Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மருத்துவ சான்றிதழ் யாழில் இலகுவான முறைமையில் – அங்கஜன் எம்பி நடவடிக்கை யாழ் மாவட்ட மக்கள் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை இலகுவான முறையில் பெற்று கொள்வதற்காக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுத்திருந்த கோரிக்கைகளுக்கு அமைய இன்று காலை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் யாழ் மாவட்ட நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயத்தின் மூலம் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மக்கள் சாரதி அனுமதிபத்திரங்களை பெற்று கொள்வதற்கு ஒரு இடம் மட்டுமே காணப்படுகின்றமையினால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.…

  2. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஒற்றையாட்சிக்குள் தீர்வு சாத்தியமில்லையென்றும் சமஸ்டித்தீர்வு வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடியிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய இலங்கைக்கு…

  3. கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக, விரயமாகும் சுமார் 40 பில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் கடுபெத்த, பேலியகொட, நுகேகொட ஆகிய இடங்களில் 3 வாகனத் தரிப்பிடங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் தினசரி சுமார் 175,000 மோட்டார் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் நுழைவதை குறைக்கமுடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, முதலாவது வாகனத் தரிப்பிடம் இரத்மலானை கடுபெத்தவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசரியர் அமால் குமாரகே தலைமையில், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய மதிப்பீட்டையடுத்தே இந்தத்…

    • 0 replies
    • 927 views
  4. இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும் மக்கள் உரிமை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். சிதம்பரம் கீழவீதி சரவணா திருமண மண்டபத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் “தமிழர் எழுச்சி வடிவம்” என்ற நூலின் அறிமுக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீரம் செழிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம் நூல் எழுதப்பட்டது. உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டு…

  5. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடுவேன்! வடக்கின் புதிய ஆளுநர் தெரிவிப்பு! போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று வடமாகாணத்துக்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் தமிழ்க் கட்சிகளுடனும் இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவதே தனது இலக்காகும் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அதன்பின்னர், தான் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்தும், தனது வேலைத்திட்டங்கள் பற…

  6. (இராஜதுரை ஹஷான்) இந்நியாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தினால் அங்கு வாழும் இலங்கை அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புல்ல நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் ஒருங்கினைப்பை ஏற்படுத்தி தீர்வினை எட்டுவதற்காக பிரதிநிதி ஒருவரின் பெயரை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், இந்தியவாழ் இலங்கை அகதிகளை நாட்டிற்குள் மீளவரவழைத்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும் என்று நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்நிய பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டத்தில் அங்கு வாழும் இலங்கை அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் இடம் பெற்ற …

    • 1 reply
    • 459 views
  7. Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 04:49 PM ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல்லன்சேன பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் ப…

  8. தெஹிவலையில் குண்டு வெப்பு சற்று முன் தெஹிவலையில் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். வெள்ளவத்தை- தெஹிவலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலே இவ் வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுபோவிலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஜானா

  9. [size=5]நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்க : இந்தியத் தூதுவர்[/size] [size=4]இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்தை நம்பியிருக்காமல் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வைக் காணவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணத்திலுள்ள டெல்கோ ஹோட்டலில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜால சுர…

  10. காணி அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதில் சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.கவிற்கும் இடையில் மோதல் [ ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2016, 03:05.10 AM GMT ] காணி அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் மறைவினால் காணி அமைச்சு பதவி வெற்றிடமாகியுள்ளது. குணவர்தன வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சுப் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது காணி ராஜாங்க அமைச்ச…

  11. கனகராசா சரவணன் தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன், ஜே.வி.பி தமிழ் எம்.பி.க்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது. மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்தார். மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் களுவன்கேணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை …

  12. அமெரிக்க உதவித் தூதுவர் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம்! இலங்கைக்கான அமெரிக்க உதவி தூதுவர் அன்ரூவ் சிமன் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் அமெரிக்க ஆசிய பசுபிக் பிராந்திய கட்டளை பணியகத்தினால் 52 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் மற்றும் புனரமைக்கப்பட்ட விவசாய,விஞ்ஞான கூடங்கள் ஆகியவற்றை திறந்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார். நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல், கரைச்சி கோட்டக்கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் பாடசாலையின் …

  13. பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலவின் மகன் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் என்பவை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளார். எனினும் இந்தக் குற்றத்தை கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பாடசாலை அதிபரை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டைக் கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைவிரல் அடையாளங்களின் அடிப்படையில் இந்தக் குற்றங்களுக்காக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித்திற்கும் ஏனைய நான்கு மாணவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்…

    • 4 replies
    • 2k views
  14. சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் – சம்பந்தன்! சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந் நந்நாளில் பிரார்த்திக்கிறேன். இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளு…

  15. விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எ…

    • 12 replies
    • 1.8k views
  16. 27 MAY, 2025 | 03:10 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது. இதன் இறுதி அங்கமாக துறை சார்ந்து காணப்படும் அபிவ…

  17. கலைஞர் கருணாநிதியும் இலங்கைத் தமிழ் அகதிகளும் [29 - June - 2008] தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் எந்தவொரு சொத்துக்களையும் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக மூண்டிருக்கும் யுத்தத்தால் வட, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளதுடன் தற்போதும் அவர்களின் படகுப் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு வட, கிழக்குத் தாயகத்திலிருந்து மட்டுமல்லாமல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் மலையகம் மற்றும் கொழும்பிலிருந்தும் கூட தமிழ் மக்கள் அகதிகளாக சென்று…

  18. [size=4](சி.குருநாதன்)[/size] [size=4]ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்படும் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்கு தேவையில்லை. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய முதலமைச்சரே கிழக்கு மாகாண சபைக்கு தேவையாகும். அதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை பிரதேசத்தில் உள்ள பொதுநல மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார். திருமலை நியூ சில்வர் ஸ்டார் ஹோட்டலில் கிழக்கு மாகாண சபைத் தேர…

  19. கம்பளம் விரித்தது போன்ற நகர்வுத் தந்திரத்துடன்- பெரும் நம்பிக்கையுடன்- தொடங்கப்பட்ட படை நடவடிக்கை படையினருக்கு பாரிய இராணுவ நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதலை காட்டமாக நடத்துவதற்கான தெரிவுக்கு, சிங்களப் படையின் விரிந்த நகர்வு இடம் கொடுத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரவழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 840 views
  20. [size=2][/size] தமிழ்க் கடவுள் நல்லூர்க் கந்தனுக்கு இன்று தீர்த்தத் திருவிழா.தன்னை வழிபட்டோருக்கு அருளை வாரி வழங்கும் பெருநாள். இந்நாளில் நமக்கு அவன் தரவேண்டியது எது என்று சிந்திப்பது அவசியம். உலகெல்லாம் வாழும் இனங்களின் தலை மைகள் மனிதர்களிடம் இருந்தபோது, தமிழ் இனம் மட்டும் தமிழ்த் தலைவனாக- தமிழ்க் கடவுளாக முருகனைக் கண்டனர். முருகனும் தமிழ் மீது கொண்ட காதலால் நாவற் கனியினூடு ஔவையோடு தர்க்கம் புரிந் ததும் அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு சந்தத் துடன் திருப்புகழ் பாட அடியயடுத்துக் கொடுத்த தும் நடந்தேறியது. இஃது வேறு எந்தமொழி யிலும் இனத்திலும் இல்லாச் சிறப்புமாகும். இவ்வண்ணம் தமிழ்க் கடவுளாக இருக்கும் கந்தப் பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் உண்டு. முருகன் சூரனை சங்காரம் செய்த வீர…

  21. விடுதலை வீரர்களின் சமாதியில் சிங்கள குடியேற்றம்! மட்­டக்­க­ளப்பு தர­வையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழி­னத்தின் விடு­த­லைக்­காக போரா­டிய எமது உற­வு­களின் சமா­திகள் அழிக்­கப்­பட்டு அந்த பகு­தி­களில் பெரும்­பான்மை இனத்­தவர் குடி­யேற்­றப்­ப­டு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடாளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்தார். வாகரை, இறா­லோடை வள்­ளுவர் வித்­தி­யா­லய வரு­டாந்த இல்ல விளை­யாட்டுப் போட்­டியில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்த பிர­தே­ச மக்­களைப் பொறுத்­த­வ…

  22. 19 JUN, 2025 | 04:01 PM பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கினார். இதன்போது ஜனாதிபதி தெரிவிக்கையில், என்னால் இந்த கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளாவன : கிழக்…

  23. [size=4]எதிர்வரும் Sept 15 ஆம் திகதி சனிக்கிழமை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் "இளந்தளிர் 2012" எனும் கலை நிகழ்ச்சி மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் Oakington Manor School, Wembley, HA9 6NF இல் நடைபெறவுள்ளது.[/size] [size=4]இளந்தளிர் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக ஏதும் செய்வது வழக்கம் அதனை முன்னிட்டு இம்முறை இவ் நிகழ்சிக்காகவும் தமிழுக்காகவும் "எம்முயிர் தமிழே" என்ற இசைத்தட்டு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.[/size] [size=4]தொடர்ந்து இடம்பெறும் தமிழ் இனப்படுகொலை காரணமாக எங்கள் தேசிய அடையாளங்கள் அழிந்து போகாமல் காப்பாற்றும் விதமாக இந்த வருட இளந்தளரின் கரு "ஈழத் தமிழ் அடையாளம்" ஆக அமைகின்றது.[/size] [si…

  24. நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரிப்பு – சுற்றுலாப்பயணிகளுக்கும் தடை! நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜானக ஹந்துன் பத்திராஜ இதனைத் தெரிவித்துள்ளார். பதுளை, மொனராகலை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு எவரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். …

  25. உலக வல்லரசு நாடுகளின் சில புலனாய்வு சேவையினர் இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை அறியும் நோக்கில் மறைமுகமாக செய்மதி படங்களை எடுத்து வருவதாக இலங்கை பாதுகாப்பு துறையின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக வாராந்தம் செய்திமதி மூலம் புகைப்படம் எடுப்பதுடன் தற்போதைய போர் நிலைமைகளை கண்காணித்து அந்த தகவல்களையும் தமது நாடுகளுக்கு வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் வழங்கி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொள்ளும் தகவல்களுக்கு மேலதிகமாக இந்த நாடுகள் பெற்றுக்கொள்ளும் இந்த ரகசிய தகவல்கள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பாரிய பிரச்சினை எழுந்துள…

    • 11 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.