ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2024 | 03:00 PM இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதேவேளை, மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191090
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டள்ளது. மொஹமட் நஷீட்டின் ஆதரவாளகள் தலைநகர் மாலேயிலுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் தூரப்பிரதேசங்களிலுள்ள சில பொலிஸ் நிலையங்களையும் கைபற்றியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மொஹமட் நஷீட்டை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 தீவுகளை மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மொஹமட் நஷீட்டின் குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி நேற்று இலங்கைக்குக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்கத் தீர்மானம் - ஜெனிவாவில் இன்று முக்கிய கலந்துரையாடல்! [Monday 2015-09-21 07:00] ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணை தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் …
-
- 1 reply
- 748 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது [Wednesday December 26 2007 12:10:51 AM GMT] [யாழ் வாணன்] கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய மட்டக்கள ப்பு மாவட்டம் நேற்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்றும் நேற்று முன்தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த பிரதேசங்களிலும் மழை பெய்யாததினால் வெள்ள நீர் வடிந்து காணப்பட்டதுடன் வீதிகளின் போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியிருந்தது. மட்டக்களப்பு பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான போக்குவரத்து நேற்று வழமைபோன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டு அகதி முகாம்கள் மற்…
-
- 0 replies
- 802 views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக யுத்தத்தை காட்டி இந்த அரசாங்கம் மக்களை வசியப்படுத்தி வந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசப்பற்று என்ற பெயரில் மக்களிடையே குரோத உணர்வுகளை இந்த அரசாங்கம் தூண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தேசத்திற்கு மகுடம் என்ற கண்காட்சி ஜனாதிபதியின் நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் பாரியளவில் பணம் செலவழித்து கண்காட்ச…
-
- 3 replies
- 806 views
-
-
சமந்தா பவர் மற்றும்; சிசன் ஆகியோருடன் சுமந்திரன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐக்கியநாடுகளிற்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்காவின் பிரதி தூதுவர் சிசன் ஆகியோரை கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.சர்வதேசசமூகத்தின் பங்களிப்புடனான செயற்பாடுகளால் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு நீதி கிட்டும் என சுமந்திரன் இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றபடி தீர்மானத்தின் இறுதிவடிவில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 7 04 SEP, 2024 | 05:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். விசா விநியோகம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவை மீறி செயற்படுவதே இதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்கு வரிசையில் மக்கள் இருக்கும்…
-
- 1 reply
- 435 views
- 1 follower
-
-
மார்கழிக்குள் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு முயற்சிப்பேன் : வளலாய் மக்களுக்கு உறுதியளித்தார் எதிர்க்கட்சித் தலைவர் இந்த வருடம் மார்கழி மாதத்திற்குள் வளலாய் பகுதி மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முயற்சிகள் எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உறுதியளித்தார். http://onlineuthayan.com/news/794
-
- 0 replies
- 196 views
-
-
அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு யோ.சே.யோகி இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்…
-
- 3 replies
- 2.5k views
-
-
வடக்குக்கு இனிமேல் வரவே கூடாது சந்திரிக்கா தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவராகப் பதவிவகிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும், அவர் இனிமேல் வடபகுதிக்கு இந்த அமைப்பின் தலைவியாக வருகைதரக் கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், எதிர்கட்சித் தலைவர் தவராசாவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் இருக்கின்றார். ஜெயசிக்குறு என்று சொல்லி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எல்லா…
-
- 2 replies
- 831 views
-
-
வவுனியாவிலிருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்தில் சாவகச்சேரி பொலிசார் கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த பொலிசார் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து நேற்று வாகனம் ஒன்றில் சிலர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளனர். சாவகச்சேரிப்பகுதியில் வைத்து பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருளினை அவதானித்தபோது அதனுள் 4கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன்போது வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்து விசாரணகைளை மேற்கொண்ட பொலிசார் குறித்த நபர் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வன்னிந…
-
- 2 replies
- 657 views
-
-
தென்னிலங்கை மக்கள் தமது தேசத்தின் தலைவனாக தற்பொழுது தேர்ந்தெடுத்துள்ள அணுரகுமாரவுக்கு வயது 55. அனுரவுக்கு அடுத்த நிலையில் அதிக வாக்குப்பெற்ற சஜித் பிரேமதாசவுக்கு வயது 57. அரசியல் களத்தைப் பொறுத்தவரையில் இவர்கள் இருவருமே இளைஞர்கள்தான். ஒப்பீட்டளவில் தென்னிலங்கை மக்கள் தங்களைத் தலைமைதாங்கும் பொறுப்புக்களை இளைஞர்களிடம் ஒப்படைக்க முன்வந்திருப்பது அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய மாற்றத்தின் அடையாளமாக நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது. இலங்கையில் பொருளாதார சீரழிவுகள், ஊழல்கள் போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டபோது, தென்னிலங்கை இளைஞர்களே முன்வந்து அதற்கான தீர்வை நோக்கி நாட்டை இட்டுச்சென்றிருந்தார்கள். இன்றைக்கு நாட்டையும், நாட்டின் எதிர்காலத்தையும் இ…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் அதன் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தையொன்று இன்னும் ஒரு சில தினங்களில் இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தியத்தலாவ பாதுகாப்பு கல்லூரியில் இடம்பெற்ற அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்தே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் பேச்சு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்…
-
- 2 replies
- 780 views
-
-
நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய குடும்ப பெண் கடத்தல் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டு திரும்பிய குடும்ப பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல், நேற்று புதன்கிழமை (14) மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இராசலிங்கம் ஜனாகி (வயது 32) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு முடிவடைந்து தனியார் பேருந்தில் கம்பர்மலையில் உள்ள வீட்டுக்;கு வந்திறங்கிய போது, எதிரே வந்த வெள்ளை வான் இருந்தவர்கள் இவரது வாயினை பொத்தி வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத…
-
- 3 replies
- 751 views
-
-
தமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ! நாடு முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதே தனது நோக்கமென்றும் அதைவிடுத்து அனைத்து தலைவர்களுக்கும் பெருந்தலைவனாவது தனது நோக்கமல்லவென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால்தான் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியும். சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்தால்தான் ஏனைய முஸ்லிம் மக்களுடனும் ஒன்றுசேர முடியும். அப்போதுதான் இலங்கை நாட்டை ஐக்கியத்துடன் கட்டியெழுப்ப முடியும். நான் நாடு முழுவதும் உள்ள தமிழ் மக்களை ஒன்று சேர்க…
-
- 1 reply
- 544 views
-
-
சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ, இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
-
-
- 3 replies
- 342 views
- 1 follower
-
-
ஜே.வி.பியின் ஒரே வழி....... -வேலவன்- மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தினால் தான் தேசப்பற்றாளர்களைப் போருக்கு ஆதரவாக அணிதிரட்ட முடியும் என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியிருக்கின்றார். முழு அளவிலான யுத்தம் ஒன்று மகிந்த ராஜபக்ச அரசாங் கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு விட்ட நிலையில் அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து இண்டு வார காலக்கெடுவும் முடிந்துவிட்ட நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார். மகிந்த ராஜபக்ச சனாதிபதியாகப் பதவியேற்றது முதல் அதனை இவ்வாறான ஒரு நிலைக்கு விரைந்து தள்ளுவதில் ஜே.வி.பி ஒரு பாரிய பங்கை வகித்திருக்கின்றது. முதலில் சிங்களப் படைகளி…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவும் அந்த ஆண்டவனும் பார்த்துக் கொள்ளட்டும் எங்களால் எதுவும் முடியாது. எல்லாவற்றையும் இழந்து உறவுகளைப்பறி கொடுத்து நடமாடும் மனித உடலங்களாக மட்டுமே நாங்கள். இதுதான் எங்கள் ஈழத்தமிழர்களின் சமகால நிலைமை. தேவையாயின் தேர்தல் காலத்தில் எங்களை நாங்களே உசுப்பேத்தி வாக்களிப்பு நிலையம் சென்று ஒரு புள்ளடியை போட்டுவிட்டு வருவோம். எங்கள் புள்ளடியில் வென்றவர்களுக்கு பெர்மிட் கார் கிடைக்கும். கனத்த சம்பளம் கிடைக்கும். நாலாண்டுகளை தாக்காட்டிவிட்டால், பென்சனுக்கும் பஞ்சமில்லை. அதனால் ஜெனிவா போனால் பதவி போகும் என்ற பயம். பதவியை தந்தவர்களுக்காகப் பதவி போனாலும் பரவாயில்லை என்று நினைப்பதற்கு யாரும் இலர். நிலைமை இப்படியிருக்கையில், உங்களுக்கு என்ன குறையென்று கேட்பவர்களும் இருக்கிறா…
-
- 5 replies
- 1.2k views
-
-
7 இந்திய மீனவர்கள் கைது (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மீன்பிடிப்படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்…
-
- 0 replies
- 290 views
-
-
Published By: VISHNU 07 OCT, 2024 | 10:46 PM (எம்.ஆர்.எம்.வசீம்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறதை ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
ஆதாரம்: நேத்திரா தொலைக்காட்சியில் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் பேட்டி
-
- 13 replies
- 3k views
-
-
சிறீலங்கா விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையை முன்னிறுத்தி சூடு பிடித்துள்ள இன்றைய நிலையில் மனித உரிமைகள் சபையில் தற்போது வாக்குரிமை இல்லாவிட்டாலும் பல நாடுகள் பின்புலத்தில் தீவிரமாக இயங்கி வருவதாகவே ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அதிகம் வதியும் கனடாவும் வாக்குரிமை இல்லாவிட்டாலும் திரைமறைவில் பல செயற்பாடுகளை முனைப்புடன் செய்து வருவதாக கனடிய அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ராஐதந்திரிகள் சந்திப்புக்களை கனடா செய்து வருவதாகவும்�� பிரேரணைக்கு ஆதரவான நாடுகளின் சேர்ப்பில் காத்திரமான கனடாவின் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்கு குறிப்பாகவும் தமிழர்களுக்கு பொதுவாகவும் கனடிய மிசுசாகா ஸ்ரீட்வி…
-
- 0 replies
- 524 views
-
-
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, தனது கடல் எல்லைக்குள் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கடலோரக் காவல் படையின் மண்டபம் மைய அதிகாரி கே.ஜனார்த்தனன் கூறியுள்ளார். கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை என்று இலங்கை கூறியுள்ளபோதிலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உலவுவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த பயங்கர செயலை செய்துள்ளது இலங்கை அரசு. இந்த நிலையில், இன்று மண்டபம் கடலோரக் காவல் படை மையத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்கள், ஹோவர்கிராப்ட் படகு மூலம், சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்தாம் தீவுத் திட்டுக்கு …
-
- 7 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதியின் உத்தரவில் 50 படகுகளும் ஆளணியும் இறக்குமதி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முல்லைத்தீவு செம்மலை கிழக்கு கரையோரப்பகுதி மீன்பிடிக்கென 50 மீன்பிடிப் படகுகள் மற்றும் கரைவலைக்கான ஆளணிகள் தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மீனவ மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு சற்று முன்னர் தெரிவித்துள்ளனர். இப்பிரதேச தமிழ் மக்களின் ஜீவாதார தொழிலை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அடாவடித் தனம் குறித்து தாம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டும் அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கணக்கெடுக்கவில்லை எனவும் இறக்குமதி செய்யப்பட்ட மக்களுக்கான வாடிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலமைகள் …
-
- 0 replies
- 587 views
-
-
வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்புகள் வேண்டும்: சம்பந்தன் வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். - See more at: http://www.tamilmirror.lk/158215/வடக-க-க-ழக-க-ல-வ-ல-வ-ய-ப-ப-கள-வ-ண-ட-ம-சம-பந-தன-#sthash.TfZ0Mow7.dpuf
-
- 0 replies
- 342 views
-