ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
ரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு! இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் (SLRC) தலைவர் இன்னோகா சத்தியாங்கனியை பதிவி விலகுமாறு அமைச்சரவை அந்தஸ்தற்ற வெகுஜன ஊடக அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்தன உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் புதிய தலைவராக சஞ்ஜீவி விஜேகுணவர்தனாவை ருவான் விஜயவர்தன நியமித்துள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். மங்கள சமரவீர வெகஜன ஊடக அமைச்சராக இருந்தபோது சத்தியங்கனி ரூபவாஹினி தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60990
-
- 2 replies
- 1.2k views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் இரத்து October 1, 2024 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் வரபிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். மேலும் ‘மாதிவெல குடியிருப்பில் நவம்பர் 14 வரை மாத்திரமே வசிக்க முடியும். இராஜதந்திர கடவுச்சீட்டினை எவரும் பயன்படுத்த முடியாது. சாதாரண கடவுச்சீட்டினையே பயன்படுத்த வேண்டும்’ என குஷானி ரோஹனதீர தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியினால் ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் முன்னாள் பாராளுமன்ற …
-
- 1 reply
- 431 views
-
-
பிரித்தானிய கடவுச்சீட்டு மோசடி: கருணாவிற்கு 24 மாத சிறைத் தண்டனை [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 08:32 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] பிரித்தானியாவிற்குள் இராஜதந்திரிகளுக்கான போலிக் கடவுச்சீட்டுடன் நுழைந்த சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கருணாவிற்கு 24 மாத சிறைத்தண்டனையை பிரித்தானிய நீதிமன்றம் வழங்கவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுக்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கருணா, உயிர் தப்பும் நோக்கத்துடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஒடியிருந்தார். அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கி செய்திருந்தது. எனினும…
-
- 27 replies
- 5.3k views
-
-
இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்! In இலங்கை August 3, 2019 8:37 am GMT 0 Comments 1355 by : Dhackshala வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்து அமைப்புக்களின் ஒன்றியம் அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அந்த அமைப்பினால் அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் வடக்கு மற்றும்…
-
- 14 replies
- 1.5k views
-
-
'சுமார் 1 ½ இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் வேகமாக பரவியது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தால் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கி நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடத்தப்பட்ட ஊழியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், '2009ஆம் ஆண்டுக்கு முன்னர் போதைப் பொருள் பாவனையென்பது முற்றுமுழுதாக இல்லாத மாவட்டமாக எமது வடமாகாணம் திகழந்தது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில விநியோகஸ்தர்களின் செயற்பாட்;டால் அதிகரித்த போதைப்பொருள் பாவனை,…
-
- 1 reply
- 689 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கை துறைமுக அதிகாரசபையால் கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுக அதிகாரசபைக்கு முழுமையான உரித்துடன் கூடிய கொள்கலன் முனையமாக இயக்குவதற்கு கடந்த 2021 பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கொள்கலன் முனையத்திற்குத் தேவையான பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் தனியார் கொள்கலன் இயக்குபவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும்…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
மன்னாரின் பல பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் 4 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 639 views
-
-
கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும் 26 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா: “ ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.” - உவிந்து குருகுலசூரிய. “இங்கே கொள்கைகள் இருக்கின்றன இங்கே உண்மைகளும் இருக்கின்றன. கொள்கைகள் மாறுபடலாம் ஆனால் எப்படியிருப்பினும் உண்மைகள் மறுக்கப்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ், எந்த நேரத்திலும் எந்த வெளிநாட்டுத் தலையீட்டையும் இலங்கை அனுமதிக்காது எனத் தெரிவித்தார். இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு எப்போதும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். தனது கருத்தானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தெனவும் அவர் கூறினார். அமைச்சரின் கருத்தானதுஅரசாங்கத்தின் கருத்தா என எதிர்க்கட்சியினர் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினர். கூட்டு அர்ப்பணிப்புடனான செயற்பாடு காரணமாக ஜெனீவாவில் 11 நாடுகள் இலங்கைக்கு சாதகமாக வாக்களித்தன எனவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 715 views
-
-
நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்கள…
-
- 0 replies
- 177 views
-
-
இலங்கையின் அபிவிருத்திக்கு 10 பில்லியன் டொலர் பங்களிப்பு செய்துள்ளதாம் சீனா! [Saturday 2015-11-21 07:00] இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா இதுவரைக்கும் 10 பில்லியன் டொலர்களை பங்களித்துள்ளது என்று சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தின் மத்திய பிரதேசத்தில் இலங்கை அமைந்துள்ளது. எனவே முதலீடுகளுக்கு முக்கிய இடமாக இலங்கை கருதப்படுகிறது. இலங்கை காரணமாக ஏனைய நாடுகளும் நன்மைகளை பெறுகின்றன. இந்தநிலையில் இலங்கை சீன உறவு அவசியமாகிறது என்று சீன தூதுவர் யி.சியாங்லியாங் தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா இதுவரைக்கும் 10 பில்லியன் டொலர்களை பங்களித்துள்ளது என்று சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தின் மத்திய பிரதேசத்தில் இலங்கை அமைந்துள…
-
- 0 replies
- 503 views
-
-
ஈழபோராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக சென்றனர். அங்கு ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும், அரசு நீதியை தரவேண்டும், ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான …
-
- 6 replies
- 1.2k views
-
-
15 NOV, 2024 | 04:31 PM (சி.சிவகுமாரன்) மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதே வேளை பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம். https://www.virakesari.lk/article/198879
-
-
- 11 replies
- 706 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது அமைச்சர்களும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கின்ற போதும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 754 views
-
-
அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார். வலிகாமம் பகுதி பிரதேச சபையின் தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. தேசியக் கட்சியின் தொகுதி அலுவலகம் சித்தன்கேணியில் அமைந்துள்ளது. தனியார் வீடொன்றில் இயங்கிவரும் அந்த அலுவலகத்தில் பிரதேச சபையில் வெற்றிபெற்ற அந்தக் கட்சியின் உறுப்பினர் பொ…
-
- 1 reply
- 812 views
-
-
திங்கள் 03-03-2008 16:41 மணி தமிழீழம் [நிலாமகன்] அனைத்து கட்சி குழுவில் பிள்ளையான் குழுவை இணைக்க மகிந்த முடிவு சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவை அனைத்துக்கட்சி குழுவில் மகிந்த ராஜபக்ச இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முடிவினை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ளதாக அரச அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சி குழுவில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கும் நிலையில் பிள்ளையான் குழுவை மகிந்த ராஜபக்ச இணைத்துக்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவினால் பாராளுமன்றில் பிரசன்னமாகாத கட்சிகளும் அனைத்து கட்சி குழுவில் இணைந்து கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பல சி…
-
- 2 replies
- 1.4k views
-
-
தற்போது சில நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீட்டியாகொட கஹாவ வெரகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தர்மசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் குறித்து மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, வரவும் இல்லை செலவும் இல்லை என தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=145919&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 1k views
-
-
நாட்டில் நிலவும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கவில்லை என எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் சில வாரங்களாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நுகர்வோர் மற்றும் வரத்தகர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதற்கமைய, 'அத தெரண' செய்திப் பிரிவு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் இது தொடர்பில் வினவியது. "எரிபொருள் நிரப்பும் இடமான மாபிம பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விநியோகம் தடைபட்டது. அதேநேரம் ஹம்பாந்தோட்டை முனையத்திற்கு…
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள், மற்றும் பயிற்சிகள் தொடர்பான காணொலியைப் பார்த்த நான்கு தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈச்சிலம்பற்று, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போதே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். தகவல் ஒன்றை அடுத்தே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் இருவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் என்று நம்பப்படுவதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான இவர்களின் தொடர்புகள் மற்றும் அந்தக் காணொலி அவர்களுக்கு எவ்விதம் கிடைத்து என்பது குறித்து சிறில…
-
- 1 reply
- 746 views
-
-
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு இடையூறு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்ப…
-
-
- 140 replies
- 9.4k views
- 2 followers
-
-
வீரகேசரி இணையம் - இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளை நேற்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சமகால இலங்கை அரசியல் நிலைமைகள், மனித உரிமைகளின் நிலைவரம் மற்றும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவும் இதனால் எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் சர்வதேச சுயாதீன மனித உரிமை கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அமைப்பதே ஒரே வழி என சந்திப்பின்போது மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 781 views
-
-
சிறுவர்தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் சர்வதேச சிறுவர் தினமான இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது. வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணிக்கு குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுத்திரு,கையளிக்கபட்ட மாணவர்கள் எங்கே, குடும்பமாக ஒப்படைக்கபட்ட சிறுவர்கள் எங்கே, பத்துவருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும், போன்ற பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன். இலங்கையில் காணாமல் போன தமிழ் சிறுவர், மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களையும் கையில் ஏந்தி…
-
- 0 replies
- 311 views
-
-
16 DEC, 2024 | 08:33 PM இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய - இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்தி…
-
-
- 4 replies
- 202 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு போட்டியிடாது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிவித்திருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருப்பதாகத் தெரியவருகின்றது. இந்தநிலையில் இத்தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்க் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் இன்று மாலை நடைபெறவிருக்கின்றது. இக்கூட்டத்திலேயே இத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் மத்தியில் இரண்டு வேறுபாடான கருத்துக்கள் காணப்படுவதால் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட…
-
- 16 replies
- 3.9k views
-
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்! December 24, 2024 கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்ததுடன் ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரனிடம் ஜனாதிபதிக்கு கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளித்திருந்தமை இங்கு குறிப்ப…
-
-
- 39 replies
- 2.2k views
- 1 follower
-