ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களினால் நிலை குலைந்துள்ள இலங்கை அரசாங்கம் பல வகையான போலி பிரசாரங்களில் ஈடுபடுகிறது. அண்மையில் மன்னார் ஆயர் மூவின மக்களையும் சமமாக கருதும் ஒருவரையே ஜனாதிபதியாக ஆதரிக்க முடியும் என்று தெரிவித்திருந்தார். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மூவின மக்களையும் சமமாக கருதுகிறார் என்றும் அவரை ஆதரிக்குமாறே மன்னார் ஆயர் கூறினார் என்றும் இலங்கை அரச பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை ஆட்டம் காணத் தொடங்கியுள்ள இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் தோல்வியடைந்த சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை வைத்து "மக்களின் பக்கம் மகிந்த என்றும் செய்தியை வெளியிட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 0 replies
- 339 views
-
-
முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரம் – சிறிலங்கா அதிபர் திட்டம் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டளவு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு, கடத்தல் போன்றவற்றுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, சிறிலங்கா காவல்துறையினரின் அதிகாரங்களை முப்படையினருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், வழங்கும் வகையில், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான, சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில், இந்த சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளை …
-
- 0 replies
- 318 views
-
-
-
- 15 replies
- 4k views
-
-
"புதிய அரசியலமைப்பால் நாடு 9 துண்டுகளாக பிளவாகும்" புதிய அரசியலமைப்பானது உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக பிளவடையும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை என்ற மரத்தில் ஒவ்வொரு மரக்கிளைகள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் வரலாறு அடையாளம் காணமுடியாத சூழ்ச்சிக்கான தளத்தினை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. மேலும் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு ஒன்பது துண்டுகளாக …
-
- 0 replies
- 316 views
-
-
யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்! Published By: T. SARANYA 24 MAR, 2023 | 11:48 AM யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுசுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்கள் இனம் காணப்பட்டதை அடுத்து அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைகோவுடன் சந்திப்பு மூன்று பிரதிநிதிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோவைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினர். மிகுந்த அக்கறையுடன் தமிழ் பிரதேசங்களின் தற்போதைய மனித அவலங்கள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட வைகோ, தமிழ்நாட்டு அதிகாரிகளும், மத்திய அரசும், ஈழத்தமிழர்களின் துன்பங்கள் தீர்ந்து உரிய விடிவு கிடைக்க விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்களென தான் நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. -புதினம்
-
- 15 replies
- 3.1k views
-
-
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டமை துரதிஸ்டவசமானது என இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது குறித்து புதுடெல்லிக்கு அறிவிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலும் மீனவர்களுக்கு எதிராக வன்முறைப் பயன்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் லெகான் மெரோட்ராவினால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி news ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையினை ஏற்கமாட்டேன் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்க வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் தான் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கோரிக்கையினை நிராகரிப்பேன் என உறுதியளித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்படி பெளத்த மதத்துக்கு அரசமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சுதந்திரமான தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் இலங்கை இராணுவத்தால் 20…
-
- 69 replies
- 5.4k views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்று விமர்சித்துள்ளார் பொது பல சேனாவின் பொதுச்செயலர் கல்கொடத்தே ஞானசார தேரர். ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இரண்டு தரப்புகளுமே அதிகாரத்தைக் கைப்பற்ற கடுமையாக மோதுகின்றன. இருதரப்புக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. சில மேலதிக வாக்குகளைப் பெறுவதற்கு சில வேளைகளில் கறிவேப்பிலைகள் தேவைப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரிசாத் பதியுதீனுக்கும் பொது பல சேனாவுக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் இருந்து வருவது க…
-
- 0 replies
- 363 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். மாவிலாறு, சம்பூர், மற்றும் வாகரை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்ட படையினருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் நன்றிகளை தெரிவிப்பதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவிலாறு ஒயா பகுதியில் அமைந்துள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கும் , வெலிக்கந்தை 23 ஆவது படைத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்துள்ளனர். இப்பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கு அவசியமான தேவைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் உறு…
-
- 0 replies
- 728 views
-
-
உண்ணாவிரதமிருந்துவரும் என் மகனை விடுதலை செய்யுங்கள்: தமிழ்த் தாயின் வேண்டுகோள் Saturday, April 30, 2011, 13:45 புதிய மகசின் சிறைச்சாலையில் கடந்த நான்கு நாட்களாக உண்ணா விரதமிருந்துவரும் திரு.அஞ்சலோ என்பவரின் தாயார் திருமதி லில்லி மரியதாஸ் என்பவர் தனது மகனை விடுதலை செய்யக்கோரி நீதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தின் முழு வடிவம் வருமாறு. மரியதாஸ் லில்லி இல : 490 குட்செட் வீதி தோணிக்கல் வவுனியா 29.04.2011 கௌரவ நீதி அமைச்சர் அவர்கட்கு நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு கொழும்பு ஐயா ஓர் அபலத் தமிழ்த் தாயின் வேண்டுகோள் எனது மகனான அன்ரனி மரியதாஸ் அஞ்சலோ என்பவர் கடந்த 23.02.2009…
-
- 0 replies
- 1k views
-
-
திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார். நம் நாட்டில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் மக்களுக்கு எதிராக தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, பௌத்த சகோதரர்களுடன் நமக்கு இருக்கின்ற நல்லுறவை கெடுக்கும் தீவிரவாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி விட்டு, இப்போது வெங்கடாசலபதியின் அருளை கோருவது நியாயமாகுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பி…
-
- 5 replies
- 434 views
-
-
மாந்தை மேற்கில் கள்ளு விற்பனை நிலையங்களை அகற்ற கோரி மக்கள் பேரணி :(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாப்பாமோட்டை மற்றும் ஆக்காட்டிவெளி ஆகிய இரு கிராமங்களிலும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கள்ளு விற்பனை நிலையங்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறும், குறித்த பிரதேசத்தில் போத்தல் கள்ளு விற்பனையை முற்றாக தடை செய்யக் கோரியும் குறித்த இரு கிராம மக்களும் இணைந்து இன்று புதன் கிழமை (1) காலை பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காலை 10 மணியளவில் நெடுங்கண்டல் பிரதான வீதியில் தமது பேரணியை ஆரம்பித்தனர். இதன் போது கலந்து கொண்ட மக்கள் பாப்பாமோட்டை மற்ற…
-
- 0 replies
- 429 views
-
-
தமிழர் பகுதியைச் சூரையாடும் அமைச்சர் ஆதாவுல்லா! சனி, 07 மே 2011 06:01 அம்பாறை அக்கரைப்பற்றில அமைச்சர் அதாவுல்லா தமிழர்களுக்கு எதிரான அட்டகாசத்தின் ஒன்று நகர்மணிக்கூட்டு கோபுரத்தை தனது வாப்பாவின் சொத்து என நினைத்து பொதுக்கட்டிடமான இந்த மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி தனது குடும்பத்தின் நிழல் படங்களை வைத்து ஆக்கிரமித்து வருகின்றார் இவ் மணிக்கூட்டு கோபுரத்தின் ஒரு பகுதி ஆலையடிவேம்பு பிரதேசசபையான தமிழ் மக்களுக்கும் ஒரு பகுதி அக்கரைப்பற்று மாநகரசபையான முஸ்லிம் மக்களுக்கும் உரியது. இருந்தபோதும் மணிக்கூடடுக் கோபுரத்தின் முழுப்பகுதியையும் ஆக்கிரமித்து தனது நிழல்படங்களையும் மணிக்கூடு அமைந்திருந்த பகுதியில் அவரின் மகனான மேயர் சகியின் நிழல்படங்களை வைத்து பொதுமக்கள் நே…
-
- 0 replies
- 811 views
-
-
* அதிமுக கோட்டையானது சென்னை.... முக ஸ்டாலின், அன்பழகன் உள்பட 15 வேட்பாளர்கள் தோல்வி!!
-
- 5 replies
- 3.4k views
-
-
புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு. [saturday 2014-12-20 00:00] யாழ்.. புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று (19.12.2014) புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை நிதியிலிருந்து 30000 ரூபாய் பெறுமதியுடைய தளபாடங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீதுர்க்கா சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு கெங்கா அவர்கள் உள்ளிட்ட சனசமூக நிலைய ந…
-
- 0 replies
- 294 views
-
-
யாழில். அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு – குற்ற செயல்களுக்காக திருடப்படுகிறதா ? May 9, 2023 யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.. அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் காவல் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக , கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு , ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் , மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமலும், மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்…
-
- 1 reply
- 230 views
-
-
http://www.youtube.com/watch?v=w5r2FlZUOBw
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்த உதை பந்தாட்ட நிகழ்வு வரும் ஆண்டாகிய 2008இலேயே நடக்க இருக்கிறது. வரும் ஆண்டாகிய 2008ல் சிறிலங்கா தன்னுடைய 60வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டே இந்த உதைபந்தாட்ட நிகழ்வு இருக்கிறது. இந்த உதைபந்தாட்ட நிகழ்வின் பின்னணியில் நெதர்லாந்தில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் இருக்கிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அதுதான் உண்மை. அண்மையில் பல நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களுக்கு புதிய பணியாளர்கள் சிறிலங்கா அரசினால் அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் சிறிலங்காப் புலனாய்வுத் துறையில் பணியாற்றியவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை, ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்குள் பிரிவினையை உருவாக்குவது. தமிழர்களுக்கும் சிங்கள…
-
- 16 replies
- 4.5k views
-
-
Invited Countries Should Stay Home, Press for Accountability (New York) - Governments should decline the invitation to attend a Sri Lankan military conference that seeks to legitimize the unlawful killing of thousands of civilians during the armed conflict with the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Human Rights Watch said today. The Sri Lankan government has invited 54 countries to its "Seminar on Defeating Terrorism: The Sri Lankan Experience" from May 31 to June 2, 2011 in Colombo, the capital. The conference website says Sri Lankan military officials and panelists will "share their knowledge on Counter Insurgency and enumerate contributor…
-
- 3 replies
- 883 views
-
-
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம், புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் எழுந்திருக்கும் கேள்விகளுக்கான எமது நிலைப்பாட்டை முழுமையான தமிழ்த் தேசியத்தின் விடுதலை நோக்கிய நிலையில் இருந்து அறிவிக்கின்றோம். எமது நிலைப்பாடு என்பது நீண்டகால நோக்கின் அடிப்படையில், எமக்கு எமது மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில், அவர்களின் அரசியல் வேணவாவை பிரதிபலிக்கும் வகையில், நாடுகள் வாரியான மக்கள் அவைகளுக்கு இடையேயும் மற்றும் பல்வேறு தரப்புகளுடனும் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக…
-
- 5 replies
- 539 views
-
-
[saturday, 2011-05-28 04:47:53] காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவிற்கு 1993ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி காணப்பட்ட கிரக நிலை அதே விதத்தில் தனது ஜாதகத்திலும் கூறப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன அண்மையில் தனக்கு நெருக்கமான சிலரிடம் கூறியுள்ளார். இலங்கையின் தென்பகுதியிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரே தனக்கு இந்த கிரக பலன் குறித்து கூறியதாகவும், அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக தான் தனது ஜாதகத்தை இந்தியாவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவரிடம் காட்டியதாகவும் இந்த சாதகத்தின் பலாபலன்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் தனக்கு நற்பலன்களைக் கொடுக்கும் என பிரதமர் தனக்கு நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். source:seiyhy.
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
மகப்பேற்று வைத்திய நிபுணரை நியமியுங்கள் கிளிநொச்சியில் கர்ப்பவதிகள் ஆர்ப்பாட்டம்… புதிதாக வைத்திய நிபுணர் ஒருவரை நியமிக்க அரசு நடவடிக்கை – மத்திய சுகாதார அமைச்சு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர். மாவட்டப் பொது வைத்தியசாலையான கிளிநொச்சி வைத்தியசாலையில் கடந்த ஒரு மாதகாலமாக மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியநிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பவதிகள் கையறு நிலையில் விடப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மீள்குடியேற்றத்தின் பின்னர் இவ்வாறன ஒரு நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதல்தடவையாகும். இந்த நிலையில் இன்றைய (31-08-2018) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை பத்து …
-
- 0 replies
- 514 views
-
-
புதன், 01 ஜூன் 2011 23:01 . இலங்கையில் தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களில் அநேகமானோரின் அந்தரங்க உறுப்புக்களை இலக்கு வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியக் கலாநிதியுமான ஜயலத் ஜயவர்தன குற்றம் சாட்டி உள்ளார். இவர் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இக்குற்றச் சாட்டினை முன் வைத்தார். இவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:- "ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்களில் அதிகமானோரின் அந்தரங்க உறுப்புகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி உள…
-
- 2 replies
- 2k views
-
-
யாழ் நல்லூர்ப்பகுதியில் நிறுவப்பட்டு இருந்த ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானத்தவின் விளம்பரத் தட்டியை அங்கிருந்து அகற்றியுள்ளனர். http://www.pathivu.com/news/36805/57//d,article_full.aspx
-
- 8 replies
- 1.1k views
-