Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன் 29-08-2007 16:35 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் காவல்துறை பயிற்சி பெற்றதாகக்கூறி அரசு விசாரணை சிறீலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் 12 உறுப்பினர்கள் வட அயர்லாந்துக்குச் சென்று காவல்துறைப் பயிற்சி பெற்றிருப்பதாக, கொழும்பில் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும், நோர்வே அரசின் அனுசரணையும் இருந்ததாகவும் அரசாங்கத்தின் ஆங்கில ஊடகம் மேலும் குற்றம் சாட்டுகின்றது. திருகோணமலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட 29 அகவையுடைய காளிமுத்து வினோத்குமார் என்பவரும் வட அயர்லாந்தில் பயிற்சி பெற்ற 12 பேர…

    • 3 replies
    • 1.7k views
  2. முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வா பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன் நெருங்கிப் பழகி வந்தார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் ஓர் அரசியல்வாதியல்ல, நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் என குறிப்பிட்டுள்ளார். சில அரசியல்வாதிகள் பற்றி ஜனாதிபதிக்கே கூடுதலான அறிமுகம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாரேனும் விழாக்களுக்கு அழைத்தால் பாதுகாப்புச் செயலாளர் விழாக்களில் கலந்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். துமிந்தவிற்கு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிந்திருக்க வா…

    • 2 replies
    • 936 views
  3. புதிய கூட்டணிக்கு கைச்சாத்து ஆ.ரமேஸ். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலையங்கத்தில் (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற கைச்சாத்து நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ்…

    • 0 replies
    • 252 views
  4. வன்னியில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தி தாக்குதல் நடத்தியது. மேலும் வாசிக்க

  5. வெளிநாடு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 6 ஆவது சரத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக வெளிப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளுடன் சேர்ந்து நாட்டிற்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சர்வத…

    • 2 replies
    • 1.1k views
  6. வித்தியா படுகொலை சூத்திரதாரிகளை காப்பாற்ற திட்டமிட்ட சதி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜ.தே.கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் சட்டத்தரணி தவராசா ஆகியோர் இவ்விடயத்தினில் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். வித்தியா படுகொலை தொடர்பிலான சான்றாதரங்களை அழிப்பதற்கு சிரமதானமென்ற பேரினில் புங்குடுதீவினில் கனரக வாகனங்கள் மூலம் தடயங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.வித்தியாவினது உறவுகளது எதிர்ப்பினை தாண்டி அவ்வாறு தடயங்கள் அகற்றப்பட்டுள்ளன. வித்தியா படுகொலை வழக்கினை குழப்பியடிக்கவும் குற…

    • 0 replies
    • 1.3k views
  7. கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை March 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான 32 வயதான காந்தலிங்கம் பிறேமரமணன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் தங்கியிருக்கும் இடத்திலிருந்து புறப்படும்போதே உந்துருளியில் வந்த ஒருவர் சரமாறியாக வெட்டியுள்ளார். தலை, கை, …

  8. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்…

  9. தமிழ் தேசிய எதிர்ப்பாளர் DBS ஜெயராஜ் வீட்டில் சுமந்திரன் டாரா ! [ Monday, 07 November 2011, 01:20.53 PM. ] manathan.com அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடாவுக்கும் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்கள் கனடாவில் DBS ஜெயராஜ் வீட்டில் தங்கியுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.விடுதலைப் புலிகளை படு மோசமாக விமர்சித்து சிங்களவர்களுக்கு சிலிர்ப்பூட்டும் செய்திகளை எழுதிவரும் மிக மோசமான ஊடகவியலாளர் DBS ஜெயராஜ் என்பது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளைப் பற்றி அவர் மோசமாக விமர்சித்தாலும் பரவாயில்லை அது அவர் விருப்பு வெறுப்பு என்று கூறிவிடலாம். ஆனால் தமிழ் தேசியத்தையும், தனி நாட்டுக்கோரிக்கையையும் பிழை என வர்ணிக்கும் இவரது வீட…

  10. பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட இருப்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது

  11. புதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. புதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. இதனால் ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையில் உள்ளதைப்போன்று மாற்று வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்று அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இது குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா வந்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளான ரவிக்குமார் (பிரித்தானிய தமிழர் பேரவ…

  12. மகிந்தவின் பரப்புரைப் போர் 14இல் 11 ஜுலை 2015, சனி 9:20 மு.ப news ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முதலாவது பரப்புரை நடவடிக்கையை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளார். மகிந்தவின் விசுவாசிகளுள் ஒருவரான முன்னாள் அமைச்சரால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 13ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் மறுநாள் காலை மகிந்த ராஜபக்ச குருநாகலுக்குச் சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்ட பின்னர்,மக்களை சந்திப்பார் என அறிய முடிகின்றது. மேலும் குருநாகலில் தனக்கு விசுவாசமான உறுப்பினர்களின் மேடைகளிலும் மகிந்த ஏறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://onl…

  13. தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் …

  14. சிறிலங்காவுக்கான நோர்வேயின் புதிய தூதுவர் ரொறி ஹட்கீம் இன்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 882 views
  15. இங்கிலாந்தில் பல பகுதிகளில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை போல், இம்முறை தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள், வடமேற்கு லண்டன் பகுதியில் கார்த்திகை 27, காலை 10.30 மணிக்கு .. Copland Community School Cecil Avenue Wembley Middlesex HA9 7DU எனும் மண்டபத்தில் ஒழுங்கு செய்யபட்டிருக்கிறது. முன்னதாக நிகழ்வுகள் நடைபெற இருந்த மண்டபம் சில காரணங்களினால், இம்மண்டபத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  16. திரு.ந.வித்தியாதரன் அவர்கட்கு! பகலவன் திரு.ந.வித்தியாதரன் அவர்கட்கு! பகலவன் வீரகேசரி-உதயன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரங்களைப் பார்த்ததால் இக்கடிதத்தைத் தங்களுக்கு அனுப்புகிறேன். “என் எழுத்தாயுதம்” நூலில் வெளிவந்த படங்கள் யாரையும் இது தொடர்பாக சுதந்திரமாகக் கருத்துச் சொல்லவும், தம்மை அடையாளப்படுத்துவும் வழிவகுக்க மாட்டா வென்பதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதுக்குள் ஒப்புக் கொள்வீர்கள். எமது மக்களுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் எப்போதும் சரியாகத்தான் நடந்துள்ளார்கள். இந்தியர்களைப் போலவோ, சிங்களவர்களைப் போலவோ, ஏன் மலையக மக்களைப் போலவோ அன்றி வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள். அவர்கள் எப்போதுமே மேற்குறிப்பிட்டவர்கள் பாணியில் நடந்ததில்லை. இந்தியாவில் நேரு- இந்திரா…

  17. http://www.yarl.com/videoclips/view_video....7bd98fa830fa641

  18. போர்க்குற்றங்களுடன் சிங்கள அரசு நேரடி தொடர்பு - புதிய ஆதாரங்கள் !! The Sri Lankan army ordered extra-judicial killings and assassinations during the final days of the country’s civil war, according to allegations made by a former member of the army. The source made the statements in an affidavit, obtained by The International as a part of an investigative report on the civil war, published today. The allegations were also accompanied by statements made by a witness who claims that he saw a number of serious war crimes being committed against civilians. The assertions of the first source, who held a very senior position in the armed forces during the final period…

  19. உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பொன்சேகாவை நியமிக்குமாறு பரிந்துரை உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்படவுள்ளது. இந்த பரிந்துரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய தனிப்பட்ட பயணமாக ஜப்பானுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது. சரத் பொன்சேகா உள்ளிட்ட ஆறு புதிய அம…

  20. Published By: DIGITAL DESK 3 10 MAY, 2024 | 04:38 PM தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஒப்பீட்டளவில் வல்லவராக தன்னை நிரூபித்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக மாற்றும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளத…

  21. வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்கூறி சர்வதேச நாடுகளால் ஏட்டிக்கு பேட்டியாக கொடுக்கப்படும் நிதியுதவிகளில் 70 வீதமானவை கொழும்பையும் அதனையண்டிய நகரங்களையும் மேம்படுத்தவே பாவிக்கப்படுவதாக சிங்கள நடுநிலை ஊடகமொன்று தனது ஆசிரியர் பத்தியில் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ தேசிய கலையறங்கு இம்மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட உள்ளது. சீன அரசாங்த்தின் 300 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கலையரங்கம் திறந்து வைக்கப்படும் அன்றைய தினம் கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பொது நூலக வீதிக்கு நெலும் பொக்குன வீதி என பெயரிடப்படவும் உள்ளது. http://www.seithy.co...&lang…

  22. http://www.samakalam.com/அரசியல்/தமிழ்-மக்களுக்கு-ஏமாற்றம/

  23. இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு Getty Images கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு. இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல…

  24. நவநாசிச பாணியில் தமிழர் குடித்தொகையை மாற்ற முயற்சி! பேராசிரியர் பத்மநாதன் குற்றச்சாட்டு! (ஆதவன்) நவநாசிச பாணியில் பல அரசதுறைகள், பலம் பொருந்தியவர்கள் 'மற்றும் செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து தமிழர் குடித்தொகையை மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்று பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனம் ஆதிகால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ்த் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமாகக் காணப்படும் மொழிவழக்கும். இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது. இலங்கைத் தமிழ…

  25. புத்தாண்டில் தமிழீழப் பிரகடனமா? அதனைக் கொண்டாட உலகத் தமிழர் தயார் : நெடுமாறன் ஆக்கம்: கொழும்பு நிருபர் 29. அக்டோபர் 2007 18:33 புத்தாண்டில் விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யவிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சர் ஒருவரே அதனைக் கூறிவருகின்றார். அச்செய்தி உண்மையாயின் அதனைக் கொண்டாட உலகத் தமிழர்கள் காத்துக்கொண்'டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நெடுமாறன் வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: "2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க இருப்பதாக சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.