ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
இந்த நாடாளுமன்ற காலத்தில் இல்லாவிட்டால், அடுத்த நாடாளுமன்றத்திலாவது தீர்வு வரலாம்: எம்.ஏ.சுமந்திரன்! February 8, 2019 “புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன” இப்படி தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். வசந்தம் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு ஒளிப்பரபான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். ‘நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு என்பவற்றை வைத்துப்ப…
-
- 34 replies
- 2k views
-
-
உயர் பாதுகாப்பு வலய படைமுகாம்கள் விவரம் சேகரித்துச் சென்ற ஆணைக்குழு Saturday, October 15, 2011, 11:02 யாழ். குடாநாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் (முகாம் பகுதிகள்) குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு யாழ்ப்பாணத்துக்குத் தீடிரென வருகை தந்து விவரங்களைப் பெற்றுச் சென்றிருக்கிறது. நேற்றுமுன்தினம் வந்த ஆணைக் குழுவினர் குடாநாட்டில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மல்லாகத்தில் அமைந்துள்ள அகதிமுகாமுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர்.கடந்த புதன்கிழமை மன்னார் மாவட்டத்துக்கு சென்றிருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களும் மொழி பெயர்ப்பாளரும் அங்குள்ள சிறுவர்களைச் சந்தித்தனர். இதன் தொடர்ச்சியாகவே நேற்றுமு…
-
- 0 replies
- 489 views
-
-
மீண்டும் கருணா - பிள்ளையான் குழுக்களிடையே மோதல்;: மார்க்கன் அவர்களின் மைத்துனருமான முரளி என்பவர், கருணாவின் கொலைக்கருவி வீரா என்பவரால் பொதுமக்கள் மத்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இன்று காலை எட்டு முப்பது மணியளவில் திருகோணமலையில் உள்ள அண்புவலிபுரம் என்னும் இடத்தில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஆரம்பகால உறுப்பினரும், முக்கியஸ்தர் மார்க்கன் அவர்களின் மைத்துனருமான முரளி என்பவர், கருணாவின் கொலைக்கருவி வீரா என்பவரால் நயவஞ்சகமாக அழைத்துவரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இப்பொழுது கருணா குழுவினர், பிள்ளையான் குழுவினரின் முக்கிய உறுப்பினர்களை கொன்றொழித்து வருகிறார்கள். வீரா. முரளியை சுட்டுக்கொண்றத…
-
- 1 reply
- 3k views
-
-
Published By: VISHNU 06 MAR, 2024 | 02:27 AM (நா.தனுஜா) 'ஒரே சீனா கொள்கைக்கு' தாம் ஆதரவளிப்பதாகவும், மனித உரிமைகள்சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பெரிதும் வரவேற்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் அறிவித்திருக்கும் இலங்கை, இறையாண்மையுடைய எந்தவொரு தேசத்தினதும் உள்ளக விவகாரங்களில் பிற தரப்பினரால் ஏற்படுத்தப்படும் தலையீடுகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது எனத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல்…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
June 5th, 2015 அன்று பிரசுரிக்கப்பட்டது. இலங்கைத்தமிழரசுக்கட்சியின் அக்கரைப்பற்றுப் பணிமனைத் திறப்புவிழா நாளை 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஓய்வுநிலை கிழக்குமாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எம்.தேவராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா கலந்துகொள்கிறார். தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன் பொன்.செல்வராசா பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் ஆகியோருட்பட பலர் கலந்துகொள்கின்றார்கள். இன்று சேவை நலன் பாராட்டுவிழா! இதேவேளை அரசாங்க வைத்தியத்துறையில் கடந்த 31வருடங்கள் சேவையாற்றி 30.05.2015இல் ஓய்வுபெற்ற கிழக…
-
- 2 replies
- 673 views
-
-
17 MAR, 2024 | 10:28 AM தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது. இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் செயலாளராக ஆனந்த சங்கரி தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்படவுள்ள கட்சியின் மாநாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/178916
-
- 0 replies
- 586 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சென்றடையும் வரை எமது போராட்டம் தொடரும்- எம்மைத் தடுத்து கைது செய்தாலும் எமது படகுப் பயணம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 14 replies
- 2.2k views
-
-
வடமாகாணத்தில் எதிர் வரும் 7ஆம் திகதி முதல் 118 வைத்தியர்கள் வைத்திய சாலைக்கு நியமனம் பெறுகின்றனர் என்று வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வடமாகாணத்தில் வைத்தி யர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக பல முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றன. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சுக்கு எம்மால் முன்வைக் கப்பட்டன. அதனடிப்படையில் தற்போது வைத்திய கல்வி நெறியை முடித்து வெளியேறியுள்ள 600 பேரில் 118 பேர் வட மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 72 வைத்தியர்களும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 28 வைத்தியர்களும், முல்லைத் தீவு மாவட்டத்துக்கு 26 வைத் தியர்களும் மன்னார் மாவட்டத் துக்…
-
- 0 replies
- 642 views
-
-
28 MAR, 2024 | 09:33 PM இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை (28) காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் . இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார். குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
கே.பி தொடர்பாக இந்தியா 4வருடமாக நோர்வேயுடன் மோதல். - நடந்து முடிந்த நாடகத்தை அம்பலப்படுத்தும் சி.பி.ஜ. ஜ செவ்வாய்கிழமைஇ 18 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் என்று சந்தேகிக்கபடும் கே.பி என்பவர் தொடர்பாக 2003ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டுவரை இந்தியாவிற்கும் நோர்வேக்கும் இடையே பாரிய மோதல் மற்றும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதாக சி.பி.ஜயுடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. இது தொடர்பாக சி.பி.ஜ உளவாளியாக இருக்கும் றயேஸ் கே.சிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவல்களை இங்கு தருகின்றோம். கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் எனப்படுபவர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக கருதப்பட்டுபவர். 2003ம் ஆண்டில் இருந்த 2004ம் ஆண்டுவரை …
-
- 6 replies
- 3.6k views
-
-
இலங்கைக்கு எதிராக மத்திய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர் பாதுகாப்பு தொடர்பிலான கருத்துக்களை இலங்கை செவிமடுக்கத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டுமென ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன் மோகனிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளார். மீன…
-
- 4 replies
- 1.2k views
-
-
அரச பதவி வகிப்பவர்கள் 60 வயதை அடைந்ததும் ஓய்வு பெற வேண்டும் என்பது சட்டம். இந்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளராக இன்னொருவர் நியமிக்கப்படும் வரை அவர் ஓய்வு பெறமுடியாது. இந்நிலையில் ஆணைக்குழு இன்னொரு தேர்தல்கள் ஆணையாளரை நியமிக்கும் வரை மஹிந்த தேசப்பிரியவே தேர்தல்கள் ஆணையாளராக இருப்பார். மேலும் இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்பதால் மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலிலேயே இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=831844112226428750#sthash.IZgqGyWs.dpuf
-
- 0 replies
- 184 views
-
-
பயங்கரவாத சுலோகத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வில் உரிமை மீறல்கள் நியாயப்படுத்தப்படப் போகிறதா? -பீஷ்மர்- எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வின் 62 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் பொழுது (இலங்கை தமிழ் வானொலி சேவைப் பணிப்பாளரின் சாத்திரீய மொழியில் கூறினால் கௌரவ அதிமேதகு) ஜனாதிபதி அவர்கள் 7 நிமிடங்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த வாய்ப்பு இதற்கு முன்னிருந்த எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காததொன்று என இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறுவதை பலர் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். உரையாற்றப் போகும் 7 நிமிடங்களில் எந்த விடயத்தைப் பற்றி பேசப் போகின்றார் என்பது பற்றி தனது ஊகத்தை முன்வைத்துள்ள ராய்ட்டர் செய்தி நிறுவனம் இது பற்றிய செய்தி குறிப்புரையில் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளு…
-
- 0 replies
- 621 views
-
-
ஈழத் தமிழர்களின் போராட்டம் நியாயம் மிகுந்தது., அதை ஏகாதிபத்திய அரசுகள் வேண்டுமென்றே வீழ்த்தின என்று குறிப்பிட்ட லத்தீன் அமெரிக்க எழுத்தாளரும் களப்பணியாளருமான தேழர் ரான் ரைடனவர் அதற்கு சோசலீச நாடுகளும் துணை போனது மிகவும் துயரமானது என்று குறிப்பிட்டார். The The Tamil Nation in Srilanka என்ற அவரது நூல் வெளியிட்டில் பேசிய பொழுது தோழர் ரான் ரைடனவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் போர்க்குற்றவாளியாக உள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுக்கு ஆதரவாக கியூபா எடுத்த நிலைப்பாடு தனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகவும் தோழர் ரான் ரைடனவர் தெரிவித்தார்;. புலிகள் பயங்கரவாத இயக்கம் கிடையாது என்று குறிப்பிட்ட ரான் ரைடனவர் அவர்கள் கையாண்ட முறைகளில் சில முறைகள் …
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பொலிஸார் ஒருவரைக் கதுசெய்தனர். அவர் கஞ்சா கடத்திச் சென்றமை கைதின் பின்னர் தெரியவந்தது. மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸார் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை மறித்துள்ளனர். அதன்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சந்தேக நபர்கள் இருவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். அவர்களைப் பிடிப்பதற்காக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனை நடத்தியபோது கஞ்சா கடத்திச் சென்றமை தெரியவந்தது. குறித்த நபரிடமிருந்து 250 கிறாம் கஞ்சா கைப்பற்றப்பட்டத…
-
- 0 replies
- 226 views
-
-
அலரி மாளிகையில் அமெரிக்காவின் செயலகமா? – வீரவன்சவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு அமெரிக்காவின் மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்று அலரி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுமத்திய குற்றச்சாட்டை, சிறிலங்கா அமைச்சர் சாகல ரத்நாயக்க மறுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச, சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் அமெரிக்கா, மிலேனியம் சவால் அமைப்பின் செயலகத்தை அமைத்துள்ளது என்றும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை, 200 கி.மீ தூரத்துக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள…
-
- 0 replies
- 231 views
-
-
ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்து சுயமாக வெளியேறுவது என்பது கரணம் தப்பினால் மரணம் தான், தப்பிஓட முற்படுவோர் டக்ளஸ் குழுவினரால் கொல்லபட்டு பின்னர் புலிகள் கொலை செய்ததாக பிரச்சாரம் செய்யப்படும் - முன்னால் முக்கியஸ்தர் சங்கர் தரும் தகவல். ஜ சனிக்கிழமைஇ 29 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் தவராசாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் 2002ம் ஆண்டில் முறுகல்கள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் 2002ல் இவர் இலங்கையை விட்டு வெளியேறி அவுஸரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய போதும் அது மறுக்கபட்டது. அனைத்து கட்சி குழுவின் உருவாக்கத்தை தீவிரமாக எதிர்த்ததினாலும் அதற்கு எதிராக அறிக்கை விட்டமையால் மகிந்த அரசாங்கத்தால் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கண்டிக்கபட்டவர். இதன…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர் சிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறாமலேயே ஜெனிவா தீர்மானத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்ற சுரேன் ராகவன், நாடு திரும்பிய பின்னர், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார். “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா தீர்மானத்துக்கு, பிரதமர் செயலகத்தில் உள்ள தனி நபர் ஒருவரே அங்கீகாரம் அளித்திருந்தார். அதற்கு அவர் சிறிலங்கா அதிபரின் அனும…
-
- 33 replies
- 3.2k views
-
-
கனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள். நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், இன அழிப்பிற்குட்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்பதென்பது இன்று அவசியமாகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு தமிழர் தரப்பினரும் முன்வைத்து அனைத்துலகத்திடம் நீதி வேண்டி போராடி வந்த சூழலில் கனடியத் தமிழர் தேசிய அவைய…
-
- 0 replies
- 375 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி - மஹிந்த குற்றச்சாட்டு 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சரத்துக்களை நிரந்தரமான சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள்…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார். மேலும் விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 306 views
-
-
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதுJUL 20, 2015 | 5:17by கார்வண்ணன்in செய்திகள் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே, ஆளுனர் தரப்பில் இந்த முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதி மறுத்து வந்தது. எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அண்மையில் மாகாண முதலமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, வடக்கு மாகாணசபை முதலமைச்சர் நிதியத்தை உரு…
-
- 10 replies
- 1.2k views
-
-
புலிகள் மற்றும் கருணா குழுவினர் கட்சியாக பதிவு செய்து உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடலாம் அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி நாளேடு வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்களை மீண்டும் கோருவதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்தன் பின்னர் விடுதலைப்புலிள் மற்றும் கருணா குழுவினர் கட்சிகளாக பதிவு செய்துகொண்டு தேர்தல்களில் போட்டியிடலாம் என்று அரசாங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபை தேர்தல் நடத்துவதற்கான வேட்பு மனுக்கள் ஏற்கவே கோரப்பட்டிருந்த நிலையில் புதிய கட்சிகளை பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கில் உள்ளுராட்சி ச…
-
- 1 reply
- 1k views
-
-
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு April 19, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு- விசுவமடு தொட்டியடி பகுதியில் இன்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிாிழந்துள்ளார். மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவா்கள் மீது தாக்கியுள்ளது. சம்பவத்தில் தா்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிாிழந்துள்ளார். மேலும் எஸ்.கிாிஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளார்உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/118659/
-
- 2 replies
- 717 views
- 1 follower
-
-
டக்ளசிற்கும் கஜேந்திரகுமாரிற்கும் என்ன வித்தியாசமாம் கேட்கிறார் திருவாளர். சுமந்திரன். அதனை அவர்களது கட்சி பத்திரிகை இன்று வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. டக்ளஸ் இன்று எவருக்கும் ஒரு வேண்டாப் பொருளாகி விட்டார். அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் சுமந்திரன். எமது மக்கள் வெறுமனே டக்ளஸ் எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளாதவர் அவர். இதற்கெல்லாம் பதில் சொல்லவும் வேண்டுமா என்ற சலிப்பு எங்களுக்கிருந்தாலும் ஒரு பதிவிற்காக இதை சொல்லுகின்றோம். ————————–———– சனாதிபதித் தேர்தலில் மைத்ரியும் மகிந்தவும் ஒன்று என்ற நிலைப்பாட்டை கஜேந்திரகுமார் எடுத்தார். ஒருவருக்கும் வாக்களிக்க மக்களை கோர மாட்டோம் என்று எடுக்கின்ற நிலைப்பாடானது மகிந்தவை வெற்றி கொள்ள வேண்டும் …
-
- 0 replies
- 620 views
-