ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
- சுமித்தி தங்கராசா யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். இது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியின் உறவினர்கள் குறிப்பிடுகையில், ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்திய…
-
- 8 replies
- 1k views
-
-
பிரான்ஸ் சென்றிருந்த சிங்களவர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது இலங்கையின் கட்டுநேரிய பிரதேசத்தை 47 வயதான சுதேஷ் சந்தன பெரேரா என்ற நபரே என்ற சிங்களவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இத்தாலியில் இருந்து இவர் குடும்பத்தினருடன் பிரான்ஸ் லூர்த்து மாத ஆலயத்திற்கு யாத்திரை சென்றிருந்தார். இவருடன் மனைவி, உறவினர்கள் மற்றும் வேறு சில இலங்கையர்களுடன் அவர் பிரான்ஸ் சென்றிருந்தார். இவரின் மரணத்திற்கான காரணம் அறிய பிரான்ஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://www.sankathi24.com/news/40670/64//d,fullart.aspx
-
- 1 reply
- 594 views
-
-
நிகழ்வுக்கு தன்னை அழைக்காததால் அதிகாரிகளிடம் சினந்த விவசாய அமைச்சர் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை நீர்ப்பாச னத்துக்காக திறக்கும்போது தன்னை அழைக்கவில்லையெனத் தெரிவித்து அதிகாரிகளைக் கடிந்து கொண்டார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன். இது பற்றி மேலும் தெரியவருவதாவது: கிளிநொச்சி மாவட்ட இரணைமடுக் குளத்தில் கடந்த இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த பெரும் சீரமைப்பின் பின்னர் பாசனத்துக்காக நேற்று முன்தினம் முதன் முதலாக நீர் திறந்துவிடப்பட்டது. அது ஒரு நிகழ்வாக கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலும் அதனைத் தொடர்ந்து வட்டக்கச்சி ஒற்றைக்கைப் …
-
- 0 replies
- 233 views
-
-
http://www.yarl.com/articles/files/100727_kugan_from_magazine_prison.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 705 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறித்து அறிக்கை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட தந்திரோபாய அபிவிருத்தி சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வாக்களிப்பில் பங்கேற்காதவர்கள், எதிராக வாக்களித்தவர்கள், பாராளுமன்றில் பிரசன்னமாகியிருக்காதவர்கள் ஆகியோர் தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இந்த அறிக்கை தயாரிக்…
-
- 0 replies
- 342 views
-
-
எம்மால் எதனையும் செய்ய முடியாது : இராணுவப் பேச்சாளர் கூறுகின்றார் (ஆர்.யசி) வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் பிரபாகரனின் பிறந்த தினமும் கொண்டாடப்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என்று இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும் நேற்றைய தினம் வடக்கில் வல்வெட்டித்துறை பகுதியில் புலிக்கொடிக்கு சமாந்தரமாக மாற்றுக் கொடியொன்றை ஏற்றியமை, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாட…
-
- 0 replies
- 318 views
-
-
பொருளாதார நெருக்கடி: கோட்டா, மஹிந்த, ரணில், கப்ரால் உள்ளிட்ட... 13 பேர் மீது பொதுநல வழக்கு. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் மற்றும் 3 போரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர், மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால், எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 2019 இல் வழங்கப்பட்ட சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான வரிச்சலுகைகளால் அரசாங்க வருவாய் குறைப்பு, சட்டவிரோதமான வரிச் சலுகையைத் திரும்பப் பெறத் தவறியமை உள்ளிட்ட விடயங்க…
-
- 0 replies
- 231 views
-
-
மஹிந்தவுக்கு வந்த சோதனை.. ஜெயலலிதாவால் மட்டுமா அவமானம்......கேரளாவிலையும் அப்படியாம் http://www.newkerala.com/news.php?action=f...llnews&id=76619
-
- 2 replies
- 1.7k views
-
-
பாகிஸ்தான் உளவுப் பிரிவின் முகவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பிராந்திய வலயமே கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்களுடனும், பாகிஸ்தான் அரச உளவுப் பிரிவுடனும் தொடர்புடைய இலங்கையர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக இந்தியா தகவல் வெளியிட்டிருந்தது. கண்டியைச் சேர்ந்த சாகீர் ஹூசெய்ன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார். ஹூசெய்ன், இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதகாவும், இது ஒட்டு மொத்த பிராந்திய வலயத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஆப்கான…
-
- 2 replies
- 360 views
-
-
ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை! முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமத்தில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களின் 33 ஆம் நினைவேந்தல் நிகழ்வு நாளை (02) காலை 9.30க்கு ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1984.12.02 அதிகாலை வேளையில் குறித்த மக்களை ஸ்ரீலங்கா இராணுவம் சந்திப்புக்கென அழைத்து ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
கோத்தா பதவிக்கு வந்தபின்னர், தூக்குத்தண்டனைக்கு காத்திருந்த பலர் ஜனாதிபதி மன்னிப்பினை பெற்று தூக்கில் இருந்து தப்பியது மட்டுமல்ல, சிறைக்கு வெளியேயும் வந்தனர். 7 வயது சிறுமி உள்பட 8 பேரை கழுத்தினை ஆடு அறுப்பது போல சீவி கொலை செய்த, சார்ஜெண்ட் ரத்னாயக்கா வெளியே வந்து, தனது 9 வயது மகளை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார். அதுபோல வெளியே வந்த இன்னும் ஒருவரான துமிந்த சில்வா, அமைதியாக போக விடாமல், தனது மமதையினை காட்டும் கோத்தாவின் முட்டாள் தனத்தினால், வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். நீதித்துறைக்கு, நடுவிரல், தூக்கி காட்டும் ஒரு அபத்தமாகவே தெரிந்தது அந்த நியமனம். மேலும், அரசசேவையில் உள்ள பலருக்கும் அது ஒரு கரப்பான் பூச்சி, படுக்கை அறைக்குள் நு…
-
- 2 replies
- 398 views
-
-
தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மூன்று கோரிக்கைகளுடன் சிவந்தன் மேற்கொள்ளும் மனிதநேய நடை பயணம் இன்று 20வது நாளை தொட்டிருக்கின்றது. Dijon, Longvic, Ouges போன்ற இடங்களைக் கடந்து நடந்து சென்றுள்ள சிவந்தன், இன்று காலை முதல் Longecourt என்ற இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றார். இன்றைய மனிதநேய நடை பயணத்தில் 6 பேர் சிவந்தனுடன் இணைந்து நடக்கின்றனர். நேற்று 11 மணித்தியாலங்களில் 42 கிலோமீற்றர்கள் நடந்த சிவந்தனுடன் 20 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து நடந்திருந்தனர். நேற்று மழையின் மத்தியில் இந்த நடை பயணம் இடம்பெற்றதுடன், இன்று காலையும் மழை பெய்து வருகின்றது. நேற்றைய மனிதநேய நடை பயணத்தில் 12 அகவையு…
-
- 1 reply
- 702 views
-
-
ஜோசம் எ.பி - ஜந்து மாணவர் படுகொலைக்கு படையினரே காரணம் ஜனாதிபதி நம்புவதாக தெரிவிப்பு http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகளால் கைப்பற்றப்பட்ட காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் படையினர்! சனி, 21 ஆகஸ்ட் 2010 06:55 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்காமல் படைத் தரப்பினர் சாக்குப்போக்குக் கூறி வருகின்றனர் இது சம்பந்தமாக காணிகளின் சொந்தக்காரர்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் புலிகளுக்கு காணிகளின் சொந்தக்காரர்கள் இக்காணிகளை கொழுத்த பணத்துக்கு விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளார்கள் என்று படைத் தரப்பினர் கூறுகின்றார்கள். இந்நிலையில் மாவட்ட அரச செயலகத்தில் இவ்விடயம் சம்பந்தமாக அடுத்த வாரம் உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெ…
-
- 2 replies
- 657 views
-
-
-ற.றஜீவன் யாழ். பருத்தித்துறை நகரத்தில் நடைபாதையில் உள்ள வாய்கால் மூடப்படாமை காரணமாக பாதசாரிகளும் துவிச்சக்கரவண்டியில் செல்வோரும் அதனுள் வீழ்ந்து காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்வாயினை மூடி நடைபாதை அமைக்கும் பணியினை வீதி அதிகார சபை மேற்கொண்டதாகவும் அவர்கள் குறித்த கால்வாய் அமைந்துள்ள பகுதியினை மூடாமல் விட்டுச் சென்றுள்ளதாகவும் பருத்தித்துறை நகர சபையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இவ்வீதியில்இரவு வேளைகளில்; பயணிப்போர் வாய்க்காலினுள் வீழ்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு நகர சபையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். tamilmirror
-
- 0 replies
- 357 views
-
-
வடகிழக்கில் மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன – சிறீலங்கா இராணுவம் வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மூன்று லட்சம் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன்படி, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த 1813 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. கண்ணி வெடி அகற்றும் பணிகளை ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். இதற்கு மேல…
-
- 0 replies
- 432 views
-
-
பயங்கவராதத்தை எதிர்கொள்ள இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்று பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். இதனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு முற்றாக அழித்துவிட்டிருக்கிறது. அந்த அரசை நாடு சிறப்பிக்க வேண்டும்' என்று…
-
- 2 replies
- 809 views
-
-
ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் மலேசியப் பிரதமர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மலேசியப்பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியப் பிரதமரின் இவ்விஜயம் இடம்பெறுவதுடன், இரு நாடுகளு…
-
- 1 reply
- 555 views
-
-
அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களான 508 இளைஞர், யுவதிகள் இன்று சனிக்கிழமை பெற்றோரிடம் கையளிக்கப்பட்டார்கள். வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இவ்வைபவம் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் விஜித முனி சொய்சா இந்நிகழவில் கலந்து கொண்டு 508 பேரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தார். விடுதலை செய்யப்பட்டவர்களில் 246 பேர் அண்மையில் இடம்பெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் ஆவர். விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் மணம் முடித்து வைக்கப்பட்ட 50 தம்பதிகளும் அடங்குகின்றார்கள். இ…
-
- 0 replies
- 753 views
-
-
தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிருமாறு மகிந்தவுக்கு மோடி அறிவுரை கூற வேண்டும்! - என்கிறார் 'ஹிந்து' ராம். [Tuesday, 2014-05-27 09:25:55] இலங்கையில், தமிழ் மக்களுக்கு, உரிய அதிகாரப்பகிர்வை அளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையும் அறிவுரையும் வழங்க வேண்டும் என்று 'தி ஹிந்து' பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், பதவியேற்பு விழாவில் பங்குபெற்றது ஒரு சிறப்பான அம்சம் எனவும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு என்றும், அதை அடித்தளமாகக் கொண்டு முன்னேற்றங்களை காண வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். மோடியின் பதவ…
-
- 4 replies
- 824 views
-
-
பொதுஜன பெரமுனவின் தலைவராகிறார் மஹிந்த ஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்றுக் கொள்ளவுள்ளார். ஜனவரி 2 ஆம் திகதி சுகததாச அரங்கில் 20 கட்சிகளை இணைத்த புதிய கட்சியாக ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியாக இணையும் மாநாட்டில் இதனை தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன முன்னணி வட்டாரங்களின் மூலமாக தெரிய வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகராக செயற்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்தவொரு செயற்பாட்டிலும் அவர் பங்குகொள்ளவில்லை. அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பிலும் எந்தவொரு ப…
-
- 0 replies
- 143 views
-
-
இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பின் ஆதரவை நாடும் வேட்பாளர்கள்.. இந்த நிலையில், நாளையதினம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார் என்ற தேர்தல் களத்தில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர்…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
வைத்திய அதிகாரி சத்தியமூர்த்தி ‐ தமிழினி ஆகியோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறப்படவுள்ளது 21 September 10 08:43 am (BST) வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வைத்திய அதிகாரி சத்தியமூர்த்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறப்படவுள்ளது. விசாரணை நடத்தி வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே தாம் ஊடகங்களுக்கு தவாறான தகவல்களை வழங்கியதாக பிணையில் விடுவிக…
-
- 0 replies
- 591 views
-
-
சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறித்து அறிந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயமும் குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது அவற்றை பாதுகாப்பதற்கான அனைதத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் விஜயம் - இந்தியா தெரிவித்துள்ளது என்ன? | Virakesari.lk
-
- 1 reply
- 298 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் மங்கள சமரவீர எம்.பி இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் நாலாம் மாடியில் பலத்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாக இவ்விசாரணை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஹிட்லராக சித்திரித்து பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பாகவே இவரை விசாரித்து இருக்கின்றார்கள். விசாரணைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த மங்கள சமரவீர எம்.பியை ஐ.தே.க எம்.பிகளான ரவி கருணநாயக்க, ரிலான் அலஸ் ஆகியோர் உட்பட ஐ.தே.க பிரமுகர்கள் பலரும் வரவேற்றனர். 18 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்தே இச்சுவரொட்டிகள் பிரசுரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilcnn.com/index.php?option=com_conten…
-
- 0 replies
- 651 views
-