Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து வழிமுறைகளுக்கு சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவிக்காது மறுத்துரைத்திருப்பதன் காரணத்தால் திட்டமிட்டபடி நடைபெறவிருந்த ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் கள நிலவரங்களையும் அவதானிக்கின்றவிடத்து நாலாம் கட்ட ஈழப்போர் நெருங்கி வருவதற்கான சாத்தியங்களே அதிகரித்துள்ளன. முதலில் ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெறாத சூழலை உருவாக்குவதும் போரைத் திணிப்பதும் சிறிலங்கா அரசின் பிரதான நோக்கமாகும். ஏன் ஜெனீவாப் பேச்சுக்களுக்கான சூழலை அரச தரப்பு சீர் குலைக்கின்றது என்பது குறித்து முதலில் ஆராய வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்…

  2. ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் 25 வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு நிதியுதவி வழங்கியவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை (19) இடம்பெற்றது. ஜேர்மன் கொடையாளிகளான மைக்கல் ஒயு, குவெந்தர் விற்றமன், ஜோர்க் பியலா, டொக்டர் உல்ரைக் ஸ்கொனேபெர்க் ஆகியோரடங்கிய குழுவினரே இதன்போது வரவேற்கப்பட்டனர். ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் ஏறாவூர் சமூக அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நஸீர், வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் உள்ளிட்ட இன்னும் பல உள்ளுர்ப் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தக் கிராமத்தில் ஏழை மக்களுக்காக அமைக்கப்பட்ட 25 வீடுகளுக்குமான நிதியுதவிகளை இந்த ஜேர்மன் கொடையாளிகள் தாங்கள் கிறிஸ்மஸ் பண்…

    • 0 replies
    • 365 views
  3. வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா கடற்படையின் டோரா தாக்குதல் படகு ஒன்று தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தை அடுத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நாகர்கோவில் பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஆட்லறி எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். நன்றி: புதினம்

  4. அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ _ட்டிக்காட்டியுள்ளார். பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கொழும்பு, ஒக். 13 அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும்சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டிக்காட்டியுள்ளார். பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கை தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாக வகை…

    • 4 replies
    • 628 views
  5. 83 கலவரங்களின் போது ஐ.தே.க தவறிழைத்தது – ரணில் ஒப்புதல்! 1983ம் ஆண்டு கலவரங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமிச்ஙக ஒப்புக்கொண்டுள்ளார். ஜூலை கலவரத்தை தடுத்து நிறுத்த அப்போதைய அரசாங்கம் உரிய முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய அரசாங்கமும் அதே பிழையை செய்து விடக் கூடாது என அவர் கோரியுள்ளார். 83ம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அலுத்கம பேருவளை சம்பவங்கள் கலவரங்களின் மூலம் சிங்கள முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகள் கை மீறிச் செல்வதற்கு முன்னதாக அரசாங்க…

    • 0 replies
    • 537 views
  6. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2010 விடுதலை புலிகளுக்கு அமெரிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு முயன்றார் என கைது செய்யப்பட்ட சிங்கபூர் நபரான பால்ராஜ் மீதான குற்றச்சாட்டு மெரிலாண்ட் ஜூரியில் நேற்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழுவினருக்கு ஆயுத ரீதியான உதவியை வழங்க முன் வந்தார் என குற்றம் சுமத்தி பால்ராஜிற்கு ஆகக்கூடியது 15 வருடம் சிறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பால்ராஜ் வழங்கிய வாக்குமூலத்தினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரது சகாக்களாகிய மூவருக்கு 3 தொடக்கம் 5 வருடம் சிறைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைகள் மூலம் விடுதலைப்புலிகளிற்கும் , பால்ராஜிற்கும் இடையில் பெருந்தொகை பண பரிமாற்றங்கள் இடப்பெற்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்ட…

    • 3 replies
    • 930 views
  7. ’யாழ்.ஜனாதிபதி மாளிகை சுற்றுலா விடுதியாகும்’ 3.5 பில்லியன் ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை, சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகை, தற்போது மூடப்பட்டுள்ளது. அதன் நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அந்த மாளிகையை உயர்தரம் வாய்ந்த சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கு தற்போது சர்வதேச ரீதியாக விலைமனு கோர…

  8. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 2010 மஹிந்த இராஜபக்‌ஷ அம்புலிமாமா கதை எல்லாம் எமக்கு சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். அரசியல் தீர்வில் தமக்கு உடன்பாடு உண்டா, இல்லையா என்பதை மஹிந்தா உடனடியாக, பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி சொல்லும் அம்புலி மாமா கதைதான், தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதாகும். இந்தக் கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் சாடினார். தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக அரசியல் தீர்வு வழங்க முடியாதுள்ளது என ஜனாதிபதி கூறியது தொடர்பாகக் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு; போருக்கு முன…

  9. கிளிநொச்சியில் மின்சார விநியோகத்திற்காக பலநூற்றுக்கணக்கான பனைகள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள அப்பகுதி மக்கள், இதனால் இப் பிரதேசத்தின் இயற்கை வளம் அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:- கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி, முரசுமோட்டை ஆகிய பகுதிகளில் தற்பொழுது மின்சார விநியோகத்திற்காக வீதிகளுக்கு அருகில் இருக்கின்ற பனைகள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதனால் பலநூற்றுக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டு வருவகின்றன. பயன்தரும் நிலையிலுள்ள பனைகளே இவ்வாறு அழிக்கப்படுகின்றன என இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை இப்பகுதியின் இயற்கை வளமாகவும் இப்பிரதேச மக்களின் சொத்தாகவும் காணப்படுகின்ற பனை மரங்களை அழிக்…

    • 0 replies
    • 245 views
  10. வரலாற்றுத் தவறுகளை மறந்து செயற்படலாகாது [ தினக்குரல் ] - [ Nov 01, 2010 18:55:18 GMT ] அமைதிச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தென்பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது போன்றே இச்சுற்றுலாப் பயணிகளினால் ஏற்படும் பிரச்சினைகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. கலை, கலாசார சீரழிவுகள் மட்டுமன்றி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இன முறுகல்கள் ஏற்பட்டு விடக்கூடிய பாரதூரமான சம்பவங்களும் கடந்த சில நாட்களுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை அமைதியை, சமாதானத்தை, இன சௌஜன்யத்தை விரும்புவோர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தைய…

  11. -எம்.றொசாந்த் வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும் ஆகியோர் உடந்தையாக இருக்கின்றார்களா? என தான் சந்தேகப்படுவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் திங்கட்கிழமை (14) தெரிவித்தார். கீரிமலை பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்காக நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட இருந்த நிலஅளவை பணிகளை தடுக்கும் நோக்குடன் காணி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'வடக்கிலே இராணுவம்…

  12. ஏறாவூரில் பெண் வேட்பாளர் உட்பட 3 பெண்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!!! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ அணியின் தாமரை மொட்டு பொதுப் பட்டியல் வேட்பாளரான யுவதி மற்றும் அதன் பிரசார ஆதரவாளர்களான இருவர் உட்பட மொத்தம் 3 பெண்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் வன்முறையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் ஜூப்ரியா வட்டாரத்தில் போட்டியிடும் தாமரை மொட்டு அணியின் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக அவரது குழுவினர் வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தபோது மாற்ற…

  13. ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் -அலி சப்ரி சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து நிதி வருவதால், ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் என தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். “பணம் அனுப்புதல் மற்றும் நிதி உட்பாய்சல் அதிகரிப்பால் ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையை சுமார் ரூ. 300 ஆக குறைக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது ஒரு அமெரிக்க டொலரின் விலை ரூ. 367. 30 உள்ளது. https://thinakkural.lk/article/204984

  14. அரசின் பொறுப்பற்ற போக்கால் மக்கள் அல்லல்படும் நிலைமை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் விசனத்துடன் மன்னிப்புச்சபை அறிக்கை இலங்கையில் அதிகரித்து வரும் வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மேலும் துன்பப்படுகின்றனர் எனத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிழைத்து வருவதும், பொது மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோரை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்குட்படுத்துவதற்குத

    • 5 replies
    • 1.6k views
  15. பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நேற்று சனிக்கிழமை மெல்போர்னில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் அங்கு நடக்கும் படுகொலைகளை கண்டித்து பேரணி நடை பெற்றது. இதில் மெல்போர்ன் வாழ் தமிழீழ மக்களும் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/32572/57//d,article_full.aspx

  16. இலங்கை மலையக தமிழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - பிபிசி தமிழின் கள ஆய்வு ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தன் மகனுடன் நிரூபா இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜோர்ஜ் லெரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வருகை தந்து க…

  17. இலங்கை அரசின் காரணங்களை நம்ப வேண்டாம் ; 26 நாடுகளின் பிரதிநிதிகளிடம் த. தே. கூ. வலியுறுத்தல் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களின் பெறு­பே­றுகள் தேசிய அர­சாங்­கத்­திற்குள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை காரண மாகக் கொண்டு, இலங்கை அர­சாங்­கத்­தினால் ஜெனி­வா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து பின்­வாங்க முடி­யாது அர­சாங்கம் அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு முற்­பட்டு கார­ணங்­களை முன்­வைக்கும் பட்­சத்தில் அதனை ஜெனி­வாவின் உறுப்பு நாடுகள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யுள்ள தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இலங்­கையின் தேசிய அர­சியல் நில­வ­ரங்கள் எவ்­வா­றா­க­வி­ருப்­பினும் வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து நழு­விச்­செல்ல முடி­யாது என்­ப…

  18. பேராட்டக் காரர்களை... ஒடுக்கும் செயல்பாடுகளை, அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும்- ஜாட்சன் பிகிராடோ வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவது மற்றும் அவர்களின் அலுவலகங்களை உடைத்து சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார். வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரியும் குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று காலை யாழ்ப்பாணத்தில் க…

  19. 7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 09:44 ஈழம்] [ச.விமலராஜா] 7 ஆயிரம் பேர் கொண்ட குழுவான புலிகளைத் தோற்கடிப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலைமையகத் தாக்குதலில் உயிர் தப்பிய சரத் பொன்சேகா சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பியுள்ளார். கொழும்பில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறிலங்கா இராணுவத்தின் தற்போதையை நிலைமைகள், தொடரும் பல்வேறு தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அரசாங்க ஊடகமான சண்டே ஓப்சர்வருக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்: கேள்…

    • 5 replies
    • 1.7k views
  20. வடக்கு மாகாண முதல்வரின் ரம்ழான் வாழ்த்துச் செய்தி! [Tuesday 2014-07-29 09:00] வடக்கு மண்ணில் முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு அந்நியோன்யமாக வாழும் நிலை உருவாகியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் தனது ரம்ழான் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், அமைந்திருக்கின்ற வடக்கு மாகாணசபை இனமுரண்பாடுகளுக்கு அப்பால் சிந்திக்கின்ற, செயற்படுகின்ற சபையாக அமைந்திருக்கின்றது. ஆனால் இரு சாராரும் இராணுவத்துக்கூடான சிங்கள பௌத்த உள்ளீடல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே எம்மிடையே அமைதியான அர்த்தமுள்ள சமாதானத்தை உருவாக்குவதற்கும், எமது மக்களுக்கு நீடித்து நிலைக்கின்ற அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், சிறுபான்மை சமூகங்களின் அடிப்படை அரசியல் ப…

  21. வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் குழப்பினார் ; திட்டமிட்ட சதியென்கிறார் வாசு (எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி) பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என சுமந்திரன் வாசுவின் குற்றச்சாட்டை நிராகரித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக…

  22. மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை பாடசாலைக்கு கொண்டுசென்ற மாணவி By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 04:34 PM மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு சென்ற சம்பவம் இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட மாணவி பாடசாலையின் மாணவர் தலைவி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினால் கவலையடைந்த ஆசிரியர்கள் பாடசாலையில் மதிய உணவை வழங்க தீர்மானித்துள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கற்க்கும் மாணவகர்களிற்கு மதிய உணவு வழங்கப்படுவது வழமை அன்று தரம் மூன்றில் கல்விகற்கும் மாணவர்கள் வழமையை விட அதி…

  23. தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உடல்களை எரிக்க எடுத்த முயற்சி தோல்வி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 08 யுரபரளவ 2006 06:27 அக்சன் பாம் தொண்டு நிறுவனம் மாவிலாற்றின் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக சேவையினை வழங்குவதற்காக சென்றபோது சிறிலங்காப் படையினரால் 17 பேர் மிகவும் கோரத்தனமாகக் கொல்லப்பட்டமை தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் இன்றும் அம்பலமாகியுள்ளது. அந்நிறுவனத்தின் கடமைமயாற்றிய அனைவரும் வரிசையாக நிலத்தில் குப்பறப் படுக்க வைக்கப்பட்டு அவர்கள் அனைவரின் கைகளும் தலையில் வைக்கபட்டு அனைவரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லபட்டுள்ளார்கள். இவர்களின் உடலை கொடுக்க மறுத்த சிறிலங்காப் படையினர் இரவோடு இரவாக எண்ணை ஊற்றி எரிக்க முற்பட்ட…

  24. மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல் http://www.yarl.com/forum3/uploads/monthly_11_2010/ondru-song-mix.mp3 பாடல் வரிகள்: வித்யாசாகர் இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் 'திரையிசை தென்றல் ஆதி'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.