகளைக் கொண்டு, கடந்த சில தினங்களாகவே மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் போதே, இந்த விடயம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். …

  13. கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி இரத்து ( இரா­ஜ­துரை ஹஷான்) கிழக்கில் ஷரிஆ பல்­க­லைக்­க­ழகம் மற்றும் மத்­ரஸா பாட­சா­லைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் முன்­னெ­டுத்த முறை­யான கலந்­து­ரை­யா­டல்­களின் ஊடாக வழங்­கப்­பட்ட பரிந்­து­ரை­க­ளுக்கு அமைய ஷரியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்க முடி­யாது என முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் மத்­ரஷா பாட­சா­லை­களை கல்­வி­ய­மைச்சின் கீழ் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளதாக என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். கிழக்கு ஷரிஆ பல்­க­லைக்­க­ழகம் தொடர்ப…

  14. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டு வென்றால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். கோத்தாபய ஜனாதிபதித் தேர்தலில் வென்றால் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுத…

    • 11 replies
    • 1.8k views
  15. சிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை சிறிலங்காவில் தமது திட்டங்கள் மற்றும் நிலைகளுக்கான பாதுகாப்பை வழங்குமாறு சீன, இந்திய அரசாங்கங்கள், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய ஷங்ரி-லா விடுதி ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சீன அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோன்று சிறிலங்காவில் தாம் முன்னெடுக்கின்ற திட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு இந்திய அரசாங்கமும் சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் நிபுணத்…

  16. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களும், அதனைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அசா­தா­ரண சூழ்­நி­லையும் இந்த அர­சாங்­கத்தின் தோல்­வியைத் தெளி­வாக உணர்த்­து­கின்­றன. தாக்­கு­தல்­களால் உயி­ரி­ழப்­புக்கள், சொத்­துக்­க­ளுக்குச் சேதம் என்­பன ஏற்­பட்­ட­துடன், அதனைத் தொடர்ந்து நாட்டின் பொரு­ளா­தாரம் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டது. சிறு­வ­ணிக முயற்­சி­யா­ளர்கள் தமது வரு­மா­னத்த…

  17. குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) இலங்கையைத் தெரிவு செய்திருக்கவில்லை. மாறாக இலங்கையைச் சேர்ந்த குழுவொன்று தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்லாமிய அரசைத் தெரிவு செய்திருக்கின்றது எனத் தோன்றுவதாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனுக்காகப் பணியாற்றும் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் கூறியிருக்கின்றார். இணையத்தள செய்திப்பத்திரிகையான ஸ்ரீலங்கா கார்டியனின் ஆசிரியரான நிலாந்த இலங்கமுவவிற்கு நேர்காணலொன்றை வழங்கியிருக்கும் ஜோனா பிளான்க், இலங்கைத் தீவிரவாதிகள் குழு இஸ்லாமிய அரசு இயக்கத்தைத் தெரிவு செய்ததைப் போன்று உலகின் வேறெந்தப் பகுதிகளிலும் கூட நடந்திருக்க முடி…

  18. சஹ்ரானின் நெருங்கிய சகாவான பாராளுமன்ற ஊழியரிடம் பல கோணங்களில் விசாரணை ; தொழில் பெற்றுக்கொடுத்த முஸ்லிம் அமைச்சர் யார் ? (எம்.எப்.எம்.பஸீர்) குரு­ணாகல் - அல­கொ­ல­தெ­னிய பகு­தியில் தென்­னந்­தோப்பு ஒன்­றுக்குள் முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் ஆயுத பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தாரி சஹ்ரான் ஹாஷி­முடன் நெருங்­கிய தொடர்பை பேணி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில் கைதுசெய்­யப்­பட்­டுள்ள தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்­பி­ன­ரான பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்­பா­ளரை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசா­ரிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. L கண்டி - அல­வத்­து­கொட, மாவத்­து­…

  19. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – ஒருமாத நினைவு கூரல்… May 21, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்ற போது வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாந…

  20. சிறிலங்காவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு இல்லை – சீன தூதரக பேச்சாளர் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு உடன்பாடுகள், பாதுகாப்புக் கருவிகள் விநியோகம் மற்றும் இராணுவத்தினருக்கான பயிற்சிகள் போன்ற அடிப்படை காரணிகளை மாத்திரமே உள்ளடக்கியிருப்பதாக, சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்த போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடப்பட்டது. இந்த பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில், கொழும்பில் உள்ள சீன தூதரக பேச்சாளர், விளக்கமளித்துள்ளார். “சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, ந…

  21. திடீரென மினுவாங்கொடையில் இனப்பற்று எவ்வாறு உருவானது: மக்கள் விடுதலை முன்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் தாேழர் சுனில் ஹந்துன்னெத்தி கேள்வி

    • 0 replies
    • 239 views
  22. யுத்தத்தில் கொல்லப்பட்ட முப்படையினருக்கு, கிளிநொச்சி பள்ளியில் அஞ்சலி.. May 20, 2019 நேற்று ஞாயற்றுக் கிழமை மாலை ஏழுமணிளவில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இறுதி யுத்தத்தில் இறந்த முப்படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றது குறித்த பள்ளிவாசலின் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறந்த முப்படையினருக்கு மெழுகுவர்த்தி ஏந்திஅஞ்சலி செய்யப்பட்டதுடன் பிரார்த்தனையும் இடம்பெற்றது. http://globaltamilnews.net/2019/122281/

    • 3 replies
    • 901 views
  23. மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம் வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல் வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடு…

  24. ஜனாதிபதி தேர்தல் வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி – மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட விடயங்…

  25. தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுகள்… May 18, 2019 தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறப்புற உணர்வுபூர்வமாக இடம்பெற்றது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 அன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் அனுஷ்டித்து வருகின்றனர். அந்த வகையிலே யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற போதும் தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் நீதி கிடைக்கும் வரை தங்களுடைய உரிமைக்கான போராட்டங்கள் தொடரும் எனவும் அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக இந்த நினைவு நிகழ்வுகள் இடம்ப…

    • 8 replies
    • 891 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.