ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
சிறிலங்காவுக்கு 480 மில்லியன் டொலர் உதவியை வழங்குகிறது அமெரிக்கா சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் மூலம், 480 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்று முன்தினம் சந்தித்த மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன், இதனைத் தெரிவித்துள்ளார். வரும் டிசெம்பர் மாதம் கொழும்பில் இந்த நிதியுதவியை வழங்குவதற்கான உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்…
-
- 0 replies
- 383 views
-
-
Published By: RAJEEBAN 06 JUL, 2023 | 12:47 PM தனது மகன் நாடு கடத்தப்படுவதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தலையிட்டு நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் என்ற இலங்கை பெண்ணே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் 2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். பல வருடங்களாக பாதுகாப்பு விசாவில் வாழ்ந்த அவருக்கு அரசாங்கம் நிரந்தர விசாவை வழங்கியுள்ளது. அவர் தனது மகனை அவுஸ்திரேலியாவிற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி அழைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார், எனினும் 2016 இல் அவரது விண்ணப்பத்தை அவுஸ்திரே…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
.மனிதஉரிமை மீறல்களை அவதானிக்க ஐ.நா.மனித உரிமை கண்காணிப்பு அவசியம் நாட்டில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமை மீறல் அவதானிப்புக்கள் பூச்சிய நிலைக்கு சென்று விட்டன. வெறுமனே ஆணைக்குழுக்களை அமைப்பதன் மூலம் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்திவிட முடியாது என்று தெரிவித்த அவர், தினமும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்கின்றன என்றும் குற்றம் சாட்டினார். அத்துடன் சமாதான முயற்சிகளுக்கான செயன் முறைகள் பின்நோக்கிச் செல்வதாகவும் சம்…
-
- 0 replies
- 720 views
-
-
Posted by இரும்பொறை on 19/06/2011 in செய்தி இலங்கையின் போக்குகள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியுடன் இருப்பதாக இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் உயர்மட்ட தூதுக்குழுவினர் ஏமாற்றத்துடனேயே நாடு திரும்பியிருப்பதாகவும் சண்டே டைம்ஸின் பிரஸ்தாப செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவின் விஜயத்தின் தோல்வி குறித்து இந்தியப் பிரதமர் தமிழக முதலமைச்சருடனான கலந்துரையாடலின் போது இலங்கைப் பிரச்சினை பற்றிய விடயத்தில் வெளிப்படையாகவே அதிருப்தியுடன் கருத்து வெளியிட்டுள்ளார். “நாம் சொல்வதை அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. நம்மால் என்னதான் செய்ய முடியும்?’ …
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
24 ஜூன் 2011 பகிர்ந்து கொள்ளப்படும் - நெதர்லாந்து : தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சிலரிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக நெதர்லாந்து தூதரக பேச்சாளர் ஜாகோ பீரின்ட்ஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் வரையில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கொடுக்கல் வாங்…
-
- 0 replies
- 878 views
-
-
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் பலி 2023 ஜூலை 24 கடந்த வருடத்தில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த பத்தாண்டுகளில் ஒரு வருடத்தில் பதிவான அதிக யானை உயிரிழப்புகளின் எண்ணிக்கை இது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை தொடருமானால், இலங்கையில் காட்டு யானையைக் கண்டறிவது அரிதான நிகழ்வாகிவிடும் என கலாநிதி ரவீந்திர காரியவசம் மேலும் தெரிவித்தார். https://ww…
-
- 0 replies
- 288 views
-
-
Wednesday, June 29, 2011, 0:13தமிழீழம், மாவீரர்கள் மண்டைதீவு படைத்தளத்தின்மீது விடுதலைப்புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நிகழ்த்தி சிறிலங்கா படைத்தரப்புக்குப் பாரிய ஆள் – ஆயுத இழப்பை ஏற்படுத்தியதன் 16ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995 ஆம் ஆண்டு யூன் மாதம் இருபத்தியெட்டாம்நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப்பகுதியிடமிருந்து சிறுநீர்ப்பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ். குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு …
-
- 0 replies
- 722 views
-
-
கட்டுநாயக்க வான்படைத் தளத்தை அண்டிய பகுதியில் பதுங்குகுழி. தமிழருக்கு சொந்தமான நீர்கொழும்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் பாதுகாப்பான பதுங்குகுழி ஒன்று இரகசியமாக அமைக்கப்பட்டு வந்ததை நீர்கொழும்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அயலவர்களின் தகவலை அடுத்து, கந்தானைப் பிரிவில் உள்ள டெல்கசன்டியாப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சோதனையிட்ட காவல்துறையினர் வீட்டின் அறை ஒன்றினுள் பதுங்குகுழி அமைக்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த வீட்டின் உரிமையாளர் வவுனியாவைச் சேர்ந்த தமிழர் எனவும், அவர் தனது மனைவி பிள்ளைகளுடன் அருகில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும் காவல்துறை…
-
- 4 replies
- 1.8k views
-
-
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது… October 23, 2018 உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது என, சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது முன்னிலை சோஷலிஸ கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவும் , பயங்கரவாதத்துடன் இணைந்த செயற்பாடுகளை தடுப்பதற்காகவும், 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் பார்க்கிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது நீதிக்கு எதிரானது. என முன்னிலை சோஷலிஸ கட்சியின் பேச்சாளர் புபுது ஜெயக்கொடதெரிவித்துள்ளார். இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடை செய்தல் மற்றும் பயங்கரவாத எத…
-
- 0 replies
- 451 views
-
-
பாலியல் துஷ்பிரயோகம் ; இருவருக்கு கடூழிய சிறை தண்டனை - கிளிநொச்சி நீதிமன்றம் தீர்ப்பு 11 Aug, 2023 | 11:20 AM கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை அவரது பாதுகாவலரிடம் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் பத்து ஆண்…
-
- 0 replies
- 290 views
-
-
-
கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! ரணில் மீண்டும் பிரதமராகும் சந்தர்ப்பம்? ரணில் கூறியது என்ன? ஒரே பார்வையில்! October 29, 2018 இலங்கையின் அரசியலில் திடீர் மாற்றமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதுடன் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தார். இந் நிலையில் மகிந்த ராஜபக்ச இன்று பிரதமராக கடமையை பெறுப்பேற்றுக் கொண்டார். இதேவேளை உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு இன்று 126 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கியுள்ளனர். இதில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, …
-
- 0 replies
- 478 views
-
-
மாற்றத்துடனான கல்வி முறையொன்றே நாட்டுக்கு அவசியம் ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று முன்தினம் (18) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த அவர் முதலில் பல்கலைக்கழக மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு ஆய்வு கூடத்தை (Analytical Laboratory) திறந்துவைத்த சாகல ரத்னாயக்க, பல்கலைக்கழக மைதானத்தில் கட்டப்பட்டு வரும் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளையும்…
-
- 0 replies
- 189 views
-
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை [Tuesday, 2011-07-12 10:44:38] உள்ளூராட்சி சபைத்தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசியகூட்டமைப்பு வேட்பாளர்கள் படையினராலும் ஆயுதக்குழுக்களினாலும் அச்சுறுத்தப்படுகின்றமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த முறைப்பாட்டுக்கு தேர்தல்கள் ஆணையாளர் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் …
-
- 1 reply
- 512 views
-
-
சங்ககராவின் "இனப் படுகொலை' - எம். மணிகண்டன் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை எவ்வளவு கொடூரமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்பட அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசிக் கொன்றது. பிடிபட்டவர்களையும் சரணடைய வந்தவர்களையும் சித்திரவதை செய்தது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களில் இருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். கண்களைக் கட்டி, நிர்வாணப்படுத்திக் கொன்றது, உடலெல்லாம் கத்தியால் கீறி கழுத்தை அறுத்தது என உச்சகட்ட மனிதஉரிமை மீறல் நடந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் இலங்கை …
-
- 3 replies
- 632 views
-
-
India's Sri Lanka Problem by SADANAND DHUME (Wall Street Journal) To be taken seriously as a major power, India must show that it has influence in its own backyard.. When Secretary of State Hillary Clinton visits Chennai today, both United States and Indian officials will be eager to emphasize the robust commercial and people-to-people ties that increasingly bind America to one of India's most dynamic regions. The consulate in Chennai issues more skilled temporary worker visas than any other U.S. outpost in the world. Tamil Nadu, the state of which Chennai is the capital, houses a flourishing Ford Motor factory, and is regarded as one of India's most business-frie…
-
- 0 replies
- 561 views
-
-
பதவி நீக்கப்பட்டார் மஹிந்த? நா.உறுப்பினர் தகவல் https://www.tamilwin.com/parliment/01/198593?ref=breaking-news thamilwin.com
-
- 6 replies
- 1.5k views
-
-
பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி விசேட குழு இம்மாத இறுதியில் கொழும்பு வருகிறது லண்டன் மாநாட்டுக்கு முன்னோடியாக அரசு, புலிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு பிரிட்டிஷ் அனைத்துக் கட்சிகளின் விசேட குழு ஒன்று இம்மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்ய உள்ளது. லண்டனில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசு விடு தலைப் புலிகள் நோர்வே முத்தரப்புப் பேச்சுக்கு முன்னோடியாக இந்த விசேட குழு அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுகக்களை நடத்த இருப்பதாக நம்பகமாக அறியப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு நீதியும் கௌரவமுமான தீர்வைக் காணுவதற்கு உதவும் பொருட்டு பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிந…
-
- 0 replies
- 907 views
-
-
அமெரிக்கா போன்று இந்தியாவும் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்!- ராமதாஸ் [saturday, 2011-07-23 19:25:41] இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதேபோல் இந்தியாவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கை இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அந்நாட்டிற்கான உதவிகள் நிறுத்தப்படும் என்று அம…
-
- 0 replies
- 352 views
-
-
November 20, 2018 ஜனாபதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் குறித்த உறுப்பினர்கள் நடந்துக்கொள்ளும் விதம் குறித்தே மஹிந்த எச்சரித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கமாக நடந்துக்கொள்ளுமாறும், குழப்பங்கள் விளைவிப்பதன் மூலம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாதென்றும் கலந்துரையாடல்கள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றும் மஹிந்த இதன்போது தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 346 views
-
-
Published By: VISHNU 28 SEP, 2023 | 09:08 PM (இராஜதுரை ஹஷான்) அரச கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் அரச நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழலை தடுக்க முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். மஹரகம பகுதியில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொ…
-
- 2 replies
- 358 views
- 1 follower
-
-
Friday May 25 2007 01:29:14 PM GMT இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோல்ப்பினூர் ஒமர்ஸன் அறிவித்திருந்தார். வன்னி செல்லும் இவரது பயணம் இறுதி நேரத்தில் சிறிலங்கா அரச தரப்பினாரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 732 views
-
-
பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட ஆதார காணொளியை பார்க்க சில நிமிடங்கள் கூட ஒதுக்க முடியாத உலகத்தலைவராக இருக்கின்ரார் பான் கி மூன். . பான் கி மூன் இன்னமும் சனல்4 இன் இலங்கையில் கொலைக்களம் என்கின்ற காணொளியை பார்க்க இல்லையாம். அதே நேரம் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அதனை விசாரிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமையே தவிர அது ஐக்கிய நாடுகளின் பொறுப்பு இஒலை எனவும் கூறியுள்ளார் ஐ. நா. பேச்சாளர். இது தொடர்பான மேலதிக தகவல் வருமாறு; இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வது இலங்கையின் சொந்த நடவடிக்கையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது இந்தநிலையில் இலங்கையின் இந்த விசாரணை நடவடிக்கை, எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதை அவதானிப்பதே ஐக்கி…
-
- 3 replies
- 987 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்தநாள் நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலையிலேயே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக் வெட்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர். இதே வேளை பிரபாகரனின் இன்றைய (26) பிறந்த நாளை முன்னிட்டு பிரபாரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மேலும் நாளை மாவீரர் தின நிகழ…
-
- 4 replies
- 1.4k views
-
-
[TamilNet, Thursday, 04 August 2011, 16:42 GMT] Society for Threatened People and TRIAL, two advocacy groups based in Europe, requested the Swiss Attorney General today to pursue war crimes charges against Jegath Dias, SriLanka's deputy ambassador to Germany and former major general in Sri Lanka's armed forces. The groups allege that Dias's division was "responsible for massive bombing of civilians and hospitals," an AP report said. This action follows the filing of a complaint against the Federal Republic of Germany with the European Courts of Human Rights (ECHR) for violating the ‘European Convention for the Protection of Human Rights, in accepting Dias as a Diplomat,…
-
- 4 replies
- 1.5k views
-