Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறால்கள் பிடிபடும் பருவகாலம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், கல்லடிப்பாலத்துக்கு அருகிலுள்ள வாவியினுள் மேடை அமைத்து, ஒளிரும் இலாம்புகளை தொங்கவிட்டு இறால்கள் பிடிக்கும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரகாலத்திலிருந்து இறால்கள் அதிகளவில் பிடிபடுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். சேம்பு இறால், மணல் இறால்கள் ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் வெள் இறால்கள் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும் மட்டு இறால்கள் ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும் வரையும், கால்கள் பருத்த கோம்பை இறால்கள் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் மீனவர்கள் கூறினர். - http://www.tamilmirror.lk/142112#sthash.bk3gaR26.dpuf

  2. 09 OCT, 2023 | 09:15 PM இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் எனும் இரு நாட்டுக் கொள்கையை இலங்கை எப்போதும் ஆதரித்து வருகிறது. அதற்கு நாம் நிச்சயம் ஆதரவு வழங்குவோம். சில சமயங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நாம் கண்டித்திருக்கிறோம். இருப்பினும், இவை அனைத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தாது. முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது’’. மோதல்கள் மற்றும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேலில் பல இலங்கையர்கள் பணிபுரிக…

  3. ஏ- 9 மூடப்பட்டிருப்பதால் 5 நோயாளர்கள் மரணம்; தரைவழிப்பாதை திறக்க 3 நாட்களுக்கு அனுமதி வன்னிக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டிருப்பதால், அவசர சிகிச்சைக்காக வெளியிடங்களுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில் வன்னியில் ஐந்து நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளிலிருந்து வவுனியா மருத்துவ மனைக்கு மேலதிக சிகிச்சைக்காக இவர்களைக் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்தான் இந்த ஐவரும் மரணமடைந்ததாக கிளிநொச்சி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் எஸ்.சதானந்தன் தெரிவித்தார். கடந்த ஒருவார காலமாக வன்னிக்கான அனைத்துத் தரைவழிப் பாதைகளும் மூடப்பட்டிருப்பதால் அவசர நோயாளர்களைக்கூட வன்னிக்குக் கொண்டுவர முடியாத நிலைம…

  4. வடபகுதி தமிழர்களுக்கு சொந்த காணி பகிர்ந்தளித்தமை தவறில்லை என தெரிவிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடக பேச்சாளரும் பேராசிரியருமான வசந்த பண்டார அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி விட்டு அவ்விடத்தினை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமக்கு உடன்பாடு இல்லையெனவும் தெரிவித்தார். கொழும்பு பொரளை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடபகுதி தமிழ் மக்களுக்கு காணி வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை நாம் ஒருபோதும் வெளியிடமாட்டோம். அந்த மக்களுக்கு காணி வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்ற கருத்திலும் நாம் உறுதியாகவுள்ளோம். ஆனால் அதற்காக வடக்கில் பல வி…

  5. வியாழக்கிழமை, ஆகஸ்ட் 11, 2011 போர் முடிந்தும் இருவருடங்களுக்கு மேல் ஆகியும் தமிழ் மக்கள் மிகவும் துன்பத்திலேயே வாழ்கின்றார்கள். மஹிந்த அரசாங்கம் வாக்குறுதி அளித்தது போல எதனையும் செய்யவில்லை. இவ்வாறு வாஷிங்ரன் போஸ்ட் கூறியுள்ளது. . மண்மூடைகள் சில அகற்றப்பட்டுள்லன. வீதி தடைகள் சில அகற்றப்பட்டுள்லன. ஆனால் தமிழ் மக்கள் நிலங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பீதியிலேயே வாழ்கின்றார்கள். அவர்கள் போர் வடுக்களில் இருந்து நீங்குவதற்கு அதிகரித்த இராணுவ பிரசன்னம் ஒரு தடையாக இருக்கின்றது. இதனால் அவர்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. . முருகண்டியில் ஆசீர்வாதம் சூசை நாதர் என்கின்ற பாடசாலை அதிபர் தனது வீட்டை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் அவர் தனது பாடசாலை மற்றும் இருப்பிட…

    • 0 replies
    • 976 views
  6. 29 OCT, 2023 | 10:11 AM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, கைதான இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். …

  7. மீண்டும் 1980 பாணியில் இந்தியா தமிழ்க்கட்சிகளை டில்லிக்கு அழைக்கின்றது. இது சிங்கள அரசாங்கத்தினை மிரடுவதற்காகவே என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார். எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்…

  8. (இரோஷா வேலு) பண்டிகை காலங்களில் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்ட போதிலும், கொழும்பு நகரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. இதன்மூலம் கொழும்பு நகரில் மாத்திரம் இன்று 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரையில் 2000க்கும் அதிகமான பொலிஸார் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் பொலிஸ் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய பகுதிகள் அனைத்தும் குறித்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதற்கும், கலகம் மற்று…

  9. ஓர் இனம் அழிவதை பாற்சோறு கொடுத்து கொண்டாடும் மனநிலையில் தமிழர்கள் இல்லை! ”காசா போலவே வடக்கும் கிழக்கும் சுடுகாடாக மாற பேரினவாதம் விரும்புகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பலஸ்தீனுக்கு ஆதவாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” காசா சுடுகாடாக மாறுகிறது! வடக்கையும் கிழக்கையும் சுடுகாடாக வைத்துக் கொள்ளவே பேரினவாதம் விரும்புகின்றது. சுடுகாடாக ஆக்கப்படும் நேரத்தில் மௌனம் காத்தவர்கள் பலர். எம்மால் தமிழராக மக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏன் எனில் அதன் …

    • 42 replies
    • 3.5k views
  10. மியான்மாரில் தோல்வி கண்ட அணுகுமுறையை இலங்கையில் கடைப்பிடிக்கும் இந்தியா [13 - June - 2007] ஷ்ரீலங்காவில் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்தது இந்திய அரச உளவு அமைப்பாகிய `றோ'தான். இன்றும் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் ராமன் ஷ்ரீலங்கா படையினருக்கு இந்தியா, ஆயுதங்கள் வழங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் பொருள், ஷ்ரீலங்காவில் தொடர்ந்தும் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கி அதன் பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவிப்பதேயாகும். அண்மையில் தமிழ்ச்செல்வன் பி.எஸ். 89 ரக நவீன தொழில்நுட்பம் கொண்ட ரொக்கட் லோஞ்சர் ஏவுகணையை தோளில் வைத்துக் கொண்டு அதன் செயற்பாட்டை பரிசீலிக்கும் முறையைக் காட்டும் புகைப்படம் புலிகளின் சர்வத…

  11. இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வுத் திட்டம்! தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளனர். [Monday, 2011-08-22 15:59:12] இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்தியதன் பின்னர் இந்த தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது தொடர்பான யோசனைத் திட்டமாக இந்த தீர்வுத் திட்ட பரிந்துரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறத…

    • 3 replies
    • 749 views
  12. கோத்தபாய வளர்த்த சுறாக்களுக்கு மனிதர்கள் இரையாக்கப்பட்டனரா? - விசாரணை தீவிரம் [Wednesday 2015-04-15 19:00] வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்டவர்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் சுறா மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் வசித்து வந்த வீட்டில் 40 அடி நீளம், 10 அடி ஆழமுடைய மீன்தொட்டிகளில் மனிதர்களை உண்ணும் சுறா மீன்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த சுறா மீன்களின் உணவிற்காக நாளொன்றிற்கு 50 கிலோ கிராம் இறைச்சி அவசியமாகியுள்ளதுடன், இலங்கை கடற்படையினரால் குறித்த மீன்தொட்டிகள்…

  13. 'ஜனாதிபதியை கொலைச் செய்யும் சூழ்ச்சியில் எனது பெயரில்லை' - சரத் பொன்சேகா Editorial / 2018 டிசெம்பர் 21 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:39 அழகன் கனகராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது என்றார். நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியை படுகொலைச் செ…

  14. தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார். ஊழல் மோசடி வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த உடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார் பசில் ராஜபக்சே. அவர் மீது ஏராளமான ஊழல் மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? ‘திவிநெகும' என்ற அரசு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பசிலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இரு…

    • 4 replies
    • 717 views
  15. மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ,இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலணியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதன் ஆவனங்களை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார். இதையடுத்து கையளிக்கப்பட்ட காணி ஆவனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹி…

  16. இந்திய போர்க் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்! சீன கப்பலை தேடி வந்ததா? Thursday, September 8, 2011, 14:35 இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் குதார்‘ கொழும்புத் துறைமுகத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை வரை இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிலேயே தரித்து நிற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை, இந்தியக் கடற்பட…

    • 5 replies
    • 1.1k views
  17. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன மன்னார் மனிதப் புதைகுழி தோண்டப்பட்டுக்கொண்டிருந்தாலும் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தோண்டப்படாது மூடி மறைக்கப்பட்டுவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இராஜதந்திரிகள் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாதத் தடைச்சட்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட…

  18. சென்னையிலிருந்து யாழுக்கு வந்த விமானம் தரையிறங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது! (புதியவன்) இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறக்க பல முறை சுற்ற செய்தும் மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் தற்போது சென்னை விமான நிலையத்தை நோக்கி செல்கிறது.(இந்த தகவலை யாழ்ப்பாண சர்வதேச விமானநிலைய தரப்புக்கள் உதயனுக்கு உறுதிப்படுத்தின) (ஐ) சென்னையிலிருந்து யாழுக்கு வந்த விமானம் தரையிறங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது! (newuthayan.com)

  19. முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப் போராட்டம் போல் எமது போராட்டங்கள் முடியவில்லை. இவ்வாறு தெற்காசிய வெளி விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் தூதுவரிடம் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் தூதுவர் குழு இணையங்களின் பிரதிநிதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் கோவில் வீதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்கள் . இச்சந்திப்பில் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எமது மண்ணில் இருந்தும் கூட எதுவும் செய்யமுடியாதுள்ளது. பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டுள்ளது. எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளுகின்ற கட்டமைப்பு, மொழியுரிமை…

  20. கனடியத் தமிழ் கொன்சவேட்டிவ் ஆதரவாளர்கள் கனடாவின் ஆளும் கட்சியான கொன்ச வேட்டிவ் கட்சியிடம் இலங்கை விவகாரம் தொடர்பான கனடாவின் தெளிவான கொள்கை மற்றும் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அநேகமாக கனடியப் பிரதமர் அலுவலகம் அல்லது வெளிவிவகார அமைச்சு இலங்கை விவகாரம் தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கனடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள இவ்வேளையில் அவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்பா…

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற 11ம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது 12ம் சுற்றுப் பேச்சுவார்த்தையை இன்றைய தினம் (03-10-11) நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்வரும் 8ம் திகதி 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவிருப்பதால் ஆளும் கட்சி முக்கியஸ்த்தர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் அரசாங்கம் மற்றும் கூட்டமைப்புக்கு இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை எதிர்வரும் 16ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. http://akkinikkunchu.com/new/

  22. மகிந்தவும் கோத்தாபயவுமே பிரகீத்தைக் கடத்தினர் என்பதை எந்த இடத்திலும் கூறுவேன்! February 2, 2019 சந்தியா எக்னெலிகொட.. பிரகீத்தைக் கடத்தியவர்கள் மகிந்தவும், கோத்தாபயவுமே என்பதை எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் நான் உறுதியாக கூறுவேன் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஞானசாரரின் விடுதலை குறித்து தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி சந்தியா நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்குக் கடிதமொன்றைக் கையளித்தார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு …

  23. வடக்கு நோக்கிய பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பில்லை - போரியல் ஆய்வாளர்கள் ஸ்ரீலங்கா இராணுவம் வடக்கு நோக்கிய பாரிய படை நடவடிக்கை ஒன்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என போரியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கை தக்கவைப்பதற்கு பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பாரிய படை நடவடிக்கை ஒன்றை வடக்கில் ஆரம்பிப்பதற்கான ஆளணி பற்றாக்குறை தோன்றியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பருவ மழை ஆரம்பித்துள்ளதால் படை நடவடிக்கைகக்கு ஏற்ற சூழ்நிலையும் ஸ்ரீலங்கா படைகளுக்கு கிடைக்காது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா படைகள் வடக்கில் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு பெருமளவான ய…

  24. இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. யுத்தம் வெற்றிக்கொள்ளப்பட்ட போதிலும் புலி ஆதரவு பிரச்சாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதகாக் குறிப்பிடப்படுகிறது. வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பாரியளவு பொருட் செலவில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், சில சர்வதேச நாடுகளின் அனுதாபத்தை திரட்டியுள்ளதாகவும…

    • 1 reply
    • 1.1k views
  25. அரசியல் அழுத்தத்தினால் தனது பாதுகாப்புச் செயலாளர் பதவியைத் துறந்தான் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் - லியாம் பொக்ஸ் சிங்களப் பயங்கரவாதிகளுடனான தனது நெருங்கிய உறவு, தனது நண்பனை தனது அரசியல் பயணங்களில் சேர்த்துக்கொண்டமை, சிங்களப் பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக தான் ஆரம்பித்த போலியான நிதிக்கட்டமைப்பு, ஒருபால் புணர்வு தொடர்பாக தனக்கெதிராக இங்கிலாந்து மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஊகங்கள் என்பவற்றின் அழுத்தம் காரணமாக இந்தச் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் நேற்று வெள்ளிகிழமை தனது பதவியைத் துறந்தான். தனது அரசியல் நடவடிக்கைகளில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அறிந்தே இடம் கொடுத்ததன் மூலம், தன்னைப்பற்றிய தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் வருவதற்கு தானே காரணாமைவிட்டதால் தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.