Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை adminNovember 6, 2024 ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். என்றும் அதன் ஊடாக தனது பெயருக்கும், தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம். ஏ சுமந்திரன…

  2. இலங்கையின் குற்றங்கள் குறித்த அமெரிக்க அறிக்கை அடுத்த வாரம் ; இறுதி மோதல் தொடர்பில் முக்கிய பல ஆவணங்களும் பகிரங்கமாகும் இலங்கையில் இறுதிநேர மோதலில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடு வதற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவகிறது. இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த அறிக்கை வெளிவரும். அறிக்கையைப் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படுமென அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார். இந்த அறிக்கை மார்ச் மாத முற்பகுதியில் வெளியிடப்படவிருந்தது. அதே காலத்தில் ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மான…

    • 5 replies
    • 1.8k views
  3. உலகில் இரசாயனக்கலப்புடனான விஷத்தன்மை கொண்ட உணவுவகைகளை உட்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்கள பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜனக லீன்தர தெரிவித்தார். மாத்தளையில் இடம் பெற்ற ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கான சேவைகாலப் பயிற்சி வகுப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவு உற்பத்தி செய்யும் நிலம் முதல் உணவுத் தட்டுவரையான சகல விடயங்களிலும் உணவுப் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியுள்ளது. உற்பத்தி மற்றும் எடுத்துச் செல்லல், களஞ்சியப்படுத்தல் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் உணவு பழுதடையாமல் இருக்க இராசாயனக் கலப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை உட்கொள்ளக் கூடாதவைகளாகும். நல்ல விவசாயப் பழக்க…

  4. மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ! By Shana on Friday, November 15, 2024 “ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://www.battinews.com/2024/11/blog-post_170.html

  5. ஐக்கியதேசியக் கட்சி வருகின்ற மேதினத்தை கூட்டமைப்பின் உதவியோடு யாழ்ப்பாணத்தில் நடாத்தமுடிவு செய்துள்ளது. இது தமிழ்த் தேசிய அரசியலை பௌத்த சிங்கள பேரினவாதத்தினுள் கரைக்கும் ஒரு சதி முயற்சி. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இன்று இலங்கைத் தேசியம் என எதுவுமில்லை. அதற்கான பன்மைத்துவ கட்டமைப்புக்கு சிங்கள தேசம் தயராக இல்லை. தென்னிலங்கையில் இரு பிரதான கட்சிகளிடமும் இருப்பது சிங்களத் தேசியம் தான். இது விடயத்தில் இரு பிரதான கட்சிகளிடத்தேயும் பெரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது. சிங்களத் தேசியம் சிங்கள பௌத்த பேரினவாதமாக எழுச்சியடைந்து பல்வேறு ஆக்கிரமிப்புகளின் மூலம் தமிழ் மக்களின் இருப்பைச் சிதைத்த போது தான் ஒரு தற்காப்பு முயற…

  6. எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம்: சிவாஜிலிங்கம் எத்தடைகள் வந்தாலும் மாவீரர் தினம் அனுஸ்டிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று தெரிவித்தார். யாழ். உதயன் இணையப்பிரிவு வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கக்கூடாதென, நல்லாட்சி அரசாங்கத்திலும்கூட அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது வேதனையளிப்பதாக உள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக போராடிய ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் கார்த்திகை வீரர் தினம் என எந்த தடையுமின்றி கொண்டாடி வருகின்றார்கள…

  7. இலங்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வந்த இவர்களை ஆஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைத்து அகதி அந்தஸ்த்து வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனாலும் சில மாதங்களின் பின்னர் ஆஸ்ரேலியவிற்க்கு வெளியே உள்ள நாவுரு தீவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். …

  8. 'இலங்கையில் தலையீடு" - மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள் என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார். 72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்;கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilnaatham.com/articles/2008/...avi20080309.htm

    • 0 replies
    • 1.3k views
  9. வடக்கு கிழக்கில் தமிழீழ விடுலைப் புலிகளின் ஆட்சி இல்லாமல் போனதைத் தொடர்ந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற சிறு குற்றச்செயல்கள் தொடர்பாக சிறிலங்காப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழில் பொலிஸ் பிரிவுகள் வரையறுக்கப்பட்டு பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதும் கிராமப்புறங்களில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களில் பொலிஸார் அக்கறை எடுப்பதில்லை. கிராமப்புறங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பொலிஸார் இருந்தும் இல்லாதது போலவே நாங்கள் உணர்கின்றோம் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். குடா…

    • 1 reply
    • 918 views
  10. 22 april 2012 அவுஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை Geelong தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு Tim Gordon அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை, அலுவலகக் கட்டிட உச்சியில் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய வெள்ளை இனமக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொடியேற்றுதலுக்கு முன்னதாக, தமிழீழத் தேசியக் கொடி உருவான வரலாற்றுப் பின்னணி குறித்தும், தேசியக் கொடி குறித்தும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு சபேசன் எடுத்துரைத்தார். நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்க…

  11. இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் : கொக்கரிக்கிறார் ஞானசார தேரர் வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின் நாடு. இந்த நாட்டில் வாழ்வதற்கு …

  12. நீராவியடி விவகாரம் – நீதிகோரி யாழில் பேரணி முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீராவிடியடி கோயிலில் இடம்பெற்ற அநீதி தொடர்பாக நீதிகோரி முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணி எந்தவித கட்சி அரசி…

    • 1 reply
    • 332 views
  13. 16 DEC, 2024 | 12:27 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் பொலிஸார் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காரைநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர், தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்…

  14. இந்தத் தீவில் காலாதி காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ 'வழங்க' வேண்டிய தேவையில்லை. சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களும் சிறிலங்காத் தீவின் குடிமக்கள். ஆகவே சிங்களவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பது போன்று சிறிலங்காத் தமிழ் மக்களும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு சட்டம் இடங்கொடுக்க வேண்டும். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதி புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அண்மையில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஸ் தலைமையில் 12 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சிறிலங்காவுக்கு வருகை தந்த…

  15. (நா.தனுஜா) ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இன்று காலை 8 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச, அங்கு இடம்பெற்ற பௌத்தமத அனுஷ்டானங்களில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாவிகாரைகளுக்குச் சென்று மல்வத்துபீட, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டார். அத்தோடு ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து சஜித் பிரேமதாச ஆசிபெற்றார். மேலும் மீரா…

    • 2 replies
    • 428 views
  16. மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையீடு செய்து வருவதாக தெரிவித்தார். பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் இது ஒரு நிகழ்ச்சி மற்றும் இரண்டு வார நடவடிக்கைகளால் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் படிப்படியாக இதில் தலையிட்டு வருகின்றனர். தொடர்ந்து நடவடிக்கைகளை எட…

  17. இலங்கைத் தமிழர்கள் தங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளையே கருதுகின்றார்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை. கடந்த வார இறுதியில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் 'இங்கையின் இனப்பிரச்சினை' எனும் தலைப்பிலானா அனைத்துலக மாநாட்டில் தென்னாபிரிக்கா சார்பில் படையாச்சி கலந்துகொண்டா போதே இக்கருத்தைத் தெரிவித்தார்; அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் இடம் பெற்று வரும் இனப்பிரச்சினைக்கு ஓர் இறுதித் தீர்வைக் காண்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தென்னாபிரிக்கா அரசு தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளது. இம்மாநாட்டில் நான் கண்ட உணர்வுகளையும் முடிவுகளையும் தென்னாபிரிக்கா அரசிற்குத் தெர…

    • 3 replies
    • 1.4k views
  18. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பு 19 டிசம்பர் 2015 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல பாராளுமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைக்கப்படும் என அந்நாட்டு பாராளுமன்றில் அறிவித்திருந்தார். எனினும், இந்த உத்தேச திட்டத்திற்கு இ…

  19. Published By: DIGITAL DESK 7 01 JAN, 2025 | 04:29 PM தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது “புதைபொருள் திணைக்களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே”, “தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு …

  20. யாழ்ப்பாண பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலையான யாழ்.பல்கலை கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைகூரல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது. மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூ…

    • 0 replies
    • 305 views
  21. வவுனியா பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  22. கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது - கம்மன்பில தெரிவிப்பு 20 Jan, 2025 | 11:14 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தாேல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். …

  23. ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 9. ஏப்ரல் 2008 22:18 வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் நாலாபுறமும் திறக்கப்பட்டுள்ள களமுனைகளில் கடந்த இருவாரங்களாக கொட்டும் மழையால் மோதல்களின் தீவிரம் குறைவடைந்திருந்த போதும் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை முதல் மழை ஓரளவுக்கு தணியத் தொடங்கியதும் மீண்டும் குண்டுச் சத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. மன்னாரில் 58 ஆவது டிவிசன் நிலைகொண்டுள்ள பகுதிகளிலேயே மோதல்கள் மீண்டும் தீவிரம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மன்னார் களமுனையில் இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சியை சுமார் ஒரு வருடகாலமாகப் புலிகள் முடக்கியுள்ளனர். இந்தக் களமுனையில் அவர்கள் வலிந்த தாக்குதல் எதனையும் மேற்கொள்ளாமல் தற்காப்பு தாக்குதல் நிலையிலேயே இன்னமும் உள்ளனர். …

    • 0 replies
    • 1.4k views
  24. இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை விவரங்களை ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் விபரித்தார். பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எம்மிடம் விபரித்தார். நாம் எமது நிலைப்பாட்டைத் தெளிவாக அவரிடம் விவரித்ததுடன் சிறீலங்கா ஜனாதிபதி கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்தும் ஐ.தே.கட்சியிடம் எடுத்துரைத்தோம் என இரா.சம்ப…

    • 1 reply
    • 526 views
  25. திரு.சுமந்திரனின் கருத்தும் திரு.பொன் பாலராஜனின் கருத்தும்

    • 0 replies
    • 962 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.